Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விமானங்கள் ஐரோப்பாவில் பறக்க தடைவருமா ? மேலும் அதிர்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

airlanka.jpg

இலங்கையின் தேசிய விமானசேவையான "ஸ்ரீலங்கன்" விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க தடைவிதிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதில் பல விடையங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளபோதும் சில செய்திகள் தற்போது கசிந்துள்ளது. அதாவது கடந்த மாதம் இலங்கை தேசிய விமானசேவைக்குச் சொந்தமான ஏ- 340 ரக விமானம் ஒன்றை பிரான்ஸ் நாட்டு விமானசேவை அதிகாரிகள் சுமார் 9 நாட்களாகத் தடுத்துவைத்துள்ளனர். இச் செய்தியானது எந்த ஊடகத்திலும் கசியவில்லை. இலங்கையிலும் இச் செய்தியானது தற்போது தான் கசிந்துள்ளது. இலங்கை விமானத்தின் எஞ்சினில் உள்ள நட்டுகள் சில இறுக்கமாகப் பூட்டப்படவில்லை என்பதும் அவை களண்டு விழும் நிலையில் உள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதனைத் திருத்தும்படி பிரான்ஸ் அதிகாரிகள் கூற அதனை ஒரு அசமந்தமாக ஏற்றுகொண்ட இலங்கைப் பொறியியலாளர்கள் சரியாக அதனைத் திருத்தவில்லை. இதனை அடுத்து மேலதிக பரிசோதனைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் மேற்கொள்ள குறித்த விமானத்தின் பெற்றோல் தாங்கில் இருந்து பெற்றோல் சிறிது கசிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு விடையமாக நோக்கப்பட்டது. அதனையும் சரிசெய்ய பிரன்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே தாம் இலங்கைக்குச் சென்று அதனைத் திருத்துவதாக சிறுபிள்ளைத் தனமாகத் தெரிவித்துள்ளனர் இலங்கை விமானசேவை நிறுவனத்தினர். அதனை நிராகரித்த பிரான்ஸ் அதிகாரிகள் பிரான்ஸ் பொறியியலாளர்களைக் கொண்டு அதனைத் திருத்திவிட்டு செலவான முழுப் பணத்தையும் இலங்கை கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் சுமார் 9 நாட்கள் அவ்விமானம் பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதன் காரணமாக அவ்விமானம் கொண்டுசெல்லவேண்டிய பயணிகளை வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பிய செலவு, மற்றும் அவ்விமானத்தின் ஊழியர்கள் விடுதியில் தங்கிய செலவு, மற்றும் விமான விமான நிலையத்தில் தரித்து நின்றதற்காக செலவு என ஏராளமான யூரோக்கள் செலவாகியுள்ளது இலங்கை அரசுக்கு. குறிப்பாக ஐரோப்பிய வான் பரப்பில் பறக்கும் விமானங்கள் தமது தரத்துக்கு ஏற்றாறு இருக்கவேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளாகும். தரமில்லாத விமானங்கள் தமது வான்பரப்பில் பறந்து விபத்துக்கு உள்ளானால் அது ஐரோப்பிய நகரங்களை கடுமையாகப் பாதிக்கும் என்பது அவர்கள் கருத்து.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தரத்தைப் பேணாத பல நாட்டு விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தோனேசியா பிலிப்பைன் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பல விமானசேவைகள் இவ்வாறு ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இலங்கையின் விமானமும் தடைசெய்யப்படலாம் என பிரான்ஸ் எச்சரித்துள்ளதாக அறியப்படுகிறது. இது இலங்கை அரசுக்கு விழுந்துள்ள மற்றுமொரு பாரிய பேரிடியாகும்.

http://www.eeladhesa...ndex.php?option

இலங்கையின் தேசிய விமானசேவையான "ஸ்ரீலங்கன்" விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க தடைவிதிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதில் பல விடையங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளபோதும் சில செய்திகள் தற்போது கசிந்துள்ளது. அதாவது கடந்த மாதம் இலங்கை தேசிய விமானசேவைக்குச் சொந்தமான ஏ- 340 ரக விமானம் ஒன்றை பிரான்ஸ் நாட்டு விமானசேவை அதிகாரிகள் சுமார் 9 நாட்களாகத் தடுத்துவைத்துள்ளனர். இச் செய்தியானது எந்த ஊடகத்திலும் கசியவில்லை. இலங்கையிலும் இச் செய்தியானது தற்போது தான் கசிந்துள்ளது. இலங்கை விமானத்தின் எஞ்சினில் உள்ள நட்டுகள் சில இறுக்கமாகப் பூட்டப்படவில்லை என்பதும் அவை களண்டு விழும் நிலையில் உள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான் ஸ்ரீலங்கன் ஏர் லயன்சில் பயணிப்பதில்லை பயணிப்பவர்கள் கவனத்துக்கு இது மிகவும் ஆபத்துகளை விளைவிக்கும் மாற்று ஏர் லயன்சில் பயணிக்கவும்.

