செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பதிவு: ஜூன் 06, 2020 11:38 AM கவுகாத்தி அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமிடம் சில நாட்களுக்கு முன்பு மொபைல் சார்ஜர் கேபிளை தவறாக உட்கொண்டதால் அவருக்கு வயிற்று வலி இருப்பதாகத் கூறினார். இதைதொடர்ந்து டாக்டர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து உள்ளார்.ஆனால் அவரது இரைப்பைக் குழாயில் எதுவும் கிடைக்காததால் அந்த நபர் பொய் சொலவதாக நினைத்தார். ஆனால் நோயா…
-
- 0 replies
- 344 views
-
-
ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா ஆளுனருமான அர்னால்டு ஸ்வாஸ்னேகர், தன்னுடைய இளமைக்காலத்தில் சில பெண்களோடு ஆபாசமாக இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது ராயல் பேங்க் ஆப் கனடாவின் வங்கிப்பெட்டகத்தில் கிடைத்துள்ளது. இந்த செய்தி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மீடியாக்கள் இந்த புகைப்படத்தை வாங்கி தங்கள் பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் வெளியிட எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளன. இந்நிலையில் youporn.com என்ற இணையதளம், 150,000 டாலர்கள் கொடுக்க வாங்க விரும்புவதாக ராயல் பேங்க் ஆப் கனடாவின் மேனேஜிங் டைரக்டர் Jeremy Frommer அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தொகைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
கன்னியாகுமரி: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமண வரவேற்பில் இருந்து மணப்பெண் பாதியிலேயே ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ள சுருளோடு பகுதியை சேர்நதவர் ராஜ்குமார்.இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர் பெண் பார்க்க துவங்கினர். கேரள மாநிலம் உற்றங்கரை பகுதியை சேர்ந்த ஷீஜா என்ற பெண்ணை பேசி முடித்தனர். அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து ராஜ்குமாரும், ஷீஜாவும் செல்போனில் பேசிக் கொண்டனர். பெற்றோர் திருமண தேதியையும் குறித்தனர். இதன்படி திருமணம் பிப் 4ம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதனிடையே திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் ராஜ்குமார் சொந்த ஊர் வந்தா…
-
- 0 replies
- 594 views
-
-
90 நாட்கள் விடுப்புக் கோரி மனு அளித்துள்ள நளினி 16 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, தனக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு கண்புரை, பல்வலி, இரத்தப் போக்கு போன்ற நோய்கள் இருப்பதாகவும். இதற்காக சித்த, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனக்கு 90 நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் கோரி உள்துறை அமைச்சிடம் மனு கையளித்துள்ளார். அத்துடன் இவற்றிற்காக தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/90-நாட்கள்-விடுப்புக்-கோரி/
-
- 0 replies
- 328 views
-
-
பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன்தற்போது ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதேபோல ஹாலிவுட் கவர்ச்சி நாயகிகிம் கர்தர்ஷனும் ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருவருக்குமே இது முதல் பிரசவம். இருவரும் கர்ப்பமாக இருப்பது குறித்தும் ஊடகங்களில் தினந்தோறும் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இதையொட்டி ஊடகங்கள் இருவரும் கர்ப்ப காலத்தில் அணியும் உடைகள் பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது ஊடகங்கள் ஒப்பீடு செய்து வருகிறது. கேத்மிடில்டனுக்கு 31 வயது ஆகிறது, கிம் கர்தர்ஷன் 32 வயது ஹாலிவுட் நடிகை. இருவருக்கும் ஜூலைமாதம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இருவருக்கே பெண் குழந்தைகள்தான் பிறக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக பேட்டியில் கூறியிருக்கின்றார்க…
-
- 0 replies
- 571 views
-
-
