தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
695 topics in this forum
-
தமிழர்களிடம் அக்காலத்தில் பல்வகையான படைகள் இருந்ததாக அறியக் கிடைக்கின்றது. → சேனையின் உட்பிரிவே ஒவ்வொரு விதமான படைகளாகும். ஆனால் பொதுவாக சொல்லும்போது படையென்னும் பெயரே ஆய்தம் தாங்கிய அரச ஆணைபெற்ற படைகளைக் குறிக்கின்றன.. முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு அகப்படை - Internal Defensive Force மறப்படை - Expeditionary Force - என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர். கோட்டைப் போரின் போது பொருதும் படைகள் உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை. என்று அழைக்கபட்டன. இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்ட…
-
- 0 replies
- 2.8k views
- 1 follower
-
-
முசுப்பாத்தி ... இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு: நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது. 'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'. 'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'. இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் ப…
-
- 2 replies
- 2.8k views
-
-
திரைப்பட பாடல்களில் இலக்கணம். திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக... அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. சினைப்பெயர்: பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி! காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் …
-
- 0 replies
- 2.8k views
-
-
மலரினும் மெல்லியது காமம் சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை! அங்கு ஒரு பெரிய தேனடை! அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே! அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி. குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. குறுந்தொகை 60 பரணர். (பிரிவிடை ஆற…
-
- 0 replies
- 2.7k views
-
-
Puradsifm பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்ற…
-
- 0 replies
- 2.7k views
-
-
எண்பதுகளில் தமிழ் இலக்கியம் வெங்கட் சாமிநாதன் (தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிசம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜூ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அட…
-
- 1 reply
- 2.7k views
-
-
'ஆரியம் இறந்த கதை'யைச் சொல்லும் ஆங்கிலம்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-4 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "ஆரிய மொழிக்குடும்பத்தில், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளெல்லாம் இன்னும் செழிப்புடன் பேசப்பட்டு, உலகவழக்கில் இருக்கிறாப்ல! இந்திய ஆரியமொழியான சமற்கிருதத்தை ஏன் மக்கள் மறந்துவிட்டார்கள்?", என்று வருத்தத்துடன் கேட்டபடியே வந்தார் நண்பர். சமற்கிருதம் எக்காலத்தும் பேசப்படாத மொழியே! "சமற்கிருதம் எக்காலத்திலும் மக்களால் பேசப்படாத மொழி; சமயம், இலக்கியம், அறிவு நூற்கள் ஆகியன இந்தி…
-
- 0 replies
- 2.7k views
-
-
கடிதம் தமிழில்லையா ? ** தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எளிதாய் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். “இப்ப டைம் என்ன ?” என்பதில் எது ஆங்கிலச் சொல் ? ‘டைம்’ என்பது ஆங்கிலச் சொல். இது உடனே நமக்குத் தெரிகிறது. டைம் என்பதற்கு நேரம் நல்ல தமிழ்ச்சொல். ‘இப்ப நேரம் என்னாச்சு ?” என்று தமிழில் கேட்கலாம். “டைம் ஆச்சு. கிளம்புங்க” என்பதைப் போலவே “நேரம் ஆச்சு. கிளம்புங்க” என்று சொல்வதும் வழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தைப் போலவே வடசொற்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ”நல்ல உதாரணத்தோடு பேசினான்” என்பதில் வடசொல் எது ? ‘உதாரணம்’ என்பது வடசொல். உதாரணம் என்பதற்கு ‘எடுத்துக்காட்டு, சான்று’ ஆகியன தகுந்த தமிழ்ச்சொற்க…
-
- 1 reply
- 2.7k views
-
-
கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி தமிழ்த் திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆணின் செயல்களை நாம் நடைமுறையில் காணாத மிகைக் காட்சிகளாகக் காட்டுவர்; இப்படியும்கூட ஒருவனால் செய்யமுடியுமா என்று பலவேளைகளில் விவாதங்கள் வந்துபோவதுண்டு. காட்டாக, மணிரத்னத்தின் மௌனராகம்(1986) திரைப்படத்தில், கதாநாயகி ரேவதியை அருகில் வைத்துக்கொண்டே ரேவதியின் அப்பாவை, "மிஸ்டர் சந்திரமௌலி", என்று அட்டகாசமாக அழைப்பார் கதாநாயகன் கார்த்திக். அமர்க்களம்(1999) திரைப்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! என் உள்நெஞ்சு சொல்கின்றது!" பாடல் காட்சியில், பரபரப்பானதொரு காலைவேளையில், ஷாலினியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி உள்ளிட்டோர…
-
- 0 replies
- 2.7k views
-
-
அகநானுற்றில் பதுக்கை.! தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இங்குக் காண்போம். நடுகற்கள் பதுக்கை அறிமுகம் நடுகற்கள் போரிலோ சண்டையிலோ மாண்ட ஒரு வீரனுக்காக வைக்கப்படுவதாகும். இதனால் இதனை வீரக் கற்கள் என்றும் அழைக்கும் வழக்கு உள்ளது. நடுகல் இறந்த மனிதனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாலேயே நடப்படுகிறது. இறந்…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 4 replies
- 2.6k views
-
-
தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார். கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம். ""பூப்பின் புறப்பா டீரறு நாளும் நீத்தகன் று…
-
- 2 replies
- 2.6k views
-
-
‘ஆட்டைப் பெரிய திருவிழா’ (பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்) ‘ஆட்டை’ என்ற சொல்லுக்கு விளையாட்டின் திருப்பம் (turn in a game) என்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் களஞ்சியம் (Tamil Lexicon – Madras University 1982) பொருள் கூறுகிறது. ‘ஆட்டைத் திருவிழா’ எனில் வருசத் திருவிழா (Annual Festival) என்றும் விளக்குகிறது. மேலும், ஆட்டைக்கோள், ஆட்டைக் காணிக்கை, ஆட்டைப் பாழ், ஆட்டை வாரியம், ஆட்டைப் பிறாயம் பொன்ற சொற்களும் ஒத்த பொருள் உடையனவாக கல்வெட்டுக் கலைச்சொல் அகராதிகளில் குறிப்பிடப்படுகிறது. ஆட்டை என்ற சொல் அதன் நேர்பொருளில் விளங்கிக் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்ட காலம் மாறி, இன்று ‘திருடுவது’ என்ற பொருளில் உலக வழக்காகத் திரிந்து வழங்குவது உற்று நோக்கத்தக்கது. வியப்பு என்னவெனில் ‘ஆட…
-
- 9 replies
- 2.6k views
-
-
ஈழத் தமிழரோடு பழகி பாருங்கள், அழகிய தமிழ் கேட்கலாம். -சுகி சிவம்.-
-
- 12 replies
- 2.6k views
-
-
கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர …
-
- 0 replies
- 2.6k views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும், பழமொழிகளின்... உண்மையான அர்த்தம் இதுதான்.
-
- 1 reply
- 2.6k views
-
-
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும். இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம். ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சி…
-
- 2 replies
- 2.6k views
-
-
மக்களே.... எழுத்துலகில் விண்வெளி தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறியாமல் பல பேரும் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விதயமாக உள்ளது. இது செந்தரப்படுத்தாமையால வந்த விளைவு. இது தொடர்ந்தால் மொழிச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது; இதனால் பொருள் பிரளும். ஆகவே அதைப் போக்கும் விதமாக இதை எழுதுகிறேன். Rocket(Space) - ஏவூர்தி Rocket(Weapon)- உந்துகணை/ தெறிப்பு தெறிப்பு - பழைய ஈழப் புத்தகம் ஒன்றில் இச்சொல் இப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Missile - ஏவுகணை Satellite - செய்மதி(ஈழ.வழ.), செயற்கைக்கோள் (தமி.வழ) இதில் நான் செய்மதி என்பதையே என்னுடைய விடைகளில் கையாள்கிறேன். என்னைப் பொறு…
-
- 3 replies
- 2.6k views
- 1 follower
-
-
எப்போது வேப்பங்காய் இனிக்கும்? "இவளோடு படும் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது. “ஏதோ ஒன்று, `பின்னே போனால் உதைக்கிறது; முன்னே போனால் கடிக்கிறது' என்பார்கள். "இவளுக்கும் அதற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று. "என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறாள்; குற்றம் சொல்கிறாள்; முரண்டு பிடிக்கிறாள்; பிணங்கிக்கொள்கிறாள். “ஏதும் சொல்லாவிட்டாலும் ஏதும் செய்யாவிட்டாலும் வம்பாகிப் போகிறது. “இவளைத் திருமணம் செய்துகொண்டேனே, என்னை எதனால் அடித்துக்கொள்வது?” என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை; எப்படி அவளைச் சரிசெய்வது, எப்படி அமைதிப்படுத்துவது என்று நெடுநேரம் சிந்தித்தான்; ஒரு வழி புலப்பட்டது. மனைவியின் தோழியைத் …
-
- 2 replies
- 2.5k views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். "மாடப் புறாவே…
-
- 5 replies
- 2.5k views
-
-
முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. இவ்வழக்கமேபழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் …
-
- 0 replies
- 2.5k views
-
-
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் அ.முத்துலிங்கம் [ கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்க சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும், ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினி பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும், கணிதமிழ் படும் இன்னல்களையும், கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும்…
-
- 0 replies
- 2.5k views
-
-
புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் மற்றும் கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, பயபக்தியுடன் சிவபெருமானை வழிபட்டனர் மகா சிவராத்திரியை ஒட்டி, சிவன் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.சிவபெருமானை போற்றி வழிபடும் தினங்களில் மகா சிவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும் என இந்துக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதையொட்டி, மகா சிவராத்திரி திருநாளான நேற்று நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவில் நேற்று அதிக…
-
- 5 replies
- 2.5k views
-
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா] மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால், 1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது, 2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life], 3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும். மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்…
-
- 1 reply
- 2.5k views
-
-