செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதியில் பேசப்பட்டு வரும் 'டஸ்னர்' எனப்படும் அழிவின் விளிம்பிலுள்ள மொழியொன்றினை பதிவு செய்து காப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். குறித்த மொழியானது தற்போது வெறும் 3 பேரால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது. இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமாவர். கடந்த வருடமே 'டஸ்னர்' மொழி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் உள்ள மீன் பிடிக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரே இம் மொழியை அறிந்தவர்களாவர். இதுவும் விசேட வைபங்களின் போதே உபயோகிக்கப்படுகின்றது. 'டஸ்னர்' மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியை பதி…
-
- 0 replies
- 561 views
-
-
கண்களால் பால் சொரியும் அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு) ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 09:34 சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம் …இதுவும் ஒரு வித்தியாசமாக சாதனைதான். துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கினூடாக உறிஞ்சி, உறிஞ்சப்பட்ட பாலினை கண்ணினூடாக 2 மீற்றர் 70 சென்றி மீற்றர் தூரத்திற்கு பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார். http://www.youtube.com/watch?v=V1zgXfBxTUo&feature=player_embedded tamilenn
-
- 0 replies
- 578 views
-
-
மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் வியாழன், 14 ஏப்ரல் 2011 10:46 அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர். இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது. இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும…
-
- 33 replies
- 1.9k views
- 1 follower
-
-
கனேடிய கன்சவேடிவ் கட்சி சார்பில் பரஞ்சோதியை வேட்பாளராக நியமித்ததில் சர்ச்சை! வெள்ளி, 22 ஏப்ரல் 2011 13:53 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மரியாதை செலுத்திய ஒருவரை மே 2ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் கன்சவேடிவ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்று அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர்கென்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கன்சவேடிவ் கட்சி சார்பாக போட்டியிடும் ராகவன் பரஞ்சோதி சர்ச்சைக்குரிய வேட்பாளர். இவர் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு புலிகளுக்கு புகழாரம் சூட்டியவர். மாவீரர் தின யூ டியூப் வீடியோ காட்சிகளைப் பார்த்து விட்டே தான் இந்தக் கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு…
-
- 0 replies
- 369 views
-
-
புதன்கிழமை, 20, ஏப்ரல் 2011 (22:41 IST) சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்ததால் பரபரப்பு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பா பா, இதயம், நுரையீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள சத்யசாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெ ற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் பக்தர்கள் பிரா ர்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புட்டபர்த்தி நகரில் உள்ள ஒருவரது வீட்டில் இருக்கும் சாய்பாபா சிலையில் எண்ணெய் தானாக வடிந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர சாய்பாபா மெழுகு சிலை உள்ளது. அந்த சிலையி…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
போனில் வளர்த்த காதல்..காதலி அழகாக இல்லை..வாலிபர் தற்கொலை வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2011, 12:02[iST] கோவை: ஒருவரை ஒருவர் பார்க்காமல் போன் மூலம் வளர்ந்த காதல், நேரில் கண்டதும் கசந்து போனது. காதலி அழகாக இல்லை என்பதால் காதலன் ரயில் முன் குத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவையில் நடந்தது. கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டுகளான நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நடராஜன் (24), கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு நேதாஜி நகர் முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரின் மகன் என்று தெரியவந்தது. தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கிடைத்த வி…
-
- 0 replies
- 381 views
-
-
ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அந் நாட்டில் பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்வதை தடைசெய்யும் பொருட்டு சட்ட மூலமொன்றினை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மத சட்டதிட்டங்களின் படி நாய்கள் அசுத்தமானவையாக கருதப்படுகின்ற போதிலும் ஈரானில் பணம் படைத்தவர்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் மேற்கத்திய கலாசாரத்தினைப் பின்பற்றி இவைகளை பொது இடங்களில் அழைத்து வருவது சில நேரங்களில் இடையூறாக உள்ளதாக சர்ச்சைகளும் எழுந்தன. இச் சட்டமூலத்தின் படி செல்லப்பிராணி என்ற பெயரில் நாய்களை வளர்ப்பவர்கள் அவைகளை பொது இடங்களுக்கு நடைப்பயிற்சிக்காகவோ, வாகனங்களிலோ அழைத்து செல்லக் கூடாது. இதனை மீறினால் நாயின் உரிமையாளரிடமிருந்து …
-
- 2 replies
- 527 views
-
-
புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.பெருமளவி லான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். பகவானின் உண்மை நிலை யை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். உலகெ…
-
- 1 reply
- 768 views
-
-
பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும…
-
- 26 replies
- 2.8k views
- 1 follower
-
-
அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர். அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர். போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்தி…
-
- 4 replies
- 800 views
-
-
பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர் சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வ…
-
- 0 replies
- 385 views
-
-
-
உலகப்புகழ்பெற்ற குரூஸ்ஸுக்கு அடுத்தபடியாக ஒபாமாவின் அழுத்தத்தால்(உள்ளூர்தயாரிப்புகளுக்கு முன்னுரிமை)சவரலே வழங்கும் 100 வீதம் மின்சாரத்தில் இயங்கும் கார் http://www.insideline.com/chevrolet/volt/2011/long-term-test-2011-chevrolet-volt.html http://www.chevrolet.com/volt/
-
- 0 replies
- 566 views
-
-
http://www.youtube.com/watch?v=GgNCW_hJgro மேலேயுள்ள காணொளியில், அமீரகத்திலுள்ள துபாய் மால்(Dubai Mall) அண்மித்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலிஃபா' (Burj Khalifa) வின் உச்சிக்கு (உயரம் : 828 Metres) ஏறும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'ஆலன் ராபர்ட்' உலகின் பல கட்டிடங்களில் எந்தவித உதவிப் பொருட்கள் இல்லாமல் ஏறி சாதனை படைத்தவர். துபாயின் இக்கட்டிடத்தில், இம்மாதம் 28ந் தேதி அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் சில இடங்களில் கயிற்றின் உதவியுடன் மேலே எறி கட்டிடதின் உச்சியை எட்டினார்.
