Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் கப்பல்கள் தொடர்பான விபரங்களை அமெரிக்காவிடமே பெற்றோம்!! - மகிந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahindastatues111.jpg

மேற்கு நாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகள் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது அழுத்தங்களை கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர் என இந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் ஆங்கில பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் எப்போதும் காஷ்மீரையும் இலங்கை நிலவரத்தையும் பற்றி அந்நாடுகளின் பாராளுமன்றத்தில் ஆட்சேபக் குரல் எழுப்புகின்ற போதிலும், அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் மேற்கத்திய வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் பற்றி வாய்திறந்து பேசாமல், மெளனம் சாதிக்கின்றனவென்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டிய சாதகமான சூழ்நிலை இன்று நாட்டில் உருவாகியிருக்கின்றது. இப்பேட்டியில் மஹிந்த ராஜபக்ஷ தமது நாடு இந்தியா, சீனாவுடன் கொண்டுள்ள நல்லுறவை பற்றியும் தமிழர் பிரச்சினையை தீர்த்துவைப்பதில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

நான் இந்தியாவிற்கே முதலிடம் கொடுக்கிறேன். இந்தியாவுக்கு அடுத்தபடியாகவே மற்றைய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதிகார பீடத்தில் நான் அமர்ந்தவுடன் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டு அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டேன். நான் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், ஐக்கிய ராஜதானி மற்றும் அமெரிக்காவைப் பற்றி கவலைப்படவில்லை.

ஆயினும், அமெரிக்காவிடம் இருந்து ஆழ்கடலில் உள்ள விடுதலைப்புலிகளின் கப்பல்களின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டோம். அதன் மூலமே விடுதலைப்புலிகளை ஆழ்கடலில் தோற்கடிக்க முடிந்தது என்றும் மஹிந்த தமது பேட்டியில் குறிப்பிட்டார்.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் புலிகளின் கடல் பிரயாணங்களை காட்டிக்கொடுத்ததில் முன்னணியில் நின்று செயற்பட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தியின் மூலம் மகிந்தர்

அமெரிக்கா மீதும் ஏனைய மேற்கு நாடுகள் மீதும்

மிகுந்த அச்சம் கொண்டவராகத் தெரிகின்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான நாடுகளின் உதவியுடன் புலிகளை அழித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை இருந்தபோதிலும் இதில் புலிகளின் கப்பல்களை அழித்ததர்க்கான பொறுப்பு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தான் அதிக பங்கு உண்டு இந்த வேளையில் அமரிக்காவை ராஜபக்சே இழுப்பது ராஜதந்திரம்.

அமெரிக்கா, சைனா, யுரோப், இந்தியா, தமிழ்நாடு உட்பட அனைத்துலகத்தை சேர்ந்த எல்லொரும் சிங்களவருக்கு உதவிசெய்தார்கள்.... அதே நேரம் எம்முடன் கூட இருந்து கழுத்தறுத்த எமது சகோதரங்கள், நண்பர்கள், உறவினர்களயும் மறக்கவேண்டாம்..

அடப்பாவி பனங்காய்,

இது உனக்கு அடுக்குமா தமிழக உறவுகளுமா கழுத்தருத்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எனில் கே.பி.தான் புலிகளின் கப்பல்களைக் காட்டிக் கொடுத்ததாக புலத்துக் கண்மணிகள் கூறிக் கொண்டிருப்பதற்கு அர்த்தம்தான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எனில் கே.பி.தான் புலிகளின் கப்பல்களைக் காட்டிக் கொடுத்ததாக புலத்துக் கண்மணிகள் கூறிக் கொண்டிருப்பதற்கு அர்த்தம்தான் என்ன?

கே.பியும் றோவும் கூடிக் குலாவியதாக பேசிக்கொள்கிறார்களே!!!

மகிந்தர் பழைய பகிடியை திரும்ப திரும்ப விடப்பார்க்கிறார். பிளேக் ஒருவர் மட்டும் தான் அமெரிக்காவிலிருந்து உந்த பகிடிக்கு சிரிக்க கூடியவர். அமெரிக்க பிரசைகள் இன்று போட்ட உடையை நாளை போடாதவர்கள். இவரின் சகோதரம் கோபத்தபயா, அவரும் ஒரு அமெரிக்க பிரசை, அவர் கூட இந்த அமெரிக்க பகிடிக்கு சிரிக்காமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டிருக்கிறார். சிரிச்சால் திரும்ப அமெரிக்கா போக முடியாது என்பது அவருக்கு விளங்குகிற அளவுக்கு மகிந்தருக்கு இன்னமும் விளங்கவில்லை. மற்றைய பிரசை, பொன்சேக்கா பகிடி விடுகிற மகிந்தரைப்பற்றி வெள்ளை மாளிகையிலேயே புகார் செய்கிறார். போன முறை மகிந்தா இந்த பகிடியை விட்ட போது அவரோடு மேற்குலகங்களும் சேர்ந்து சிரித்தன. இந்த முறை பகிடியை தானே விட்டு தானே சிரிச்சுப்போட்டு இருக்கிறார் மகிந்தர். அடுத்தமுறை இந்த பகிடியை திரும்ப விட்டாராயின் மேகுலகத்திட்டை அடிவாங்கி அழத்தான் போகிறார். புதிசாய் எதாவதோடை வராவேண்டிய நேராமாகிவிட்டது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.