தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
695 topics in this forum
-
வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூ முடிந்துத் தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்க…
-
- 0 replies
- 852 views
-
-
[size=3] [size=5](தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)[/size][/size] [size=5]கலைச்சொல் பேரகராதி-தொகுதி-1 --> வேதியியல் -- [/size] [size=5]-----------------------------------------------------------------------[/size] [size=4]adiabatic expansion = வெப்பமாறா விரிவு alkaline = காரத்தன்மையுடைய adiabatic flame temperature = வெப்பமாறா தழல் வெப்பநிலை alkaline earth metal = கார மண் உலோகம் adiabatic process = வெப்பமாறா செயல்முறைகள் alkaline earth metals = கார மண் உலோகங்கள் adjacent = அண்டை alkaline so…
-
- 5 replies
- 2.9k views
-
-
மலரினும் மெல்லியது காமம் சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை! அங்கு ஒரு பெரிய தேனடை! அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே! அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி. குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. குறுந்தொகை 60 பரணர். (பிரிவிடை ஆற…
-
- 0 replies
- 2.7k views
-
-
கவியரசு கண்ணதாசனின் நெத்தியடி பதில்! - "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்! அது தெரியாமல் போனாலோ வேதாந்தம்!" பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பது ஏன்? - இது 'quora' தளத்தில் கேட்கப்பட்ட வினா. இவ்வினா இரண்டு வினாக்களை உள்ளடக்கியது! 1. முதல் வினா: அத்துவைத வேதாந்தம் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது ஏன்? 2. அத்துவைத வேதாந்தம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது ஏன்? இதற்கு நான் பதிவிட்ட விடைகளை இங்கு தருகி…
-
- 0 replies
- 5.6k views
-
-
பண்ணி என்பவன் சங்ககால அரசன். இவன் கோடைமலை நாட்டு அரசன். தன் கடலில் பிறந்த முத்தையும், பகைவர் திறையாகத் தந்த பவளத்தையும் மாலையாக்கி இவன் அணிந்திருந்தானாம். தன் மலையிலிருந்து குறவர் கொண்டுவந்து தந்த சந்தனம் பூசியிருந்தானாம். இவன் வாட்போரிலும், விற்போரிலும் வல்லவன். 'தென்னவன் மறவன்' என்று போற்றப்படுகிறான். சிறுவரை நாட்டுப்பகுதியும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தச் சிறுவரைப் பகுதியில் யான்களைக் குழிக்குள் விழச்செய்து மொழி பயிற்றி மக்கள் சொன்னபடி நடந்துகொள்ளப் பழக்குவர். இப்படிப் பயிற்சி தரப்பட்ட யானைகளை இந்த அரசன் பண்ணி தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அளவின்றி வழங்குவான். இந்தக் கொடை 'பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி' என்று போற்றப்பட்டது. இந்த வேள்வியில் பெறுவது போன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெங்காயமும் பெருங்காயமும் வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக ்கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவு…
-
- 0 replies
- 840 views
-
-
-
ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. ஆவியர் குடியினர் “அருந்திறல் அணங்கின் ஆவியர்” எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். ‘முருகன் நற்பேர் ஆவி’ என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மடசாம்பிராணி சற்று புத்திக்குறைவாக நடந்து கொள்பவர்களை நாம் பலவாறாகத் திட்டுவது வழக்கம். முட்டாள், மூளை கெட்டவன், கூமுட்டை, அறிவிலி, வீணாப்போனவன் என்பன சில அடைமொழிகள். மடசாம்பிராணி என்பதும் அப்படிப்பட்ட வசவே. எனக்கு இந்த மடசாம்பிராணி எனும் வார்த்தை காதில் விழும் போதெல்லாம் (என்னை யாரும் இவ்வளவு உயர்வாக விளித்ததில்லை) இவ்வார்த்தை குறித்த சந்தேகம் எழும். மட+சாம்பிராணி = மடசாம்பிராணி. மட என்றால் மடத்தனம், சாம்பிராணி என்றால் அது தூபப்புகை போடும் சாம்பிராணியா அல்லது ஓணான் வகையைச் சேர்ந்த சாம்பிராணி எனும் ஊர்வன ஜந்துவா என ஐயம் எழும். என்ன யோசித்துப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனக்குப் பழக்கமான அனைத்து அறிவு ஜீவிகளிடமும் கேட்டுப்பார்த்ததில் ஒருவழியாக ஒன்ற…
-
- 1 reply
- 4.3k views
-
-
நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி, இடை தழுவி இமை மூடி இதழ் ஒற்றி இன்பம் துய்க்காமல் இன்னும்…
-
