Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலுமகேந்திராவின் வீடு

Featured Replies

தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை.

அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் " வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி.

முழுப்பதிவிற்கு

http://kanapraba.blogspot.com/

-கானா பிரபா-

நன்றி பிரபா. நல்ல பதிவு ஒன்று. சினிமா பற்றிய அறிவை, தேடலை வளர்த்துக்கொள்வது நாமும் எம்மவர் சினமாவை தரமானதாக கட்டியெழுப்ப துணையாக இருக்கும். அந்தவகையில் நல்லதொரு முயற்சி. வெறும் சினிமாக் கிசு கிசுக்களை படித்து சுவைக்கின்ற நம்மவர்க்கு இப்படியான ஆக்கங்கள் பயனுள்ளதாக அமையும். (அவர்கள் இதை வாசித்தால்). தொடர்ந்தும் எழுதுங்கள். நன்றி.

வீடு படம் நானும் பார்த்து இருக்கிறேன். அந்த படத்தில் ஒரு பாடலும் இல்லை. நல்ல படம்

கானா பிரபா நீங்க யாழிலயும் இருக்கிறீங்கிளா :(

  • தொடங்கியவர்

பின்னூட்டமிட்ட இளைஞன், ரசிகை, சினேகிதி உங்களுக்கு என் நன்றிகள்.

ஆமாம் நான் யாழிலிலிருந்து வந்து யாழில் இருக்கிறேன் :-)

  • 1 month later...

கானாபிரபா வீடு பற்றி எழுதியபின்பு வேறு ஆக்கங்கள் எழுதியதினால் வீடு பற்றிய ஆக்கத்தினை இங்கே பார்க்கவும்.

http://kanapraba.blogspot.com/2006/02/blog...og-post_23.html

நண்பர் கானாபிரபா இணைத்த வீட்டுக்குச் சொந்தக்காரன் நான் தான். எனது பெற்றோர்கள் கஸ்டப்பட்டு கட்டப்பட்ட இவ்வீடு,உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கிராமமான குப்பிளானில் உள்ளது. குப்பிளானின் ஒரு பகுதியில் மக்கள் வசிக்கிறார்கள். எனது வீடு அமைந்துள்ள பகுதியில் உயர்பாதுகாப்பு வலையத்தினைக்காரணம் காட்டி மக்களினை மீள் குடியேற்றம் செய்ய இராணுவம் தடுக்கிறது. வீடுகளுக்கு சென்று வரலாம். ஆனால் தங்கவோ, திருத்தம் செய்ய முடியாது. இப்பகுதியில் உள்ள மக்கள் செய்த குற்றம் தான் என்ன? ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?. சொந்தவீடு இருந்தும் அகதிகளாக உறவினர் வீடுகளிலும், வாடகை கொடுத்தும் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா, பிரபா,

நீரும் வந்துவிட்டீரோ?

சினேகிதி மாதிரி இஞ்சயே படுத்துக்கிடக்காம அங்கயும் இடக்கிடை எழுதும்.

  • தொடங்கியவர்

நல்லவன் நீங்கள் சொன்னாச் சரி :-)

  • கருத்துக்கள உறவுகள்

கானாபிரபாவின் ஆக்கங்கள் தொடர்ந்து படித்து வருகிறேன். வீடு,செம்மீன், பதேர் பாஞ்சாலி, செவென் சமுரை,சினிமாபரடைசோ என்று தொடர்ந்து சினிமாப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று நினைச்சுப்போனால், விமர்சனத்தின் முடிவின்பின்பு ஈழத்தைப்பற்றியும் எழுதுவது உண்மையில் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

ம்ம் படத்தைப்பற்றிய மீள் பார்வை மிக நன்றாக உள்ளது

  • தொடங்கியவர்

நன்றிகள் மதுரன்

வீடு படத்தை இனித்தான் பார்க்க வேண்டும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

வணக்கம் ஷண்முகி

தங்களின் பின்னூட்டத்தை அளித்தமைக்கு என் நன்றிகள்.

  • 3 weeks later...

உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையில் உள்ள குப்பிளான் கிராமத்தில் உள்ள எனது வீடு. சென்ற வருடம் சென்ற வருடம் சென்ற போது எடுத்தபடம். ஒடி யாடி விளையாடிய மண்ணில் அயலவர்கள் இல்லாமல் வளர்ந்த புற்களால் வீடு மூடிக் காணப்படுகிறது.

kuppilan1001se.jpg

வீட்டுச் சுவரில் கரையான் புத்துக்கள் காணப்படுகின்றன.

kuppilan1082ca.jpg

வீட்டு யன்னல்களுக்கூடாக எடுத்த படம். கண்ணாடிகள் இல்லாத யன்னல்கள், யன்னல் கதவுகள் இல்லாத யன்னல்கள்

kuppilan1091al.jpg

kuppilan1107uy.jpg

மேலதிக படங்கள்

kuppilan1047ji.jpg

kuppilan1055pp.jpg

kuppilan1063un.jpg

வீட்டுக் குசினியின் நிலமை

kuppilan1112vb.jpg

அழகாய் இருந்த வீட்டின் இன்றைய நிலமை

kuppilan1133oz.jpg

நண்பர்கள் துளசி தாசன், சிவனேசன், உபேந்திரன் ஆகியோரோடு இவ்விடத்திலிருந்து அரட்டை அடித்து படித்த காலங்கள். இங்கிருந்து படித்து கொன்டிருந்தபோது இந்தியன் ஆமி என்னையும் துளசிதாசனையும் புடித்திழுத்துக் கொண்டு போக, நல்லகாலம் எனது அப்பா அவர்களுடன் கதைத்து ஒருவாறு எங்களை மீட்ட யாபகம்.

kuppilan1129zf.jpg

நாங்கள் செய்த குற்றம் தமிழனாகப் பிறந்ததா?. அதுவும் ஈழத்தில் பிறந்ததா?. சொந்த வீடுகள் இருந்தும் வாடகை விடுகளில் அகதியாக வாழும் நிலைக்குக் காரணம் என்ன? அன்னியர்களிடம் இருந்து எப்பொழுது எமது மக்களுக்கு விடிவு கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் விரைவில் பதில் அடி கொடுப்பார். அப்பொழுது குப்பிளான் என்ன பலாலியிலும் எமது மக்கள் வாழலாம்

நல்ல படங்கள் அரவிந்தன்,

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்.

  • 2 months later...

நல்ல படம் இதில் உங்கள் உழைப்பு தெரிகிறது, வழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.