Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,0…

  2. ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈ…

  3. பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட…

    • 15 replies
    • 1k views
  4. பேயோட்டுவதற்கு முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவ்விருவரும் ஹோமாகம, கிரிவத்துடுவே வீட்டினுள் குழியொன்றை தோன்றி அதற்குள் இறங்கி மண்ணால் மூடிக்கொண்டு பேயோட்டி தோஷத்தை கழித்துகொண்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர். பேயோட்டுவதற்கான ஆயத்தங்கள மற்றொரு ஆசிரியர் வீட்டில் வைத்தே நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தன. அந்த வீட்டில் வைத்து பேயையோட்டினால் வீட்டில் இருப்பவர்கள் இன்றேல் பேயையோடுபவர் இறந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஹோமாகமைய…

  5. பேய் விரட்டி 10 பேர் தனிமை-அம்பாறையில் சம்பவம் By Shana தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் `பேய் விரட்டும்` சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை - மாயாதுன்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டதிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதோடு, சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்ப…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஏப்ரல் 2023, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குழந்தையாக இருக்கும்போது, தனது பெற்றோருடன் மொடெனா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கத்தோலிக்க ஜெபக் கூட்டங்களில் பங்கேற்பதை கேப்ரியல் அமோர்த் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நகரம் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரார்த்தனையில் கவனம் செலுத்தாமல், சிறுவயது குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனத்துடன் தேவாலயத்தை சுற்றி கண்ணாமூச்சி விளையாடுவதில் அவர் ஆர்வம் செலுத்தினார். அதேவேளையில், அவரது நன்னடத்தைக்காக அம்மா இனிப்புகளை வழங்கும்போது சமத்தாகிவிடுவார். தனது குறும்புக்கார மகன் உலகின் …

  7. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான். திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடை…

  8. பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் யாழ். உதயகுமார் பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார். 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் தெரிவித்துள்ளார். பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தான் எதிர்ப்பார…

  9. பேரன் உயிரிழந்த சோகம் தாங்காது பாட்டியும் உயிரிழந்தார் - யாழில் சம்பவம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அவர் தனது பேரன் குறித்து பிரார்த்தனை செய்துள்ளார். இதற்கிடையே உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போ…

  10. குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை (மூன்று ஆண் மற்றும் ஒரு பெண்) பெற்றெடுத்துள்ளார். பிறக்கும் போது 1.3 கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் இந்த குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார். https://thina…

  11. பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பல…

  12. கண்டியிலிருந்து மகியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் சிறுவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் இதன் காரணமாக நடத்துனரிற்கும் பயணிகளிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானதை தொடர்ந்து பயணிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். …

  13. பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது. பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒ…

  14. பேஷ், பேஷ்.. நண்டுக்கறி ரொம்ப நல்லா இருக்கு.. கொழும்பில் கோஹ்லி அதகளம்! கொழும்பு: 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அங்கு இலங்கை வீரர்கள் குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே இணைந்து நடத்தும், நண்டு ரெஸ்டாரண்டில் மூக்குபிடிக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார். சுற்றுப் பயணம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதையொட்டி, இந்திய அணி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று சேர்ந்துள்ளது. அங்கு தீவிர வலைப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். நண்டு கறி இந்த கேப்பில், கிடா வெட்டியுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. நேற்றிரவு கொழு…

  15. பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழி…

  16. சமூக வலைதளமான, பேஸ்புக்கில், ரகுமானுக்கு ஒரு கோடிக்கும் மேலான ரசிகர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் புகைப்படத்துடன், ஒரு கோடி ரசிகர்களுக்கு நன்றி என, ரகுமான் பதில் அளித்துள்ளார். ரகுமானுக்கு அடுத்தபடியாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, 90 லட்சம் ரசிகர்களும், இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, 70 லட்சம் ரசிகர்களும் உள்ளனர். அதே நேரத்தில், அமிதாப் பச்சனுக்கு, 30 லட்சம் ரசிகர்களே உள்ளது, தெரியவந்துள்ளது. http://tamil.yahoo.com/ப-ஸ்-ப-க்க-ல்-ம-ந்-ன-161100663.html ...