- 18 replies
- 1.4k views
-
-
முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் எழுதிய இந்த மிளகின் சுயசரிதத்தை இணைப்பது "தமிழும் நயமும்' பகுதியலா அல்லது "நலம்பெற' என்னும் பகுதியிலா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் இதில தமிழின் சுவையும், உடல்நலன் பேண் குணமும் ஒருங்கே அமைந்திருக்கிறது. அத்தோடு எனக்குப் பிடித்த வலைப்பூ என்னும் இன்னுமொரு பகுதியிலும் இதனை இணைக்கலாம் இந்தத் திக்கு முக்காட்டத்தின் இறுதியில் தமிழும் நயமும் பகுதியில் இணைத்தலே சாலச்சிறந்தது என்று இங்கு இணைத்துள்ளேன் வாசிக்கிறதோடு மட்டும் நிற்காமல் உங்களுக்குத் தெரிந்த மிளகு பற்றிய விடயங்களையும் பதிவு செய்யுங்கள். நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்க…
-
- 5 replies
- 1.9k views
-
-
உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு. முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்" எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந…
-
- 0 replies
- 914 views
-
-
வணக்கம் கள உறவுகளே !! நாம் தொலைத்த ஒரு விடையத்தை இந்த தொடரூடாக தொடுகின்றேன் . நாம் பாரம்பரியமாக நினைத்துக்கொண்டிருக்கும் பலதும் நம்முடையவை இல்லை. நம்முடையதல்ல என்று காலம்காலமாக நினைத்துக்கொண்டிருக்கும் பலவும் நமக்குரியவை. தமிழருக்கும் பெளத்த மதத்துக்குமான தொடர்பு இப்படிப்பட்டதே. பெளத்தம் நமக்கு அந்நியமானது எப்படி? அது எத்தகைய மார்க்கத்தை நமக்கு போதிக்கிறது? இது உண்மையில் சர்ச்சைக்குரிய விடையமே எனது அறிவுக்குட்பட்டு வரலாற்றாசிரியர் அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமியின் ஆராய்ச்சி குறிப்புகள் துணையுடன் தொடர்கின்றேன் . நேசமுடன் கோமகன் *************************************************** பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?? ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்ட…
-
- 50 replies
- 14.6k views
-
-
வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை வன்னி விவசாயக்கிராமங்கள் நிரம்பியது.இங்கு குளங்களும் கோயில்களும் காடுகளும் நிரம்பியுள்ளன.வன்னிவள நாட்டின் பாரம்பரியமிக்க வாழ்வியல் வழி பாடுகள் சடங்குகள் தொழில்கள் என்பன பற்றிய நாட்டார் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவை பெரும்பாலும் பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் எனவும் கூத்து, கதைப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. பிள்ளையார் சிந்து, விறுமன்சிந்து, வதனமார்சிந்து ஐயனார் சிந்து, முருகையன்சிந்துஎன வழிபாட்டிலும், பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு, குருவிச்சிந்து இகொட்டுக்கிணற்றடிப்பிள்ளையார் கும்மி, கமுகஞ்சண்டை, என வகைவகையாக வழக்கிலுண்டு. “முடியோடு தேங்காயைக் கையிலெடுத்தோம் மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்” என என்ன வேலை செய்யப்புகுந…
-
- 7 replies
- 6.9k views
-
-
- ரிஷியா அவனைக் கண்ட அந்தநாள். விழிமொழியால் பேசிய நாள் அது. விழிவழியே வந்த காதல் இதயத்தில் நிறைந்தது. என்புவரை சென்று உயிரைத் தாக்கியது. எனக்கு மட்டுமா இந்த நிலை? அவனுக்கு? கண் வழியே நெருப்புப் பூக்கள் உடலெங்கும் மலர்ந்த தருணம் அது. விழிமொழியால் பேசப்படாத வார்த்தைகளை விரல்மொழியால்தானே பேச இயலும். விழிமொழிக்குக் காதல் என்று பெயரிட்டால், விரல்மொழிக்குக் காமம் என்று பெயரிடலாமே! விழியும் விரலும் பேசினால்தானே அன்பின் அத்தியாயங்கள் வாழ்க்கை என அரங்கேறும். இதை அவன் உணர்ந்தானா? உணரவில்லையே! அவனை விரும்பி, இணைந்து, பிணைந்து கொள்ள என் துயர் தீர்க்க அவன் வரவில்லை. என்னை ஊரறிய ஏற்றுக் கொள்ளவும் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனக்குள் மலர்ந்த அக்னிப்பூக்கள் அவனுக்குள் மலரவில்லையா…
-
- 2 replies
- 946 views
-
-
எது கெடும் ? அடேயப்பா... கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
குட்டு + உணி =குட்டுண்பவன், அதாவது குட்டுப்படுபவன். அந்தக் காலத்தில் 'குட்டுணி' என்ற ஒரு சொல் வழங்கியது. இங்ஙனம் குட்டுப்பட்டு அவமானப்படுபவர்களை அது குறித்தது. அறிவின்றிப் பிறரால் தண்டனைக்கு ஆட்படுபவர்களைக் 'குட்டுணி' என்றார்கள். இவ்வாறே காலப்போக்கில் 'குட்டு' என்ற சொல்லுக்குத் துன்பம், இடர், அனுபவம் என்றெல்லாம் குறியீட்டுப் பொருள்கள் ஏற்படலாயின. விவரம் தெரியாமல் ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டுத் தவிப்பர்களைப் பார்த்துக் 'குட்டுப்பட்டால்தான் புத்தி வரும்' எனப் பேசுவார்கள். ஒன்றைத் தொடங்கித் துயரப்பட்டு அனுபவப்படுவதும் இதில் குறிக்கப்படுகிறது. மிகவும் வாழ்வில் அடிபட்டு விட்டவனை 'நல்லாக் குட்டுப்பட்டு விட்டான்' என்று கூறி இரக்கப் படுவார்கள். ஒருவனைத் துன்பப்படுத்திக் கொண்டேயி…
