Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக ஆசிரியரொருவர் மாணவனொருவனை அடித்துகொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின், தெலுங்கனா மாநிலம் திருமலைகரி கிராமத்தில் வசித்து வந்த, இராமவத் சந்து என்று கிராமவாசிகளால் அறியப்பட்ட 6 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சிறுவன், தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான். இந்நிலையில் ஒருநாள் பாடசாலைக்கு நேரம் கடந்து சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த ஆசிரியை, கைகளால் மாணவனை தாறுமாறாக அறைந்துள்ளார். இது தவிர மாணவனது தாய் மொழியான தெலுங்கு மொழியை பாடசாலையில் பேசியதற்காக, ஆங்கிலம் பேசத்தெரியாதா என்று கேட்டு சிறுவனது தலையை சுவரிலும் முட்டியுள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத…

    • 3 replies
    • 601 views
  2. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டிப்படுகாயப்படுத்திய சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (12) மதியம் இந்த கொடூர சம்பவம் நடந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடூரன் தலைமறைவாகி விட்டான். 38 வயதான பாதிக்க…

    • 0 replies
    • 601 views
  3. நட்ட நடு ரோட்டில்... பலரும் பார்க்க... ஒரு ஐ போனுக்காக இப்படியா? ஹாங்காங்: தனது பாய் ஃபிரண்ட் ஐ போன் 6 s வாங்கித் தரவில்லை என்பதற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாய் ஃபிரண்டுடன் பிசியான மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது தனக்கு ஐ போன் 6 s வாங்கி தருமாறு தனது பாய் ஃபிரண்டிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தற்போது வாங்கித் தர முடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த பெண், ஏன் வாங்கித் தரமுடியாது என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் …

  4. படிப்பை நிறுத்த மறுத்த, 11 வயது மகளின் முகத்தை சிதைத்த.... கொடூர தந்தை. போபால்: பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து…

    • 1 reply
    • 601 views
  5. இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன. 1. ஜநா பொதுச் சபை -General Assembly. உறுப்பு நாடுகளின் விவாத அரங்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றும் களமாகவும் இடம்பெறுகிறது. 2. ஜநா பாதுகாப்பு சபை -Security Council உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அமைப்பு. இதில் ஜந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்புரிமை வகிக்கின்றன. 3. பொருளாதார மற்றும் சமூக மன்றம் -Social and Economic Council இதை எக்கோசொக் (Ecosoc) என்றும் அழைப்பார்கள். உலகப் பொருளாதார சமூக ஒத்துழைப்பிற்கான மன்றமாகவும் மேம்…

  6. வெட்டிய தலைமுடியுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண் : யாழில் பரபரப்பு! குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தலைமுடியினைக் கத்தரித்த சகோதரிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தனது தங்கச் சங்கிலியை ஏமாற்றிக் களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். இதனையடுத்தே தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையி…

  7. திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.…

  8. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த வீடு மற்றும் காரின் உரிமையாளரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.வீட்டை தீவைத்து எரித்து விட்டு அவர் பாதுகாப்பான இடம்ஒன்றில் நிலையெடுத்திருந்து சினப்பர் துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார். இந்தச் சம்பவத்தில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் ம…

  9. [size=3][size=4]சென்னை: சென்னையிலிருந்து பஹ்ரைனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பயணி அணிந்திருந்த கோட்டில், கருந்தேள் இருந்துள்ளது. அது கடித்து அந்த பயணி அலறி மயக்கமுற்றார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.[/size] [size=4]சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைனுக்கு கல்ப் ஏர் விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பயணியை ஏதோ கடிப்பது போல உணர்ந்துள்ளார். என்ன என்று பார்த்தபோது அவரது கோட்டில் கருந்தேள் ஒன்று இருந்தது.[/size] [size=4]இதைப் பார்த்து அவர் அலறினார். உடனடியாக அருகில் இருந்த பயணிகள் சேர்ந்து அந்த கருந்தேளை அடித்துக் கொன்று விட்டனர். இருப்பினும் கருந்தேள் கடித்த வித…

  10. திருமணமான பெண்ணுடன் போப் இரண்டாம் ஜான் பாலுக்கு நட்பு போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புரீதியில் தொடர்பில் இருந்தார் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா அம்மையருடன் போப் இரண்டாம் ஜான் பால் அவ்வகையில் நூற்றுக்கணக்கான கடிதங்களை கண்டுபிடித்துள்ள பிபிசி, அந்தக் கடிதங்கள் மூலம் அவருக்கு அந்தப் பெண்மணியுடன் நட்புரீதியிலான தொடர்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன எனக் கூறுகிறது. தத்துவ அறிஞரான போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா டிமெய்னியென்காவுக்கு போப் இரண்டாம் ஜான் பால் எழுதியக் கடிதங்கள், போலந்தின் தேசிய நூலகத்தில் பொதுமக்களின் பார்வைய…

