Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததன் மூலம் அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன்'

Featured Replies

'ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததன் மூலம் அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன்'

அரசாங்கம் கூறுவது போல் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தண்டனை வழங்க முடியாது.

நான் பிரதமராக இருந்த போது ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததால் அவற்றை செய்ய முடியாது நான் இந்த அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தலமையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது மக்களை சித்திரவதை செய்கின்றது. இன்று மக்களுக்கு வாழ முடியாதளவு எரிபொருளின் விலையை அரசாங்கம அதிகரித்துள்ளது. இதனால் பஸ் கட்டனம், மின் கட்டனம் பாணின் விலை உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை சித்திரவதை செய்கின்றது.

ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் பிரேரணைக்கு எதிராக மக்களை வீதிக்கு இரங்குமாறு அரசாங்கம் கூறுகின்றது. நாங்கள் வீதிக்கு இறங்குவதால் எவ்வித பயனும் இல்லை.

நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவது என்னவென்றால் உடன் அரச ஊழியர்களது வேதனத்தை அதிகரித்து மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்றே. நாளை அரசாங்கம் அதனை செய்யுமானால் நாங்களும் அரசாங்த்துடன் சேர்ந்து வீதிகளுக்கு இறங்குவோம். இல்லாவிட்டால் மக்களுக்கு உதவிகளை பெற்று கொடுப்பதற்காக நாங்கள் வீதிக்கு இறங்குவோம் என்றார்.

இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,

அரசாங்கம் தற்போது பொதுமக்களை பற்றி சிந்திப்பதே இல்லை. ஜெனீவாவில் நடைபெருகின்ற கூட்டத்தொரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்காக 50 பேர் கொண்ட குழுவொன்று சென்றுள்ளது. அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிள் எவ்வித அதிகாரமும் இல்லை. இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/36576-2012-02-25-13-57-27.html

சிங்களப் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழினப் படுகொலைக்கு தேவையானவற்றையே செய்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோட்டு சூட்டு போட்ட இராஜபக்சே

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உடுப்பு அணிகிறார்கள்! அரைகுறையாகவேனும், அதைப் பலரும் அணிகிறார்கள்!

இது ஒரு ஏற்றுக்கொள்ளப் பட்ட மனித நாகரீகத்தின் முதிர்சியாம்!

ஆனால், நாங்கள் உடுப்புப் போடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

இதை 'வெட்கம்' என்று உலகம் கூறுகின்றது!

நாங்கள், எங்கள் செயலால், எங்கள் நாட்டைப் பாதுகாக்கின்றோம்!- ரணிலின் பொன்மொழிகளில் இருந்து!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.