அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோ…
-
- 1 reply
- 1.7k views
-
-
பச்சை மனிதன். மனிதன் கூர்ப்பின் பாதையில் கடந்து வந்த காலங்களில் அதிகம் பச்சைப் பசேல் என்ற இயற்கையையே அதிகம் கண்டு வந்ததாலோ என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளை தினமும் ரசிப்பதன் மூலம் மனதை இதப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல்நலத்தை பேண முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். மன அழுத்தமே மூளை, இதயம் (குறிப்பாக உயர் குருதி அழுத்தம்) சார்ந்த மற்றும் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. படங்கள் : facebook (Thanks) "A study suggests that spending time in green areas l…
-
- 2 replies
- 1.7k views
-
-
அண்மையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணம் ஒன்றில் பன்றிகள் நாய்களை விட வழர்ச்சி அடைந்த விலங்கு என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்திருந்தனர். பரிசோதனைக் கூடத்தில் கொடுக்கப்பட்ட சவால்களை எதிர்கொண்ட பன்றி அதை நாயை விட சிறப்பாக எதிர் கொண்டது. வீடுகளில் பண்ணைகளில் வழர்க்கப்படும் பன்றிகள் உரோமம் குறைந்தது இருக்கிறது. இவையே காட்டிற்கு விடப்படும் பொழுது 1 சந்ததிக்குள் உரோமத்தைப் பெற்றுக் கொள்வதோடு நிலத்தை உணவுக்காக கிண்டுவதற்கு துணைபுரியும் வகையில் உயர்ந்த நெற்றி எலும்பையும் பெற்றுக் கொள்கின்றன. பன்றிக்கு நாயைவிட மோப்பம் பிடிக்கும் சக்த்தி அதிகம் உள்ளது. நாயைவிட 8 மடங்கு ஆழத்தில் உள்ள பொருளை கண்டு பிடிக்கக் கூடியது. இஸ்ரேல் இராணுவத்தின் விலங்குகள் பயிற…
-
- 6 replies
- 1.6k views
-
-
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களான புவிவெப்பம், காற்று, சூரியஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் …
-
- 0 replies
- 1.6k views
-
-
நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புர…
-
- 4 replies
- 1.6k views
-
-
Echo என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் எதிரொலி அதாவது ஒரு வாக்கியத்தின் கடைசி சில சொற்களை மட்டும் மீண்டும் ஒலிக்கும் ஒரு செயல். இந்த எதிரொலியை ஆங்கிலத்தில் Echo என்று எதற்காக அழைக்கிறார்கள்? இந்த Echo என்ற வார்த்தைக்கு ஒரு கதை இருக்கிறதாம். கிரேக்க புராணத்தில் Echo என்பது ஒரு தேவதையின் பெயர். மிகவும் இனிமையாக பாடவும், இசைக் கருவிகளை இயக்கவும் வல்லமை பெற்றவள் இந்த Echo. இந்த தேவதை Zeus என்ற தலைமை கடவுளின் மனைவி . Hera என்ற பெண் தெய்வத்தால் சபிக்கபடுகிறாள், அந்த சாபத்தின் விழைவால் Echo என்ற தேவதையால் சுயமாக எதுவும் பேச முடியாமல் போகிறாள் . அவளால் பேச முடிவது ஒன்று மட்டும் தான். யாராவது பேசினால் அந்த பேச்சின் முடி…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை வீரகேசரி இணையம் 2/12/2011 12:22:58 PM 'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார். சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபி…
-
- 4 replies
- 1.6k views
-
-
எரிபொருளாகும் தண்ணீர். John Kanzius என்பவர் தற்செயலாக இதை கண்டுபிடித்தார். இவர் புற்று நோய்க்கான மருந்தை உருவாக்கும் ஆராச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த மாபெரும் விஞ்ஞானத்தை தற்செயலாக கண்டுபிடித்தார்.உப்புத் தண்ணீருக்கு radio frequencies யை செலுத்தும் போது உப்புத் தண்ணீரில் உள்ள மூலக்கூறுகள் பலமிழந்து hydrogenனை வெளிவிடுகிறது. இது எரிபொருளாக மாறுகிறது.மேலும் - http://ap.google.com/article/ALeqM5iT1KAi6...qZlvLnfsxP7ToKw
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று நாசா செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டு இருக்கு. அதில் ஒன்ரு பனோரமிக் (Panoramic view) ஆக இருக்கு. அந்தப் படம் கீழே
-
- 6 replies
- 1.6k views
-
-
ி அமெரிக்காவின் ராணுவம் புதிதாக கதிர்வீச்சு துப்பாக்கி ஒன்றினை கண்டுபிடித்து உள்ளது.இந்த துப்பாக்கி, குண்டுகளுக்கு பதிலாக 54 டிகிரி செல்ஸியஸ் வெப்பகற்றையினை சுடும்.இந்த வெப்பகற்றை உடம்பில் தீப்பிடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும். இது நமது தோலின் 1 அங்குல தடிப்பில் 1/64 அளவுக்கு தான் துளைக்கும். அதனால் நமது உயிர்க்கு ஊறு ஏதும் விளைக்காது . இது 2010 ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும். ஆனால் அமெரிக்காவின் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த துப்பாக்கியினை உடனடியாக சேர்க்க கோரி உள்ளன.
