Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

India bails out Lanka on rights resolution

Featured Replies

COLOMBO: In a move that should help Sri Lanka out at the 19th sessi­on of the United Nations Human Rights Council in Gene­va, India has said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC.

The United States was expected to move a resolution at the UNHRC session, censuring Sri Lanka over alleged war crimes against Tamils during the civil war.

An Indian statement, read out by a delegate at Thursday’s session and published on UNHRC’s website, said the strength of UNHRC lay in its adherence to principles of “objectivity, transparency, non-selectivity, non-politicisation and non-confrontation.” And to sustai­n these attributes, UNHRC would need to ensure “inclusi­veness and emphasise dialogue and cooperation,” it and must be guided by “prudence rather than strategic expediency.”

“India is concerned that the recent trend and spate of country-specific resolutions may well end up weakening the constructive dialogue and cooperative approach which has prevailed so far in the Human Rights Council,” the statement said.

In India’s view, the most appropriate forum for discussing the rights situation in any specific country will be when the UNHRC takes up that country’s case under the Universal Periodic Review (UPR) regime.

“We believe the Universal Periodic Review enjoys a broad support, since it avoids selectivity, and provides for the human rights record of all UN member states to be subject to peer review. The enthusiastic participation by member states in the UPR process in the first cycle, underscores the success of this important mechanism,” the Indian statement said.

Sri Lanka’s rights record is to come up for UPR in October. Colombo has asked for time till then to implement recommendations of the Lessons Learnt and Reconciliation Commission, which the US and the Western bloc has been demanding.

Topics:

Sri Lanka,

resolution,

UNHRC,

human rights

http://expressbuzz.com/topnews/india-bails-out-lanka-on-rights-resolution/368979.html

யாழ்க் கள இந்திய தாசர்களுக்குச் சமர்ப்பணம்.

தமிழகத்தால் இந்தியத் தேர்தல் சமன்பாடுகளாலோ அல்லது தேர்தலில் நிற்க்கும் அரசியல் மூலமாகவோ இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தின் மீது எந்த அழுத்ததையும் ஏற்படுத்த முடியாது.தமிழக மக்களின் ஆயுதம் ஏந்திய சுய நிர்ணயத்திற்கான அரசியற் போரட்டமும், இந்திய வ...ல்லாதிக்கத்துக்கு எதிரான இந்திய தேசிய இனங்களின் கூட்டுப் போராட்டமுமே தமிழ் நாட்டு மக்களுக்கான விடுதலையையும், ஈழத் தமிழத் தேசிய இனத்தினதும் , சிங்கள தேசிய இனத்தினதும் விடுதலையைத் தரும் ஒரே வழி.

தலையங்கம் தானே India bails out Lanka on rights resolution என்று சொல்கிறது. மிகுதி எங்கே?

  • தொடங்கியவர்

//We believe the Universal Periodic Review enjoys a broad support, since it avoids selectivity, and provides for the human rights record of all UN member states to be subject to peer review. The enthusiastic participation by member states in the UPR process in the first cycle, underscores the success of this important mechanism,” the Indian statement said.

Sri Lanka’s rights record is to come up for UPR in October. Colombo has asked for time till then to implement recommendations of the Lessons Learnt and Reconciliation Commission, which the US and the Western bloc has been demanding.

//

இன்னும் உங்களுக்கு விளங்க வில்லை என்றால் தலையங்கம் போட்ட பி கே பாலச்சந்திரன் அய்யர் அவர்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள்.

இலங்கையை காப்பாற்றும் இந்தியாவின் முயற்சி அநீதியானது, கண்டனத்திற்குரியது

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி பேசியிருப்பது இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியாகும். இந்திய அரசின் இப்படிப்பட்ட நியாயமற்ற நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தின் 19வது மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிடைக்க போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரவுள்ளன. அப்படி ஒரு தீர்மானம் வந்தால் அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதி, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமினறி, உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார். இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தக்கூடிய தீர்மானம் நிறைவேற்றுதலுக்கு எதிரானதாகும். இலங்கை தொடர்பான விடயம் அங்கே மனித உரிமை சூழல் எப்படியிருக்கிறது என்பதல்ல. மாறாக, அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது பற்றி விசாரிக்க வழிவகுக்கும் போர்க் குற்ற விசாரணையாகும். இதனை பொதுவான மனித உரிமை சூழலாக விவாதிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதிநிதி கூறுவது, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பை மறைக்கும் முயற்சியாகும். 2009ஆம் ஆண்டில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை எப்படி எதிர்த்து அந்நாட்டைக் காப்பாற்றியதோ அதேபோல் இப்போதும் இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதையே அதன் பிரதிநிதி வாசித்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் அதன் கையும் தமிழன் இரத்தத்தால் நனைந்துள்ளது என்பதையும், தனது குற்றச்செயலை மறைக்கவே, வெளிப்படையான குற்றவாளியான இலங்கை அரசை அது காக்க முயற்சிக்கிறது என்பதையும் தெளிவாகிவிட்டது. தமிழினத்தின் அழிப்பை திட்டமிட்டு நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், பயிற்சி என்று எல்லா விதத்திலும் இந்திய அரசு உதவியுள்ளது என்கிற குற்றச்சாற்று, அதன் இந்த நிலைப்பாட்டின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.

