அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
மெசேஜிங் மற்றும் அழைப்பு வசதியை வழங்கும் வைபர் அப்ளிகேசனை சவுதி அரேபியா தடைசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டல்மொன் மார்கோ தெரிவித்துள்ளார். எனினும் இத்தடைக்கான காரணம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தப்படவில்லையென மார்கோ தெரிவித்துள்ளார். வைபர் உட்பட மெசேஜிங் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள் தமது தகவல்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கவேண்டுமெனவும், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவற்றின் மீது தடை விதிக்கப்படுமென சவுதி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது. எனினும் வைபர் இதற்கு இணங்கவில்லையென டல்மொன் மார்கோ குறிப்பிடுகின்றார் . இதன் காரணமாகவே சவுதியில் வைபர் தடை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதேபோன்ற காரணத்தை முன்வைத்தே சவுதி அரசாங்கம்…
-
- 0 replies
- 711 views
-
-
இந்த பாலம் 90 வீதமான சீன மக்களை இணைக்கிறதாம் https://www.facebook.com/video.php?v=436708363194192 https://www.facebook.com/techinsider/videos/436708363194192/
-
- 1 reply
- 711 views
- 1 follower
-
-
புகழ்பெற்ற அறிவியல் journal (சஞ்சிகை) லான நேச்சர் (Nature) இல் 2008ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரைக்கு எதிராக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பொறுப்பானா பேராசிரியர் தொடுத்திருந்த.. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் இன்று லண்டனில்.. தீர்ப்பளிக்கப்பட்ட போது.. நேச்சரின் செயல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி.. எகிப்து நாட்டு இயற்பியல் பேராசிரியர் தன் பாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுருந்ததோடு.. தனக்கு பிரசித்தி பெற்ற அறிவியல் professional bodies மற்றும் நிறுவனங்களில் பேராரிசியர் அங்கத்துவமும் தொடர்பும் இருந்ததாக குறிப்பிட்டிருந்துள்ளார்.அத்துடன் இவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.. போதிய சுயாதீனா சரிபார்ப்பையும் (indep…
-
- 0 replies
- 710 views
-
-
வீரகேசரி இணையம் 7/12/2011 6:10:56 PM கால்களை முற்றுமுழுதாக இழந்த நபரொருவருக்கு வேறு ஒருவரின் கால்கள் இரண்டினைப் பொருத்தி ஸ்பானிய வைத்தியர்கள் மருத்துவ உலகில் முதன் முறையாக சாதனை புரிந்துள்ளனர். ஸ்பெயினின் வெலன்சியாவில் அமைந்துள்ள 'லா பே' வைத்தியசாலையில் நடைபெற்ற இச்சத்திரசிகிச்சையை நடத்தியவர் பெட்ரோ கவாடாஸ் என்ற வைத்தியர் ஆவார். ஸ்பெயினில் முதன் முறையாக முகமாற்று அறுவைச் சிகிச்சையொன்றை மேற்கொண்டவர் என்பதுடன் அவ்வறுவைச் சிகிச்சையில் உலகின் முதன்முறையாக புதிய நாக்கு மற்றும் தாடையைப் பொருத்தியவர் என்ற பெருமை இவருக்கே உண்டு. எனினும் பொருத்தப்பட்ட கால்கள் இயங்குகின்றனவா என்பதினை அடுத்த மாதம் அளவிலேயே கண்டுகொள்ள முடியும் என இச்சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்…
-
- 0 replies
- 709 views
-
-
காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத, முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன். அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக எமது முள்…
-
- 4 replies
- 707 views
-
-