-
- 3 replies
- 1.6k views
-
-
.பூனை நண்பனா? நாய் நல்ல நண்பனா ? வீட்டுப் பிராணி ஆராய்ச்சியில் புதுதகவல் லண்டன்:பூனைகள் மனித இனத்தின் மிகச் சிறந்த நண்பர்கள் என்று நாம் நினைப்பதில்லை. ஆனால், அவை நமது மிகப் பழமையான நண்பர்கள். பழமை என்றால் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்ல. பத்தாயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.பொதுவாக மனிதர்களின் மிகச் சிறந்த நண்பன் என நாய்களைத் தான் பலரும் கூறி வருகின்றனர். "நாய் நன்றி உள்ள விலங்கு' என தமிழில் ஒரு பழமொழி கூட உண்டு. நாய்கள் தங்களின் பெரும்பாலான நேரங்களை மனிதர்கள் மற்றும் மனிதர்கள் சார்ந்த சூழ்நிலையில் கழிப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் மனிதர்களை சார்ந்து வசிக்கும் மற்…
-
- 2 replies
- 1.6k views
-
-
அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - Amazon's Kindle Fire மின்வலை மூலம் புத்தகங்களை விற்கத்தொடங்கி பின்னர் புத்தகத்தை ஒரு கிண்டுள் (Kindle) என்ற சிலேட்டில் வாசிக்கக்கூடிய வழிகளை அறிமுகப்படுத்திய அமசோன், இப்பொழுது ஆப்பிளின் ஐபாட்டுக்கு சவால் விடக்கூடிய ஒரு தப்லேட் கணணியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை 200 டாலர்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் ஐ பாட்டுக்கு ஆப்பு வைக்குமா? இல்லையா என காலம் தான் சொல்லும்.
-
- 0 replies
- 1.6k views
-
-
\\\\\\\"Forgive your enmies, but never forget their names\\\\\\\" - John.F. Kennedy ( 1917-1963) தத்துவ முத்து 1.0 எதிரிகளினை மன்னிக்கச்சொல்லிய அமெரிக்க அதிபர் ஜோன் . எப். கென்னடி, ஆனால் அந்த எதிரிகளின் பெயர்களை மறக்காமல் வைத்திருக்கச்சொல்லுகின்றார
-
- 3 replies
- 1.6k views
-
-
*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக …
-
- 0 replies
- 1.6k views
-
-
'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மூலம், கொசுக்களை அழிக்க உதவும் நொச்சி கன்றுகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு வழங்கி வரும், அதன் நிர்வாக அறங்காவலர், ரட்சகன்: கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நோய்வாய்ப்படாமல் சுகாதாரமாக வாழவும், 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை உருவாக்கி, பல்வேறு முயற்சிகளை, பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலங்களில், கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நொச்சி செடியை வளர்ப்பதால், இயற்கையான முறையில் கொசு பெருக்கத்தை தடுக்க முடியும் என, சென்னை மாநகராட்சி, கடந்த ஆண்டு அறிவித்தது. அதனால், நொச்சி செடிகளை உருவாக்குவதற்கான மாநகராட்சி, 'டெண்டரில்' லாப நோக்கமின்றி நாங்களும் பங்கேற்று, நொச்சி செடிகளை வளர்த்து வருகிறோம்.இதற்காக, உளுந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி ஜெயக்குமார் | இதழ் 148 | 06-04-2016| அச்சிடு ‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம். ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரி…
-
- 0 replies
- 1.6k views
-
-
வியக்க வைக்கும் மணிக்கூட்டை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.poodwaddle.com/worldclock.swf
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருக்கவில்லை. அதனால் வரலாற்றை ஆண்டுவாரியாக ஒழுங்காக எழுதிவைக்கவில்லை. இது ஒரு பெரிய குறை. சிங்களவர்களது 2500 ஆண்டு வரலாறு புராணவடிவில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பவுத்த தேரர்கள். யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு - குறிப்பாக தொடக்க வரலாறு - குழப்பமாக இருக்கிறது. யாழ்ப்பாண வைபவமாலை எழுதிய மயில்வாகனப் புலவர் வரலாற்று ஆசிரியர் அல்ல. ஒரு ஒல்லாந்த அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனக்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றை எழுதினார். அதில் பல மயக்கங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கண்டியையும் அனுராதபுரத்தையும…
-
- 3 replies
- 1.6k views
-
-
'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயிரினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிஃபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர். கலிஃபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங…
-
- 1 reply
- 1.6k views
-
-
