செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7125 topics in this forum
-
சிக்கலில் செட்டி நாட்டு சீமான்….. பழனியப்பன் சிதம்பரம் அவர்களுக்கு செட்டிநாட்டுச் சீமான் என்று சவுக்கு பெயர் வைக்கவில்லை. இந்தப் பெயரை வைத்தது, சிதம்பரத்துக்கு இன்று நெருக்கமாக இருக்கும் கருணாநிதி. 1991 – 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், சிதம்பரம் மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தார். அப்போது நடந்த ஒரு விழாவில், மேடையில் சிதம்பரத்துக்கு நாற்காலி போடாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்தைப் பார்த்து கருணாநிதி கூறியதுதான் ”செட்டிநாட்டுச் சீமான் கைகட்டி நிற்கிறார்” என்பது. செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் சிக்கலில் மாட்டப் போவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன. உள்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் சிதம்பரம், 2009 பாராளுமன்றத் தேர்தலில் மோசட…
-
- 2 replies
- 660 views
- 1 follower
-
-
புதுதில்லி, ஜூன்.22: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கருவுற்ற செய்தியால் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மிகுந்த குதூகலத்தில் உள்ளனர். ஐஸ்வர்யா கருவுற்ற செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் வெளியிட்ட அரை மணி நேரத்துக்குள் சுமார் 3000 ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உங்களது வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் வரவேற்கிறேன். அரை மணி நேரத்தில் 2843 டிவிட்டுகள் வந்துள்ளன. அனைவருக்கும் நன்றி உங்களின் அன்பு மற்றும் பாசம் மனதை வருடுகிறது என அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமிதாபின் மகன் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தங்களது குரு படம் வெளியான பின்னர் 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 6/18/2011 4:01:32 PM மனிதக் கழிவிலிருந்து 'பேர்கர் பன்' எனப்படும் உணவுப் பண்டத்திற்கான செயற்கை இறைச்சியினைத் தயாரித்து ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜப்பானின் ஒகயாமாவில் அமைந்துள்ள சூழல் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த மிட்சுயுகி இகேடா என்ற விஞ்ஞானியே இச்சுவை மிகு உணவினை தயாரித்துள்ளார். மனித கழிவிலிருந்து பெறப்பட்ட புரத்தத்தினையும் சோயா ஆகியவற்றினையும் உபயோகித்து பல்வேறு இரசாயன மாற்றங்களின் பின்னரே இது தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்கை இறைச்சியில் 60% புரதமும் 25% காபோஹைதரேட்டும், 9 % இயற்கை கனியுப்பகளும் அடங்கியுள்ளதாக மிட்சுயுகி தெரிவிக்கின்றார். மனிதக் கழிவினை மீள் சுழற்சி செய்யும் நோக்கத்துட…
-
- 8 replies
- 943 views
- 1 follower
-
-
அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்! புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது. பெர்சூயஸ் நட்சத்தி…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
செவ்வாய் கிரகத்தில் மகாத்மா காந்தியின் முகத்தோற்றத்தை மிகவும் ஒத்த கருங்கல் பாறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கருங்கல் பெரும் பாறை எட்டு வருடங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஐரோப்பிய விண்கலமான ஒஸ்கார் எனும் விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. . ஐரோப்பிய ஒன்றிய விண்கல விஞ்ஞானி இந்த படத்தை விவரித்து கூறுகையில் இது அசல் காந்தியின் உருவ அமைப்பினை கொண்டிருப்பது அதிசயமே என கூறியுள்ளார். My link
-
- 19 replies
- 2.1k views
- 1 follower
-
-
Wednesday, 15 June 2011 04:22 .மருத்துவ வரலாற்றில் முதற்தடவையாக ஆசிரியை ஒருவருக்கு சுவீடனில் கர்ப்பப்பை மாற்று சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளது. இளம் ஆசிரியையான சரா ஒட்டோசனிற்கு (25 வயது)பிறக்கும் போதே கர்ப்பப்பை இருந்திருக்கவில்லை.இந்நிலையில் இந்த ஆசிரியைக்கு அவரது தாயாரின் கர்ப்பப்பை பொருத்தப்படவுள்ளது. சரா ஒட்டோசன் தான் பிறந்த கர்ப்பப்பையையே தனக்குள் பொருத்தும் பாக்கியம் கிடைத்ததையிட்டு மகிழ்வடைந்துள்ளார்.ஆனால் தனது தாயாருக்கு பாரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொள்வது குறித்து கவலை அடைவதாக கூறியுள்ளார். நான் ஒரு உயிரியல் ஆசிரியை.இந்த கர்ப்பப்பை மாற்று சத்திரசிகிச்சையைப் பொறுத்தவரையில் ஒரு உறுப்புக்கு பதிலாக இன்னொரு உறுப்பு என சரா தெரிவித்துள்ளார். இது குறித…
