பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
ஆதிவாசி என்பது என்ன மொழி? நேற்றைய பிபிசி ஆங்கில உலகசேவயில், இந்திய ரைசிங் என்ற புரோகிராமில் ஆதிவாசீஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார்கள்( tribe, tribal என்றும் பயன் படுத்தினார்கள் ஆனால் கூடுதலாக, இந்திய செய்தியாளார் ஆதிவாசீஸ் என்ற சொல்லையே பயன்படுத்தினார்) சந்தெகத்தை தயவு செய்து தீர்க்கவும்!
-
- 0 replies
- 940 views
-
-
சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக்கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தழிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்;டிற்கு சனவரி 15 என்று தெரிகிறது. பஞ்சாங்கம் சொல்கிறது என்பதைத் தவிர வேறெந்த அடிப்படையும் இல்லாத இந்த வரையறை உண்மையான தைத்திங்கள் முதல்நாளைத் தொட்டுக் காட்டுவதாகக் கொள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 45 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 நிச்சம் தடுமாறும் மெய் இயல் ஆய்மகன் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு! (முல்லைக் கலி: 110: 09-15) பொருள்: இன்று கன்றுக்குட்டியை ஈன்று விடுவோம் என்று தனது உள் உணர்வினால் அறிந்து கொள்ளும் முதல் கன்று ஈனும் தாய்ப்பசு, அச்ச உணர்வினால் மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவினுள் சுற்றிவரும் என்ற உண்மையை அழகிய எடுத்துக் காட்டின் வழியே பதிவு செய்துள்ளார் சோழன் நல்லுத்திரனார். மத்தம் பிணித்த கயிறும், கடுஞ…
-
- 0 replies
- 625 views
-
-
திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் ச. அகத்தியலிங்கம் திராவிட மொழியியல் இன்று நல்லதொரு வளர்ச்சியினைக் கண்டுள்ளது. பல்வேறு அறிஞர்களும் இளைஞர்களும் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆய்ந்து வருதல் காணலாம். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர்கள் பலர். கிறிஸ்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி பற்றிய ஆராய்ச்சி நம் நாட்டில் தொடங்கிவிட்டது என்றாலும் ''திராவிட மொழிகள்” என்னும் ஒன்றிய எண்ணமும் ஆராய்ச்சியும் மிக அண்மைக் காலத்திலேயே தொடங்கின. இவ்வண்மைக்கால வளர்ச்சி யின் வரலாற்றினை வடிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். குறிப்பாகத் திராவிட மொழியியல் ஆராய்ச்சியின் தந்தை எனக் கருதப்படும் கால்டுவெல் காலம் வரை நடந்த வளர்ச்சி பற்றியே இக்கட்டுரை பேசும்…
-
- 11 replies
- 6.6k views
-
-
பிரபாகரன்- வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்! ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்! அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழனைத் கதறவைத்த வீர யுகமொன்றின் சிருஷ்டிகர்த்தா. தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போரட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி, வெற்றியின் சிகரத்;தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன். குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன் இன்று தொன்மையும் ச…
-
- 0 replies
- 964 views
-
-
பறைசாற்ற வந்த தமிழர்களின் - தமிழிசை கருவிகள்.! இதில் எத்தனை தமிழ் ஈழத்தில் புழக்கத்தில் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா.? ரெல் மீ..! 👌 டிஸ்கி: கஸ்ரபட்டு பதிவெற்றம் செய்தமைக்கு சில பல புள்ளிகள் இடலாமல்லொ.. 👍
-
- 0 replies
- 774 views
-
-
-
- 1 reply
- 861 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL DEPARTMENT OF INDIA ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கும், சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள். ஆதிச்சநல்லூர் தொல்லியல் தலத்தில் 2004 - 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார். 600 ச…
-
- 0 replies
