Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது

Featured Replies

இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா அமர்வில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுத்து வருகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் நேற்றுப் பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழியும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரேரணையை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் மேலும் சில நாடுகள் ஆதரிக்க முன்வந்திருக்கின்றன என்று நேற்று மாலை வொஷிங்டனில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதேவேளை, இந்தப் பிரேரணையின் சாராம்சம் நேற்றையதினம் ஜெனிவாவில் முக்கியமான ஐ.நா. ராஜதந்திரிகள் மற்றும் மேற்குலக ராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்டது.

அந்த சாராம்சத்தின் விவரங்கள் நேற்றிரவு பிரத்தியேகமாக "உதயனுக்குக்" கிடைத்தன. அதன் விவரம் வருமாறு :

இலங்கையின் ஆதார வரைவு பிரேரணை

ஐ.நா. சாசனம், மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பிரகடனம், மனித உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைகள், இதர பொருத்தமான அம்சங்கள் ஆகியவற்றின் வழிகாட்டலோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அந்நாடுகள் சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் நியதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

குறிப்பாக, சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை அனுசரிக்கவேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் அறிக்கை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய நல்லிணக்கப்பாட்டு முன்னெடுப்புகளுக்கு இக்குழு தனது கண்டுபிடிப்புகள், பரிந்துரைகள், ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் வாயிலாக இயன்ற பங்களிப்பை நல்கியுள்ளது.

நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள், காணாமற் போகச்செய்தல் ஆகியவை தொடர்பாகப் பரவலாக எடுத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது நம்பக விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

இலங்கையின் வடபகுதியை இராணுவமயப்படுத்தாமை, காணி விவகார முகாமைத்துவப் பேரணையை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துதல், தடுத்துவைப்பதற்கான கொள்கைகளை மறுசீரமைத்தல், முன்னைய சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்துதல் ஆகிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்திற்கு அரசியல் தீர்வை எட்டுதல், அனைவரினதும் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், பாதுகாத்தல், சட்ட மறுசீரமைப்புக்கான விதிகளை இயற்றுதல் ஆகிய பரிந்துரைகளும் உள்ளன. இந்தக் காத்திரமான பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம்.

அதேவேளை, சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்குப் பரிகாரம் காண்பதற்கான வழிவகைகள் குறித்து இந்த அறிக்கையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதையும் கருத்திற்கொண்டுள்ளோம்.

அத்துடன் இலங்கை அரசு, தனக்கு உரித்தான சட்டரீதியிலான கடமைகளை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக நம்பத்தகுந்த சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு அத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளது. உரிய சட்ட நடைமுறைகளைக் கையாளத் தவறியமை கண்டு நாம் ஏமாற்றம் அடைகிறோம்.

(1) ஆணைக்குழு அறிக்கையிலுள்ள காத்திரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு மேலாக தனக்குரிய சட்டரீதியிலான கடமைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் நம்பக, சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோருகின்றோம்.

(2) மனித உரிமைகள் பேரவையின் 20ஆவது அமர்வுக்கு முன்னர் ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசைக் கோரவேண்டும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதேவேளை, சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்துமாறும் இலங்கை அரசை மேலும் கோரவேண்டும்.

(3) மனித உரிமைகள் தூதுவர் அலுவலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விசேட பிரமுகர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றைப் பெறுமாறு இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும்.

இவையே அந்த சாராம்சம் ஆகும்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=64863856124363090

  • தொடங்கியவர்

கடந்த காலங்களில் இலத்தீன் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவு மூலமே சிங்களம் ஐ.நா. தீர்மானங்களை முறியடித்தது. அவர்கள் ஆதரவை பெற இம்முறையும் முயற்சிக்கின்றது.

ஆனால் மேலே கூறப்பட்ட செய்தி உண்மையானால், சிங்கள முயற்சிகளில் கீறல் வநதுள்ளது போல தெரிகின்றது.

இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் நேற்றுப் பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழியும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரேரணையை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் மேலும் சில நாடுகள் ஆதரிக்க முன்வந்திருக்கின்றன என்று நேற்று மாலை வொஷிங்டனில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கனடாவோ இல்லை ஒரு ஐரோப்பிய நாடோ இல்லாமல் வேறு ஒரு நாடு பிரேரணையை முன்மொழிவது எமக்கு வெற்றியே,பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்தல், கொள்ளை, கொலைதாரிகள் பிடித்தால் பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர் இருக்கமாட்டார்.

இந்த செய்தி மகிழ்ச்சி தருவதாகவும், நம்பிக்கையூட்டுவதாக இருப்பினும் நம்மவர்கள் தமது முயற்சியில் எவ்வித தொய்வும்

ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நாம் எவரையும் முற்றுமுழுதாக நம்பக்கூடாது. தரப்படும் உதவிகளை நன்றியுடன்

ஏற்றுக்கொண்டு, விழிப்புடனும் விவேகத்துடனும் விடாமுயற்சிசெய்யவேண்டும். எப்போதும் உச்சமான முயற்சி என்பதே நம்

தாரகமந்திரமாக இருக்கவேண்டும். இறுதிவெற்றி கிடைக்கும்வரை நாம் ஓயமுடியாது.

விமானநிலையத்தில் வைத்து, இம்மானுவல்அடிகளார், சீமான் திருப்பி அனுப்பட்டமை எமது விடயத்தில் இந்தியா - அமெரிக்கா

ஒன்றுபட்டு செயற்படுவதைக்காட்டும். இந்தியா இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை.எனவேதான் நாம் எச்சரிக்கை

உணர்வுடன் செயற்படவேண்டும்.கீழே தரப்படும் இணைப்புக்குரிய 'தமிழ்நெற்' செய்திஆய்வும் கவனிக்கப்படவேண்டியதே.

24.02.12 UNHRC sessions open on Monday amidst US–Sri Lanka gambits

நல்ல முடிவுகள். இந்த நாடுகள் வெளிப்படையாக இந்தியாவிற்கும் அழுத்தங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன் மூலமே குளறுபடியற்ற தீர்வுகளை தமிழர்கள் பெறமுடியும். இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வதில்தான் இவை தங்கியிருக்கிறது.

  • தொடங்கியவர்

அடுத்த 20 ஆவது அமர்விலேயே ஒரு தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இந்த முறை இறுதி சந்தர்ப்பம்!

(1) ஆணைக்குழு அறிக்கையிலுள்ள காத்திரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு மேலாக தனக்குரிய சட்டரீதியிலான கடமைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் நம்பக, சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோருகின்றோம்.

(2) மனித உரிமைகள் பேரவையின் 20ஆவது அமர்வுக்கு முன்னர் ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசைக் கோரவேண்டும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதேவேளை, சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்துமாறும் இலங்கை அரசை மேலும் கோரவேண்டும்.

(3) மனித உரிமைகள் தூதுவர் அலுவலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விசேட பிரமுகர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றைப் பெறுமாறு இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும்.

இவையே அந்த சாராம்சம் ஆகும்.

gt600(1).jpg
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவுகள். இந்த நாடுகள் வெளிப்படையாக இந்தியாவிற்கும் அழுத்தங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன் மூலமே குளறுபடியற்ற தீர்வுகளை தமிழர்கள் பெறமுடியும். இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வதில்தான் இவை தங்கியிருக்கிறது.

இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஒரே இடம் புதைகுழி மட்டும்தான். முள்ளிவாய்க்காலில்தான் நன்றாகப் பார்த்தோமே?? இன்னுமா???

இந்தப் பிரேரணை வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டபின்னர் எங்கலின அரசியல் இராசதந்திர, அரசியல், ஊடக, மக்கள் போராட்டங்கள் ஓயாது ஒலிக்கவேண்டும்.

இதுவரை எங்களின் குரலுக்கு காத்து கொடுக்காதவர்களை இந்த பிரேரணையின் பின்னர் தெரியாது என்றிருக்க முடியாது.

எங்களின் ஈழத்தின் இலக்குக்கு இந்த பிரேரணை எந்தளவுக்கு உதவுமென்று தெரியாது.

ஆனால் எங்களை அழித்தவர்களை நெருக்குவதுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.