Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல்காந்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rahul-gadhi-060312-150.jpg

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலி்ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வியும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல்வியடைந்தாலும் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.

செய்தியாளர்கள் மேலும் கேள்வி கேட்க முயன்றபோது தனக்கே உரிய புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.

அதேவேளை, காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல்லாம காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அவருக்குக் கிடைத்த பெரும் அடியாக கருதப்படுகிறது.

பெரிய சோகம் என்னவென்றால், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிகளையும் அவரது கட்சி சமாஜ்வாடியிடம் பறி கொடுத்திருப்பது தான். இதுதான் காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது.

http://www.seithy.co...&language=tamil

418391_339849489390508_292196030822521_898840_1591308188_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடிலுக்கை படுத்து சேக்கஸ் காட்டி........கஞ்சி குடிக்கிறன் எண்டு படம் காட்டி....தாடிவளர்த்து தண்டல் செய்தவனுக்கு நல்ல பரிசு........

அப்பன் அடிச்சு சுவில் வைத்துள்ள பணத்துடன், ஆர்ஜென்டீனிய காதலியுடன், எங்காவது ஒரு தேசத்திற்கு ஓடிப்போய் முகவரி இல்லாமல் வாழ திட்டம் போடுவதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவினைப்(இத்தாலியில் பிறந்து இந்தியாவில் அரசியல் செய்யும்) போல ஆர்ஜென்டினாவில் அரசியல் செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"தோல்விகளுக்கு பொறுப்பேற்கிறேன்" என்று, ஒற்றை வரியில் சொல்லிவிட்டு ஒதுங்காமல்...

இவ்வளவு நாளும் செய்த, முள்ளமாரித்தன அரசியலுக்கு, பிராயச்சித்தம் தேட முயற்சிப்பதே... மனிதனுக்கு அழகு.

விலைவாசி உயர்வே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்: சோனியா

விலைவாசி உயர்வும், மட்டமான வேட்பாளர்கள் தேர்வுமே உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு தேர்தல் முடிவும் எங்களுக்கு ஒரு பாடம் தான். அந்த வகையில் இந்தத் தேர்தல் தோல்விகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்வோம. எங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வோம்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக ராகுல் காந்தி கடுமையாக பாடுபட்டார். ஆனாலும் தோற்றுள்ளோம். இந்தத் தோல்வியை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தல் முடிவுகளால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் வராது. எங்களது கவனம் எல்லாம் 2014ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலின் மீது தான் இனி இருக்கும்.

தேர்தல் தோல்விக்கு ஊழல் காரணமல்ல. ஊழல் விஷயத்தில் நாங்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். இந்த விஷயத்தில் ஒரு அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தோம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் தான் ஏராளமாக உள்ளனர். இது தான் எங்களது பிரச்சனை (அதாவது கட்சியில் தொண்டர்கள் கம்மி, எல்லோருமே தலைவர்கள் தான் என்ற அர்த்தத்தில் கூறினார்).

தோல்விக்கு பணவீக்கமும் விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து குஜராத், கர்நாடகம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ளன. அதற்காக இப்போதே தயாராவோம் என்றார் சோனியா.

http://www.alaikal.com/news/?p=98993

Edited by akootha

முத‌ல்வ‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்தா‌ர் மாயாவ‌தி

உ‌த்தர‌பிரதேச முத‌ல்வ‌ர் பத‌வியை பகுஜ‌ன் சமா‌‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி ரா‌‌ஜினாமா செ‌ய்தா‌ர்.

ல‌க்னோ‌வி‌ல் ஆளுநரை இ‌ன்று ச‌ந்‌தி‌த்து மாயாவ‌தி தனது ரா‌ஜினாமா கடி‌த‌த்தை கொடு‌த்தா‌ர் அ‌ப்போது, பு‌திய அரசு பத‌வியே‌ற்கு‌‌ம் வரை பொறு‌ப்பை தொடர மாயாவ‌தியை ஆளுந‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ஆ‌ட்‌சி இழ‌ந்ததை கு‌றி‌த்து இ‌ன்று ‌பி‌ற்பக‌‌‌லி‌ல் மாயாவ‌தி செ‌ய்‌தியாள‌ர்களை ச‌ந்‌தி‌த்து ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்க உ‌ள்ளா‌ர். மாயாவ‌தி‌யி‌ன் பகுஜ‌ன் சமா‌‌ஜ் க‌ட்‌சி 80 இட‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சியை இழ‌ந்தது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

http://www.alaikal.com/news/?p=98997

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.