- 972 views
-
-
சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்! தமிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’! கலைவாணர் என்.எசு.கே முதல் சந்தானம் வரை தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாக அனைவராலும் நையாண்டிப் பொருளாக்கப்படுவதும் சென்னைத் தமிழ்தான். தனிப்பட்ட முறையில், தமிழர்கள் அனைவருக்குமே அடுத்தவர்களின் வட்டார வழக்கை நக்கலடிக்கும் வழக்கம் இருந்தாலும், பொதுவெளியில் அனைவராலும் கிண்டலுக்குள்ளாக்கப்படுவது சென்னைத் தமிழ்தான். பொதுவாக, வட்டார வழக்கு என்பதே மொழியின் அழிவுக்கான காரணிதான். தாய் வாழையைச் சுற்றி வளரும் கன்றுகளைப் போன்றவை அவை. ஏனெனில், வட்டார வழக்கு (Colloquial) புழக்கத்…
-
- 3 replies
- 7.3k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 46 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர்உ ண் கண்ணும் நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்றுகிற்பார் யார்? சொல்லாதி! நின்னைத் தகைத்தெனன் அல்லல் காண்மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீய நின் கொண்டது எவன்? எல்லா! யான் கொண்டது (முல்லைக்கலி 108:15-25) பொருள்: என்னைத் தேர்வு செய்த உன்னைப் பேசி வெல்ல முடியாது என்று கூறுகிறான் காதலன். உன்னைத் தேர்வு செய்த பின் நான் பட்ட துன்பம் பெரிது.முதலில் பார்த்த உடனேயே கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்பது போலப் பண்டம் கேட்டாயே! அப…
-
- 0 replies
- 552 views
-
-
-
ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு - இரண்டுமே தமிழரின் நீர்வழிப்பாட்டு பெருவிழா என்பதைவிட, இரண்டுமே ஒரே பெருவிழா தான் என்பதே உண்மை...... சங்கத்தமிழரின் நாள்காட்டியை மறந்ததால், ஒரே பெருவிழாவை வேறு வேறு தினங்களில் இரண்டு பெருவிழாக்களாக கொண்டாடும் அவலம்.. இந்த அவலத்தைப் போக்க, விரைவில் வெளிவர இருக்கிறது சங்கத்தமிழரின் நாள்காட்டி!!! திங்கள் அடிப்படையில் புத்தாண்டை வரவேற்றுத்தான், வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி வைக்கிறோம் என்றுக்கூடத் தெரியாமல், ஆரியரின் பிரம்மா-விஷ்ணு கதைகளை சொல்லிக்கொண்டு, கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடும் அப்பாவி தமிழர்கள்!!!! கார்த்திகையை முதலாகக் கொண்ட சங்கத்தமிழரின் நாள்காட்டி விரைவில்....
-
- 0 replies
- 696 views
-
-
திராவிட அரசியலாளரும், இந்திய சரித்திரம் பற்றி எழுதிய அறிஞர்களும், "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த வெள்ளை இனத்தவர்கள்," என்று நம்பி வந்தார்கள். ஆனால், "ஆரியப் படையெடுப்பு" பற்றிய கோட்பாடுகள், வேறு பல அறிஞர்களால் மறுத்துரைக்கப் பட்டன. எனது ஆய்வு கூட அப்படி ஒரு படையெடுப்பு நிகழவில்லை என்று தான் தெரிவிக்கின்றது. உண்மையில் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறுவதை விட, "ஆரியமயமாக்கல்" என்ற சொற்பத்தை பாவிப்பதே பொருத்தமானது. அனேகமாக, வெள்ளை நிறவெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் சரித்திர ஆசிரியர்கள் தான், "ஆரியர் படையெடுப்பு" என்ற கோட்பாட்டை உருவாக்கி பரப்பி வந்திருக்க வேண்டும். "வெள்ளை இனத்தவர்கள், உலகம் முழுவதும் அடக்கி ஆண்டார்கள்." என்று இனப் பெருமிதம் கொள்வதே அவர்களது நோக்கமாக …
-
- 4 replies
- 2k views
-
-
