Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு வேண்டுதல்

Featured Replies

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.

இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2011 ஆம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உந்துசக்தியாக என்றென்றும் நிலைத்துநிற்கும்.

தமது வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களின் தியாகமும் வரலாறும் பதிவுசெய்யப்படுவதுடன், இன்று தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில், அவற்றை பேணிப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்து வாழும் நம்மனைவரையுமே சாரும்.

தங்களது மனவுறுதியையே கவசமாககொண்டு, அலையாக ஆர்ப்பரித்த எதிரிகளின் படைக்கலன்களை எதிர்கொண்டு, தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வுக்காக, இறுதிவரை போராடி மடிந்த வீரமறவர்களின் வரலாறுகள் சந்ததி சந்ததியாக பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.

எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத, அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு இலக்கங்கள்:

சிட்னி - 0469 089 883 மெல்பேண் – 0469 359 778

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா

http://akkinikkunchu.com/new/docx/2011/Maaveerar-family-Registeration-2011.pdf

யார் இந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு?

இந்த அழைப்பில் பெயர்கள், விலாசங்கள் ஏதும் இல்லை. ஒரு இணையத்தள முகவரிகூட இல்லை.

அவுஸ் நண்பர்கள் இப்படி ஒரு குழு உள்ளதா என முடிந்தால் அறியத்தாருங்கள்.

யார் இந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு?

இந்த அழைப்பில் பெயர்கள், விலாசங்கள் ஏதும் இல்லை. ஒரு இணையத்தள முகவரிகூட இல்லை.

அவுஸ் நண்பர்கள் இப்படி ஒரு குழு உள்ளதா என முடிந்தால் அறியத்தாருங்கள்.

தமிழ் ஒருங்கிணைப்பு குழு அல்லது TCC என அழைக்கப்படும் அமைப்பே மாவீரர் நாள் முதல் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவரும் அமைப்பு. மாமனிதர் ஜெயக்குமார் அண்ணா தலமைதாங்கிய அமைப்பு

கவனம் சிறிலங்கா அரசும் தனது கூலிகளை ஏவி விட்டுள்ளது குழப்புவதற்கு விழிப்பாக இருப்பது நல்லது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எதுஎதுவெல்லாமோ கைமாறிவிட்டது. ஆகவே மாமனிதர் ஒருவர் தலைமைதாங்கிய ஒரு அமைப்பு என்பதற்காக தொடர்ந்தும் அதை கண்மூடித்தனமாக நம்பாமல் விழிப்புடன் செயல்படுவது தான் நல்லது. இப்போது உள்ள நிலையில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையென்பது மிகுந்த சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. முதலில் சேகரித்த தகவல்கள் மாற்றார் அல்லது விசமிகளின் கையில் கிடைக்காமல் இருக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை அறிந்து உங்கள் விபரங்களை கொடுப்பதைப்பற்றி யோசியுங்கள். மக்கள் மனதில் இடம்பிடிப்பதாயின் முதலில் மாவீரர் சென்டிமென்ற்றை பயன்படுத்தி அவர்களின் குடும்பங்களிலிருந்து தொடங்குவதுதான் மோசக்காரர்களின் உபாயமாகவும் இருக்கலாம். அது தவிர திரட்டப்படும் புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்பங்கள்பற்றிய விபரங்களுக்கு யார் பொறுப்பு என்பதையும் அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மொத்தத்தில் மக்கள் அதுபோன்ற விடயங்களில் ஒத்துழைக்காமல் இருப்பது தான் நல்லது. மற்றும்படி தமது வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர்களின் தியாகம் போற்றவேண்டிய ஒன்று என்பதில் எனக்கு எதுவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமுடி சொல்வது முற்றிலும் சரியானது. மாவீரர் குடும்பங்கள் தங்கள் அடையாளத்தை யாரிடமும் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும். எப்படியெல்லாம் எங்கள் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மற்றையவர்களின் அடையாளங்கள் பற்றிக் கவனயீனமாக இருக்கிறார்கள் (அல்லது வேண்டுமென்றே காட்டிக் கொடுக்கிறார்கள்) என்பதற்கு எங்கள் நாட்டில் நடந்த ஒரு உதாரணம் தருகிறேன்:

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த வேளையில் இங்கிருக்கும் ஒரு "தமிழ் தலைவர்" ஒழுங்கு செய்ய ஒரு கவன ஈர்ப்பு செய்திருந்தோம். அந்த நிகழ்வு பரவலாக பலராலும் வீடியோ பதிவு செய்யப் பட்டது (இறுதியில் காவல்துறை வந்து சில சந்தேகத்திற்கிடமான படப்பிடிப்பாளர்களை அகற்ற வேண்டியும் இருந்தது). ஒழுங்கு செய்த தமிழ் தலைவர் எந்தக் கமெராவிலும் சிக்காமல் எட்டியே நின்றதைக் காண முடிந்தது. முள்ளிவாய்க்கால் முடிந்து இரு மாதங்களில் முதல் ஆளாக அந்தத் தலைவர் சிறிலங்காவுக்கு சுற்றுலா போயிருக்கிறார். விமான நிலையத்தில் அவரை அழைத்துச் சென்று எடுக்கப் பட்ட வீடியோக்களைப் போட்டுக் காட்டி விபரம் கேட்டிருக்கிறார்கள். தான் அந்த நிகழ்வில் இருக்கவில்லை என்று சமாளித்துக் கொண்டு அவர் தப்பி வந்து விட்டார். ஆனால் வீடியோவில் அகப்பட்ட சிலர் குடும்பத்தின் துன்ப நிகழ்வுகளுக்குக் கூட போக இயலாமல் இருக்கிறார்கள்.

இது போன்ற பல சம்பவங்கள் "அடையாளப் பாதுகாப்பு" பற்றி எதுவும் தெரியாத கற்றுக் குட்டிகளால் புலம்பெயர் நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. மாவீரர்களை இதயத்தில் வைத்திருங்கள். ஆனால் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.