கடந்த வாரம் உலகம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான அறிவியல் செய்திகளின் தொகுப்பு. #WeekInScience அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மானுடத்தின் சிந்தனையையும், வாழ்வியலையும் மாற்றி அமைக்கக்கூடிய கண்டுபிடிப்புகளைத் தொகுத்து, இந்த வார #WeekInScience பகுதியில் தருகிறோம். பறவைகளின் பார்வையில் தொடங்கி, பூமியில் மோதிய வேற்றுகிரகம் வரையில் கடந்த வாரம் வெளிவந்த அறிவியல் செய்திகள் நம்மை வியக்கவைக்கின்றன. 1. பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன? தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலம…
-
- 0 replies
- 707 views
-
-
17 Apr, 2025 | 04:24 PM பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
-
-
- 4 replies
- 707 views
- 1 follower
-
-
வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும் எழுதியது: சிறி சரவணா நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம் என்ற ஒன்றை வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். சரி உயிரினம் என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப் படுத்தியுள்ளது என்று பார்க்கலாம். எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது. ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம். தன் நிலையைப் பேன சக்தி…
-
- 1 reply
- 707 views
-
-
கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா? 22 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:31 ஜிஎம்டி கஞ்சா ஒரு போதைப்பொருள் மட்டுமே அது உடலுக்கு கூடவே கூடாது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, இல்லை..கஞ்சா என்பது ஓர் அருமருந்து என்கின்றனர். இதில் எது சரியானது? உண்மையில் கஞ்சாவுக்கு இரண்டு குணங்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள். tetrahydrocannabinol மற்றும் Cannabidiol அல்லது THC (டிஎச்சி) மற்றும் CBD (சிபிடி) என்கின்ற எழுத்துக்களில் அழைக்கப்படும் இரண்டு பதார்த்தங்கள் கஞ்சா செடியில் இருக்கின்றன. THC என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது. அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றத…
-
- 1 reply
- 706 views
-
-
அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 89 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவில் எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர் ( X-51A Waverider ) என்ற ஜெட் வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி மணிக்கு 6 Mach அதாவது 4500 மைல்/மணி (1 Mach ஆனது 761.2 மைல்கள் ஆகும்) வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை WaveRider Programme என அழைக்கின்றனர். இந்த வானூர்தி தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை (Edwards Air Force Base) தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை ஆரம்பித்து. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்ப…
-
- 1 reply
- 706 views
-
-
விண் குப்பைகளை அகற்றுவதற்கான திட்டம் வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும். விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம். பூமியைச் சுற்றவுள்ள குப்பைகள் பற்றிய ஒரு சித்திரம் ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட …
-
- 3 replies
- 705 views
-
-
இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ்…
-
- 4 replies
- 705 views
-
-
GEN H-4 ஆனது உலகின் மிகச்சிறிய ஓரச்சு உலாங்கு வானூர்தி (co-axial helicopter) ஆகும். எது ஆளில்லாமல் 155 இறாத்தல் (70kg) எடையுள்ளதாகவும், மற்றும் 55 mph (88 km / h) அதிகபட்ச வேகத்தை அடையும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. GEN H-4 ஆனது எதிரெதிர் திசையில் திருப்பும் சுழலிகள் (Rotors) இரண்டின் உதவியுடனும் நான்கு இரட்டை சிலிண்டர் இயந்திரங்களின் உதவியுடனும் இயக்கப்படுகிறது. இதன் ஒரு இயந்திரம் பழுதானாலும் மிகுதி மூன்று இயந்திரங்களினாலும் சிறப்பானதாக செயல்ப்பட முடியும். இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியை ஜப்பானில் உள்ள Engineering System Co.எனும் நிறுவனத்தின் தலைவர் திரு Gennai Yanagisawa என்பவர் வடிவமைத்தார் . இது தற்போது $ 30,000 விலைக்கு விற்கப்படுகிறது. GEN H-4 ம…