-
- 0 replies
- 580 views
-
-
என்ன செய்யப் போகிறோம்? தமிழ் திரையுலகத்துக்கு உள்ள சக்தியை நம்மால் அளவிட முடியாது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தின் பாடலை நாம் வானொலியில் கேட்டிருப்போம். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அது குறிப்பிட்ட திரைப்படத்தின் பாடல்தான் என உடனே நமது நினைவுக்கு வரும். இது அன்றைய திரைப்படப் பாடல்களுக்கு உள்ள தனிச் சிறப்பு. இதைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமும், அவசியத் தேவையும் கூட. பாரதியார் எழுதிய பாடல்களில் "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?' - இந்தப் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "பாரதி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடலைப் பாடிய திரைப்படப் பின்னணிப் பாடகருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இது…
-
- 2 replies
- 785 views
-
-
கடிதம் தமிழில்லையா ? ** தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எளிதாய் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். “இப்ப டைம் என்ன ?” என்பதில் எது ஆங்கிலச் சொல் ? ‘டைம்’ என்பது ஆங்கிலச் சொல். இது உடனே நமக்குத் தெரிகிறது. டைம் என்பதற்கு நேரம் நல்ல தமிழ்ச்சொல். ‘இப்ப நேரம் என்னாச்சு ?” என்று தமிழில் கேட்கலாம். “டைம் ஆச்சு. கிளம்புங்க” என்பதைப் போலவே “நேரம் ஆச்சு. கிளம்புங்க” என்று சொல்வதும் வழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தைப் போலவே வடசொற்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ”நல்ல உதாரணத்தோடு பேசினான்” என்பதில் வடசொல் எது ? ‘உதாரணம்’ என்பது வடசொல். உதாரணம் என்பதற்கு ‘எடுத்துக்காட்டு, சான்று’ ஆகியன தகுந்த தமிழ்ச்சொற்க…
-
- 1 reply
- 2.7k views
-
-
தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம்: · புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர். · பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார் இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுக…
-
- 0 replies
- 4.9k views
-
-
மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது. தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது. நல்ல என்ற சொல்லின் பொருள் நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
Kural: 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. Is he who strives to sober drunken man with reasonings grave.
-
- 23 replies
- 3k views
-
-
நாலு கோடியா? ...........காசில்லப்பா, பாடல்! - ஒளவையின் புலமை. சோழமன்னன் ஒருநாள் தனது ஆஸ்தான கவிஞர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும் என கட்டளை இட்டான்.இந்தக் கவிஞர்கள் அரண்மனையிலே சும்மா தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா?; அவர்களுக்குச் செய்ய ஒரு வேலை கொடுக்க வேண்டாமா என சோழமன்னன் நினைத்தானோ என்னவோ, இதை ஒரு வீட்டு வேலையாகச்(Homework) செய்து வர, பணித்திருந்திருக்கலாம். அதை கேட்ட கவிஞர்கள், "நாலு கோடிக்கு எங்கே போவது?", எனக் கவலையுடன் வீடு திரும்பினார்கள். அன்று அவ்வழியாக வந்த ஒளவையார் அந்தக் கவிஞர்கள் கவலையுடன் இருப்பதைக் கண்டு, " ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். " ஒளவையே, எம்மை சோழ மன்னன் நாளை சூரிய உதயத்திற்கும…
-
- 2 replies
- 1.9k views
-
-
நற்றிணை காட்டும் நற்பண்புகள்.! காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம். அன்பு: தலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி "என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது " நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பா…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர். பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது. ""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப் பிடியூட்ட…
-
- 0 replies
- 1.3k views
-