-
- 0 replies
- 637 views
-
-
மீன்களின் அணிவகுப்பு http://www.koreus.com/video/dresseur-poisson-rouge.html
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
விபூதி வரவழைத்து அதிசயம்... சத்ய சாய்பாபா மறு அவதாரமா? : இளைஞரால் பெரும் பரபரப்பு! [saturday, 2011-06-11 07:27:48] கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி புட்டபர்த்தி சத்ய சாய்பாபா காலமானார். முன்னதாக சாய்பாபா தனது பிரசங்கத்தில் மறுஜென்மம் மூலமாக பிரேமசாய் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தில் பிறப்பேன் என கூறினார். இதனால் அவரது பக்தர்கள் மீண்டும் சத்ய சாய்பாபா அவதாரம் எடுப்பார் என நம்பி வந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர், 15 நாட்களுக்கு முன்பு தன்னை சத்ய சாய்பாபாவின் அவதாரம் என்றும், நான்தான் பிரேமசாய் என தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வந்தார். இந்த தகவல் காட்டுதீ போல் பரவியது. இதையடுத்து அவரை காண பல்வேறு இடங்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் இருந்து மன்னார் வந்த பயணி ஒருவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு குறித்த பயணியின் பணம், நகைகள் களவாடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வே.மாகாலிங்கம் (வயது-67) என்பவர் பகல் 1.30 மணியளவில் மன்னார் செல்ல காத்திருந்த வவுனியா அரச போக்குவரத்திற்கு செந்தமான பஸ்சில் ஏறியுள்ளார். பஸ்ஸினுள் திடீர் என வந்த நபர் ஒருவர் உறவினர் போல அவருடன் உறவாடியுள்ளார். நீண்ட நேரம் இருவரும் கதைத்துள்ளனர். பின் நடத்துனரிடம் குறித்த நபர் மகாலிங்கத்தினை டிக்கட் எடுக்க விடாது இருவருக்கும் சேர்த்து அவர் எடுத்துள்ளார். பின் மகாலிங்கம் வெற்றிலை வாங்குவதற்காக பஸ்ஸில் இருந்து…
-
- 0 replies
- 518 views
-
-
''அடிக்காதீங்கண்ணா... வலிக்குது!'' 'சுந்தரு...’ என்று ஊரே செல்லமாக அழைக்கிறது. சில 'நாட்டாமை’கள் மட்டும் 'ஏய்... பொணந்தூக்கி!’ என்று அதட்டுவார்கள். ''என்னை ஏன் பொணந்தூக்கின்னு சொல்றீங்கன்னு கேட்டேன். அதுக்கு, 'டி.வி-யில எல்லாம் உன் மூஞ்சியைக் காட்டுறியாமே?’னு சொல்லி, வெறகுக் கட்டையால என் மண்டையில அடிச்சுட்டாங்கண்ணா'' என்று தன் உச்சந்தலையைக் காட்டுகிறார். விரல் நீளத்துக்குத் தையல் போடப்பட்ட தழும்பு. சென்னை, ஜலடம்பேட்டையில் வசிக்கும் சுந்தர்ராஜனுக்கு, பிறவியில் இருந்தே பார்வை இல்லை. ஆனால், அவர் ஒரு மகத்தான சேவகர்! ''பொறந்தது, வளர்ந்தது எல்லாமே ஜலடம்பேட்டைதான். அஞ்சு அண்ணனுங்க, நாலு அக்கா தங்கச்சிங்களோட நான் ஏழாவதாப் பொறந்தேன். பிறவியில இருந்தே க…
-
- 6 replies
- 4.8k views
- 1 follower
-
-
சுடிதார் துப்பட்டாவுடன் தப்பிய யோகாகுரு புதுடில்லி: டில்லி மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகாகுரு பெண்கள் உடையில் தப்பி செல்ல முற்பட்டார். ஆனாலும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மைதானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதும்இ ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நேரத்தில் மேடையில் இருந்து குதித்து கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டார். பின்னர் பெண் தொண்டர்களின் சுடிதார்இ அணிந்து துப்பட்டாவை போர்த்தியபடி மாறு வேடத்தில் தப்பினார். ஆனால் போலீசார் இதையும் மோப்பம் பிடித்து யோகாகுருவை பிடித்து விட்டனர். டேரா டூனுக்கு செல்லும்போது வெள்ளை துணி அணிந்திருந்தார். இவர் அளித்துள்ள பேட்டியில் எனது உயிரை காப்பாற்ற பெண் தொண்டர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர…
-
- 0 replies
- 741 views
-
-
