Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்கும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருசு ..

வீட்டுல போய் சாட்டு தூங்குங்கங்கப்பா..அரிஸ்டாட்டில் கருத்தெழுத வந்துட்டார்..அனில் அம்பானி ..ரைத்தை வேஸ்ட் பண்ணுறராம் .. ஒரே சிப்புதான்.... ஒன்றாகவாது விளங்குற மாதிரி இருக்குதா..? அல்லது இளையவர்களுக்கு வருங்கால சந்ததியினருக்கு ஏற்ப கருத்த எழுத வேணுமா ..? ஒண்னுக்கு அடிச்சாலும் புலிக்ள் தொல்லை .. சாம்பாரில் கரைச்சாலும் புலிகள் தொல்லை.. வேற் டாபிக்கே இல்லையா ..? இப்பதான் மாற்று கருத்து மாணிக்கங்களுக்கு ஏற்ற மாறி இலங்கை தீவு அமைந்துள்ளது அல்லவா? அலோ எத்தனை புராணம் எத்தனை இதிகாச விளக்கம் வேண்டும் உமக்கு ..? இளசுக்கு ஏதும் தெரியாது என்ற சரி பெருசுக்கு வயசாகிடுச்சு என்றாலும் அவரின்ட.... வேணாம் இத்தோட நிறுத்தி கொள்வது களத்திற்கும் நல்லது நமக்கும் ந்ல்லது ..

  • Replies 81
  • Views 4.6k
  • Created
  • Last Reply

பெருசு ..

வீட்டுல போய் சாட்டு தூங்குங்கங்கப்பா..அரிஸ்டாட்டில் கருத்தெழுத வந்துட்டார்..அனில் அம்பானி ..ரைத்தை வேஸ்ட் பண்ணுறராம் .. ஒரே சிப்புதான்.... ஒன்றாகவாது விளங்குற மாதிரி இருக்குதா..? அல்லது இளையவர்களுக்கு வருங்கால சந்ததியினருக்கு ஏற்ப கருத்த எழுத வேணுமா ..? ஒண்னுக்கு அடிச்சாலும் புலிக்ள் தொல்லை .. சாம்பாரில் கரைச்சாலும் புலிகள் தொல்லை.. வேற் டாபிக்கே இல்லையா ..? இப்பதான் மாற்று கருத்து மாணிக்கங்களுக்கு ஏற்ற மாறி இலங்கை தீவு அமைந்துள்ளது அல்லவா? அலோ எத்தனை புராணம் எத்தனை இதிகாச விளக்கம் வேண்டும் உமக்கு ..? இளசுக்கு ஏதும் தெரியாது என்ற சரி பெருசுக்கு வயசாகிடுச்சு என்றாலும் அவரின்ட.... வேணாம் இத்தோட நிறுத்தி கொள்வது களத்திற்கும் நல்லது நமக்கும் ந்ல்லது ..

தனிமனித தாக்குதலை தொடங்கி இருக்கும் உமக்கு தேவாரம் பாடவேண்டிய நிலை எனக்கில்லை.

அப்புறம் சொல்லுவார்கள் தேவாங்க்குக்கு தேவாரம் பாடுகிறான் சசி என.

  • கருத்துக்கள உறவுகள்

தெரியும் மறுபக்கம். கிளறவேண்டாம் என கூவம் கூவுது.

ஒரே டமாஸ்தான்.... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு முதுகெலும்பில்லையா? – முல்லை மக்கள் நேரடியாகவே கேள்வி!

resize_20120304173103.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதுகு எலும்பில்லையா? தமிழர்கள் என்று சொல்ல வெட்கம் இல்லையா? என்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் வீ.கனகசுந்தரசுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபை வேட்பாளர்களுக்கானதும் ஆதரவாளர்களுக்கானதுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று முள்ளியவளை கற்கப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்கள் சார்பாகக் கருத்துத் தெரிவித்த போதே கனகசுந்தரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னியில் நடைபெற்ற போரில் எமது மக்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். அளவிடமுடியாத சொத்தழிவுகள் ஏற்பட்டன. இந் நிலையில் எமது மக்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கழித்துள்ளது. கனரட்ணம் கூட ஜெனீவா சென்றிருக்கின்றார். ஆனால் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாப் பயணத்தினைப் புறக்கணித்திருக்கின்றது. இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெட்கப்படவில்லையா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதுகெலும்பில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை கரைதுறைபற்று பிரதேச சபை வேட்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வன்னியில் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்சி அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அனைவருக்கும் நாங்கள் தமிழர்கள் என்ற உணர்வு இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தனர். இதே ஒன்று கூடலில் கூட்டமைப்பு ஜெனீவா செல்லாமல் விட்டமை தொடர்பில் மக்களால் பரவலாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஜெனீவா விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்தினுக்கு எதிராக ஊடகங்கள் திட்டமிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றன. ஜெனீவா விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த முடிவாகும். ஊடகங்கள் இவ்வாறான நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=42212

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

resize_20120301181012.jpg

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செல்வதில்லை என்ற முடிவு தொடர்பில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தினை மூன்று காரணங்களுடன் விளக்கியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். தனக்கு மிக நெருக்கமான தமிழரசுக்கட்சிப் பிரமுகர்கள் சிலரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் காரணங்களை முன்வைத்திருக்கின்றார்.