-
- 8 replies
- 778 views
-
-
Shot in the early thirties, a man with a rifle tests an early version of bullet proof glass by having his wife hold the glass to her face ...
-
- 20 replies
- 1.6k views
-
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவல நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு 3 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் சகோதரரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வாக்குமூலம் அளிக்குமாறு பென்னட் ரூபசிங்கவுக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் போது இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் கடுவல நீதிமன்ற நீதவான் இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்குவி…
-
- 0 replies
- 550 views
-
-
ஜப்பான் ஆசியக் கண்டத்தில் 6,852 தீவுகளை கொண்ட வளர்ச்சியடைந்த நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது நிலநடுக்கம், சுனாமி தாக்கிய ஒன்சூதீவு (Honshu ) ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக பரப்பளவின்படி ஏழாவது மிகப்பெரிய தீவு. இந்த தீவின் கடலில்தான் மார்ச் 11- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 3 மணிக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டார் ஸ்கேல் அளவில் 8.9. ஆக பதிவானது. 1900 ஆண்டிலிருந்து ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இது மிக பெரியது. இதனை அமெரிக்க ஜியாலிஜிகள் சர்வே ரிக்டார் ஸ்கேலில் 9 என அளவிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கீழ் அமிழ்கிற எல்லை பகுதி (Subduction Zone) வகையை சேர்ந்ததாகும். கீழ் அமிழ்கிற எல்லை பகுதி என்பது இரண்…
-
- 0 replies
- 701 views
-
-
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் வீரகேசரி இணையம் 4/5/2011 3:49:05 PM 14Share இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர். அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு ச…
-
- 0 replies
- 464 views
-
-
2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கேப்படன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கேப்படன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற சுதன்ராஜ் அவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்த மூடுதிரை நிகழ்ச்சியில் மகிந்தர் வேடமேற்ற…
-
- 0 replies
- 572 views
-
-
எறும்புகள் கடித்ததால் சுயநினைவிழந்த ஒருவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பம்புக்குடி பகுதியில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவுக்கதிகமாக மது அருந்திய பின்னர் வீட்டுக்குச் செல்லாமல் புற்றரையில் இரவு உறங்கியபோது விடிய விடிய எறும்புகள் இவரைக் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலையில் இவரை நித்திரையால் எழுப்பச் சென்ற உறவினர்கள் அவர் எழும்ப முடியாத நிலையிலிருப்பதைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதை, எறும்புகளின் விசம் என்பவற்றால் இவருக்கு சுயநினைவு இழந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 48 வயதான இவர் இங்குள்ள தொலைத்தொடர்பு கோபுர நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலொஸ் சார்கோசியின் மெய்ப்பாதுகாவல் படையினர் அவரின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத குடைகளை உபயோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குடையொன்றின் பெறுமதி 10,000 பவுண்கள் ஆகும். இது கெவ்லர் இழைகளால் ஆனதாகும். இது மிக உறுதியானவை என்பதுடன் வாகனங்கள், மற்றும் தலைக் கவசம் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவை குண்டு துளைக்க முடியாதவை மட்டுமன்றி ஆயுத தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது. அந்நாட்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்றின் படி சார்கோஸி அண்மைய வரலாற்றில் பிரான்ஸின் பிரபலமில்லாத தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே இப் புதிய முடிவினை அவர் எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் …
-
- 0 replies
- 559 views
-
-
-
- 2 replies
- 624 views
-
-
-
- 2 replies
- 615 views
-
-
இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html
-
- 0 replies
- 634 views
-