``ஸ்கூபிக்கு பார்வை கிடையாது!' - நெட்டிசன்களை நெகிழவைத்த ரமேஷ் சென்னிதாலாவின் `குட்டி ஸ்டோரி' சிந்து ஆர் வளர்ப்பு நாய் ஸ்கூபியுடன் ரமேஷ் சென்னிதாலா ``ஸ்கூபி எனச் சத்தமாக அழைத்தால், அது வேகமாக வந்து என் மனைவி அனிதாவின் காலில் இடித்து நிற்பதைக் கவனித்தோம். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான், ஸ்கூபிக்கு பார்வை இல்லை என்ற விஷயம் தெரியவந்தது" கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில், யூஸப் என்பவர் தனது வீட்டில் வளர்த்த நாயை காரின் பின்புறம் கயிற்றால் கட்டி ரோட்டில் இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர் தனது மொபைல்போனில் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த…
-
- 1 reply
- 376 views
-
-
திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 5வது ரக தலைமுடி ஏலம் போகாததால் 260 டன் தேங்கியுள்ளது.இதனால் விலையை குறைத்து ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி சுவாமிக்கு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த தலைமுடிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. இருப்பினும் உலக சந்தையுடன் மதிப்பிடும்போது இந்த விலை குறைவு என கருதி ஆன்லைனில் ஏலம் விடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள எம்.எஸ்.டி.சி. நிறுவன உதவியுடன் ஆன்லைனில் கடந்த ஆண்டு ஏலம் விட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.150 கோடி கூடுதல் லாபத்துடன் ரூ.200 கோட…
-
- 1 reply
- 509 views
-
-
எதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்! டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சிறுமி ஆருஷியை அவரது பெற்றோரே கொலை செய்ய நேரிட்டது எதிர்பாராதது என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி கெளல் விளக்கம் அளித்திருக்கிறார். 2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஆருஷியையும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோரே கொலை செய்தனர் என தெரியவந்துள்ளது. காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சிபிஐ அதிகாரி கெளல், சம்பவம் நடந்த நாள் நள்ளிரவில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்ப…
-
- 0 replies
- 675 views
-
-
நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். படத்தின் காப்புரிமைREUTERS இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார். கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமை…
-
- 5 replies
- 522 views
-
-
நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார்.. அவரது அண்ணன்! பெங்களூர்: நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் மலேசியாவைச் சேர்ந்த நித்திய கீதானந்தா என்பவருக்கும், நித்தியானந்தாவின் உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உண்டு. அண்ணன் பெயர் செந்தில்குமார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும், தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா எ…
-
- 8 replies
- 1.3k views
-
-
உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் …
-
- 0 replies
- 244 views
-
-
100க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடி நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்ட பாகிஸ்தான் நபர். லாகூர்: இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச…
-
- 0 replies
- 780 views
-
-
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்க…
-
- 4 replies
- 715 views
-
-
சில நிமிடங்களுக்கு முன் எனது கடைககு நேர் எதிரேயுள்ள பாண்கடைக்குள் ஒரு யீப் ஒன்று புகுந்துவிட்டது... ஓட்டிவந்தவர் வயசானவர் என்ன நடந்தது என தெரியவில்லை என்கிறார்.. இன்ற திங்கட்கிழமை அந்தப்பாண்கடை பூட்டு என்பதாலும் வீதியைத்தாண்டி நடைபாதையைக்கடந்து வீதியோரத்தில் சில மீற்றர்களை கடந்து சென்ற போதும் எவருக்கும் உயிராபத்து நேராதது அதிசயம் தான்...