புலம் பெயர்ந்த தமிழர்கள் பொங்கல் திருநாள் -முகிலன் கடலோடிகளான பாரம்பரிய அறிவைப்பெற்ற மூத்த இனம் தமிழர் என்றால் மிகையில்லை. "திரைகடலோடியும் திரவியம் தேடு" என எம்மவரிடம் புளங்கும் பழமொழியும் - எட்டுத்திங்கும் சென்று கலைச் செல்வம் கொணர்ந்திடுவீர் எனக் கனவைச் சொன்ன பாரதியும்- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பகன்ற கவிஞன் பூங்குன்றனின் வார்த்தையையும் -இருபதாம் நூற்றாண்டுக் கடைக்கூறுகளிலிருந்து புலம் பெயர்ந்த ஈழத்தமிழன் வாழ்வாக்கிக் கொண்டுள்ளான். விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்ட இந்தப் புலப்பெயர்வின் மூன்றாவது தசாப்த காலத்தில் கற்பதும் பெறுவதும் பலப்பல… இன்று, பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளிலும் தடம்பதித்த தமிழனின் அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியுள்ள இருப…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில், "ஆசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழர்கள் நல்கிய பங்களிப்பு' பற்றிய சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடந்தது. சென்னை, தி.நகர் வாணி மகாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கருத்தரங்கை துவங்கி வைத்து, பிரபல மொழி வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரை முடிவுகளிலிருந்து, முக்கிய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழர்களின் கடல் கடந்த அயல்நாட்டு தொடர்புகளையும், அத்தொடர்புகளின் சமுதாய வரலாற்று பின்னணிகளையும் விரிவாக ஆராய்ந்து நிலை நாட்டும் விதமாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி அளவுக்கு, உலகின் பெரும்பான்மையான தொல் பழங்கால மொழிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மொழியாக வேறு எந்த மொழியும் இ…
-
- 27 replies
- 3.4k views
-
-
Source : http://subavee-blog.blogspot.com/ கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும்,தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக்…
-
- 0 replies
- 965 views
-
-
தேசியத்தலைவர் அவர்கள் இன்றைய தினம் (Aug 04, 1987) வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை ஆற்றிய நாள். (சுது மலைப்பிரகடனம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் தமிழரின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்று கூறியிருந்தார்.
-
- 0 replies
- 380 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 47 https://app.box.com/s/ermbxprsfpna8gj8jpd0fmk42j4o9a3l அளை மாறிப் பெயர் தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றூற்று அயல் இனமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா என் நெஞ்சம் கனமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ? நின் நெஞ்சம் கனமாக் கொண்டு யாம் ஆனல் எமக்கு எவன் எளிதாகும்? புனத்துளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பது வோ? அனைத்து ஆக! (முல்லைக் கலி 108: 26-35) பொருள்: என் நெஞ்சத்தைக் களமாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறாய்! நீ ஒரு கள்வி என்று கூறுகிறான் காதலன். அது எப்படி எனக்கு எளிதாகும்? உன்னைத் தேடிக் கலங்கினேன். தினைப்புனத…
-
- 0 replies
- 484 views
-
-
புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம். "திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன்தெரி வார்" நன்றியின் பயனை பனையின் பயனோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் நம் வள்ளுவர். தென்னை மரம் கிபி 2ம் ஆண்டிற்கு பின்தான் இங்கு அறிமுகமானது. ஆனால் பனை மரம் அதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. "தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான் பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்" கிராமங்களில் புழங்கும் சொல்வழக்கு இது. பனைமரங்கள் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்திருக்கின்றன. பனைமரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் மனிதனுக்கு எப்படியாவது பயன்பட்டு வருகிறது. அந்த அளவில் அதிக பயன்களை அது கொண்டிருக்கிறது. பண்டைய இலக்கியங்களை …
-
- 1 reply
- 1.4k views
-
-