-
- 1 reply
- 704 views
-
-
‘டீவியை போட்டா விளம்பரம். ரேடியோவை திருப்பினா விளம்பரம். பேப்பர் பிரிச்சா விளம்பரம். மார்க்கெட்டிங் தொல்லை தாங்க முடியாம படுத்தா காலிங் பெல்லடித்து வாசலில் நிற்கும் சேல்ஸ்மென். பெரிய ரோதனையாப் போச்சு’ என்று கடுப்பிலிருக்கிறீர்களா? மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இது இன்னும் மோசமாகப் போகிறது! வீட்டு வாசல் வரை வந்தவர்கள் அடுத்ததாக நுழையப் போவது………உங்கள் மூளைக்குள்! நியூரோ மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங்கின் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது. யோசித்துப் பாருங்கள். வீட்டிற்குள் நுழைந்து வண்டி சாவியை வைத்த இடம் பத்து நிமிஷத்தில் மறந்து போகிறது. நேற்று சாப்பிட்ட டிபன் இன்று ஞாபகத்தில் இல்லை. நேற்று டிபன் சாப்பிட்டோமா என்பதே நினைவில் இல்லை. சில விஷயங்களை எதற்கு என்று தெரியாமல…
-
- 0 replies
- 704 views
-
-
மாலை மணி ஐந்து. கடிகாரத்தை பார்த்து மோகன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு இருக்கின்றதே என்ற மலைப்பில் அன்றைய தினமும் தாமதமாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான். வேலை நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் எவ்வாறு வேலை நேரத்தையும் தாண்டி முடிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன என்ற ஐயம் மோகன் மனதில் மலைப்பை ஏற்படுத்தியது. பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் கூறியதை போல நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக்கு அர்த்த மில்லை, வாழ்வின் அடிப்படையே நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சொற்கள் மனதில் அலைமோதியது. இருப்பதோ 24 மணி நேரம். இதில் எதை செய்வது? எதை விடுவது? இருக்கும் 24 மணி நேரத்தில் வேலைகளை தள்ளிப் போட்டாலோ, முன்னுரிமைகளை மாற்றி வேலைகளை செய்தாலோ நிகழ்வத…
-
- 0 replies
- 704 views
-
-
சிவகாசி : ""விருதுநகர் மாவட்டத்தில் 1100 ஏக்கரில் கூட்டு பண்ணை விவசாயம் திட்டம் செயல்படுத்த உள்ளதாக,'' எக்ஸ்னோரா நிறுவனம்இன்டர் நேஷனல் சேர்மன் நிர்மல் தெரிவித்தார். சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சிவிக் எக்ஸ்னோரா, ராஜபாளையம் ரவுண்ட் டேபிள், இன்னர் வீல் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்சிவகாசியில் நடந்த "எக்ஸ்னோரா கோ ஆர்கானிக் எக்போ 2011' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வெப்பமயமாதலால் உலகம் மோசமான நிலைக்கு செல்கிறது. கடல் உள்வாங்கி, நிலத்தில் கடல் நீர் புகுந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். 2016-2018ல் பீக் ஆயில் காலமாக மாறும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1000,2000க்கு விற்பனையாகும். இதற்கு தீர்வு, விவசாய நிலத்தை கண் இமைபோல் காக்க வேண்டும். வெளிநாடுகள் ஐந்து ஆண்டுகளில் வ…
-
- 0 replies
- 703 views
-
-
சாம்சங் அறிமுகப்படுத்தும் வித்தியாசமான தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. அதில் சாம்சங் முதலாவது வளைவாக பரர்க்ககூடிய தொலைக்காட்சியை தொழில்நுட்பத்தை அறிவித்தது. பார்வையார்கள் எந்த கோணத்தில் இருந்தும் தொலைக்காட்சியை பார்க்கலாம்.
