Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையைக் கலக்கிய வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் பொலிசாரால் சுட்டுக்கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

encounter-230212-150.jpg

சென்னையி்ல் வங்கி்க் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர். ஒரே தடவையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டார்.இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த இடம் நேற்று ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட முனைந்தனர். அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

இன்றுஅதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்களுடனான துப்பாக்கிச் சண்டையில் இரு பொலிசார் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

http://www.seithy.co...&language=tamil

முதல்ல ஜெ.சொத்து குவிப்பு ,கருணா 2 ஜி ,தமிழ் நடுலே இருக்குற எல்லா அரசியல்வதிகளையும் என்கவுண்டர்லே போட்டு தள்ளி இருக்கணும் .அதுவும் மக்கள் பணம் தானே.

காசு இருப்பவனுக்கு கோர்டு நீதி விசாரணை .இல்லாதவனுக்கு என்கவுண்டர் இது தான் இந்தியா.

கொல்லப்பட்டது அவர்கள் மட்டுமல்ல அவர்களுடன் உண்ணையும் தான்.

அராஜகம், கொள்ளையன் வால்மீகி எழுதியதை தலையில் வைத்து கொண்டாடும் இந்தியா இவர்களை படுகொலை செய்தது படு அராஜகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/gwLmtFkH7b0

5 வட இந்திய காட்டுமிராண்டிகளை தமிழகத்தில் அழித்ததோடு மட்டுமில்லாமல் சென்னையில் வாழும் வட இந்தியர்கள் தமிழக காவல்துறையில் பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவித்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.a

5 வட இந்திய காட்டுமிராண்டிகளை தமிழகத்தில் அழித்ததோடு மட்டுமில்லாமல் சென்னையில் வாழும் வட இந்தியர்கள் தமிழக காவல்துறையில் பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவித்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.a

தவறு,

எது தவறு?

வங்கிக் கொள்ளை என்பது தவறுதான்..ஆனால் அதனை விசாரிக்கவும், உண்மையில் இவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டவர்களா என்பதை அறியவும் சட்டம், நீதிமன்றம் என்பன உள்ளன. அதன் மூலம் இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு கொள்ளைக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். காவல்துறையே சட்டத்தையும் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் கையில் எடுத்து படுகொலைகளைச் செய்துள்ளது. சினிமாவில் வில்லனை பட்டு பட்டு என்று சுட்டு வீழ்த்துவதை பார்த்துப் பழகிய மக்களும் காவல்துறையின் மிலேச்சத்தனத்தை ஆதரிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tutyreporter.in/view_details.php?id=10579#.T0pdi5yQg2s.google

சென்னை: சென்னையை கலக்கிய வங்கி கொள்ளையர்கள் சென்னை வேளச்சேரி அருகில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கொள்ளையர்கள் பதிலுக்கு தாக்கியதில் 2 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த 2 போலீசாரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போலீசாரை பார்த்து ஆணையர் திரிபாதி ஆறுதல் கூறினார்.

கமிஷனர் விளக்கம்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் வெளிமாநிலத்தவர்கள் என்று காவல் துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார். ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையரை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர்.

ஜன்னல் வழியே போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை தாக்கப்போவதாகவும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 1 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில் 5 பேரும் வீழ்த்தப்பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வடமாநில கொள்ளையர்கள்

போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வங்கி கொள்ளை தொடர்பான போலீஸ் வீடியோவில் இருந்தவர் கும்பலின் தலைவன் என்றும் வீடியோவில் இருந்த நபர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்கவுண்டர் நடந்த வீட்டிலிருந்து கட்டுகட்டாக பணம் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையர்களின் கூட்டாளிகள் பற்றி போலீசார்

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குகள் என்ன

கொல்லப்பட்டோர் ஒரே மாத இடைவெளியில் 2 வங்கிகளில் கைவரிசையை நிகழ்த்தியுள்ளனர். முதல் கொள்ளை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி நடந்தது. வங்கி ஊழியர்களை மிரட்டி 20 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். இதனையடுத்து, கடந்த திங்களன்று சென்னை கீழ்க்கட்டளை ஐ.ஓ.பி.வங்கியில் 2 வது கொள்ளை சம்பவம் நடந்தது.

