Jump to content

60 வயதுப் பாலம்


Recommended Posts

60 வயதுப் பாலம்

அன்று :

அம்மா இறந்து விட்டாள். அழுவதா! அல்லது வேடிக்கை பார்ப்பதா! என்று புரியாத வயது. தாய் தந்தை இல்லாதவன் அனாதை என்றும், யாராவது ஒருவர் இறந்தாலும் பாதி அனாதை என்று சொல்லுவார்கள். ஆனால் என்னைச் சுற்றிலும் ஏராளமான உறவினர்கள். தாத்தா பாட்டி, அப்பா, மாமன்மார், அத்தை, பெரியம்மா, அவரது பிள்ளைகள், சின்னம்மா, என்று ஏராளம்….

இன்று :

”அப்பாவுக்கு லேசான நெஞ்சுவலியாம்! டாக்டரிடம் போகலாம்.”, ”இல்லை இல்லை. அப்பல்லோவுக்கு போய் வைத்தியம் செய்யலாம்.”, என்று குரல்கள் கேட்கின்றன. சுற்றிலும் பார்க்கிறேன். என்னுடைய 4 பிள்ளைகள், 4 மருமக்கள், 8 பேரன் பேத்திகள், மனைவி என்ற உறவுகளில் ஒரு பட்டாளமே நிற்கிறார்கள்.

அது சரி!… அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை? அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ’நான் ஒருவன்’ என்ற சம்பந்தத்தைத் தவிர வேறு என்ன சம்பந்தம்?

என்ன! பாலத்துக்கு அக்கரையில் அவர்கள்! இக்கரையில் இவர்கள்! அன்று எனக்கு வயது 10. இன்று 70. அவ்வளவுதான் வித்தியாசம். யோசித்தேன். ஜென் தத்துவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

இந்த உலகில்,

எல்லாம் இருக்கிறது.

ஆனால் ஒன்றுமே இல்லை.

http://kathaiezuthukiren.blogspot.com/2011/01/60.html

எழுதியவர் G.ராமசாமி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏
    • திருச்சி தொகுதியில் துரை வை .கோ முன்னணியில் 
    • 11 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம் திமுக - 39 (முன்னிலை) அதிமுக - 0 பாஜக - 1 நாம் தமிழர் - 0 மற்றவை - 0 தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்
    • ஜனாதிபதி செயலகத்தில் மோதல்: ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி! ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்த  நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக் கூட்டமும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறிய போது நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் வலுப் பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால் குணதிலக்க ராஜபக்ஷ தள்ளப்பட்ட நிலையில், அவர தவறி படியிலிருந்து கீழே விழுந்துள்ளதாகக்  கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால், தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், தான் அவரை தள்ளிவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்து செல்ல முற்பட்ட போது, அவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1385859 #################    ##################    ############ ஆதவன் போட்ட தலைப்பை பார்க்க... மகிந்த ராஜபக்சவுக்கு, செம அடி விழுந்தது போலை இருக்கு.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.