அவற்றில் முதலாவது,

பாராளுமன்றச் சட்டக்கோவையின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்வதில்லை என்றே சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம். சத்தியபிரமாணத்தை மீறி ஜெனீவா செல்வோமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயத்தினை எதிர்கொள்ள நேரிடும்.

இரண்டாவது,

ஜெனீவாவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செல்கின்ற பொழுது, அங்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் புலிக்கொடிகளை ஏந்திக்கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் ஜெனீவா செல்வதன் நோக்கம் முற்றுமுழுதாக அடிபட்டுப்போய்விடும்.

மூன்றாவது,

ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையிலே, கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியது எமது பொறுப்பாகும்.

எனவே இவற்றின் அடிப்படையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா அரசியல்வாதிகள் நமக்கு தமிழீழம் பெற்று தந்தால் சிங்களவனுக்கு விசுவாசம் காட்டமுடியாது என்று வாலாட்டுகிறார்கள். 

உங்கட ஸ்ரீ லங்கா நாட்டில எந்த சிங்களவன் அரசியல் கோட்பாட்டை மதிக்கிறான்? 

உங்களுக்கு ஏன்   இந்த அடிமை புத்தி? 

இந்த வெத்துவேட்டுகளுக்கு சால்வை  போர்த்தி நேரத்தை வீணடிக்க தேவையில்லை. 

உங்கட ஸ்ரீ லங்கா நாட்டில எந்த சிங்களவன் அரசியல் கோட்பாட்டை மதிக்கிறான்

குருக்களுக்கு குற்றமில்லை. சர்வதேசப் பயங்கரவாதிகள் தமிழரை பயங்கரவாதிகள் என்று கொலை செய்கிறார்கள்.. எந்த சட்டத்திலும் அதற்கு இடமில்லை.

கூத்தமைப்பினர் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை நேரடியாக சந்திக்காமல் அறிக்கைகள், கடிதங்கள் எழுதுவதன் மூலம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கடுமையான முயற்சிகளை முறியடிக்க முடியாது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது எக்காலத்துக்கும் பொதுவான ஒரு பழமொழி.

ஜெனீவா சென்று ஒன்றும் செய்ய முடியாது என்பவர்கள் - அரசியல், அரசியல் நகர்வுகள் தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாநாடுகளில் பங்குபெற்றுவதும், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதும் தான் படுகொலைகளை, இன அழிப்பை தினமும் ஏதோ ஒரு வடிவத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதிகள் செய்யும் வேலையல்ல. அழைப்புக் கிடைத்தால் தான் செல்லமுடியும் என்று சொல்வது சோம்பேறிகளின் குணம்.

ஜெனிவா செல்வது ஐ. நா. சபை நிகழ்வுகளில் கலந்து பேசவல்ல. அங்கு சென்றிருந்தால் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், சிங்கள பயங்கரவாத அரசின் நீண்டகால இழுத்தடிப்புக்களையும் எடுத்துக் கூறியிருக்கலாம். அத்துடன் புதிய அவசியமான அரசியல், ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆழமான அடிவருடிப் புத்தியுள்ள சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த, தமிழரின் பிரச்சனைகளை முழுமையாக எடுத்துச் சொல்லும் வல்லமை உடைய ஏனையவர்கள் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழர் சர்வதேச அரசியல் பலம் பெறுவதை விரும்பாத தமிழின விரோத சக்திகளுக்கு துணையாக கூட்டமைப்பின் சம்பந்தனும், எடுபிடிப் பச்சோந்தி சுமந்திரனும் நடந்துள்ளனர். பின்னர் தமது கையாலாகாத தனத்தாலும், இந்திய அபிமான, சுயநல தேவைகளுக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் வேறு சிலர் இந்த இரு பிற்போக்குச் சக்திகளை ஆதரித்துள்ளனர்.

கூத்தமைப்புக்கு வக்காலத்து வாங்க கனடாவிலிருந்து கோணங்கித்தனமான அறிக்கைகள் விடுவதால் தமிழ் மக்கள் ஏமாறப் போவதில்லை. மாறாக இவர்கள் தமிழின அழிப்புக்கு துணை போகின்றனர். இவர்களுக்கும் சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்படும் டக்லஸ் போன்ற கொலைகாரக் கும்பலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.