பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடிய தமிழ் அரசர்கள் கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மார்ச் மாதம் 02டன் 192 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கைத் தீவில் தனியரசுகளாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேயர் கைப்பற்றினர். அந்நியருக்கெதிராக இறுதிவரை போரிட்டு மாண்டவன் யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசன் சங்கிலியன் என்பது வரலாறு. சுயலாபம் கிட்டும் என்ற ஆசையால் காக்கை வன்னியன் என்ற தமிழனே சங்கிலியனைப் போர்த்துக்கேயர் தோற்கடிக்கக் காரணமாயமைந்தான் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இறுதிவரை அந்நியரை எதிர்த்து நின்ற பெருமை யாழ்ப்பாணத் தமிழ் அரசனுக்கு உண்டு. அதேபோன்று, வன்னித் தமிழரசரும் அந்நியருக்கெதிராக போராடிய வீ…
-
- 0 replies
- 949 views
-
-
Source : http://subavee-blog.blogspot.com/ கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும்,தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக்…
-
- 0 replies
- 949 views
-
-
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம். இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் …
-
- 1 reply
- 946 views
-
-
நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. அவர்களுக்கு தமிழ்பேச தெரியாமல் இருந்தால் அப்படி ஒரு அந்நிய மொழியில் பேசுவதை நாம் எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பேச்சு என்பது அவர்களின் விடுதலை உணர்ச்சி. அதில் தலையிடும் அளவிற்கு நாம் நாகரீகம் அற்றவர்கள் அல்ல. ஆனால், நமது முகவரியான நமது அடையாளத்தை நாம் இழந்து, அந்நிய முகத்தை அணிந்து கொள்வதை நம்மால் தாங்க முடியவில்லை. இன்று தமிழ்நாடெங்கும் இந்த தரங்கெட்ட நிலை செழித்தோங்கிக் கொண்ட…
-
- 3 replies
- 943 views
-
-
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது… இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் “இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர…
-
- 2 replies
- 939 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL DEPARTMENT OF INDIA ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கும், சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள். ஆதிச்சநல்லூர் தொல்லியல் தலத்தில் 2004 - 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார். 600 ச…
-
- 0 replies
- 938 views
-
-
d26fd02743b38688f6bd9a5706320ebe
-
- 6 replies
- 936 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்துள்ளனர். இந்தக் கல்வெட்டுகள் கோயில் குறித்த பல அரிய தகவல்களைத் தருவதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அம்மனின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்றே வழங்கப்பட்டது என்றும் அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் படிஎடுத்து, அவற்றை வாசித்து…
-
- 2 replies
- 936 views
-
-
மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரல…
-
- 4 replies
- 934 views
-
-
இன்று, தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை. தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் ,வாலிபர்களும் பிரான்ஸ், ஜேர்மன், ஆங்கிலம், ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர். இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட ) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்... தமிழீழத்தில் புலிகள் ஆட்சியில் உருவான கட்டுமானங்களில் மொழிப்பல்கலைக்கழகமும் ஒன்றாகும். வன்னியில் அறிவுநகரத்தில் இதற்காக மலர்ந…
-
- 1 reply
- 934 views
-
-
Published on 27 Mar 2012 இலண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சிவா சிவப்பிள்ளை ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மொழிக்கற்கைகள் குறித்து விளக்குகிறார். A speech given by S.Sivagurunathapillai about Tamil Language in UK. filmed by Kajeepan and Mayu. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக தமிழ் மொழி தேர்வுக்கான இணைப்புகள் http://www.cie.org.uk/qualifications/... http://www.cie.org.uk/qualifications/... http://www.cusu.cam.ac.uk/societies/d... Category Education Licence Standard YouTube Licence
-
- 0 replies
- 934 views
-
-
தமிழ்நாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு அயராது உழைத்தவர்களில் ஒருவரும் தமிழின உணர்வாளருமான முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் கடந்த 19.01.2014 அன்று பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, ஊடக இல்லம் ஆகியன இணைந்து செவரோன் மாநகரத்தில் நடாத்திய தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் எழுதிய முள்ளிவாய்க்கால் (குருதிதோய்ந்த குறிப்புகள்), உயிருக்கு நேர் (தமிழ்மொழிப்போர் பின்புலத்துடன்) என்ற இரண்டு புத்தகங்களும், தமிழீழம் என்ற வீடியோ ஆவணப்படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது ஊடக இல்லத்திற்கும் வருகைதந்திருந்த முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ஊடக இல்லம்…
-
- 1 reply
- 934 views
-
-
"மனுநீதிதான் தமிழர்களைப் பிரித்தது" பேரூர் மருதாசல அடிகளார் முழக்கம் கடந்த 20.09௨006 அன்று ஈரோடு மாவட்டம், கோபி பெரியார் திடலில் "தமிழர் கலை இலக்கிய மன்றம்" என்னும் முற்போக்குச் சிந்தனையாளர்களால் துவக்கப்பட்ட இலக்கிய அமைப்பை பேரூர் இளைய ஆதீனம் மருதாசல அடிகளார் தொடங்கி வைத்து கருத்தாழம் மிக்க உரை நிகழ்த்தினார். "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம். ஏன்?" என்ற தலைப்பில் பேசிய அவரது உரையின் சில பகுதிகள். "எதையும் ஏன், எதற்கு, எப்படி - என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறார்கள். அனைவரும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியர் ஆகலாம். அனைவரும் இந்தியக் காவல்பணித் தேர்வு எழுதி காவல்துறை அதிகாரி ஆகலாம் - என்று இருக்கும் போத…
-
- 0 replies
- 934 views
-
-
ஆதிவாசி என்பது என்ன மொழி? நேற்றைய பிபிசி ஆங்கில உலகசேவயில், இந்திய ரைசிங் என்ற புரோகிராமில் ஆதிவாசீஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார்கள்( tribe, tribal என்றும் பயன் படுத்தினார்கள் ஆனால் கூடுதலாக, இந்திய செய்தியாளார் ஆதிவாசீஸ் என்ற சொல்லையே பயன்படுத்தினார்) சந்தெகத்தை தயவு செய்து தீர்க்கவும்!