    • 2 replies
    • 555 views
  17. பேஸ்புக் இயங்கவில்லையா? எம்மை அழைக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் - பிரித்தானிய பொலிஸார் அறிவுரை கடந்த திங்­கட்­கி­ழமை இரவு பல மணித்­தி­யா­லங்கள் பேஸ்புக் சமூக வலைத்­தளம் முடங்­கி­யதால் உலகம் முழு­வதும் பேஸ்புக் பாவ­னை­யா­ளர்கள் திணறிப் போயினர். அதி­தீ­விர பேஸ்புக் அபி­மா­னிகள் சிலரால் சகித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் சில நாடு­களில் இடம்­பெற்­றுள்­ளமை வேடிக்­கை­யா­னது. பிரிட்­ட­னிலும் பலர் இவ்­வாறு பொலி­ருக்கு தகவல் கொடுத்­துள்­ளனர். பல்­வேறு பணி­களில் மூழ்­கி­யி­ருக்கும் தமக்கு பேஸ்புக் இயங்­கா­துள்­ளமை குறித்து முறைப்­பாடு செய்­யப்­பட்­டமை பொலி­ஸா­ருக்கு விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது. …

  18. பேஸ்புக் காதலியை சந்திக்க மாத்தறைக்கு சென்ற காதலன் நில்வளா ஆற்றில் மாத்தறை, மஹானாம பாலத்தில் இருந்து நில்வளா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவரை மாத்தறை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். குறித்த இளைஞன் ஆற்றில் குதிக்க காரணம் பாலத்தின் அருகில் இருந்த ஏனையோர் குறித்த இளைஞனை சுட்டிக்காட்டி “திருடன்” “திருடன்” என கூச்சலிட்டு தாக்கியதால் ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞன் பேஸ்புக் மூலம் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இக் காதல் விவகாரம் காதலியின் வீட்டாருக்கு தெரிய வர காதலியின் உறவு …

  19. மொபைலை நம்பினோர் கைவிடப்படார். - முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிடம் கேட்டால் இப்படி தான் சொல்வார். அதுவும் சந்தோஷமாகவே சொல்வார். ஏனெனில் மொபைல் மூலம் விளம்பர வருவாய் தான் பேஸ்புக்கிற்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பேஸ்புக்கின் இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் படி பேஸ்புக்கின் வருவாய் 2.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இணையான காலாண்டு வருவாயான 1.81 பில்லியன் டாலரை விட இது 61 சதவிதம் அதிகம் என்பது மட்டும் அல்ல, இதில் 62 சதவீதம் அதாவது 1.66 பில்லியன் டாலர் மொபைல் மூலமான விளம்பர வருவாயாகும். ஆக மொபைல் வாரிக்கொடுத்ததால் பேஸ்புக் வருவாயை அள்ளியிருக்கிறது. இதில் விஷேசம் என்ன என்றால், பங்குச்ச…

  20. பேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா மிகவும் வயதான பேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்தவர். மேலும் பேஸ்புக்கில் இணைவதற்காக பாட்டி தனது வயதை குறைத்து சொல்லியதற்காக பரபரப்பை ஏற்படுத்தினார். பேஸ்புக்கின் வயது கொள்கைக்கு சவால் விட்டவராகவும் வர்ணிக்கப்பட்ட இந்த பாட்டி, கடந்த ஞாயிறு அன்று இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னா ஸ்டோஹர் 1900 ம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் பேஸ்புக் விதிகளின் படி 1905…

  21. பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ? - காணொளி இணைப்பு பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றி விடுகிறார். 32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார். பெரும்பாலும் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் …

  22. பேஸ்புக் தகவல் பரிமாற்றம் மூலம் இளம் பெண்கள் பலரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 50 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர் தாபோ பெஸ்டர் (வயது-22). இவர் பேஸ்புக்கில் மொடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பெயரை தோமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மொடலிங் வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், இரண்டு பணக்காரப் பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்துக் கொண்டார். இப்படி…

  23. பேஸ்புக் மூலம் செல்போனில் பேசும் வசதி விரைவில் அறிமுகம் பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு பேஸ்புக்கில் இருக்கின்றீர்களா, என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாற்றங்கண்டுள்ளது. பேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர். இந்நிலையில், பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களை அவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் செல்போனில் குறிப்பிட்ட பேஸ்புக் நண்பரின் செல்போன் எண் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அந்நபர் பேஸ்புக்கில் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டிருந்தால் ஹலோ அப்ளிகேஷன் அங்கிருந்து எண்ணை எடுத்…

    • 0 replies
    • 469 views
  24. உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பதான் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கயிறை கட்டி தரையில் பிளாஸ்டிக் கோப்பையில் உள்ள உணவை (விலங்கு ) சாப்பிடுவது போல் படம் எடுத்து தனது பேஸ் புக்கில் புகைபடம் போட்டு இருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் சமூக நல மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டு பிடித்து குழந்தையை மீட்டனர். தாயாரை மன …

    • 0 replies
    • 424 views
  25. நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவ்வாசிரியையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு சம்பவங்கை அடுத்து, குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது. இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.