உலகத் தமிழர்களுக்கு வணக்கம், அறிவியல் தமிழ் மன்றம் ஒரு வித்தியாசமான பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறது..... ஒரே சமயத்தில் இரண்டு திசைகளில் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையினில் இரண்டு விழியங்களை அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடுகிறது கடவுள் மீது நாட்டம் உள்ளவர்கள் கட + உள் விழியத்தை காணவும் கட + உள் விழியங்கள் Q 1- 4 காமம் மீது நாட்டம் உள்ளவர்கள் காமம் பற்றிய விழியத்தை காணவும் காமத்துப்பால் விழியங்கள் - Q 11 - Q 15 இரண்டையும் காணும் மனப்பக்குவம் உள்ளவர்கள் , இரண்டையும் காணவும் கட + உள் விழியங்கள் Q 1- 5 அறிவியலின் ஒளிகொண்டு இறைவனை தேடும் ஒரு பயணம் நாத்தீகமும் ஆத்தீகமும் இங்கு நீதத்துடன் அலசப்படும் கேள்வி 1. Sp…
-
- 1 reply
- 1.6k views
-
-
39,000 மீற்றர் உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை. சற்று நேரம் முன், இனி ஒருவராலும் முறியடிக்க முடியாத உலகசாதனை நிகழ்த்தப் பட்டது. ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த பவும் கார்டினர் (Baumgartner) என்பவர் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிக்கோ என்னுமிடத்திலிருந்து... ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் மூலம், விமானம் கூட செல்ல முடியாத உயரமான... 39,000 மீற்றர் உயர்த்துக்கு விசேடமாகத் தயாரிக்கப் பட்ட குடுவை மூலம், மேலே சென்று.... கீழெ... பாரசூட் மூலம் குதித்து, இனி எவரும் சாதிக்க முடியாத, உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனி எவரும் சாதிக்கமுடியாத என்று சொல்வதற்கு முக்கிய காரணம். அவர் சென்ற உயரம் விண்வெளியின்... புவியீர்ப்பு எல்லையின் கடைசிப் பகுதியாகும். அதற்கு மேல் சென்றால்.... அவர் கீழே…
-
- 11 replies
- 1.6k views
-
-
இயற்கையும் ஓர் அதிசயம், நம் உடலும் ஓர் அதிசயம் என்பதை நிரூபிக்க இந்த அறிவு டோஸை கண்டிப்பாகப் படியுங்கள்! தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை, சூல்வித்தகம் எனப்படும் placenta ஊடாக தாயிடமிருந்து குருதி வழியாக ஊட்டச்சத்து பெறுகின்றது. இப்படி ஊட்டச்சத்துகள் பெறுவதால், அந்தக் குழந்தை அதனது வாழ்நால் முழுவதும் எவ்வளவோ நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகின்றது. ஆனால், வியப்பூட்டும் விடயம் இது தான்: கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாயின் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்தால், உதாரணத்திற்கு மாரடைப்பு போன்ற நோய் வந்தால், கருவில் இருக்கும் குழந்தை அதே சூல்வித்தகம் ஊடாக தனது தாய்க்கு குருத்தணுக்கள் (stem cells) அனுப்பி, தாயின் பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளை குணப்படுத்த உதவுகின்றது. இதைப் போல் அதி…
-
- 6 replies
- 1.6k views
-
-
தென் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களின் வறண்ட பகுதிகளில், மலை முகடுகளின் கூம்பான புனல் போன்ற புவி அமைப்பால் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலிருந்து அதி வேகத்துடன் தமிழ் நாட்டில் நுழைகிறது. இத்தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரலாகவும், குமரிப் பக்கம் வீசும் போது சுழல் காற்றாகவும் உருமாறுகிறது. இதைக் கண்ட பொறியாளர்களின் மூளை வாளாவிருக்குமா? பிறந்தது காற்றாலை (Wind Mill) எனப்படும் பொறி. இப்பொறி, விரைந்து வீசும் காற்றால் உந்தப்பட்டு விசிறி சுழற்சி மூலம் ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி(Energy), அணு உலைகள், நீர் உலைகள் மற்றும் வாயு உலைகள் மாதிரி இல்லாமல், சுற்றுச்ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=5]இன்ஃபினிடி கோபுரம்[/size] துபாயில் அடுத்து வரவிருக்கும் புதிய உயரமான கட்டிடம், துபாயின் புதிய நகரான "துபாய் மெரினா"வில் வானாளாவ எழுந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் "இன்ஃபினிடி கோபுரம்". இதிலென்ன விசேடம் என பார்க்கிறீர்களா...? வடிவமைக்கப்பட்ட மொத்தம் எழுபத்தி ஆறு(76) தளங்களில், ஒவ்வொரு தளமும் 1.2 பாகை கோணத்தில் அதன் முந்தைய தளத்தோடு முறுக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த கட்டிட்டமும், தரை தளத்தோடு ஒப்பிடுகையில் 90 பாகை கோணத்தில் முறுக்கி ஒரு சுருள்வளை (Helix) போல் தோற்றமளிக்கிறது. உலகின் மிக உயரமான முறுக்கேறிய அமைப்பில் கட்டப்பட்டவற்றில் தற்பொழுது இன்ஃபினிடி கோபுரம்(Infinity Tower) முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் …
-
- 11 replies
- 1.6k views
-