Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு தொடர்ந்தும் ஏமாற்றுமாக இருந்தால் தாயக மற்றும் புலம்பெயர் மக்களை அணிதிரட்டி போராடுவோம்

Featured Replies

அரசு தொடர்ந்தும் ஏமாற்றுமாக இருந்தால் தாயக மற்றும் புலம்பெயர் மக்களை அணிதிரட்டி போராடுவோம்: அரியநேத்திரன்

இலங்கை அரசு தொடர்ந்து பேச்சுமூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வடக்கு, கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கல்விப் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:

எமது வடக்கு, கிழக்கில் கடந்த 30 வருடகாலமாக ஒரு போராட்டம் இடம்பெற்றது. போராட்டம் இடம்பெற்றாலும் கூட வடக்கு, கிழக்கில் ஒழுக்கம் என்பது மிகவும் கட்டுப்பாடாக இருந்துகொண்டிருந்தது. இப்போது கலாசார சீர்கேடுகளை எமது தமிழ்ச் சமூகத்தில் பரப்புவதற்குப் பல சக்திகள் திட்டமிட்டு சதிசெய்துகொண்டிருக்கின்றன. இவர்களுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகக்கூடாது.

எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் இந்த அரசிற்கு எதிர்க் கட்சியாக இருந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் அபிவிருத்திக்காக நாடாளுமன்றம் செல்லவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. இந்த 2012ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்று தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு பேச்சு என்ற நாடகத்திலே நாங்கள் இறங்கியிருந்தோம். 17 சுற்றுப் பேச்சால் காலத்தை கடத்தியிருந்தோம். எங்களை இலங்கை அரசு ஏமாற்றியிருக்கின்றது.

எமது தமிழர் உரிமைக்கான போராட்டம் என்பது இலங்கைக்கு அப்பால் சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேசிக்கொண்டிருகின்றது. தொடர்ந்தும் அரசு எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்குமாக இருந்தால் பேச்சிலிருந்து விலகிச்செல்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

கடந்த 62வருட காலத்திலே எமது மிதவாத அரசியல் தலைவர் கள் நடத்திய அகிம்சைப் போராட் டம். அதற்குப் பின் நடந்த ஆயுதப்போராட்டம் என்பவற்றிலிருந்து வித்தியாசமாக அரசு எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. அரசிற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரும்படி சர்வதே சத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுப்பது தவிர்க்கமுடியாது போகும்.

வடக்கு, கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த வழியை இலங்கை அரசு எம்மீது சுமத்துமாக இருந்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டிய தேவை அதற்கு இருக்கிறது. சர்வதேசத்திற்கும் இருக்கின்றது. ஏனென்றால் ஆயுதப்போராட்டத்தை அடக்கியதாக கூறும் 20 நாடுகளுக்கும் எமது தமிழ் மக்களுக்கான உரிமையை தர வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. போராட்டத்தை அடக்கிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தர வேண்டிய காலகட்டத்தில் அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்த 2012ஆம் ஆண்டு அந்த காலகட்டத்தில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கின்றது. பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எங்கள் மீது சுமத்தப்படுகின்றன. ஜனாதிபதியை எந்த வகையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் ஆதரித்து தலைமை தாங்க விட்டார்களோ அதே வகையில் வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குவதற்குரிய ஆணையைத் தந்திருக்கின்றார்கள். அந்த ஆணையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது என்றார் அவர்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=198cc682-f99f-4fcc-b1c4-e157f1cc01d3

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சொல்

செயலில் காட்டக்கூடிய அடுத்த நிலை

  • தொடங்கியவர்
and082311.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியாக இருக்கின்றது,

ஆனால் அது சிறிலங்காவை பொறுத்தளவில் எவ்வவுக்கு சாத்தியப்படும் என்பதே மிகவும் முக்கியமான விடையம்.

ஏனெனில் உலகை பொறுத்தளவில் சிறிலங்கா என்னும் சொறிலங்கா அவர்களின் செல்லப்பிள்ளை ஆச்சே.......

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி சும்மா காமடி பண்ணிக்கிட்டு எப்பிடியோ அரசு ஏமாத்த தான் போகுது......சோ போராட்டத்த இப்பவே ஆரம்பிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வாய்ப்பேச்சில் மட்டும் வீரர்கள்

செயலில் ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருக்கிறதே பேச தானே.........வடிவிற்க்கா வாய் இருக்கு...இந்த டயலக்க மாத்துங்கப்பா.....எத்தினைதரம் எத்தினை பேர் தான் சொல்லுவீங்கள்? வாய் பேச்சு வீரர் கீ போர்ட் வீரர் என்டு பழசு கண்ணா பழசு......புதுசா எனித்திங்?

அவர்கள் மேல் பிழை இல்லை ,சிங்களம் தீர்வு கொடுப்பதும் ,கொடுக்காததும் இனி புலம் பெயர்தமிழரிடமும், தமிழக தமிழர்களின் கைகளில்தான் உள்ளது.

வெற்றி கொண்ட மமதையில் இருக்கும் ஒரு இனத்திடம் போய் எப்படி தீர்வை எதிர் பார்க்கலாம்?

அங்குள்ள அரசியல் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது ,சும்மா ஒரு ஏமாத்து வேலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.