ஆனால், 2009ஆம் ஆண்டில் நடந்ததுபோல், இலங்கை அரசு இம்முறை தப்பித்துவிட முடியாது. ஐ.நா.மனித உரிமை மாமன்றத்தின் மற்ற உறுப்பு நாடுகள் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றும் என்று தமிழர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

இது இந்தியக் காட்டுமிராண்டிகளின் தமிழின விரோதத்தை இந்தக் கூற்று அப்பட்டமாக காட்டுகிறது. இதில் அக்டோபர் வரை இழுத்தடிக்கும் முயற்சியும் உள்ளது.

இம்முறையும் இந்திய ஓநாய்கள் இரட்டை வேடம் போட்டு தமிழரை ஏமாற்றலாம் என்ற முடிவுடன் உள்ளார்கள் என்று ஒரு தகவல் சொல்லியது. அது உண்மையாக இருக்கலாம்.

இந்தியாவின் ஏமாற்றுத்தனத்தை மற்றவர்கள் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டா இருக்கின்றனர். அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்திற்கே செல்வாக்கில்லையெனில் இந்தியாவைத் திட்டுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இந்தியா எப்படிப்பேசினாலும் நடுநிலை வகித்தாலும் தீர்மானம் நிறைவேற்றப்படின் இந்தியாவின் மூக்கு உடைபடலாம்.

மனிதவுரிமை சம்பந்தப்பட்டதாக இவ் விடயம் இருப்பதால் இம் முறை தவறினாலும் தொடர்ந்து இந்தியாவால் இவ்வாறு செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதுவரை.... ஈழத்தமிழனுக்கும், தமிழகத் தமிழனுக்கும் செய்து கொண்டிருக்கும்....

முள்ளமாரி அரசியலை, நிறுத்துவது நல்லது. நாதாரிப்பயல்கள்.

நன்றி நாரதர். ஆனால் இந்த மாதிரி சென்சேசனல் கெடிங் போட்டு மக்களை எங்கே அழித்துச்செல்கிறார்கள் இந்த ஊடகங்கள். மேற்காட்டிய செய்திக்கு தலைப்பு ஒன்று வேணுமானால் சீமானின் அறிக்கையில் இருக்கும் ஒரு வசனத்தை சிந்தித்துப் பார்க்கலாம்.

"இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள(து)"தையே

20 மில்லியன் நாட்டில் நடந்த 140,000 மக்களின் கொலை சாதாரண தினசரி உரிமை மீறல் நிகழ்ச்சியாக "peer review"ல் போகலாம் என்றால், கோடிக்கணக்கில் மக்கள் வாழும் மேலைநாடுகளில் மில்லியன் கணக்கில் தினமும் கொலைகள் நடக்கிறதாகவா இந்தியா சொல்ல முயல்கிறது. இதை ஏற்று அவர்கள் இந்தியாவுடன் ஒத்துப்போக சம்மதித்துவிட்டார்களா?

இந்தியாவின் பேச்சில் இருந்து ஒரு வரியைத் தலைப்பாக போடமுடியவில்லையா இவர்களுக்கு?

மேலும் இலங்கை செய்திகளுக்காக கொழும்புவிலிருக்கும் ஐயர் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தொடரைப் பற்றி இந்தியப் பத்திரிகைகளில் ஒரு தலையங்கம் போட முயன்றால் அதற்கு ஒரு கருத்திருக்க வேண்டும்.

பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கவிருந்தாலும், 2009 மாதிரி இல்லாமல் இந்தத் தடவை இந்தியா சற்று இளகிய போக்கையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

20 மில்லியன் நாட்டில் நடந்த 140,000 மக்களின் கொலை சாதாரண தினசரி உரிமை மீறல் நிகழ்ச்சியாக "peer review"ல் போகலாம் என்றால், கோடிக்கணக்கில் மக்கள் வாழும் மேலைநாடுகளில் மில்லியன் கணக்கில் தினமும் கொலைகள் நடக்கிறதாகவா இந்தியா சொல்ல முயல்கிறது. இதை ஏற்று அவர்கள் இந்தியாவுடன் ஒத்துப்போக சம்மதித்துவிட்டார்களா?

ஈழவிவகாரத்தைப் பொறுத்தமட்டில் குற்றச்சாட்டுகள் (Allegations) மட்டுமே உள்ளன..! விசாரணைக்குப்பின் நிறுவப்பட்டதாக எதுவுமில்லை..! அதை வைத்தே எல்லோரும் செயற்படுகிறார்கள்..!

இனப்படுகொலை விவகாரங்களில் நாடுகள் innocent till proven guilty..! :D

  • தொடங்கியவர்

மல்லையூரான் இன்னும் சில நாட்கள் பொறுதிருப்போம், எல்லாம் சந்திக்கு வரும் அவசரமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.