Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அமையாது – சுப்ரமணியம் சுவாமி சொல்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SUBRAMANIAN_SWAM_292918f-100x100.jpg

இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் இந்தியாவின் உதவிகள் அவசியம் என, இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

பி.டி.ஐ செய்தி நிலையத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை தமிழர்களுக்கு உடனடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்திலேயே, நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, தமிழின மக்கள் தோற்கடிக்கப்பட்டதாக அமையாது. இதனைத் தமிழ் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஹம்பாத்தொட்டை துறைமுக வேலைத்திட்டம் தொடர்பில், இலங்கை முதலில் இந்தியாவையே நாடியது எனினும், அதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.

இதனைத் தொடர்ந்தே இலங்கை சீனாவை நாடியதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். இதேவேளை, இலங்கையின் மலையக்பகுதிகளில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன் தொடர்பிலும், இந்திய மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.saritham.com/?p=50055

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் இலங்கை அரசை அடிபணிய வைக்கவும் ஈழத்தமிழனின் பலம் இந்தியாவிற்குத் தேவைப்படுகின்றது. போராடிய புலிகள் என்ன ஆகாயத்திலிருந்து இறங்கியவர்களா? புலிகளுக்கு எதிரானது ஒட்டுமொத்த தமிழருக்கும் எதிரானது. என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். சைக்கிள்களும், வீடுகளும் கொடுத்து தமிழனைச் சரிசெய்து தன்பக்கம் இழுத்துவிடலாம் என்று எண்ணுகின்றது இந்திய அரசு.

ஈழத்தமிழன் மீண்டும் ஏமாந்தால் அதைப்போல மோடயர்கள் கிடையாது. ராஜுவ்; கொலைக்கு சுப்பிரமணியசுவாமிகள் தொடர்பு இருக்கின்றது என ஆதாரங்கள் உள்ளன என்பதைத் இந்தியாவிலேயே நிரூபணம் செய்துள்ளார்கள். ஆனால் அவரில் கைவைத்தால் பெரிய அண்ணணனுடன் (சிஐஏ)மனத்தாங்கல் வரும் என்று அவரை ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்தியாவில் சொல்லியுள்ளார்கள். உண்மையாகப் பார்த்தால் ராஜீவுக்கு வைக்கப்பட்ட குண்டுடன் இவரும் இறந்திருக்கவேண்டிய ஒரு மனிதர்தான். ஆனால் இவர் அவசரமான டில்லி போனதும் அங்கிருந்து கதைத்ததும் போன்ற ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன.

இலங்கையைத் தன்னுள் அடக்கி வைக்க ஈழத்தமிழன் ஒரு கால்பந்தாகப் பாவிக்கப்படுவதை தமிழர்கள் தான் புத்திசாலித் தனமாகத்தப்பவேண்டும். மீண்டும் மீண்டும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். இலங்கை அரசு இந்திய அரசுக்கு அடங்காவிடில் தமிழன் உயர்த்தி பிடிக்கப்படுவதும் இலங்கை அடக்கத்துள் வந்தபின் தமிழன் தூக்கி வீசப்படுவதும் கடந்தகால வரலாறு.

தமிழ்நாட்டுத் தமிழனை மத்தியஅரசு கணக்கிலெடுப்பதில்லை. அவர்களாலும் மத்திய அரசை மேவமுடிவதில்லை. எது எப்படி இருப்பினும் எங்கள் தலை உருளுவதை இனியாவது தவிர்ப்பது தான் தமிழனுடைய வாழ்வு நிலைக்க வழிவகுக்கும். முடிந்தால் தமிழர் தொகையைக்கூட்டி சிங்களப்பகுதிகளிலும் நிலங்களை வாங்கி தமிழினத்தை விஸ்தரிக்க வேண்டியது தமிழன் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

ஈழத்தமிழர்கள் இப்போது இந்தியாவின் கரிசனையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை நன்றாகப்புரிந்துவிட்டார்கள். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை என்பதைத் ஈழத்தமிழர்கள் நன்றாக உணர்ந்து கொண்டால் மீண்டும் இந்த சகதிக்குள் இறங்கமாட்டார்கள். கரிசனையாகச் செய்வதென்றால் அவர்களாகவே செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். நிம்மதியாக வாழவிடுங்கள் என்பதே ஒவ்வொரு ஈழத்தமிழனும் கிந்தியாவிடம் கேட்கும் வேண்டுகோள். பட்டது போதும் உன்னாலே

ஈழத்தமிழனை இனிமேல் அழித்துவிடமுடியாது. ஆனால் புலம்பெயர் தமிழர் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் இயங்குவார்களானால் எதுவும் சாத்தியம். இந்தியாவை ஆட்டம் காணவைக்கும் சக்தி புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கின்றது. இந்தியாவை ஆட்டம் காணவைத்தால் தமிழர்களுக்கான தீர்வு சுலபம். இந்தியா பலமாக இருக்கும்போது அந்நிய சக்திகள் அதற்குள் வரமாட்டா. ஆட்டம் காணும்நிலை தெரியும்போது அந்நியசக்திகளின் உதவி தமிழர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. வல்லரசுகள் ஒன்றையொன்று பகைப்பதில்லை. ஆனால் வல்லரசு ஆட்டங்காணும் நிலைவரும்போது அதை உடைத்துவிடவேண்டுமென்று செயற்படுவார்கள். இது தான் வல்லரசுகளின் நிலை. இதற்குரிய சாதகநிலைகளை உருவாக்குவது தான் தமிழனின் முயற்சியும் பாரிய கடப்பாடும்.

ராஜுவ்; கொலைக்கு சுப்பிரமணியசுவாமிகள் தொடர்பு இருக்கின்றது என ஆதாரங்கள் உள்ளன என்பதைத் இந்தியாவிலேயே நிரூபணம் செய்துள்ளார்கள். ஆனால் அவரில் கைவைத்தால் பெரிய அண்ணணனுடன் (சிஐஏ)மனத்தாங்கல் வரும் என்று அவரை ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்தியாவில் சொல்லியுள்ளார்கள். உண்மையாகப் பார்த்தால் ராஜீவுக்கு வைக்கப்பட்ட குண்டுடன் இவரும் இறந்திருக்கவேண்டிய ஒரு மனிதர்தான். ஆனால் இவர் அவசரமான டில்லி போனதும் அங்கிருந்து கதைத்ததும் போன்ற ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன.

இந்தியப் பயங்கரவாதி ராஜீவ் காந்தி கொலைக்கு குண்டுகளை தயார் செய்து அனுப்பியவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவன் தான் இந்த சுப்ரமணிய சுவாமி. பயங்கரவாதியின் கொலையின் பின்னர் முன்னைய ஒப்பந்தத்தின்படி தன்னை பிரதமராக்க சோனியா உடன்படாததால் சோனியாவுடன் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இது நிரூபிக்கப்பட்ட உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகப் பார்த்தால் ராஜீவுக்கு வைக்கப்பட்ட குண்டுடன் இவரும் இறந்திருக்கவேண்டிய ஒரு மனிதர்தான். ஆனால் இவர் அவசரமான டில்லி போனதும் அங்கிருந்து கதைத்ததும் போன்ற ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன.

மூப்பனார் உட்பட்ட காங்கிரசின் பெரும் புள்ளிகள் எவரும் ராஜீவின் கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை என்பது தான் இப்போதும் பெரும் புதிராக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.