-
- 4 replies
- 703 views
-
-
வியாழன் கிரகம் பரிவாரங்களுடன் பூமிக்கு அருகே வருகிறது! - பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம். [sunday, 2014-02-23 19:50:30] சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இது இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்கும். பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும். இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. …
-
- 3 replies
- 703 views
-
-
யூதர்களை வெறுத்த காலத்தில் இவர் ஒரு யூத இனத்தில் பிறந்தார் அறிவியல் கண்டுபிடிப்புகளை patent செய்யும் அலுவலகத்தில் சாதாரண எழுத்தாளராக பணியாற்றியவர் அறிவியலை கற்க உந்தப்பட்டு அறிவியலை ஆழமாக கற்றார்... உலகமே ஆங்கிலேயரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவருமான Sir Isaac newton கூறிய ஆய்வுகளே இறுதி என நம்பி கொண்டிருக்க...எதிரி நாடான ஜெர்மனியரும் யூதருமாக இருந்த ஐன்ஸ்டீன் அதையும் கடந்தார்.... இந்த பிரபஞ்சத்தை தனியாக கடவுள் என்ற படைப்பாளி படைத்துள்ளான் என்று நம்பிய உலகை தன்னுடைய e=mc2 என்ற சமன்பாடு மூலம் கடவுள் படைப்பாளி என்ற ஒரு தேவை இல்லை என்று நிருபித்தவர்... மதங்கள் கூறும் மனிதனுக்கு மேலே ஒரு தனிப்பட்ட கடவுள் இருக்க வாய்ப்பில்லை, இந்த பிரபஞ்சமே ஒரு கடவுள் தான் …
-
- 0 replies
- 703 views
-
-
பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை ஆரம்பித்தது. இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது நிறை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்களை விட எரிபொருள் பயனுறுதிப்பாடுமிக்கதாகும். பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகலமான ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டோக்கியோவிலிருந்து ஹொங்கொங்கிற்கு கன்னிப்பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் 200 விமான நிபுணர்களும் ஆர்வலர்களும் பயணித்தனர். மேற்படி விமானத்தின் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைகளுக்கிடையேய…
-
- 0 replies
- 703 views
-
-
பெங்களுருவில் பார்கிங் என்பது மிகவும் கடினமாகி வருகிறது, அங்கு மட்டுமா... உலகில் எல்லா இடத்திலும்தான். பார்கிங் தேடி அலைவதிலேயே பாதி பெட்ரோல் காலியாகிவிடும். இன்று பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி செலவழிக்க முடியுமா ? ஒவ்வொரு துளி பெட்ரோலும் இன்று பூமியை பாதுகாக்கும் இல்லையா..... அதற்க்கு தென்கொரியாவில் ஒரு புதிய ஐடியா கண்டு பிடித்து இருக்கிறார்கள். சிங்கப்பூரில் பார்கிங் என்பது மிகவும் கஷ்டம், அங்கு எல்லா ஷாப்பிங் மால்களிலும் கார் நிற்கும் இடத்தின் மேலே ஒரு சென்சார் இருக்கும். ஒரு லாட் ப்ரீ என்றால் நீங்கள் உள்ளே நுழையும் முன் இடம் இருக்கிறதா என்று காட்டும். தென் கொரியாவின் டெக்னாலஜி முன் இதை பார்க்கும்போது ரஷ்யர்கள் நிலவுக்கு செல்லும்போது பென்சில் உபயோகித்த கதைதா…
-
- 2 replies
- 702 views
-
-
கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிசல்ட் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது. இதன் மூலம் ஒரு தடவை ஷாட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷாட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இரண்ட…
-
- 0 replies
- 702 views
-
-
சற்கரநாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கென Tek Robotic Mobilization Device என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகளைப் போல் அமர்ந்த நிலையில் அல்லாமல் நின்று பயணிக்கக்கூடிய வசதியைத் தருகின்றது இச்சாதனம். வீடியோ விளக்கம் இங்கே.. http://youtu.be/_gb5poTdUMg http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 702 views
-
-
iSTREAM ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை. உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே…
-
- 3 replies
- 702 views
-
-
சர்வதேச விமான நிலையங்களுக்கிடையில் பறந்த பறக்கும் கார்! -வீடியோ பறக்கும் கார் ஒன்று முதல் தடவையாக இரு சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பறந்துள்ளது. ஸ்லோவாக்கியாவின் நைத்ரா மற்றும் பிரஸ்திஸ்லாவா நகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (28) 35 நிமிட நேரம் இந்தக் கார் பறந்துள்ளது. வீதிகளில் கார் போன்று இதை செலுத்திச் செல்லாம். அத்துடன் இதனால் வானில் பறக்கவும் முடியும். எயார்கார் (Aircar) என இது அழைக்கப்படுகிறது. இந்தக் கார் பறக்க ஆரம்பிக்கும்போது விமானத்தின் தோற்றத்துக்கு மாறும். பேராசிரியர் ஸ்டீபன் கிளெய்ன் (Stefan Klein) இந்தப் பறக்கும் காரை உருவாக்கியுள்ளார். பி.எம்.டபிள்யூ இயந்திரத்தைக் கொண்ட…
-
- 0 replies
- 702 views
-