Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலத்தின் கட்டாயமா! கட்டாயத்தின் நிர்ப்பந்தமா! - வன்னியில் படையினர் போர்குற்றங்களில் ஈடுபடவேயில்லையாம்: புலிகளோடு புலிகளாக நின்று மக்களுக்கு அயராத பணி செய்தவர்கள் ஜெனிவாவில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

samnugarajah-kanagaradnam150seithy.jpg

இறுதிக்கட்டத்தில் படையினர் போர்குற்றங்கள் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதரபூர்வமான சாட்சியங்களை பன்னாடுகளுக்கு தெரிவிக்கும் செயற்பாட்டில் ச.கனகரத்தினம், சண்முகராஜா ஆகியோர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது .

படையினரின் போர் நடவடிக்கையின் போது வன்னிமாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ச.கனகரத்தினம் அவர்களும் வன்னி மருத்துவமனையின் மருத்துவராக இருந்த மருத்துவர் சண்முகராஜாவும் இறுதிக்கட்ட போரின் போது படையினரால் கைதுசெய்யப்பட்டு நான்காம் மாடியில் விசாரணைக்காக மாதக்கணக்கில் வைத்து சித்திரவதை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர் படைபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்ற ஒப்புதலுக்கு அமைவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்த கனகரத்தினம் சுதந்திரக்கட்சிக்கு மாறியுள்ளதுடன் தற்போது படையின ரின் பலத்த பாதுகாப்பில் வாழ்ந்துவருகின்றார்.

அதேபோல் மருத்துவர் சண்முகராஜா பல நிபந்தனைகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் இவர்கள் முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் இறுதிக்கட்ட போரின் போது படையினர் போர்குற்றங்களில் மனித உரிமைமீறல்களில் ஈடுபடவில்லை என்பதை பன்னாடுகளுக்கு எடுத்துக்கூறும் நடவடிக்கைக்காக சிறப்பாக கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் ஜெனீவா சென்று அங்கு பன்னாட்டுபிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தி படையினருக்கும் அரசாங்கத்திற்கும் வக்காளத்து வாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் அரசாங்கத்தால் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு ஜெனீவா விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

உயிரில் அநேகமாநோருக்கு ஆசை அதிகம். ஆனால் இவர்கள் சந்தர்ப்பம் இருந்தால் ஜெனீவாவில் புகலிடம் கேட்பதே மேல். அதன் மூலம் உண்மைகளை வெளியே கொண்டுவர உதவுவது மூலம் வரலாற்றில் மாற்றங்களையும் கொண்டுவர உதவியவர்கள் ஆகுவார்கள்.

சிங்களம் அங்கே பணம் வைத்திருக்கும் இவர்களின் உறவுகளை கொல்லக்கூடும், ஆனால், திரும்பிபோவது மூலம் மீண்டும் கைதி வாழ்க்கையே இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்திற்கும் தொடரும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கனகரத்தினம் அவர்களின் மகன் இராணுவத்தின் தடுப்புக்காவலில் இருக்கிறார் என்ற ஒரு தகவல்.

சிங்களம் அங்கே பயணம் வைத்திருக்கும் இவர்களின் உறவுகளை கொல்லக்கூடும், ஆனால், திரும்பிபோவது மூலம் மீண்டும் கைதி வாழ்க்கையே இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்திற்கும் தொடரும்.

எந்தக் குடும்பஸ்தவரும் தன்னுயிரை விட, தன் குடும்பத்தின் உயிர்களையே பெரிதும் காப்பாற்ற முனைவர். கைதியாக வாழ்ந்தாலும் பரவாயில்லை தன் நெருங்கிய உறவுகளுக்கு எதுவும் நடந்திரக்கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கும்

ஆனால் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டவர்களின் சாட்சியை உண்மையாகவே போர்க்குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என மேற்கு நாடுகள் நினைத்தால் நம்பப் போவதில்லை. ஏதாவது ஒரு சாட்டுக் கிடைத்தால் போதும் தண்டனை கொடுக்காமல் இலங்கை அரசை தப்ப விடலாம் என்று மேற்குலகு நினைத்தாலே இவர்களது சாட்சியங்களை நம்பும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நிலை தெரிந்ததுதான்..! சாட்சியங்கள் எடுபட வாய்ப்பில்லை..!

