செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7128 topics in this forum
-
64 வருடங்களுக்கு முன்பு அதாவது 1956 இல் எடுக்கப்பட்ட ஒரு ரெக்கோர்டிங் இது. கடைசி 40 செக்கன்களை நன்றாக கவனியுங்கள்
-
- 10 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 586 views
-
-
-
-
- 1 reply
- 337 views
-
-
கைது செய்யப்பட்ட பூசகர், உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம் நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம்- வரணி வடக்கு பகுதியிலுள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய ஆலயத்திற்கு சென்ற பொலிஸார், பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கடுமையாக எச்சரித்து, பொலிஸ் …
-
- 0 replies
- 373 views
-
-
கோவையில் மன உறுதியால் கொரோனாவை வென்ற 95 வயது முதியவர் கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்றால் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பலர் தொற்றுக்கு பலியாகும் சம்பவம் அதிகமாக உள்ளது. மேலும் சிலர் தொற்றுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன. இந்த நிலையில் கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்து அனைவருக்கும் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார். கோவை தொண்டாம…
-
- 0 replies
- 459 views
-
-
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்! கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1217257
-
- 0 replies
- 353 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கோர் புதுவரவு..! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கு புதுவரவாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ச ஆகியோர் தற்போது அமெரிக்காவிலுள்ள நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார். ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/1051…
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 586 views
-
-
யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…
-
- 0 replies
- 379 views
-
-
-
- 1 reply
- 818 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில்.... இரு குழுக்களுக்கிடையில், மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை! மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நிகழ்ந்தமைக்கு தனிப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்து மோதல் ஆகியவையே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப…
-
- 0 replies
- 305 views
-
-
யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக, தங்கியிருந்த குடும்பமொன்று பொலிஸாரினால் கைது. யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து, யாழ்ப்பாணம்- குருநகரில் பதுங்கிருந்த 4பேர் கொண்ட குடும்பமொன்றினை கைது செய்த பொலிஸார், அவர்களை சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தியுள்ளனர். தமிழகம்- ஈரோடு மாவட்டம், அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிபப் பெண், அவருடைய பிள்ளை, அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகியோரே சட்டவிரோத கடற்பயணம் ஊடாக நாட்டுக்குள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் தற்போது பி.சி.ஆர்…
-
- 0 replies
- 267 views
-
-
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற 25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவருக்கு 5 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் கிடைத்துள்ளன. ஏற்கனவே இவரை ஸ்கேன் செய்த போது இவருக்கு ஏழு குழந்தைகள் பிறக்கும் என வைத்தியர்கள் கூறியிருந்தனர். எனினும் ஒன்பது குழந்தைகளை அடுத்தடுத்து பிரசவித்துள்ளார் இந்த இளம் தாய். அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். மாலி இளம் தாயின் இந்த பிரவசவம் உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படுவதுடன் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களையும் ஈர்த்துள்ளது. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் தாய் | Vira…
-
- 15 replies
- 1.4k views
-
-
யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி! குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவி ரஜிதா (வயது-33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்தனர். குடும்பத்தலைவர் நேற்று மாலை நகை வேலைக்கு பயன்படுத்தும் இரசாயனத்தை உட்கொண்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை அறிந்த துணைவி அதே இராசயத்தை உட்கொண்டுள்ளார். …
-
- 11 replies
- 1.4k views
-
-
கொவிட்-19 க்கு எதிராக மாட்டு சாணத்தை பயன்படுத்துவதற்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு கொவிட் -19 ஐ தடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் மாட்டு சாணத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கொவிட்-19 க்கு எதிராக மாட்டு சாணம் மற்றும் கோமியத்தின் செயல்திறனுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அது ஏனைய நோய்களை பரப்பும் அபாயம் இருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதுவரை 22.66 மில்லியன் நோயாளர்களும் 246,116 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லது மருந்துகளைக் பெ…
-
- 2 replies
- 538 views
-
-
கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது - பாஜக எம்எல்ஏ லக்னோ: பசுவின் கோமியத்தை ஜில் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதுமாம்... கொரோனா நம்மைத் தாக்காது என்று உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் டெமோ வீடியோ வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க லாக்டவுன் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என இன்னொரு பக்கம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் லாக்டவுனை அமல்படுத்தி வருகின்றன. கோமியத்தை முன்வைத்…
-
- 0 replies
- 490 views
-
-
-
- 0 replies
- 643 views
-
-
யாழ்.வடமராட்சியில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் கறிச் சட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார்.மந்திகைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் …
-
- 1 reply
- 400 views
-
-
-
- 0 replies
- 737 views
-
-
கிளிநொச்சியில்... அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போலி நாணயளத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, எட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. நாணயத் தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்துச் செல்லப்படுகின்றமை தொடர்பாக பொலிஸ் விசேட பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில், போலி நாணயத் தாள்களுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு…
-
- 0 replies
- 393 views
-
-
தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார். எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில். வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில். வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில். ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின…
-
- 58 replies
- 4.3k views
-
-
40 வயதுக்காரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து உயிரை விட்ட முதியவர் நாக்பூர்:காடு வா வா என்று அழைக்கும் வயதிலும் எதையும் விட்டுக்கொடுக்க பெரும்பாலானவர்களுக்கு மனம் வராது. ஆனால் தான் உயிருக்கு போராடிய நிலையில் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான ஒருவருக்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் 85 வயது முதியவர்.இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-வட மாநிலங்களில் கொரோனா கோரதாண் டவம் ஆடுகிறது. வீட்டுக்கு வீடு புகுந்து தாக்கும் கொரோனாவால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைப்பதில்லை.இந்த நிலையில், நாக்பூரை சேர்ந்த நாராயண் தபால்கர் (85). ஓய்வு பெற்ற…
-
- 4 replies
- 795 views
-
-
கொரோனா: வேலை பறிபோனதால் குளத்து வேலை செய்யும் பி.ஹெச்.டி பட்டதாரிகள் மு.ஐயம்பெருமாள் குளத்தைத் தூர்வாரும் பட்டதாரிகள் கர்நாடகாவில் கொரோனாவால் வேலை இல்லாத பட்டதாரிகள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். னகொரோனா இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடிவருகின்றனர். பல தொழில்கள்அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கிராமங்களில் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஏற்…
-
- 0 replies
- 252 views
-
-
மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயம்; குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன. அப்போது பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய போது பார்வையாளர் பகுதியிலிருந்து உரிமையாளரின் பிடியிலிருந்து தப்பித்து ஹோலி என்ற நாய் ஒன்று பந்தய டிராக்கில் ஓடியது. பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவி லானேயை விட ஹோலி ஒரு வினாடி முந்திச் சென…
-
- 6 replies
- 939 views
-