நான் ஸ்ரீலங்கன் ஏர் லயன்சில் பயணிப்பதில்லை பயணிப்பவர்கள் கவனத்துக்கு இது மிகவும் ஆபத்துகளை விளைவிக்கும் மாற்று ஏர் லயன்சில் பயணிக்கவும்.

சரி இதையும் மீறி யாராவது ஸ்ரீலங்கன் ஏர் லயன்சில் பயணிப்பதாக இருந்தால் நல்ல ஒரு ஆயுள்காப்புறுதியை செய்துவிட்டு பயணியுங்கள் :wub:

ஏர் கனடா நிறுவனம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொழும்புவுக்கான தமது விமான சேவையை இம்மாதம் 27ம் தேதியில் இருந்து விஸ்தரிக்கின்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏர் கனடா code-share agreement ரகத்திலான ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வெளிவர்த்தக இணைப்பாளர் பட்ரிக் டீ-சொய்சா, “கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா, ஸ்ரீலங்காவுக்கான விமான சேவைக்கு புதிய பார்ட்னராக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தேர்ந்தெடுத்திருப்பது எமக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் இருந்து சென்ற சுமார் 3 லட்சம் மக்கள் கனடாவின் டொரண்டோ நகரில் மாத்திரம் வசிக்கின்றனர்.

ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், கனடாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான விமானப் பயணம் வருடத்துக்கு 10 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் கனடா நிறுவனத்தின் வைஸ் பிரெசிடென்ட் Yves Dufresne, “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த எமது புதிய சேவையில், கனேடியப் பயணிகள் கனடாவில் இருந்து ஐரோப்பாவின் லண்டன் அல்லது பிராங்பர்ட் ஊடாக கொழும்புக்கு பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஆண்டு (2010) 476 மில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது. இதில் இறக்குமதியாக, 128 மில்லியன் டொலர் மதிப்பில் ஸ்ரீலங்காவில் தயாராகும் ஆடைகளை கனடா இறக்குமதி செய்துள்ளது. கனடாவில் இருந்து ஸ்ரீலங்காவுக்கு ஏற்றுமதியாகும் முக்கிய பொருள், கோதுமை.

ஏர் கனடா கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் மாத்திரமல்ல, உலக அளவில் வர்த்தக விமான நிறுவனங்களில் 15வது பெரிய நிறுவனமாக உள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் கனடாவின் 24வது வர்த்தக பார்ட்னாக இணைந்துள்ளது.

ஏர் கனடா நிறுவனத்தின் வைஸ் பிரெசிடென்ட் Yves Dufresne, “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த எமது புதிய சேவையில், கனேடியப் பயணிகள் கனடாவில் இருந்து ஐரோப்பாவின் லண்டன் அல்லது பிராங்பர்ட் ஊடாக கொழும்புக்கு பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

விலையும் நேரமும் கூடிய பயணமாக இருக்கும்.

ஏர் கனடா கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் மாத்திரமல்ல, உலக அளவில் வர்த்தக விமான நிறுவனங்களில் 15வது பெரிய நிறுவனமாக உள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் கனடாவின் 24வது வர்த்தக பார்ட்னாக இணைந்துள்ளது.

ஏர் கனடா நிறுவனம் வங்குரோத்தை சந்தித்து, உலகின் பல விமான நிறுவனங்கள் போன்று, தொடர்ந்தும் ஒரு பண ரீதியாக கடின நிலையில் உள்ள நிறுவனம். தனது வளர்ச்சிக்காக அது இதை செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் உழைக்க ஆரம்பித்தபின் ஸ்ரீலங்கனில் பயணித்ததில்லை..! :rolleyes:

விடுமுறைக்குப் போறது முக்கியம்.. :unsure: உயிர் அதைவிட முக்கியம்.. :o நல்ல விமானமாப் பார்த்து ஏறுங்கோ..! :(

  • கருத்துக்கள உறவுகள்

பறந்தால் என்ன பறக்காவிட்டால் என்ன ...

நான் தான் சிறிலங்காவுக்கு தேவையில்லாமல் செல்லமாட்டேன். சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்ய மாட்டேன். கடைசியாக சிறிலங்கன் எயர்லைன்சில் 1991ம் ஆண்டு சனவரி மாதம் தான் பயணித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகமொத்தத்திலை..... மற்ற கப்பல்கொம்பனியளின்ரை கப்பல் நட்டு லூசானாலும்.....அங்கை போறதெண்ட முடிவோடைதான் சனம் திரியுது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு முறை கொம்பனி தந்த ரிக்கட்டில் பயணம் செய்துள்ளோன், இனிமேல் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.