"இலங்கையில் தமிழர்" - முழுமையான வரலாற்று ஒலி ஆவணம் ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது. ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இருந்த பல ஆதாரச் சின்னங்கள் தொலைந்து இருந்த சுவடு இல்லாமல் போயிருக்கின்றன. இதற்கு மிக…
-
- 0 replies
- 2.2k views
-
-
டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள். டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுhரியில் நடைபெற இருக்கும் தமிழியல் மாநாடு பற்றி ஏற்றகனவே அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் எனக்கு இம்மாநாடு பற்றிக்கிடைத்த மேலதிக தகவல்கள் உங்களுக்காக..... தமிழியல்: திணையும் தளமும் நிலையும் வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சம…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒரு கொடி பல விடயங்களை பிரதிநிதிப்படுத்தும் ஒன்று. அது ஒரு எண்ணக்கருத்தை, ஒரு விற்பனை பொருளை, ஒரு விளையாட்டுக்கழகத்தை, ஒரு அமைப்பை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை பிரதிநிதிப்படுத்துவதாக உள்ளது. நாடுகள் தம்மை கொடி மூலம் பிரதிநிதி படுத்துகையில், பல நாடுகளை கடந்து வாழும் ஒரு இனம் தன்னை எவ்வாறு அடையளாப்படுத்துவது? இன்று தமிழினம் ஒரு உலக இனமாக உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் தமிழின படுகொலையை ஏன் நிறுத்த முடியாமல் போனது? ஈழத்தமிழர்கள் தம்மை துணிகரமாக ஒரு கொடி மூலம் பிரதிநிதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இது உலக தமிழினத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. உலக தமிழ் அரசியல் வாதிகள், இலக்கியவாதிகள், தமிழர்கள் தமக்கென ஒரு கொடி உருவாக்கல் பற்றி எண…
-
- 0 replies
- 1.1k views
-
-
குமரிக்கண்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் அண்மைக்கால அகழ்வாய்வுகள் : வி.இ.குகநாதன் 04/25/2018 இனியொரு... தமிழர் தோன்றியது எங்கே? என்று யாரிடமாவது கேட்டால், மிகப்பெரும்பாலானோரின் பதில் குமரிக்கண்டம் என்பதாகவே அமையும். குமரிக்கண்டத்திற்கான மறுப்பு அறிவியல் விளக்கங்கள் பல வெளிவந்துள்ளபோதிலும், பாமர மக்கள் மட்டுமன்றி அறிஞர்கள் பலர்கூடக் குமரிக்கண்டத்தை நம்பியேவருகின்றனர். அண்மையில் தமிழாற்றுப்படுகை எனும் தொடர்சொற்பொளிவு நிகழ்வில் மறைமலை அடிகளார் பற்றிய உரையில் கவிப்பேரரசு வைரமுத்துவே தமிழர் தோன்றியது லெமோரியக்கண்டத்தில் எனக்குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று ஒசூர் பாலு எனும் ஆழ்கடலாய்வு நிபுணரும் இன்றும் குமரிக்கண்டத்தை வலியுறுத்தியே வருகின்றார். இவர்கள் இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா? அன்பான யாழ் கழ உறவுகளே! நாம் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறிக்கிடக்கிறோம். அப்படியிருந்தும் எமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறோம். இந்நிலையில் நாம் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்போமா? கைவிடுவோமா என்றொரு கேள்வி என்னில் எழுகிறது. இதற்கான தலைப்பைத்தான் மேலே தெரிவு செய்துள்ளேன். இதனை வாதப்பொருளாகக் கொண்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இளைய தலைமுறயினரை ஊக்குவிக்க ஆவன செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன். …
-
- 19 replies
- 8.6k views
-
-
சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும் சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம் இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ? தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம் அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள் ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம் ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம் அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு அக்காள் …
-
- 36 replies
- 14.6k views
-