-
- 23 replies
- 2.2k views
-
-
தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம் Thursday, 24 March 2011 17:57 தென்பிராந்திய நிருபர் : தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. தெலிஜ்ஜவிலைகருக்களையைச் சேர்ந்த வீ.ஜி.இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார். இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை' பூசி வந்துள்ளார் எனவும் அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற …
-
- 12 replies
- 742 views
-
-
ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: மருத்துவ துறையில் அதிசயம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:57.11 மு.ப GMT ] பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட்( Bedford) நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் (Hayley Haynes - 28) என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், …
-
- 0 replies
- 453 views
-
-
சுவிஸ் குடியுரிமையை இழந்த காரணத்தினால் வாழ்க்கையை இழந்த இலங்கை அரசியல் பிரபலம் சுவிட்சர்லாந்து குடியுரிமையை இழந்த காரணத்தினால் 37 ஆண்டு திருமண வாழ்க்கையை இழக்க நேரிட்டதாக இலங்கையின் அரசியல் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையும் அரசியல் பிரபலமுமான கீதா குமாரசிங்க அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து திருமண பந்தத்தை தொடர வேண்டுமாயின் சுவிட்சர்லாந்து குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என கணவர் கூறியதாகவும் அதனை தாம் நிராகரித்து இன்று 37 ஆண்டு குடும்ப வாழ்க்கையை இழந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாய் நாட்டுக்காக அவர் இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும…
-
- 2 replies
- 2.3k views
-
-
உச்சத்தை தொட்டது தங்கம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ரூ.18 ஆயிரத்தை எட்டியது. தங்கத்தின் விலை கடந்த பல மாதங்களாக உயர்ந்து வந்தது. இடையில் சற்றே சரிவு இருந்த போதிலும் தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தால், சவரன் விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 அதிகரித்து, ரூ.2250 என்ற அளவை எட்டியது. இதன்படி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.18 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.64.55 ஆக இன்று இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.64,550 ஆக இர…
-
- 2 replies
- 829 views
-
-
செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து…
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
டெல்லி: துறவியாக தனி மனது வேண்டும். பணமில்லாதவர்கள் குடும்பத்தை காக்க முடியாமல் சாமியாராக செல்வது ஒருவகை என்றால் கோடீஸ்வரர் ஒருவர் தனது 600 கோடி ரூபாய் சொத்துக்களை துறந்து துறவியாக மாறியுள்ளார். டெல்லியில் `பிளாஸ்டிக் மன்னன்' என்று அறியப்படும் பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர்தான் தனது சொத்துகள் எல்லாவற்றையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கினார் தோஷி. தொடக்கத்தில் போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியத…
-
- 0 replies
- 431 views
-
-
கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்! சென்னை: கணவரின் இறந்த உடலுடன் 3 நாட்களாக தனியாக வசித்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெண். அவர்கள் வளர்த்து வரும் 7 பூனைகளும், 3 நாய்களும் வெளியில் எங்கும் போகாமல் அந்த முதியவரின் உடலுக்கு அருகேயே அமர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சென்னை அடையார், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (60). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. சசிகலாவுக்கு லேசான மன நல பாதிப்பு உண்டு. குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியினர் 7 பூனைகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகி…
-
- 3 replies
- 1.5k views
-
-
27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்! அமெரிக்காவைச் சேர்ந்த கென்டால் ஜென்னர் என்ற மாடல் அழகியின் புகைப்படம்தான் கடந்த வாரங்களில் அதிக லைக் வாங்கிய புகைப்படமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் லைக்ஸை அள்ளு அள்ளு என்று அள்ளுகிறது. கடந்த, 5 வாரங்களுக்கு முன்பு ஜென்னர் பதிவேற்றிய புகைப்படம், 27 லட்சம் லைக்ஸ் வாங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜென்னரின் இதயத்தில் ஒவ்வொரு முறை லப்-டப் கேட்கும் போதும் அந்த புகைப்படத்தை ஒருவர் ’லைக்’ செய்துள்ளார்கள். இதற்கு முன்பு, 24 லட்சம் லைக் வாங்கியிருந்த தன் அக்கா கிம்மின் சாதனையை முறியடித்துள்ளார் ஜென்னர். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜென்னரின் முகப் பொலிவா? மோன நிலையா? கூந்தலின் வட…
-
- 0 replies
- 495 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 01:14 PM நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த க…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
ஒரு எலுமிச்சை பழம் ரூ.14 ஆயிரத்திற்கு ஏலம் முருகன் கோவில் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், ஒரு வேல் மட்டும் இருந்தது. மலைக்குன்றிற்கு கீழ் கடந்த மாதம் முருகன், வள்ளி, தெய்வானை சிலையுடன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வேலில் சொருகப்படும், 9 நாட்களின் எலுமிச்சை பழம் இடும்பன் பூஜையின் போது ஏலம் விடப்படும். இப்பழத்தை குழந்தை இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால், அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், பல …
-
- 1 reply
- 546 views
-
-
லண்டன் : உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த …
-
- 5 replies
- 990 views
-