Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாக வாளினால் வெட்டு!! சிங்கள இளைஞர்களின் வெறியாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

breakingnews.gif

கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து சிங்கள இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் இருந்த சிங்கள காடையர்கள் எட்டியாந்தோட்டை, தோட்டப் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்று முன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.

போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள காடையர் அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டது.

கடும் கோபத்துடன் திரும்பிச்சென்ற சிங்கள காடையர்கள் இளைஞர்கள் தங்களது கோஷ்டியினர் சகிதம் மீண்டும் ஆலய வளாகத்துக்குள் வந்து, தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாக வாளினால் வெட்டித் தாக்கியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியால் வீட்டுக்குள்ளேயே உறைந்துப்போயுள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அசுரவேகத்தில் செயற்பட்ட மனோ, அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

எட்டியாந்தோட்டை பிரதேச பிரஸ்தாப தோட்டத்திற்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸார் மனோவிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், இச்சம்பவத்தை மனோ கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தற்காப்புக்கு ஆயுதம் எடுத்தால்.. அது பயங்கரவாதம்.. சிங்களவர்கள் இனவெறிக்கு ஆயுதம் எடுத்தால்.. வீரம்.. அல்லது சாதாரண வன்முறை. என்ன உலக நியதியோ..???! :o:rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து

ஒரு ஐனநாயக மூடியை முகத்தில் போட்டுக்கொண்டு வெட்டவேண்டியதுதான்.

அடுத்து

ஒரு ஐனநாயக மூடியை முகத்தில் போட்டுக்கொண்டு வெட்டவேண்டியதுதான்.

ஒரு சிறுபான்மை இனம் என்னதான் முகமூடி போட்டாலும், இந்த பெரும்பான்மை இனவாத சிங்கள அரசு அதை 'பயங்கரவாதமாகவே' சித்தரிக்கும்.

தொடர்ச்சியான பரப்புரைகள் மூலம் சர்வதேச ஆதரவை பெறுவது மூலமே இவர்களிடம் இருந்து பிரிந்து செல்லவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுபான்மை இனம் என்னதான் முகமூடி போட்டாலும், இந்த பெரும்பான்மை இனவாத சிங்கள அரசு அதை 'பயங்கரவாதமாகவே' சித்தரிக்கும்.

தொடர்ச்சியான பரப்புரைகள் மூலம் சர்வதேச ஆதரவை பெறுவது மூலமே இவர்களிடம் இருந்து பிரிந்து செல்லவேண்டும்.

அதனை நாம் முன்னெடுத்து ஓரளவு வெற்றியும் ஈட்டிவரும் நிலையில் திடீரென சிலர் புலம்பெயர் தேசங்களில் கடைசி யுத்தத்தில் தாங்கள் நின்றதாகவும் தங்களுக்குதான் எல்லாம் தெரியும் என்பவர்கள் ஏன் தலைவருடன் நின்று நாட்டுக்காக சண்டையிடாது தப்பி வந்து பல புரளிகளை கடடவுள்த்துவிட்டு இங்கு ஒற்றுமையுடன் செயற்பட்டவர்கள் மத்தியில் பிரிவை உருவாக்கி எமது பலத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளுகின்றனர் இந்நிலை தொடருமாயின் எப்படி நீங்கள் கூறுவது சாத்தியமாகும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.