எந்தக் குடும்பஸ்தவரும் தன்னுயிரை விட, தன் குடும்பத்தின் உயிர்களையே பெரிதும் காப்பாற்ற முனைவர். கைதியாக வாழ்ந்தாலும் பரவாயில்லை தன் நெருங்கிய உறவுகளுக்கு எதுவும் நடந்திரக்கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கும்

ஆனால் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டவர்களின் சாட்சியை உண்மையாகவே போர்க்குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என மேற்கு நாடுகள் நினைத்தால் நம்பப் போவதில்லை. ஏதாவது ஒரு சாட்டுக் கிடைத்தால் போதும் தண்டனை கொடுக்காமல் இலங்கை அரசை தப்ப விடலாம் என்று மேற்குலகு நினைத்தாலே இவர்களது சாட்சியங்களை நம்பும்

திருகோணமலையில் தனது மகனை ( இவருடன் மூன்று உயர்த்த வகுப்பு மாணவர்கள் கொல்லப்பட்டனர்) பறிகொடுத்த வைத்தியரான மனோகரன் நாட்டை விட்டு வெளியேறி தனி ஒரு மனிதனாக நீதி தேடிய வண்ணம் உள்ளார். மனித உரிமை அமைப்புக்களுடன் சேர்ந்து மகிந்தா மீது வழக்கு உட்பட பல சாட்சியங்களை கூறி உள்ளார், சில அரசுகளுக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சிங்கள நாட்டை விட்டு வெளியேறினாலும் நிச்சயம் அவரின் இந்த நடவடிக்கை பல அவரின் நெருகிய உறவுகளையும் பாதித்திருக்கும்.

திருகோணமலையில் தனது மகனை ( இவருடன் மூன்று உயர்த்த வகுப்பு மாணவர்கள் கொல்லப்பட்டனர்) பறிகொடுத்த வைத்தியரான மனோகரன் நாட்டை விட்டு வெளியேறி தனி ஒரு மனிதனாக நீதி தேடிய வண்ணம் உள்ளார். மனித உரிமை அமைப்புக்களுடன் சேர்ந்து மகிந்தா மீது வழக்கு உட்பட பல சாட்சியங்களை கூறி உள்ளார், சில அரசுகளுக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சிங்கள நாட்டை விட்டு வெளியேறினாலும் நிச்சயம் அவரின் இந்த நடவடிக்கை பல அவரின் நெருகிய உறவுகளையும் பாதித்திருக்கும்.

வர வர உங்கள் கருத்துக்கள் நகைச்சுவையாக போகிறது..........

படுகொலைசெய்யப்பட்ட மகனுக்காக பழிக்கு பழிகு என்று ஒரு தந்தை.

உண்மைச் சொன்னால் மகன் படுகொலைசெய்யப்படும் நிலையில் ஒரு தந்தை.

எதியினால் படுகொலைசெய்ய பட்ட மகனுக்காக போராடும் தந்தைக்கும் , போராட போய் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் தந்தைகளுக்கும் ஏதும் வேறுபட்டு இருக்க வெண்டுமா?

வர வர உங்கள் கருத்துக்கள் நகைச்சுவையாக போகிறது..........

படுகொலைசெய்யப்பட்ட மகனுக்காக பழிக்கு பழிகு என்று ஒரு தந்தை.

உண்மைச் சொன்னால் மகன் படுகொலைசெய்யப்படும் நிலையில் ஒரு தந்தை.ட்ட மகனுக்காக போராடும் தந்தைக்கும் , போராட போய் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் தந்தைகளுக்கும் ஏதும் வேறுபட்டு இருக்க வெண்டுமா?

இதில் என்ன நகைச்சுவையை கண்டீர் என புரியவில்லை.

இருவரும் சிங்கள அரசால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையர்கள். ஒ(இ)ருவர்(கள்) இன்றும் அதன் இரும்புப்பிடியில் உள்ளார், மற்றையவர் தப்பி தனக்கு மட்டுமல்லாமல் தனது இனத்திற்கே நீதி கேட்டு வருகிறார். முடிந்தால் இவற்றின் வழியை அவர்களும் பின்பற்றலாம்.

படுகொலை செய்யப்படும் நிலையில் மகன் இருந்தால் ஒரு தந்தை அவனை காப்பாற்றவே முயலுவான். அது முடியாத போது அதற்கு நீதி தேடுவான். அதற்கு பெயர் பழிவாங்கல் இல்லை.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.