Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2ம் இணைப்பு வெள்ளைக் கொடி ஏந்தி வருவோருக்கு அடைக்கலம் வழங்கத் தயார் எனஜனாதிபதி உறுதியளித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயம் நம்பியார் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

vijay_nambiar_CI.jpg

2ம் இணைப்பு வெள்ளைக் கொடி ஏந்தி வருவோருக்கு அடைக்கலம் வழங்கத் தயார் எனஜனாதிபதி உறுதியளித்தார் – விஜயம் நம்பியார் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிஉறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என ஐக்கியநாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரின் விசேட அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய விரும்பியதாக அண்மையில் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின், தொலைபேசிஊடாக தமக்கு அறிவித்தார் என நம்பியார் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறைப் பொறுப்பாளர்பா. நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் எஸ்.புலித்தேவன் ஆகியோர் சரணடைவதுகுறித்து தொடர்பு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்து வருவோர் சரணடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு வாக்குறுதி அளித்தாக விஜய் நம்பியார் குறிப்பிட்டுள்ளார்.

சரணடையும் நடவடிக்கையை நேரில் பார்வையிடுமாறு மேரி கொல்வின் தம்மிடம் கோரியதாகவும், ஜனாதிபதி வாக்குறுதி அளித்த காரணத்தினால் நேரில் பார்வையிடவேண்டிய அவசியமில்லை என தாம் குறிப்பிட்டதாகவும் அவர் இன்னர் சிற்றி பிரஸிற்குதெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடி சம்வம் குறித்து நம்பியார் விளக்கம்

25-02-2012 - 01:53

வெள்ளைக் கொடி சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி விஜயம் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் தம்மைத் தொடர்பு கொண்டதாகத்தெரிவித்துள்ளார்.

மேரி கொல்வின் அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடு இரவில் பிரித்தானிய ஊடகவியலாளர் கொல்வின் தம்மைத் தொடர்புகொண்டு புலிகள் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்தார் என விஜய் நம்பியார்குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சந்தர்பத்தில் மேரில்கொல்வின் தம்மைத் n;தாடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் கோரிக்கை தொடர்பில் அமெரிக்க தூதுவரிடம் இரண்டுதடவைகள் தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அனுமதி வழங்காத காரணத்தினால், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினால் கடல் வழியாக சென்று சரணடைவோரைக் காப்பாற்ற முடியவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்திற்கு செல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

நடு இரவில் மேரி தம்மை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக அவர்தெரிவித்துள்ளார்.

'இருவர் தொடர்பு கொண்டனர், அவர்களின்பெயர்கள் ஞாபகமில்லை, ஒருவர் சமாதான செயலகத்தைச் சேர்ந்தவர், அவர்கள் சரடைணயவிரும்பினர். பாதுகாப்பான வழியில் சரணடையவே விரும்புவதாகத் தெரிவித்தனர். அதனை நான்ஏற்றுக்கொண்டேன். இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் பேசினேன், ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடமும் பேசினேன். ஏனைய கைதிகளைப் போன்றே அவர்களும்நடத்தப்படுவார்கள் என அவர்கள் உறுதியளித்தனர். அதன் பி;ன்னர் என்ன நேர்ந்தது எனத் தெரியாது'என நம்பியார் தெரிவித்துள்ளார்.

உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் சரணடைய விரும்பியோர் எவ்வாறுஉயிரிழந்தனர் என இன்னர் சிற்றி பிரஸ், நம்பியாரிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, சில வேளைகளில் சக போராளிகள் சரணடைய விரும்பியோர் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு ஊகத்தையும் வெளியிடத் தயாரில்லை என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தையே பெசில் ராஜபக்ஷவும் கொண்டுள்ளார் என நம்பியார்குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடிச் சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின்செயலாளர் பாலித கொஹணவுடன் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

மகா வம்ச கதையை சிங்களவங்கள் நம்பிரமாதிரி எல்லோரும் உவங்கட பொய்களை எபோதும் நம்பமாட்டார்கள்.

உண்மைகள் எளிதில் மறையாது.

மகிந்தா ஒரு போர்குற்றவாளி அவர் அரசில் உள்ளவர்கள் போர்குற்றவாளிகள் என்பது ஐயம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரணடையும் நடவடிக்கையை நேரில் பார்வையிடுமாறு மேரி கொல்வின் தம்மிடம் கோரியதாகவும், ஜனாதிபதி வாக்குறுதி அளித்த காரணத்தினால் நேரில் பார்வையிடவேண்டிய அவசியமில்லை என தாம் குறிப்பிட்டதாகவும் அவர் இன்னர் சிற்றி பிரஸிற்குதெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

காலைவாரிப் போட்டான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

காலைவாரிப் போட்டான்..! :D

இந்திய மரபணுவல்லோ!!! :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.