Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தியின் கவிதைகள்

Featured Replies

மாவீரர்கள்

காவியங்கள் பல படைத்திட

வங்கக் கடல்தனிலே

வேங்கைகளாகப் புறப்பட்ட

மாசற்ற மறவர்கள்

அண்ணன் வழி சென்றே

அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள்

தாய் தந்தை மறந்தார்கள்

தாய் நாட்டை நேசித்தார்கள்

தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள்

தமிழ் மக்களையும்

தாய் மண்ணையும் காத்திடவே

கரும் புலியாய்!

கடற் புலியாய்!

பல்வேறு வடிவங்களில்

புயலாகப் புறப்பட்டு - இன்று

எல்லோர் மனதிலும் வாழுகின்ற

உன்னதப் புருசர்கள்

மாவீரர்கள்

வணக்கம் சந்தியா

உங்கள் மாவீரர்கள் கவிதை நன்றாக உள்ளது

இதுபோல் நல்ல கவிதைகள் தருவீர்கள் என்று நம்புகின்றோம்.

நன்றி சந்தியா

மாவீரர் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து கவிதை எழுதுங்கோ

மாவீரர் கவிதை அருமையாக இருக்கின்றது சந்தியா. வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

  • தொடங்கியவர்

நன்றி வாழ்த்தியதற்கு தாரணி, இரசி அக்கா மற்றும் றமா அக்கா

  • 1 month later...
  • தொடங்கியவர்

காதலின் ஏக்கங்கள்

அழகாக ஆரம்பித்து என்

ஆசைகளை என்னவனிடம் சொல்லி

இன்பத்தில் மிதந்திட வேண்டுமென்று

ஈர்த்தது என் இதயம் எனை அதற்கிணங்க - என்

உள்ளத்தில் உள்ள உலறல்களைக் கூட

ஊக்கத்துடன் கிறுக்கினேன் கவிதையாக

ஏலனம் செய்யாமல் என்னவன் வாசிப்பான் என்பதானால்

ஏக்கங்கள் கலந்தே என் எண்ணங்களை வடித்தேன்- ஆனாலும்

ஐயம் என் அகம்தனிலே ஏனென்று புரியாத படியால்

ஓராண்டின் முற்பகுதியை விட்டுவிட்டு

பிற்பகுதியை உற்று நோக்கினேன்

அப்போது புரிந்தது என்

அகம்தனில் ஏற்பட்ட சஞ்சலத்தின் காரணம்

அன்பு மொழிகள்

ஆசைகள் பல - ஏன்

இதயத்தில் உள்ள பற்பல

எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக

ஏங்கி நிற்கும் குழந்தையானது

:cry: :cry: :cry: :cry:

சந்தியா உங்க கவி வரிகள் அருமையானவை தொடர்ந்து எழுதுங்க......வாழ்த்துக்கள் ஆனால் சோகமாக எழுதாமல் சுகமான கவிதையாக எழதுங்கள்........

அன்பு மொழிகள்

ஆசைகள் பல - ஏன்

இதயத்தில் உள்ள பற்பல

எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக

ஏங்கி நிற்கும் குழந்தையானது

உங்கள் ஏக்கங்கள் எல்லாம் வெகு சீக்கிரம் நிறைவேற என் வாழ்த்துக்ள்...... :):lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

சந்தியா உங்க கவி வரிகள் அருமையானவை தொடர்ந்து எழுதுங்க......வாழ்த்துக்கள் ஆனால் சோகமாக எழுதாமல் சுகமான கவிதையாக எழதுங்கள்........

அன்பு மொழிகள்  

ஆசைகள் பல - ஏன்

இதயத்தில் உள்ள பற்பல

எண்ணங்கள் எல்லாமே இறுதியில் - அன்பிற்காக  

ஏங்கி நிற்கும் குழந்தையானது

உங்கள் ஏக்கங்கள் எல்லாம் வெகு சீக்கிரம் நிறைவேற என் வாழ்த்துக்ள்...... :)  :lol:  :lol:  :lol:  :lol:

நன்றி நண்பரே உங்கள் பாரட்டுக்கு ஆனால் அவை யாவும் கற்பனை மட்டும் தான் லொள்ளு பண்ணதைங்கப்பாடியோ? :(:(:(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தியா கவிதைக்கு நன்றி.

டினேஸ்மேல் ஏன் கோபிக்கிறீர்கள்? அவர் தன்னைப்போல்தான் நீங்களும் என்று எண்ணிக் கூறியிருக்கலாம்தானே!

அவருடைய "மறந்துவிட்டாயா?" கவிதையைப் படித்துப்பாருங்கள்.

எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதுங்கள்.

கோபிக்கவேண்டாம்.

அதற்கிங்க

னம்

புரியாதனால்

  • தொடங்கியவர்

சந்தியா கவிதைக்கு நன்றி.

டினேஸ்மேல் ஏன் கோபிக்கிறீர்கள்? அவர் தன்னைப்போல்தான் நீங்களும் என்று எண்ணிக் கூறியிருக்கலாம்தானே!

அவருடைய "மறந்துவிட்டாயா?" கவிதையைப் படித்துப்பாருங்கள்.

எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதுங்கள்.

கோபிக்கவேண்டாம்.

அதற்கிங்க

னம்

புரியாதனால்

நன்றி ஜயா தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நான் குறை நினைக்கவில்லை தப்புக்களை சுட்டிக்காட்டினால் மட்டுமே இன்னோர் தடவை அதே தப்பு நடக்காது

  • தொடங்கியவர்

என் கனவே நீ கலைந்திடாதே

நனவாகிவிடு

கண்டேன் என் கனவுதனில் - ஓர்

அழகான தமிழீழம் மலர - அங்கு

அழுகையொலி இன்றி

அன்பு மொழி கேட்டது

சண்டை சச்சரவும் இன்றி

சமதானமான மக்கள் - அவர்களிடம்

வேற்றுமைகள் இல்லை

ஒற்றுமையே நிலவியது

துள்ளித் திரியும் சிறுவர்கள்

துணிந்து உலாவும் பெரியோர்கள்

சுதந்திரமாய்த் திரிகின்ற பெண்கள்

வெடி குண்டுச் சத்ததிற்கு பதிலாய்

சிறார்களின் வாண வேடிக்கை

பயந்து நடுங்கும் நிலையும் இல்லை

பொருளாதாரத் தடையும் இல்லை

பட்டினியாய் இருக்கும் நிலையும் இல்லை

ஏங்கித் தவித்திருந்த மனசுகள் கூட

ஏக்கமின்றி நிம்மதியாய் தூங்கின

மகிழ்ச்சியான வாழ்க்கைதனை

மகிழ்வுடனே வாழ்கின்ற மக்கள்தனை

நான் அங்கு கண்டேன்

என் கனவே நீகலைந்திடாதே

நனவாகிவிடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தியா உணர்வுபுூர்வமாண உங்கள் கவிதைகள் நன்றாகவே உள்ளன.

மீண்டும் எனது அறிவுரை எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதவும். இல்லையேல் நீங்கள் சொல்லவந்த கருத்துக்கள் படிப்பவர்களிடம் செல்லாமலே சென்றுவிடும்.

என் கனவே கலைந்திடாதே

நனவாகிவிடு

கண்டேன் என் கனவுதனில் - ஓர்

அழகான தமிழீழம் மலர - அங்கு

அழுகையொலி இன்றி

அன்பு மொழி கேட்டது

சண்டை சச்சரவும் இன்றி

சமதானமான மக்கள் - அவர்களிடம்

வேற்றுமைகள் இல்லை

ஒற்றுமையே நிலவியது

துள்ளித் திரியும் சிறுவர்கள்

துணிந்து உலாவும் பெரியோர்கள்

சுதந்திரமாய்த் திரிகின்ற பெண்கள்

வெடி குண்டுச் சத்தத்திற்கு பதிலாய்

சிறார்களின் வா வேடிக்கை

பயந்து நடுங்கும் நிலையும் இல்லை

பொருளாதாரத் தடையும் இல்லை

பட்டினியாய் இருக்கும் நிலையும் இல்லை

ஏங்கித் தவித்திருந்த மனசுகள் கூட

ஏக்கமின்றி நிம்மதியாய் தூங்கின

மகிழ்ச்சியான வாழ்க்கைதனை

மகிழ்வுடனே வாழ்கின்ற மக்கள்தனை

நான் அங்கு கண்டேன்

என் கனவே கலைந்திடாதே

நனவாகிவிடு

_________________

>>>>***சந்தியா***<<<<

ஆகா அழகான கனவு அது நனவாகும் நாள் வெகு தொலைவிலில்லை. தொடர்ந்தும் இதுபோன்ற கனவுகளைக்காண வாழ்த்துகிறேன்.

சந்தியா உங்கள் கனவு வெகு சீக்கிரம் நனவாகும்.......உங்கள் அருமையான கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நன்றி செல்வமுத்து ஐயா உங்கள் கருத்துக்கும் மற்றும் பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கும்.

நன்றி ஈழநேசன் மற்றும் டினேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.