Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகள் என்ன காட்சிப் பொருட்களா? � அழைத்துவந்து அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டித்தார் விஜயகலா:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vijayakala.jpg

"நீங்களும் மனிதர்கள்தானே! உங்களுக்கு சகோதரர்கள் இல்லையா?, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா? ஏன் இப்படி எங்கள் தமிழ்ச் சகோதரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்?" நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்றுக் கொதித்தெழுந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். அரச தரப்பினரைப் பார்த்து அவர் ஆக்ரோஷமாகச் சீறினார். புனர்வாழ்வு வழங்கப்படுவதாகக் கூறிக் கடந்த இரண்டரை வருடங்களாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் 104 பேர் நேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் வெள்ளை நிற ரீசேர்ட்டுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அந்த ரீசேர்ட்டுகளில் பெயர்களும், அடையாளங்களும் இடப்பட்டிருந்தன. பெண் போராளிகளுக்கு அவர்கள் அணிந்திருந்த உடையின் மேல் இந்த ரீசேர்ட் அணிவிக்கப்பட்டிருந்தன. இதனால் அவர்கள் பல நிற குட்டைப் பாவாடைகளின் மேல் வெள்ளைநிற ரீசேர்ட்கள் அணிந்திருந்ததைப் போன்று தோன்றியது.

வெள்ளை நிற ரீசேர்ட்டுகளுடன் அவர்கள் பார்வையாளர்கள் கலரியில் அமர்ந்திருந்தமை காட்சிக்கு இருத்தியிருந்ததைப் போல் இருந்தது என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலைப்பட்டனர். முன்னாள் போராளிகள் இவ்வாறு காட்சிப் பொருள்களாக அமர்த்தப்பட்டிருந்ததை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா ஆவேசம் வந்தவர்போல் எழுந்து ஆத்திரத்துடன் கொட்டித் தீர்த்தார்.

"இங்கே என்ன நடக்கின்றது? இங்கே காட்சிப் பொருளாக அழைத்து வரப்பட்டுள்ளவர்கள் எனது சகோதரிகள். கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்கள் குற்றம் இழைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக இவர்களை இப்படி அவமானப்படுத்தக்கூடாது. நாடாளுமன்றத்திற்கும் அழைத்து வந்துவிட்டோம் என்று பெருமைபடக்கூடாது. இது எங்களுக்கு பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது" என்றார் விஜயகலா.

போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீள இணைக்கிறீர்கள் என்று கூறும் அரசு, அவர்களை சாதாரண பெண்களைப் போன்று சிவில் உடையில் அழைத்து வருவதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "திட்டமிட்டே அவர்களை வேறுபடுத்திக் காட்டி அவமானப்படுத்துகின்றார்கள்" என்றும் அவர் கூறினார்.

"முன்னாள் போராளிகளுக்குத் தளபதியாக இருந்தவருக்கு கோட்டைமாட்டிவிட்டு பிரதி அமைச்சராக குந்தவைத்துள்ளீர்கள். அவர் சூடு, சொரணையின்றி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். இதனைப் பார்த்து கண்டித்து வேதனைப்படவேண்டிய இஸ்லாமிய உறுப்பினரோ பாராட்டுகின்றார்.(ஏ.எச்.எம்.அஸ்வர் ஆரம்பத்தில் பாராட்டினார்) இது வேதனைப்படக்கூடிய ஒரு விடயம். இன்று இவர்களை இங்கு அழைத்துவந்து அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று முழங்கினார் விஜயகலா மகேஸ் வரன்.

http://www.seithy.co...&language=tamil

“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.”

mainpic2.jpg

z-deepaali%20london%20%281%29.jpg

விசயகலா, ... உங்கு மட்டுமல்ல, புலத்தில் லண்டனிலும் உந்த முன்னாள் போராளிகளாம் மொட்டை மனிதர்களை அழைத்து வந்து ...? ... ஆனால் என்ன உந்த ... மானத்தை விற்று/நரம்பற்ற/பணத்துக்க்காக எதனையும் செய்யும் மொட்டை மனிதர்கள்..., இது புகழாக தெரிகின்றது!!!!!!!!!!

பல மேற்குலக நாடுகள் இவ்வாறான சிங்கள ஏமாற்று வித்தைகளுக்கு இரங்கி பணம் கொடுக்கின்றன.

அதை விழுங்கி ஒரு பக்கத்தால் ஏப்பம் விட்டு படம் காட்டும் சிங்கம் மறுபக்கத்தில் இவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தும் வருகின்றது.

பா.உ. விஜயகலா தனது அனுமானங்களையும் படங்களையும் எல்லா வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் அனுப்பி வைத்தால் நன்றியாக இருக்கும்.

புனர்வாழ்வு என்ற பெயரில் பணத்தை திருடுவதற்கு அவர்களின் அடிப்டை உரிமைகள் மறுக்கப் பட்டு, பலருக்கு சுயமாக சிந்திக்க முடியாதவாறு மூளை சலவை செய்யப்பட்டு, உபயோகமற்ற பிரஜைகளாக மாற்றப் பட்டு தொடர்ந்து பலாத்காரம் பண்ணப் படுகிறார்கள். வெளிநாடுகள் தமது அதிகாரிகள் பங்குபற்றாத புனர் வாழ்வுகளை நிறுத்த வேண்டும்.

