Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன – சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன – சிறிதரன்

12 டிசம்பர் 2011

இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் கணப்படகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் சில பகுதில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ரீதியான சான்றுகள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று சான்றுகள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமையை உறுதிப்படுத்துகின்றன.

வடக்கின் இந்து வழிபாட்டுத் தளங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் வடக்கில் காணப்படும் ஓர் இந்து ஆலயத்தில் சிவன் சிலை அகற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சார ஆக்கிரமிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/71373/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த விளக்குமாத்துக் கட்டைக்கு இந்த வேலை?

சொல்லப்போனால் புத்தனே தன் இளம் வயதில் ஒரு இந்துதானே?

இவருக்கும் புராதன தொல்பொருள் ஆய்வுக்கும் என்ன சம்பந்தம்.

இந்த விடயத்தை வரவு செலவு திட்ட விவாதத்தில் சொல்ல எந்தளவில்

பொருத்தமுள்ளது?

சிங்களப் பகுதிகளில் எத்தனையோ தடவைகள் இந்து மத சான்றுகள்

கல்வெட்டுகள் என்பன தெல்பொருள் அகழ்வுகளில் கிடைத்திருந்தும்

அதைப்பற்றிய தகவல்கள் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன.

ஏன் இந்த விளக்குமாத்துக் கட்டைக்கு இந்த வேலை?

...

எடுத்தோம் ... போட்டு உடைத்தோம் ... அங்கு கந்தரோடையின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டாச்சு!! .. யாழில் பவுத்த சின்னங்கள் இருப்பது மறுக்க முடியாதது ... அவன், சிங்களவன், அவை சிங்களவர் அங்கிருந்ததற்கான சான்று என்கிறான்??!! .. என்ன சொல்ல போகிறீர்கள்??

DSC05089.JPG

Kantharodai.jpg

முன்பு கனடாவில் இருந்து ஒருவர் ஆதாரங்களுடன் எழுதிய ஓர் புத்தகம் வாசித்த ஞாபகம் ... இலங்கையின் மத்தியிலும் ... அநுராதபுரம், பொலநறுவை ... தமிழ் பவுத்தர்கள் தொன்று தொட்டு வாழ்ந்தார்கள் என்றும், பின் சிங்கள மொழி பயன்பாட்டினால்(அக்காலத்தில் அப்பிரதேசங்களை ஆண்டவர்கள் சிங்கள மன்னர்களாதலால் ...) ... சேரநாடு மலையாளம் ஆக மாறியது போல் ... சிங்களவர்கள் ஆகி விட்டார்கள்.

... படிப்பித்த ஓர் ஆசிரியர் அன்று கூறியது ... தென் இந்தியாவிலும் பவுத்தமும், சமணமுமே அன்று ஓங்கி இருந்ததாகவும், அது பின் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் பின் மாற்றங்கண்டது என்று!!!

... சிறிதரன் கூறியதில் எந்த தவறும் இல்லை!

Edited by Nellaiyan

மகா வம்சத்தை எழுதிய புத்தபிக்கு தமிழ நாட்டிலிருந்து வந்தவர் என்பதும், மணிமகலை புத்த சமயத்தை இலங்கையில் பரப்பினார் என்பதும், புத்தசமயத்தை இலங்கையில் தமிழ நாட்டு தமிழர்களே காஞ்சியிலிருந்து வந்து எற்படுத்தினார்கள் என்பதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

சோழ நாட்டில், கி.பி பத்தாம் நூற்றாண்டில், இருந்ததாக நம்பப்படும் புத்தர் சிலை.

புத்தரினது மீசையையும் கவனிக்கவும்!!!

இதே போல கந்தரோடையில் கண்டெடுக்கப் பட்ட புத்தர் சிலைகளின் கால்களின் அமைப்பு, இந்துத் தெய்வங்களின் கால்களின் அமைப்புப் போல இருந்தது!

வட இந்தியப் புத்தர் சிலைகளில் கால்கள் நேர் கோடுகளாக அமைக்கப் பட்டிருக்கும்!

BuddhaFeet.jpg

mangalam.JPG

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? சொல்லவே இல்லை..

நேர்மையும் மனிதாபிமானமும் நெஞ்சை தொட்டிடுச்சு தொட்டிடுச்சு.

அதுல்லைங்க இப்ப பிரச்சனை.

இவ்வளவு அனுபவிச்சபின்னாலயும் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்க முண்டியடிச்சிட்டு நிக்கிறாங்க

போங்கய்யா போங்க, அள்ளி தின்னுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? சொல்லவே இல்லை..

நேர்மையும் மனிதாபிமானமும் நெஞ்சை தொட்டிடுச்சு தொட்டிடுச்சு.

அதுல்லைங்க இப்ப பிரச்சனை.

இவ்வளவு அனுபவிச்சபின்னாலயும் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்க முண்டியடிச்சிட்டு நிக்கிறாங்க

போங்கய்யா போங்க, அள்ளி தின்னுங்க.

அப்படியில்லீங்க, வணங்காமுடி!

தமிழ்ப் புத்தனுக்கும், சிங்களப் புத்தனுக்கும் வித்தியாசம் இருந்தது என்பதைச் சொல்லவந்தேன்!

நீங்கள், அதுக்குள்ளேயே சோழநாட்டில சிங்களவன் இருந்தானேன்று, நான் சொன்னதாக முடிவெடுத்தால் அதற்கு நானா பொறுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு உங்கள் பதிவுக்கு அடுத்த பதிவாக நிரைப்படுத்தப்பட்டு விட்டதென்பதற்காக அதை உங்கள் கருத்துக்கு எழுதிய பதிலாக எண்ணவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு உங்கள் பதிவுக்கு அடுத்த பதிவாக நிரைப்படுத்தப்பட்டு விட்டதென்பதற்காக அதை உங்கள் கருத்துக்கு எழுதிய பதிலாக எண்ணவேண்டாம்.

வருந்துகின்றேன்! வணங்காமுடி!

இந்த அவசரப் புத்தி மட்டும், நம்மை விட்டுப் போகுதில்லையே!!! :D

வணங்காமுடி: பௌத்த நளாந்தா தான் உலகின் முதல் பல்கலை கழகமாகப் பார்க்கப்படுகிறது தற்போது.

ஆனால் பல்லவர் தமிழர் அல்ல என்ற கோட்பாடை எதிர்த்து செய்ய முயன்ற ஆராச்சிகள் சில புதிய கருத்துகளுக்கு சூடு ஏற்றியிருக்கிறது.

காஞ்சியிலேதான் பல்கலைக்கழகம் என்ற கருதுகோளே முதல் முதல் ஆரம்பிக்க பட்டது என்பது அவற்றில் ஒன்று. இணப்புகளை படியுங்கள். இவைகள் அறுதியிட்டு நிறுவும் ஆராச்சி கட்டுரைகள் அல்ல. நம்மை போல பொழுது போக்குக்காக எழுதுவோரின் கருதுக்கள்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18307-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://nampuzhuthi.blogspot.com/2011/05/blog-post.html#!/2011/05/blog-post.html

சிங்களவன் பௌத்தனாக இருக்கிறான் என்பதற்காக காஞ்சியில் நாம்தான்(ஒன்றல்ல, பல) பல்கலைககழகங்களை ஏற்படுத்தியிருந்தோம் என்ற பெருமை நமக்கு வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.