Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவா முடிந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்து சம்பந்தன் உட்பட சகலரையும் கைது செய்ய வேண்டும்

Featured Replies

ஜெனிவா முடிந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்து சம்பந்தன் உட்பட சகலரையும் கைது செய்ய வேண்டும்

ஜெனிவா பிரச்சினை முடிந்த கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்து சம்பந்தன் தலைமையிலான அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய இராணுவம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை நடத்தலாம் .வெளிநாட்டு தலையீடு அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமென அரச தரப்பினர் ஜெனிவாவில் உறுதிமொழி வழங்கியுள்ளது தொடர்பாக கேட்ட போதே டாக்டர் குணதாச அமரசேகர இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில் :

ஜெனிவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக காய்களை நகர்த்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கப் பிரதிநிதியுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வைத்துக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

தனி இராஜ்ஜியத்தின் அரசியல் தலைவரென்ற ரீதியில் சம்பந்தனின் செயற்பாடு அமைந்துள்ளது. இது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். அத்தோடு நாட்டுக்கு எதிரான தேசத்துரோகச் செயலாகும்.

எனவே ஜெனிவாவில் எமக்கு சார்பாகவோ, எதிராகவோ நிலைமைகள் உருவாகலாம். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். பின்னர் யுத்த காலத்தில் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய உதவிகள் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிரான தேசத் துரோகச் செயற்பாடுகள் தொடர் கதையாகி விடும்.

நல்லிணக்க ஆணைக்குழு

அரசாங்கம் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இவ் ஆணைக்குழு தனது வரையறையை மீறி அதிகாரப் பரவலாக்கலை வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்க முடியாது.

அதேவேளை இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் இதில் வெளிநாடுகளின் தலையீடுகள், கண்காணிப்புக்கள் இருக்கலாகாது.

இலங்கையில் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஐவரைக் கொண்ட சுயாதீனக் குழுவை அமைத்து சாட்சியங்களைப் பெற்று இராணுவத்தினர் விசாரணை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு குற்றவாளி யார் நிரபராதி யாரென்று தீர்மானிக்க வேண்டும்.

ஏனைய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலேயே தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அதில் தலையிடும் உரிமை நல்லிணக்க ஆணைக்குழுவிற்குக் கிடையாது என்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைச்செய்யுங்கோ முதலில்.

தமிழரின்விடிவுக்கான அடுத்த கல்லை உங்கள் தலையில் நீங்களே போடுங்கள்.

  • தொடங்கியவர்

இந்தியாவின் தீர்மானத்திற்கு த.தே.கூ. வரவேற்பு

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் இத்தீர்மானம் மிகவும் வரவேற்புக்குரியது. ஏனெனில், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு என்பனவற்றுக்கு அவர்களின் முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நாட்டிற்கு எதிரானது அல்ல எனவும் இந்தியாவின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதானது நல்லிணக்கத்தற்கான முயற்சிகளில் அது ஏற்படுத்தும் தாக்கமே காரணம் எனவும் அவர் கூறினார்.

இப்பிராந்தியத்தில் இந்தியா மிகப் பெரிய நாடாகும். இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அது பாரிய பாத்திரமாற்ற வேண்டியுள்ளது. உலகுக்கும் இந்நாட்டின் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மேலும் பொறுப்புணர்வைக் கொண்டிருக்கும் என நாம் நம்புகிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இப்பிரேரணையின் சரியான உள்ளடக்கம் இன்னும் எமக்குத் தெரியவில்லை. எனினும் நாட்டில் உறுதியான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடிய, இந்நாட்டின் தேசிய மட்டத்தில் விவாதிக்கப்பட்ட சகல விடயங்களையும் அது உள்ளடக்கியிருக்கும் என நாம் நம்புகிறோம் என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37882-2012-03-19-10-42-06.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் தீர்மானங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் இலங்கை ஒத்துக்கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றுதல் என்பதுதான். இலங்கை இதுவரை எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் இவற்றை நிறைவேற்ற காலவரையறை கொண்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றேன். இலங்கைக்கு எந்த விடயத்திலும் காலவரையறை கொடுத்து முடிக்காவிட்டால் சர்வதேசம் நடத்திமுடிக்கும் என்ற அழுத்தத்தின் பெயரிலும், அதைக்கண்காணிக்கவும் செயற்திட்டங்களை உடனுக்குடன் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்து அவர்கள் பரிசோதிக்கும் பொறுப்பும் இருக்கவேண்டும். இதனால் படிப்படியாக தமிழருக்குரிய உரிமையை இலங்கை அரசு கொடுக்கும். இல்லாவிட்டால் 1957களில் இருந்து தழிழர்கள் எப்படியெல்லாம் எமாற்றப்பட்டு ஆணுதப்போராட்டமாக மாறி அதுவும் சர்வதேசத்திற்கு ப+ச்சாண்டி காட்டி அவர்களைக்கொண்டு அழிக்கப்பட்டதுபோல் தொடரும் நிலைக்கு இனிமேலும் விட்டுக்கொடுப்பு இருக்கக்கூடாது.

இல்லாவிட்டால் வேதாளம் பழையபடி முருக்கமரம் ஏறிய கதையாகிவிடும். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர் குற்றவாளிகள் தண்டிக்கமுடியும். ஆட்சிமாற்றம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாவிட்டால் வேதாளம் பழையபடி முருக்கமரம் ஏறிய கதையாகிவிடும். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர் குற்றவாளிகள் தண்டிக்கமுடியும். ஆட்சிமாற்றம் தேவை.

ஆட்சி மாற்றம் வந்து அந்த ஆட்சி அமெரிக்கா சார்பாக நடந்தால் உலக நாடுகள் ஒன்றும் எம்மைக் கண்டு கொள்ளமாட்டினம்.

அதைக்கண்காணிக்கவும் செயற்திட்டங்களை உடனுக்குடன் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்து அவர்கள் பரிசோதிக்கும் பொறுப்பும் இருக்கவேண்டும்.

எமினண்ட் குறூப் (2007 ஆண்டு என்று நினைக்கிறேன்) தலைவர் பகவதி இந்தியா அமர்த்தி பிடிக்க பறித்துப்போட்டு ஓடியவர்.

சுவீடிஸ் தளபதி, புறுகொட மாட்டன் மாட்டன் என்று சொல்ல தள்ளிக்கலைக்கப் பட்டவர்.

தேவையானது UNPKF

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவிடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.