தயவு செய்து இதன் ஆங்கில பிரதிகளை சனெல்-4 க்கு அனுப்பி வைக்கவும். அவர்கள். கைது செய்யப் பட்டு பின்னர் வன்முறையாக எதிராக வாக்கு மூலம் கொடுக்க வைக்க பட்ட மருத்துவர்களையும் கருத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஏதாவது உண்மைகளை ஏற்கனவே பெற்றிருந்திருக்கலாம் போலுள்ளது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

z-deepaali%20london%20%281%29.jpg

விசயகலா, ... உங்கு மட்டுமல்ல, புலத்தில் லண்டனிலும் உந்த முன்னாள் போராளிகளாம் மொட்டை மனிதர்களை அழைத்து வந்து ...? ... ஆனால் என்ன உந்த ... மானத்தை விற்று/நரம்பற்ற/பணத்துக்க்காக எதனையும் செய்யும் மொட்டை மனிதர்கள்..., இது புகழாக தெரிகின்றது!!!!!!!!!!

விலாங்கு மீன் போன்றவர்கள் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் இவர்கள் புலம்பெயர் தேசங்களில் தமது வியாபர நோக்கங்களுக்காக தேசியம் பேசுகின்றார்கள் மறுபக்கத்தில் சிறீலங்கா அரசுடனும் சுயநலனுக்காக திருட்டுத்தனமாக உறவை வைத்திருக்கின்றனர் அதுமட்டுமன்றி சமூகததில் தம்மை பெரியவர்களாக காட்ட தவறுவதில்லை இதக்கான தீர்வு இந்த விலாங்குகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாகும்.

அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதுதான் ,, பெரிய விசயம் & மகிழ்ச்சி !

விஜயகலா மேடம்... உங்க உணர்ச்சி பேச்சு நல்லாத்தான் இருக்கு! அதிலொண்ணும் தப்பில்ல!

ஆனா இதே போராளிகள வெளீல சிங்களவன் விட்டா,

அவர்களுக்கு வாடகைக்குகூட வீடு கொடுக்காம, ........

அவர்களுக்கு, மாப்பிளையோ/பொண்ணோ கொடுக்காம.....

அவர்களுக்கு பெட்டிக்கடைகூட வைத்துபொழைப்பு நடத்த உதவாம.....

அவனை விட அதிகமா ,,அவர்களை அவமானபடுத்தாம.. எங்க சமூகம் &அரசியல் கட்சிகள் பார்த்துக்கணும்..

பார்த்துப்பிங்களா?

அதிகாரவர்க்கத்தோட நெருங்ககூடிய நிலமைலஇருக்கும் எதிர்க்கட்சில உள்ள நீங்க ,,அவர்கள் விடுதலைக்கும், அதன் பின்னான கெளவரமான வாழ்க்கைக்கும், உதவி பண்ணுங்க பிளீஸ் மேடம்!

அதவிட்டு சும்மா பாராளுமன்றத்ததில கத்துறது... யாருக்கும் உதவாது...

நீங்க சார்திருக்கும்,, யு.என்.பி தமிழர் வாக்கு வேட்டைக்கான பிளானிங்கை தவிர்த்து!

மானத்தை விற்று/நரம்பற்ற/பணத்துக்க்காக எதனையும் செய்யும் மொட்டை மனிதர்கள்..., இது புகழாக தெரிகின்றது!!!!!!!!!!

இதக்கான தீர்வு இந்த விலாங்குகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதாகும்.

நெல்லையான், தமிழரசு பல திரிகளில் தொடந்து முயறசிக்கிறீகள். பாராட்டு.

யாழில் எழுதுவோர் விஜயகலா பா.உ இப்படியெல்லாம் தூஷணம் பேசலாமா. அதை நீங்கள் ஆதரிக்கலாமா? என்றுதான் எழுதுவார்கள். அது உங்கள் முயற்சிகளை பின்னடைய செய்ய அளந்து செய்யும் தொழில் பாடு. அவவை நீங்கள் காப்பாற்ற வேண்டியதில்லை.

"கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல்இனிது". நீங்கள் இதில் தோற்றாலும் இந்த முயற்சி பெருமைக்குரிய விசையம்.

“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.”-

சந்திரிக்கா SWRDக்கு பாடுகிற பாட்டு.

கெட்டு நொந்து போயிருக்கும் தமிழருக்கு பாடம் சொல்வது எளிது. அவர்களுக்காக பேசுவது தாழ்மை.

துணிச்சலிருந்தால் பிரிச்சோதுகிற புத்தபிக்குகளுக்கு மொழிபெயர்த்து கொடுத்து விடலாம். பிரிவினையை கொண்டுவந்த மகாவம்சத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வருவார்கள்.

மேலும் தொடந்து பிரிவினையை வளர்த்து வரும் மகா வம்சத்தை விட்டு விட்டு, எழுதியவர் கூறிய அறனெறியை துறவியாக மாறி போலியாகவல்லாமல் மனசாட்சியாக தானே பின்பற்றியமையாலும், இந்து சமயத்தில் இல்லாதவாறு அறத்தை வலிமையாக எடுத்துரைப்பதாலும், கடவுளை விழிக்கும் முதல் சொல் (முழுமுதல் கடவுளான சுடலைப் பொடி பூசிய சிவனை அல்லாமல்) “மலர்மிசை ஏகினான்” என்று செங்கமலத்திலமர்ந்திருந்து தவம் செய்யும் முதல்வனான புத்தபிரானை சுட்டுவதாலும் பலரால் பௌவுத்த நுலாக கொள்ளப்படும் திருக்குறள் எதுவித சங்கேதமுமின்றி பௌவுத்தக்கோவில்களிளும் விகாரைகளிலும் பாட நூலாக கொண்டு வரப்படும்.

Edited by மல்லையூரான்

விஜய கலா என்றாலும் ஒருக்கா உரக்க சொன்னா?

மற்ற தமிழ் பிரதிநிநிதிகள் என்ன செய்தவையாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைச் சிங்களவர் காட்சிப் பொருட்களாக வைத்திருக்கின்றார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குப் பேச்சுப் பொருட்களாக வைத்திருக்கின்றார்கள்

எல்லாமே ஒன்றுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.