Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கப் படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க பாக். ராணுவத்திற்கு தளபதி கயானி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

psk-kayani.jpg

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.

http://www.pathivu.c.../19349/57/.aspx

  • கருத்துக்கள உறவுகள்

psk-kayani.jpg

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

----

தன்மானமுள்ள தளபதி, பாகிஸ்தான் தளபதி.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா மோதினால்... அமெரிக்கா என்ற வரைபடமே.. இல்லாமல், பாக்கி திருப்பித் தாக்கும்.armed_helicopter.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்மானமுள்ள தளபதி, பாகிஸ்தான் தளபதி.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா மோதினால்... அமெரிக்கா என்ற வரைபடமே.. இல்லாமல், பாக்கி திருப்பித் தாக்கும்.armed_helicopter.gif

:lol: :lol: :lol: :lol: :icon_mrgreen:

அமெரிக்கா பர்மாவிடம் உறவை அதிகரிக்க, பாகிஸ்தான் சீனாவை நோக்கி போகிறது.

இதில் இலாபம் அடைவது இந்தியா.

பாக்கிஸ்தானின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது இருப்பினும் அந்த அதிகாரியின் துணிச்சல் பாராட்டுக்குரியது

பாக். படையினர் மீதான நேட்டோ தாக்குதலுக்கு இப்போது மன்னிப்பு கோரப்பட மாட்டாது : அமெரிக்கா

நேட்டோ துருப்புகளினால் பாகிஸ்தானிய படையினர் 24 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தற்போதைய நிலையில் மன்னிப்பு கோரப்பட மாட்டாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. விசாரணைகள் முடிவடையாமையே இதற்கான காரணமாகும்.

ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பாகிஸ்தான் இராணுவ நிலையொன்றின்மீது நேட்டோ ஹெலிகொப்டர்கள் தாக்கியதால் பாகிஸ்தான் படையினர் 24 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதுவரை அமெரிக்கா மன்னிப்பு கோராமைக்கான காரணம் என்னவென செய்தியாளர்கள் வினவினர்.

அப்போது, என்ன நடந்தது நாம் கண்டறிய வேண்டும். உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். விசாரணைகளுக்கூடாக அதை செய்ய நாம் முயற்சிக்கிறோம்' என்றார்.

அதேவேளை பாகிஸ்தானின் இறைமையை அமெரிக்கா மதிப்பதாகவும் பாகிஸ்தானுடன் வலியுமையான உறவை கொண்டிருப்பதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் மார்க் டோனர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் பாகிஸ்தான் மக்களின் துயரச்சம்பவம் எனவும் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்கா அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதை கண்டறிவதற்காக மட்டுமல்ல, இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறுவதை தடுப்பதும் அவசியமாகும் என அவர் கூறினார்.

இதேவேளை ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஜேர்மனியில் நடைபெறவுள்ள மாநாட்டை, நேட்டோ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தான் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 85 நாடுகளும் 15 சர்வதேச அமைப்புகளும் இதில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் கூறுகையில், பாகிஸ்தான் இம்மாநாட்டில் பங்குபற்றாவிட்டால் அது கவலைக்குரியது. இம்மாநாடு அப்பிராந்தியத்திற்கு முக்கியமானதாகும். இது தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறார் என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/31927-2011-12-03-08-05-21.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை அவர் இந்தியா என்று நினைத்துவிட்டார்.

பாக்கர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.