Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈபிடிபி றீகன் – கமல் மோதல்! களைகட்டியது சிறீதர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Reekan-kamal-copy-100x100.jpg

ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.மாநகரசபையில் அங்கம் பெறுகின்ற ஈபிடிபி உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கின்றது.

நிகழ்விற்கு ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றிய பொழுது, யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் றீகன் உரை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் தனது உரையில்,

யாழ்.மாநகர சபையும் ஈபிடிபி கட்சியும் முற்றுமுழுதாக வியாபார நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றன. மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் அது செயற்படவில்லை. குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் முற்று முழுதாக ஈபிடிபியினாலும் மாநகர சபையினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலங்களில் மட்டும் கரையோரமக்களின் உதவி தேவைப்படுகின்றது. இந் நடவடிக்கையினையே ஈபிடிபி கட்சியும் மேற்கொண்டு வருகின்றது. மக்களது தேவைகளை நிறைவு செய்வதற்கு ஈபிடிபியும் மாநகர சபையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த அமைப்பாளர் கமல் பாய்ந்து சென்று றீகனின் சேட்டைப்பிடித்து அவரைத் தாக்கியிருக்கின்றார். அதன் பின்னர் றீகனும் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார். இதனை அடுத்து ஈபிடிபி கட்சிக்குள் பதட்டம் நிலவியதாக மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

கரையோரப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவைவிடவும் பிரதி முதல்வர் றீகனுக்கே செல்வாக்கு இருப்பதாகவும் இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈபிடிபி தனது விளம்பரங்களில் றீகனுடைய பெயரைபக் குறிப்பிட்டு அதற்கு பக்கத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரினைக் குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=54290

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரின் மிகச்சிறந்த திரையரங்கை ஆக்கிரமித்து இருக்கும்... இந்த எருமைக் கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி,

அந்தத் திரையரங்கை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ..... இது யாழ்மையவாத சிந்தனையால் வந்தோ? அல்லது யாழ் கரையோ சிந்தனையால் வந்ததோ?

ஜயோ..... இந்த சண்டை யாழ்மையவாத சிந்தனையால் வந்தோ? அல்லது யாழ் கரையோ சிந்தனையால் வந்ததோ?

blodigt-1a3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
img-dogfight1.jpgபோராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் தோழர்.

ஈ.பி.டி.பி. உறுப்பினர் கொலை

திருகோணமலை, குச்சவெளியின் பெரியகுளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலத்திற்கு அருகில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ. என எழுதப்பட்ட காகிதத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

மூதூரைச் சேர்ந்த ரகு நடன் அல்லது முத்து என மேற்படி நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் முச்சக்கரவண்டியின் உள்ளே காணப்பட்டது. காலை வேளையில் மேற்படி நபர் இனந்தெரியாத இரு நபர்களுடன் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் 15 - 20 வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக இருந்தவர் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இவர் மறைந்திருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இவர் இராணுவ உளவாளியாக செயற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்படி நபர்&nbsp; முச்சக்கரவண்டி சாரதியதாக தனது தொழிலை மேற்கொண்டு வந்தார். <em>(டெய்லிமிரர்)

உது இரண்டு மூன்று தலைகளுடன் நின்றுவிடும் .சும்மா கரணின் பட அடிபிடிகள் போல.

புலி-ரெலோ ,மாத்தையா-பிரபா,கருணா-பிரபா சண்டை போல் சும்மா நூற்று கணக்கில் தலைகள் விழாது.அது என்ன மாதிரி நுனி சீட்டில இருந்து மயிர்கூச்செறிய வைத்தது .ரஜனி,விஜே படங்கள் போல .இனியென்ன மீண்டும் வராமலா போகப்போகுது?

ஏன் அர்ஜுன், உங்களுக்கு உமா-சந்ததியார், சித்தார்த்தன்-உமா, சித்தார்த்தன்-மாணிக்கதாசன் ... போன்ற கிலைமாக்ஸுகள் தெரியாதோ????????? ... சோற்றுப்பர்சலோடு நின்றிட்டீர் போல கிடக்குது??????????

ஏன் அர்ஜுன், உங்களுக்கு உமா-சந்ததியார், சித்தார்த்தன்-உமா, சித்தார்த்தன்-மாணிக்கதாசன் ... போன்ற கிளைமாக்ஸுகள் தெரியாதோ????????? ... சோற்றுப்பர்சலோடு நின்றிட்டீர் போல கிடக்குது??????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உது இரண்டு மூன்று தலைகளுடன் நின்றுவிடும் .சும்மா கரணின் பட அடிபிடிகள் போல.

புலி-ரெலோ ,மாத்தையா-பிரபா,கருணா-பிரபா சண்டை போல் சும்மா நூற்று கணக்கில் தலைகள் விழாது.அது என்ன மாதிரி நுனி சீட்டில இருந்து மயிர்கூச்செறிய வைத்தது .ரஜனி,விஜே படங்கள் போல .இனியென்ன மீண்டும் வராமலா போகப்போகுது?

ஏன் உங்களுக்கு புத்தி இப்படி போகின்றது

நல்லது ஜோசிக்கமாட்டீர்களா .....?

எங்கள் சகோதர்கள் தங்களுக்குள் மோதுண்டு மடிந்து போன துயரசம்பவம், உங்களுக்கு இந்தியா தமிழ் சினிமா பார்பதுபோன்று இருக்கின்றதா ........ ?

யோவ் ...... நடிப்பும், நிஜமும் உங்கள் பார்வையில் ஒன்றா ..... ?

நெல்லையன் ,தமிழரசு இருவருக்கும் ஒரே பதில் தான் .

நாங்கள் அவர்களின் இந்த உட்கொலைகளை நாம் கடைசிவரை எதிர்த்தோம் அல்லது விட்டு வெளியேறினோம் .

நீங்கள் கடைசிவரை அவர்கள் செய்ததை நியாயப் படித்தினிர்கள்.அதை சுட்டி காட்டியவனை துரோகிஎன்றீர்கள்.

அதனால் தான் இவ்வளவு அழிவுகளும் இனியாவது திருந்துவம் என்றால் அதுவும் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் இவ்வளவு அழிவுகளும் இனியாவது திருந்துவம் என்றால் அதுவும் கிடையாது .

நாங்களும் திருந்த வேணும் அதே போல நீங்களும் திருந்த வேணும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன் ,தமிழரசு இருவருக்கும் ஒரே பதில் தான் .

நாங்கள் அவர்களின் இந்த உட்கொலைகளை நாம் கடைசிவரை எதிர்த்தோம் அல்லது விட்டு வெளியேறினோம் .

நீங்கள் கடைசிவரை அவர்கள் செய்ததை நியாயப் படித்தினிர்கள்.அதை சுட்டி காட்டியவனை துரோகிஎன்றீர்கள்.

அதனால் தான் இவ்வளவு அழிவுகளும் இனியாவது திருந்துவம் என்றால் அதுவும் கிடையாது .

நன்மக்கள், பிறரின் குற்றங்களைக் கூட நிறைவாய்க் காணும் இயல்புடையார்.

தீயவர்கள், பிறரின் இயல்பான செயல்களைக் கூட குற்றங்ளாகவே காண்பார்!

ஒரு வழக்கறிஞராக உருத்திரகுமாரன் பணம் வாங்குகின்றமை ஒரு தொழில்த்ரோகம்!

மாடு தண்ணீர் குடிக்கின்றமை ஒரு மிருகத்துரோகம்!

இந்த வகையான குற்றம் பிடுங்கி பிடுங்காமல் விட என்னதான் மிஞசப்போகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.