Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது

Featured Replies

கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது

லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியா நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள ஒபாரி நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக லிபிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

இக்கைது தொடர்பான தகவல் துல்லியமானது எனவும் இது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிகப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக் கைது குறித்து நாம் மகிழச்சியடைந்துள்ளோம். அதனால்தான் லிபிய மக்களுக்கு அறிவிப்பதற்காக இத்தகவலை உங்களிடம் விரைவாக கூறுகிறோம் என அவர் கூறினார்.

39 வயதான சயீவ் அல் இஸ்லாம் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக லிபிய அரச அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சயீவ் அல் இஸ்லாம் தனது தந்தை கடந்தமாதம் கொல்லப்பட்டதிலிருந்து நைகர் நாட்டைநோக்கி தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை சர்வதேச தரத்திற்கமைவாக நியாயமான வழக்குவிசாரணையை சயீவ் அல் இஸ்லாம் எதிர்கொள்வார் என லிபிய நீதித்துறை அமைச்சர் மொஹமட் பின் அலாலாக்கி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirr...9-12-10-58.html

  • தொடங்கியவர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இறுதிவரைப் போராடப் போவதாக ஆத்திரம் பொங்க சூளுரைத்திருந்த இவர், கிளர்ச்சியாளர்களை குடிகாரர்கள் என்றும் காடையர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கூட வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதமளவில் நேட்டோ தனது தாக்குதலை தொடங்கலாமா இல்லையா என்று ஆலோசித்துக்கொண்டிருந்த போது, எல்லா பகைகளையும் தம்மால் முறியடித்துவிடமுடியும் என்று சய்ஃப் அல்-இஸ்லாம் முழங்கினார்.

ஒரு கட்டத்தில் சய்ஃப் அல்-இஸ்லாமை பிடித்துவிட்டோம் என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.

ஆனால் மறுகணமே, திரிப்போலியில் சர்வதேச ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே தோன்றிய அவர், அந்த நிலையிலும் வெற்றி நமதே என்று நம்பிக்கையோடு கோசமிட்டுவிட்டுச் சென்றிருந்தார்.

ஆனால் அதன் பின்னர் அவர் தலைமறைவாகிப் போனார்.

கடந்த மாதம் கர்ணல் கடாஃபி பிடிபட்டு கொல்லப்பட்டுவிட்ட நிலையில் சய்ஃப் அல்-இஸ்லாம் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமலேயே இருந்தது.

சய்ஃப் அல்-இஸ்லாம் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஜூனிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் லிபியத் தலைவர் கேர்ணல் முவம்மர் கடாஃபிக்குப் பின்னர் அவரது வாரிசாக ஆட்சியைப் பொறுப்பேற்பார் என்று ஒருகாலத்தில் நம்பப்பட்டவர் தான் இந்த சய்ஃப் அல்-இஸ்லாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய கிளர்ச்சிக்கு முன்னர் வரை, மேற்குலக கல்வி கற்ற, ஆங்கிலம் பேசக்கூடிய இவரை, லிபியாவின் சீர்திருத்த முகமாகத்தான் சிலர் பார்த்திருந்தனர்.

39 வயதான, ஒரு பொறியியலாரான சயிஃப் அல் இஸ்லாம், கடாஃபியின் அணு ஆயுதத்திட்டத்தை கைவிடச் செய்த பேச்சுவார்த்தைகளிலும் அதன்பின்னர், லிபிய மருத்துவமனையொன்றில் சிறார்களுக்கு எச்.ஐ.வி கிருமிகளைத் தொற்றச் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பல்கேரி்ய மருத்துவர்கள் ஆறுபேரின் விடுதலைக்கான பேச்சுக்களிலும் முக்கிய பங்குவகித்திருந்தார்.

http://www.bbc.co.uk...ifalislam.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

நான் நலம்: கைதான பின் சயீவ் அல் இஸ்லாம் தெரிவிப்பு

லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் புதல்வாரான சயீவ் அல் இஸ்லாம், தான் நலமாக இருப்பதாக கைது செய்யப்பட்டபின் தெரிவித்துள்ளார்

லிபியாவில் அல்ஜீரியா நாட்டின் எல்லைக்கருகிலுள்ள ஒபார்ட்டி நகரில் வைத்து சயீவ் அல் இஸ்லாம் நேற்று சனிக்கிழமை லிபிய இராணுவத்தினரால்  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து விமானம் மூலம் ஸின்டான் நகருக்கு அல் இஸ்லாம், அழைத்துச் செல்லப்பட்டபோது விமானத்தில் வைத்து  அவரை ராய்ட்டர்ஸ் செய்தியாளர் மேரி லூயிஸ் குமிச்சியன் பேட்டி கண்டார்.

நீங்கள் நலமாக உணர்கிறீர்களா எனக் கேட்டபோது ஆம் என அல் சயீவ் அல் இஸ்லாம் பதிலளித்தார்.

லண்டனில் கல்வி கற்றி 39 வயதான அல் இஸ்லாம் அதிகம் பேசுவதற்கு தயங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறுகிறார்.

விரல்களில் பண்டேஜ் போடப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது, முன் நேட்டோ விமானத் தாக்குதல்களில் தான் காயமடைந்ததாக கூறினார். நேட்டோ படையின் வான் தாக்குதலிலா எனக் கேட்டபோது ஆம் ஒரு மாதத்திற்கு முன்னர் பதிலளித்தார்.

சயீவ் அல் இஸ்லாம் பானி வாலித் நகரிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது நேட்டோ ஒக்டோபர் 19 ஆம் திகதி அவரின் வாகனத் தொடரணி நேட்டோ தாக்குதலில் சிக்கியதாக அவரின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேணல் கடாபி ஒக்டோபர் 20 ஆம் திகதி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரட்ட அப்பாவிண்ட வெளிநாட்டு முதலீடு விவரங்கள் நிறைய இருக்குமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.