  11. 300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும், 1.2மீற்றர் அகலமும் கொண்டது. கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும், நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு, பிலாஸ்டிக…

  12. ஏர் இந்தியா (Air India) விமானம் உட்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை காவல்துறையினர் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானைச் சேர்ந்த தரம் 11 இல் கல்வி பயிலும் 17 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பாதைகளில் மாற்றங்கள் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 72 மணி நேரத்தில் 10 க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், ப…

  13. 16 ஆம் லூயி மன்னன் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார். இந்தத் துண்டியில் இருக்கும் ரத்தத்தின் மரபணுத் தகவலும், லூயிக்கு முன்னாள் வாழ்ந்த பிரஞ்சு மன்னன் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டின் மரபணுத் தகவலும் கணிசமான அளவில் பொருந்திப்போகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். பதினாறாம் லூயி பாரிசில் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்ல…

  14. நடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன். உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த வன்கொடுமைகளும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் டெல்லியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராணுவ மேஜரின் மனைவி மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்டிய மனைவிக்கு தூக்குமாத்திரை கொட…

  15. இது ஒரு கசப்பான உண்மை.. பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள். இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள். மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள். படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடையும் சிலர் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாக…

  16. தமிழ் ஈழத்தின் துயர் நிறைந்த இனப்படுகொலையின் "கறுப்பு அடையாளமாக" சர்வதேச அரங்கில் புளக்கத்தில் இருப்பது. "முள்ளிவாய்க்கால்" உலகத்தால் என்றும் மறக்க முடியாத 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆசிய இனப்படுகொலை - சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித அவலமும் படுகொலைகளைத் தாங்கிய முள்ளிவாய்க்கால் என்ற பெயரும் அந்த நிலப்பிரதேசமும் உலகத்தின் மனக்கண்ணின் முன் என்றும் அழியாதவை. அவை ஒருபுறம் இருக்க, போர் முடிவுக்கு வந்த கையோடு கொலைக்களத்திலிருந்து தத்தளித்து தப்பி வெளியேறிய ஈழத்தமிழர்களின் வாழ்விடங்களை பறித்து தமிழர் அடையாளங்களை அழிக்க ஸ்ரீலங்கா சிங்கள அரசு தெரிவுசெய்த இடங்கள் பல இருந்தாலும், நிலப்பறிப்பின் குறியீடாக முன்னிலைப்படுத்தப்பட்டது "முறிகண்டி", …

    • 0 replies
    • 600 views
  17. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/284675

  18. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த நீதிபதி அசதியில் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார். இதனால் வழக்கு விசாரணையை சரிவர பதிவு செய்ய முடியவில்லை. இதுபற்றி புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=113873&category=WorldNews&language=tamil

  19. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரிக்ரொக்கில் ஆடல், பாடல் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த யுவதியின், தீவிர ரசிகரான இளைஞரே யுவதியை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகின்றது. திருமணம் நடந்த இரண்டு வாரங்களில், பிறிதொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர், யுவதியின் வீட்டிற்க…

  20. பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா? அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா? அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா? இந்தியா என்ன செய்யப் போகிறது?

  21. மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர்; பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதபதைக்க வைக்கும் வீடியோ பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஜூ சவுலவன் என்ற நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, சஜூ சவுலவனைக் கைது செய்த வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337563

  22. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது. குறித்த ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகி…

    • 5 replies
    • 599 views
  23. புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார். புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்…

  24. சென்னை:நீண்ட நேரம் சேட்டை செய்த ஜோதிடரை, யானை தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பட்டாபிராம் அணைக்கட்டுசேரியைச் சேர்ந்தவர், கணேசன், 33; ஜோதிடர். மாலை, மனைவி சரஸ்வதியுடன், பட்டாபிராம் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கு, முகலிவாக்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட, சுபத்ரா என்ற யானையும் இருந்தது. யானையின் அருகில் செல்வதும், வருவதுமாக கணேசன் இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, "யானையை எதுவும் செய்ய வேண்டாம்' என, எச்சரித்துள்ளார்.சிறிது நேரம் கழித்து, போதையில் வந்த கணேசன், மீண்டும் யானையின் வாலைப் பிடித்து இழுப்பது, அதன் முன் ஆட்டம் போடுவது என, சேட்டை செய்துள்ளார்.பாகன் சந்தானம், பலமுறை எச்சரித்தும், கணேசன…

    • 0 replies
    • 599 views
  25. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 11:59 AM கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். ஏன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.