Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ.

18-jayalalitha300-3.jpg

சென்னை: தமிழகம் கோரிய நிதியில் ஒரு துளியைக் கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் தனது அரசுக்கு ஆதரவு தரும் திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பால், பஸ் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அவர் பேசும்போது,

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.

bqcfk3ffatyp1l45krsg3j45sonia-gandhi.jpg

டீசல் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கின்ற நிலையில், சிறப்புக் கடன் உதவி என்ற வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாயைக் கூட அளிக்காத நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசு கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை கூட வழங்காத நிலையில், தமிழக அரசே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பொதுத் துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட வைக்க தமிழக மக்களாகிய உங்களிடம் அல்லாமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?

கடனில் மூழ்கியிருக்கும் தமிழ்நாடு கேட்ட உதவித் தொகையில் ஒருரூபாயைக் கூட மத்திய அரசு தரவில்லை. அதேசமயம், தனது அரசுக்கு ஆதரவு தரும் கட்சியான திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் ரூ. 21,614 கோடியை அள்ளித் தந்துள்ளது.

எத்தனை முறை கேட்டாலும், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்? முந்தைய மைனாரிட்டி திமுக அரசு, தமிழ்நாட்டை முற்றிலுமாக சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்ட சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தமிழக மக்களாகிய நீங்கள், ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள்.

கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?

எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலிலதா.

http://tamil.oneindi...ke-aid0091.html

டிஸ்கி:

தொடர்புடைய லிங்குகள்..

http://tamil.oneindi...du-aid0090.html

http://tamil.oneindi...mn-aid0090.html

http://tamil.oneindi...mn-aid0090.html

http://tamil.oneindi...rs-aid0174.html

http://tamil.oneindi...ke-aid0128.html

http://tamil.oneindia.in/news/2011/11/18/aavin-ghee-ice-cream-prices-also-be-hiked-tn-aid0090.html

ஜெ சென்டிமென்ட் அறிக்கை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் அடுத்த எம்பி எலக்சனில் கருநா+ கோங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பாகிட கூடாது.. :( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு அரசைக் கலைப்பத்ற்கு அல்லது தன்பக்கம் வளைப்பதற்கு

நடக்கும் இந்திய மத்திய அரசின் திருவிளையாடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4.08 நிமிடத்தில் இருந்து வருவதை பாருங்கள். :icon_mrgreen:

கருணாநிதி வைத்து விட்டுப் போன கடன்தான் காரணம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்த பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு உள்ளிட்டவை குறித்து தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

தமிழக அரசின் மீது பாரபட்ச போக்கைக் கொண்டுள்ள, மத்திய அரசை நிர்பந்தித்து நம்முடைய உரிமைகளைப் பெறுவது மிகவும் அவசியம். மாற்று வழிகளை கண்டறிந்து இன்றைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

இதற்கு பதிலாக மக்களின் மீது கட்டண உயர்வை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாயமானது ஆகாது. எனவே, ஏற்றியிருக்கும் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கட்டண உயர்வு, மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் துரிதப்படுத்தியிருந்தால், பால் விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும்.

அதே போல், ஏழை, எளியோர் அதிகம் பயன்படுத்தும் பஸ் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் மேலும் மக்களை வாட்டி வதைக்கும் இத்தகைய கட்டண உயர்வுகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தை ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கடித்துச் சென்றது கருணாநிதி அரசு. இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மக்களை மீட்கவே தமிழக அரசு பஸ் கட்டணம், பால் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

“கடன் நெருக்கடியில் மின் வாரியம், போக்குவரத்து துறை, ஆவின் பால் நிறுவனம் மூன்றும் மூழ்கி விடக்கூடாது. மூன்றுமே மக்களின் அத்தியாவசிய தேவைகள். இந்நிறுவனங்கள் திவாலாகி விட்டால் பாதிப்பு மக்களுக்குத் தான் என்பதை எல்லோரும் உணர வேண்டும். கடந்த அக்டோபர் 22 அன்று டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் சர்வாதிகார போக்கை வெளிப்படையாக கண்டித்து தமிழக முதல்வர் தனது கருத்தை பதிவு செய்தார்.

http://www.alaikal.com/news/?p=88209

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4.08 நிமிடத்தில் இருந்து வருவதை பாருங்கள். :icon_mrgreen:

இல்லை இதை முதலாம் ரீலில் இருந்தே பார்க்கணும் நீங்கள்...

http://www.youtube.com/watch?v=kCztONef6cg

:icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்களை புண்படுத்துவற்கான நோக்கம் எனது அல்ல .. எவன் எவனிடமாவது பேச வேண்டுமென்றால் காசு வேண்டும் ... காசு இல்லாத பயலை பெற்ற தாயே மதிப்பதில்லை என்று ஏழ்மை அதிகாரத்தில் திருவள்ளுவர் சொல்லி இருக்கார்.. நாலு காசு சேர்த்து பாங்கு ஏதாவது ஆரம்பித்து உலக நாடுகளை (ஏழ்மை) கவர் செய்து முன்னேறுகிற வழி பாருங்கப்பா... :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.