-
- 0 replies
- 930 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் ஒன்பதாம் பதிவு நாள்: 24.06.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 6-வது முழு நிலவு கடந்த 02.06.2015 அன்று கடந்தது. சரிவிலிருந்து மீண்டு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த நிலவு தன்னை நேர்த்தி செய்து கொண்டு 30 நாள் முறையைக் காப்பாற்றி வெற்றி கண்டுள்ளது. அது எப்படி மீண்டது என்பது வழக்கம் போல ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. அது சரியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் பின்பற்றலாம். இத்துடன் இந்த அரையாண்டுக்கான 6 முழு நிலவுகளும் வந்து விட்ட நிலையில் 6 மறை நிலவுகளையும் 3 பிறை நாட்களையும் சேர்த்துப் பட்டியலிட்டுக் கொள்வது தேவையாகிறது. ஒன்று முதல் ஒன்பது வரையிலான பதிவுகளையும…
-
- 0 replies
- 930 views
-
-
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப்படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்! ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்தேன். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை உதறித் தள்ளினேன். இப்போதைய ஃபேஸ்புக் நண்பர்களைப் போல, அப்போது பேனா நண்பர்கள் இருப்பதும் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்வதும் வழக்கம். அப்படி என் மகன் சேகரின் பேனா நண்பராக இருந்தவர்தான் ஜப்பான், ஷீமாடா நகரைச் சேர்ந்த சூஜோ மாட்சுனுகா. 1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்தார் சூஜோ. 'ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவ…
-
- 1 reply
- 930 views
-
-
[size=4]ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. குடும்ப வாழ்வில…
-
- 0 replies
- 929 views
-
-
பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம் இலங்கையின் வரலாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான போர்களின் வரலாறே. அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததுமில்லை! வாழப்போவதுமில்லை!! தமிழர்களின் ஆட்சியுரிமையைப் பறித்த அந்நியர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பிடுங்கிக் கொண்ட இன்னொரு அந்நியர்கள் தமிழர்களின் ஆட்சியுரிமையை தமிழர்களின் எதிரிகளிடம் மக்களாட்சி என்ற போர்வையில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வாக்குரிமை முதலில் பறிக்கப்பட்டது. தமிழர்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழர்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்…
-
- 0 replies
- 928 views
-
-
மறைக்கப்பட்ட வரலாற்றின் அத்தியாயாம். சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பொலன்னறுவையிலுள்ள சிவன், விசு(ஷ்)ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விசு(ஷ்)ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொ…
-
- 0 replies
- 927 views
-
-
பிரபாகரன்- வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்! ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்! அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழனைத் கதறவைத்த வீர யுகமொன்றின் சிருஷ்டிகர்த்தா. தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போரட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி, வெற்றியின் சிகரத்;தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன். குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன் இன்று தொன்மையும் ச…
-
- 0 replies
- 927 views
-
-
அண்மையில் சிறிலங்காவில் நடைபெற்ற கருத்தரங்கம் (Business For Peace Alliance forum)ஒன்றில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர், அங்கு கலந்து கொண்ட தமிழர், சிங்களவர்கள் விளங்குவதற்காக இரு மொழிகளிலும் உரையாற்றினார். ஆனால் இப்படிப் பேசியதைக்கூட சில சிங்களவர்களுக்கு பொறுக்கவில்லை.
-
- 0 replies
- 924 views
-
-
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயி…
-
- 0 replies
- 924 views
-
-
ஈழப்போராட்டக் காரணிகள். வணக்கம்! ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத் தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன முயற்சியிது. முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்…
-
- 0 replies
- 924 views
-
-
சிங்கள கிரிகெட் அணியை தடை செய். மனிதகுலத்துக்கு எதிரான சிங்கள கிரிகெட் அணியை , உடனடியாக தடை செய்யவேண்டும் என்று, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை கேட்டு கொள்ள வேண்டும், உலகதமிழ் உறவுகளே, சிங்களம் , விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பில்லை, நம்மை பயங்கரவாதிகள் என்று கட்டி, ஒரு போலி பிரச்சாரத்தை முன்னெடுக்க முனைகிறது , இதை உடனடியாக எதிர்கொள்ள வேண்டும் உறவுகளே. சிங்கள அணியை தடை செய்ய சர்வதேச கிரிகெட் வாரியத்தை நாம் நிர்பந்திப்போம். சிங்கள அரசு பயங்கரவாதம் செய்து வரும் இனபடுகொலை, சிங்கள அணியினரின் இனவெறி , சிங்கள இனவெறி ரசிகர்களின் வெறியாட்டம் போன்றவற்றை , உள்ளடக்கிய , காணொளிகள், கட்டுரைகள், படங்களை உடனடியாக நாம் சர்வதேச கிரிகெட் வாரியத்துக்கு அனுப்பி வைப்போம். ந…
-
- 0 replies
- 923 views
-
-
தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன். தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்ற…
-
- 0 replies
- 921 views
-