கீழ்க்கட்டளை வங்கியிலும் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சத்தை சுருட்டி கொள்ளையர்கள் கைவரிசை நிகழ்த்தினர். கொள்ளையர்களை பிடிக்க சுமார் 45 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விசாரணை

கொள்ளை கும்பல் தலைவன் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பல் தலைவனின் மற்ற கூட்டாளி பற்றி அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவர் சிலரை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கும்பலின் தலைவன் தங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவன் என்பதால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி அறிய எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிர்வாகிகளையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லாமே 23ம் தேதி

சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி கொள்ளை நடந்தது. அதே போல் கொள்ளையர்கள் 5 பேரும் பிப்ரவரி 23ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய என்கவுண்டர்

தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு போலீஸ் இதற்கு முன் 2002ல் பெங்களூரில் 5 பேரை கொன்றது. பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உட்பட 5 பேர் 2002ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடந்துள்ள மிகப்பெரிய என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010ல் திண்டுக்கல் பாண்டி உட்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அடையாளம் தெரிந்தது

சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேர் யார் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. வினோத் குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது நபரான சரிகரே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

14 லட்சம் பறிமுதல்

என்கவுண்டர் நடந்த வீட்டில் இருந்து 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய 7 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். எஞ்சிய பணத்தை கைப்பற்ற தேவைப்படின் எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதிகளில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளையர்களின் கூட்டாளி வேறு யாரேனும் உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. கொள்ளையரின் டைரியில் உள்ள முகவரியிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்காவது பணத்தை பங்கிட்டு கொடுத்தார்களா அல்லது கொள்ளையிட்ட பணத்தை உல்லாசமாக செலவிட்டார்களா என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

என்கவுண்டர் நடந்தது எப்படி?

வங்கி கொள்ளையர் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்களை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலிசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் சண்டை மூண்டது.

பொதுமக்களை தாக்கபோவதாகவும் கொள்ளையர் மிரட்டியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையர் சுட்டதில் ஆய்வாளர் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதிலடி கொடுத்தனர். ஒரு மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

வீடு எடுத்தது எப்படி

கொள்ளையர்கள் 3 மாதங்களாக வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். கொள்ளையரின் வீடு ஏ.எல்.முதலி தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பாகும். 3 மாடிகள் கொண்ட குடியிருப்பின் தரை தளத்தில் கொள்ளையர்கள் குடியிருந்தனர்.

ரூ.20,000 அட்வான்ஸ், ரூ.5,000 வாடகை கொடுத்து டிசம்பரில் குடிபுகுந்தனர். கொள்ளையர்கள் 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என வேளச்சேரி மக்களிடம் கூறி வந்தனர். கொள்ளையர்களுக்கு வீடு கொடுத்தவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் தந்தது யார்?

போலீசார் வெளியிட்ட சி.சி.டி.வி உருவத்தை பார்த்து கொள்ளையர்கள் அடையாளம் தெரியவந்தனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் காவல்துறை உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் கொள்ளையர்கள் பற்றி வந்த தகவல்கள் உண்மை என உறுதியானது.

ஆயுதம் வந்தது எப்படி?

பீகாரை சேர்ந்த 4 பேரும் தமது மாநிலத்தில் கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்தனர். வங்கி அதிகாரியை மிரட்ட பயன்படுத்திய துப்பாக்கி மூலம் போலீசாரை சுட்டனர்.துப்பாக்கி குண்டுகளும் பீகாரில் இருந்து வாங்கிவரப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த போலீஸ்

குண்டடிப்பட்ட ஆய்வாளர்கள் 2 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வாளார்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி (துரைப்பாக்கம்), ரவி (தேனாம்பேட்டை) ஆகியோர் காயமடைந்துள்ளனர். கொள்ளையர்கள் சுட்டதில் ஜெயசீலிக்கு இடது கையிலும், ரவிக்கு இடுப்பிலும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

http://www.tutyrepor...ls.php?id=10579

Edited by nunavilan

வங்கிக் கொள்ளை என்பது தவறுதான்..ஆனால் அதனை விசாரிக்கவும், உண்மையில் இவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டவர்களா என்பதை அறியவும் சட்டம், நீதிமன்றம் என்பன உள்ளன. அதன் மூலம் இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு கொள்ளைக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். காவல்துறையே சட்டத்தையும் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் கையில் எடுத்து படுகொலைகளைச் செய்துள்ளது. சினிமாவில் வில்லனை பட்டு பட்டு என்று சுட்டு வீழ்த்துவதை பார்த்துப் பழகிய மக்களும் காவல்துறையின் மிலேச்சத்தனத்தை ஆதரிக்கின்றன.

நீதி நியாயத்தின் பார்வையில் உங்கள் கருத்து வலுவானது.

எனது கருத்து நீண்டகாலமாக நீதி நியாயத்திற்கு அப்பால் தமிழின அழிப்பை நடாத்த முன்னின்ற வட இந்தியக் காட்டுமிராண்டிகளின் மீதான ஒரு நடவடிக்கையாக மட்டுமே கொள்ளப்படுகிறது. ஒருகாலத்தில் ஈழத் தமிழர் தமிழகத்தில் பதியவேண்டும் என்ற நிலையை வட இந்தியக் காட்டுமிராண்டிகள் ஏற்படுத்தினார்கள். இன்று அவர்களில் சிலருக்கு இந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.