ஐபேட் வாங்க கிட்னி விற்ற சீனா இளைஞன் சீனாவில் கடந்த மாதம்தான் ஐபேட் டூ விற்பனைக்கு வந்துள்ளது ஐபேட் டூ என்ற பிரபல கையகத் தொடுதிரைக் கணினி ஒன்றை வாங்குவதற்காக சீனாவில் இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகம் ஒன்றை விலைக்கு விற்றுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபேட் டூ என்ற மிகவும் பிரபலமான டேப்லட் கணினி ஒன்றை எப்பாடுபட்டாவது தான் வாங்கிவிட வேண்டும் என்று இந்த இளைஞன் நினைத்திருந்தானாம. அந்த நேரத்தில், உடலுறுப்புகளை தானம் வழங்க முன்வருவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஒரு விளம்பரத்தை இணையதளம் ஒன்றில் கண்டு சிறுநீரகத்தை விற்க தான் முடிவெடுத்ததாக இந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் கூறினான். தொலைக்காட்சியில் இவன் தான் ஐபேட் வாங்கி…
-
- 1 reply
- 680 views
-
-
சர்வாதிகாரி ஹிட்லரின் உடலம் எங்கே.. சதாம் ஊசேன் எப்போது கைது செய்யப்பட்டார்..பிரபாகரன் எங்கே… ஒரு தலைவர் மரணத்தை உண்மையாக நேர்கோட்டு வடிவில் நாம் கேள்விப்பட்டால் அது செய்தி. அதற்கு முற்றிலும் புறம்பான உண்மைகளைத் தேடி விளக்கப்படுவதே கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளாகும்.. நேற்று முன்தினம் சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லாடனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்லேடனின் உடலம் காட்டப்படாமலே கடலின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்.. உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன்…
-
- 13 replies
- 4.7k views
- 1 follower
-
-
காதலித்து நெருங்கி பழகிய சீமான் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்: நடிகை புகாருக்கு சீமான் மறுப்பு Thursday, June 2, 2011, 9:28 சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவி…
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏழரைச்சனி – சோதிடம் ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இலங்கை ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் விருச்சிக ராசியில் வருகிறது. அந்த நாட்டை ஆள்பவருக்கும் விருச்சிக ராசி. டிசம்பர் மாதத்தில் இருந்து விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி துவங்குகிறது. அப்படியிருக்கும் போது, இலங்கையில் அரசியல் மாற்றங்கள், தலைமை வகிப்பவர்களுக்கு ஆபத்துகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. 2012இல் நிறைய விஷயங்களை ஈழத்தில் எதிர்பார்க்கலாம். ஐ.நா.வின் குரல் சாதகமாக அமையவும் வாய்ப்பு உள்ளது. அந்த நாட்டிற்கு ஏழரைச் சனி தொடங்க உள்ளதால், அந்த நாடு சில ஆபத்துகளை சந்திக்க நேரிடும். அந்த மக்களும் ஆபத்துகளை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே ஆபத்…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க இலங்கைக்கு வெளியில் வசித்துவருகின்றார். லசந்தவின் நினைவாக இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே இன்றைய எமது கடமை எனக் கூறும் இவர் அதற்கென இணையத் தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். தங்கள் பெயருடன் அல்லது பாதுகாப்புக் கருதி பெயர் குறிப்பிடாமலும் தங்கள் பங்களிப்பையும் நிபுணத்துவத்தையும் இணையத்தள வளர்ச்சிக்கு வழங்கலாம் என்று அந்த இணையத்தளம் தனது கொள்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களிப்புக்கள் ஆழமான ஆய்வுகள், செய்திகள், அபிப்பிராயங்கள் சிறிலங்காவிற்கு முக்கியமானதாகக் கருதப்படும் முக்கிய விடயங்கள் குறித்த விமர்சனங்கள் ஆகியன அடங்கலாம் என தெரிவ…
-
- 1 reply
- 526 views
-
-
உலகில் அதிகமானோரால் விரும்பிப் பருகப்படும் பானமாக திகழ்வது கோப்பியாகும். இவ்வாறு விரும்பி அருந்தப்படும் கோப்பி வகைகளில் பல வகைகள் உண்டு. எனினும் உலகில் விலையுயர்ந்த கோப்பி வகை எதுவென்று உங்களுக்கு தெரியுமா? அது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? அத் தகவல் சற்று சுவாரஸ்யமானது. இவ்வகை கோப்பியின் பெயர் ' கோபி லுவாக்' Kopi Luwak. ' கோபி லுவாக்' (Kopi Luwak) இவை இந்தோனேசியாவின் சுமாத்ரா, பாலி , ஜாவா மற்றும் சுலாவெசி தீவுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தீமோரிலும் இவை உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அங்கே இது 'மொடிட் கொபி' motit coffee மற்றும் 'கெபே லாகு' kafé-laku என அழைக்கப்படுகின்றன.…
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 814 views
-
-
தந்தையின் கவனக்குறைவால் காருக்குள் குழந்தை பலி கோலாலம்பூர், மே.25- மலேசியாவில் பூட்டிய காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மலேசியாவை சேர்ந்தவர் இசாக் சலே. இவர் காம்பூங் மோரக் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு சொந்தமான காரில் தன்னுடைய மூன்று வயது மகளை அழைத்து சென்றிருந்தார் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இசாக் சாலே காரில் தன்னுடைய மகளை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழிந்த பின்னர் குழந்தையின் நினைவு வரவே ஓடிச் சென்று காரை திறந்து பார்த்தார். இந்நிலையில் தந்தையை காணாத குழந்தை அழுதபடியே மூர்ச்சையாகி கிடந்தது. குழந்தையின் நிலைமையை கண்ட தந்தை சாலே அருகில் …
-
- 1 reply
- 490 views
-
-
http://adrasaka.blog...2011/05/12.html
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
Spectrum Raja's House ....in Tamil Nadu http://www.youtube.com/watch?v=a5tbcDjocWs
-
- 4 replies
- 1k views
-
-
உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண் உலகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த 114 வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ் சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மரியா கோமஸின் வயது 114 வருடங்கள் 313 நாட்கள் ஆகும். உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக ஏற்கனவே கருதப்பட்ட அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தை சேர்ந்த பெஸி கூப்பரை விட மரியா கொம்ஸ் 48 நாட்கள் வயது கூடியவராவார். இவர் தினசரி காலை உணவாக பாணும் பழங்களும் உண்பதுடன் அவ்வப்போது வைன் பானம் அருந்துவதாகவும் அதுவே தனது நீண்ட ஆயுளின் இரகசியமெனவும் மரியா கோமஸ் தெரிவித்துள்ளார். பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாநிலத்திலுள்ள கரங்கொலா நகரில் 189…
-
- 0 replies
- 396 views
-
-
சற்று நேரத்தில் உரோமாபுரி அழிந்து விடுமா? புதன், 11 மே 2011 10:01 E-mail அச்சிடுக PDF இன்னும் சற்று நேரங்களுக்கு பின் உரோமாபுரி பாரிய பூமி அதிர்வில் அழிந்து விடுமா? ஏனெனில் தலை சிறந்த வானியல் நிபுணர்களில் ஒருவரும், பூகம்பவியல் அறிஞரும், விஞ்ஞானியுமான Raffaele Bendandi உரோமாபுரி நகரம் 2011 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பாரிய பூமி அதிர்வினால் முற்றாக அழிந்து விடும் என்று எதிர்வு கூறி உள்ளார். இவர் 1979 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 86 வருடங்கள் உயிர் வாழ்ந்து இருக்கின்றார். இவர் வாழ்நாளில் எதிர்வு கூறி இருந்த பூமி அதிர்வுகள் பல சொல்லி வைத்தபடி நடந்து இருக்கின்றன. கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் அசைவுகள் காரணமாகவே பூமி அதிர்வு ஏற்படுகின்றது என்பது இ…
-
- 3 replies
- 1.3k views
-
-
போட்டி நிகழ்வுகளில் காலை மாடுகளை வளர்த்து அந்த காளைகளை அடக்கும் விளையாட்டு போட்டிகள் நடை பெற்று வருகின்றன . அவ்வாறு நடை பெறும் நிகழ்வு ஒன்றில் மாடுகள் போட்டியாளர்களை .மக்களை விரட்டி விரட்டி கொம்பால குத்தி காயமாக்குவதனையும் . இந்த சம்பவத்தில் பலர் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது . http://www.youtube.com/watch?v=Nrds8Rh7C1I&feature=player_detailpage
-
- 0 replies
- 618 views
-
-
ஜவஹர்லால் நேரு விருதுக்காக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா தேர்வு ஜவஹர்லால் நேரு விருதுக்காக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு தகுதியானவரை தேர்வு செய்ய துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தலைமையிலான குழு தில்லியில் கூடியது. இக்குழுவின் முடிவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் ரூ.1 கோடி ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும். www.newsonnews.com
-
- 0 replies
- 658 views
-