சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
https://www.facebook.com/reel/1032831737896894?s=yWDuG2&fs=e
-
- 0 replies
- 551 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியர்களின் வீடுகளில் மொத்தம் 206 மில்லியன் (20.60 கோடி) மின்னணு சாதனங்கள் பயனற்று கிடக்கின்றன. இவற்றில் மொபைல்ஃபோன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை அடங்கும் கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உன் வசம் இருக்கிறதா? அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின் வரவேற்பறையை அலங்கரிப்பவையாகவும் மட்டுமே இர…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
முறுக்குள்ள (Proud) செய்தியாளர் சசி- -- ------------- ----------- கிழக்கு மாகாணச் சுயாதீனச் செய்தியாளர் சசி புண்ணியமூர்த்திக்கு, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால், அவர் ஊடகவியலாளர் அல்ல என்ற முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது. அப்படியானால் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கொள்ள அனுமதித்திருக்கக் கூடாது. …
-
- 0 replies
- 323 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக பௌத்த குருமார் சிலர் போராட்டம் நடத்தியமை குறித்துப் பிரதான சிங்கள - அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கொழும்பில் உள்ள பிரதான சிங்கள - ஆங்கில நாளிதழ்கள், செய்தி இணையங்கள் பிரதான சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. மாறாகப் பௌத்த சமயத்துக்கு வடக்குக் கிழக்கில் தமிழ்ப் பயங்கரவாதிகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தடை விதிப்பதாக பௌத்த குருமார் கூறுகின்ற திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சிங்கள - ஆங்கில மாற்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், அதன் சிங்கள வாசகர்களின் எண்ணிக்கை மிகக் …
-
- 4 replies
- 378 views
-
-
யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி வரைக்கும் யாழ்ப்பாணம் முழுவதுமே தெய்வீகமயம்தான். கோயில்கள் ஒளிவெள்ளத்திலும், பக்த வெள்ளத்திலும், பண வெள்ளத்திலும் மிதக்கும். ஆனால் சமநேரத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராமங்களில் இருக்கின்ற பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய சைவ கோயில்கள் இருளில் கிடக்கின்றன. வெள்ளி, செவ்வாயில் தொடர்ச்சியான பூசைக்கோ, நிரந்தரமான கட்டடங்களுக்கோ வசதியற்ற நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. இந்நிலை யாருக்கு வாய்ப்பாகிறதெனில், தெற்கிலிருந்து பண்பாட்டுப் படையெடுத்து வந்துகொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் பெளத்த பிக்குகளுக்கும்தான…
-
- 0 replies
- 356 views
-
-
கண்களில் கண்ணீர். குரலில் ஒரு ஏக்கம். “ஹலோ அம்மா” ஜிம்மி தைடனின் வார்த்தைகள் நடுங்கியபடியே வெளி வந்தன. “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னபடி ஜிம்மி தைடன் தனது தாயை இறுக அணைத்துக் கொண்டார். தனது 42 வருட வாழ்க்கையில் தனது தாயை முதன் முதலாகக் காண்கிறார் ஜிம்மி தைடன். ஜிம்மி தைடன் வளர்ந்தது, படித்தது, சட்டத்தரணியாக வேலை பார்ப்பது எல்லாமே விர்ஜினியா(அமெரிக்கா) நகரத்தில்தான். சிலி நாட்டில் சன்ரியாகோ நகரத்தில் பிறந்த தன்னை மருத்துவமனையில் திருடி ஒரு அமெரிக்க குடும்பத்திடம் விற்று விட்டார்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் தனது மகன் திருடப்பட்டுவிட்டான் என்பது அவரின் தாய் மரியா அங்கலீகாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. குறைப் பிரசவத்தில் …
-
- 1 reply
- 310 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02j1o8UUwUrhWuPHuZiuNdaT3d6qCj7NWAUF5xS5u6JALE4zmogDeyKKz1mtJpZuArl&id=100083780391980&mibextid=Nif5oz
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாக ஏதாவது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். இப்பொழுது TikTokஇல் கடும் உறைப்பான மிளகாயில் செய்யப்பட்ட ‘சிப்ஸ்’ஐச் சாப்பிடும் போட்டி ஒன்று வந்திருக்கிறது. இப்படியான வில்லங்கமான விடயங்கள் எந்தளவுக்கு பள்ளி மாணவர்களைச் சென்றடைகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். யேர்மனி நோர்ட்ரைன் வெஸ்ற்பாலன் மாநிலத்தில் உள்ள Euskirchener பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் TikTokஇல் நடந்து கொண்டிருக்கும் Hot Chip Challengeஐ தாங்களும் செய்து பார்க்க எத்தனித்திருக்கிறார்கள். விளைவு, பாடசாலை வளாகமே கடந்த வெள்ளிக்கிழமை அம்புலன்ஸ் வாகனங்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பரபரப்பாக இருந்திருக்கிறது. உறைப்பான சிப்ஸை சாப்பிட…
-
- 0 replies
- 616 views
-
-
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்ட் செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் இலாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்…
-
- 4 replies
- 439 views
- 1 follower
-
-
#யாழ்ப்பாண_மொக்கங்கடையைத்தேடி யாழ் பட்டினம் திட்டமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா. 1யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது! ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது! மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது! அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்! அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்! தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு! அதே போல தம்பி.. இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்! பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்…
-
- 1 reply
- 889 views
-
-
இத்தாலியில் இருந்த முதியோர் இல்லம் ஒன்று 29 யூலையில் பரபரப்பாக இருந்தது. இத்தாலியில் மோரி என்ற நகரத்தில் இருந்த முதியோர் இல்லத்துக்கு வைகாசியில்,புதிதாக வந்த முதியவர் பெப்பின் Bepìn(92) அமைதி இல்லாமல் இருந்தார். அவரது பார்வையிலேயே அவர் அந்த இல்லத்தில் இருக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்த்துப் பேசவோ தனது எண்ணத்தைச் சொல்லவோ அவர் விரும்பவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் அவர் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. தனியாக இருந்து பழையதை அசை போட்டுக் கொண்டிருந்தார். அவரது நடையைப் போலவே நாட்களும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன. ஆடி 29ந் திகதி முதியோர் இல்லம…
-
- 5 replies
- 965 views
-
-
யேர்மனியில் முன்னாள் நாசிகள் வதை முகாமில் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்தும் புனித வேலையில் இறங்கி இருக்கிறார் ஒரு இந்துமதக் குரு. அதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்த இடம், 500 பேர்கள் வசிக்கும் Springen என்னும் கிராமம். மொரீஸியஸ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட மஹாடேயோசிங் கோமல்ராம் (45) (Mahadeosingh Komalram)தான் அந்தக் குரு. ‘ஓம் சாந்தி’ பணிகளுக்காக தன் பெயரை சுவாமி விஸ்வானந்தா என மாற்றிக் கொண்டிருக்கிறார். 1998இல் ஐரோப்பா எங்கும் வலம் வந்த சுவாமி 2005இல் யேர்மனிதான் தனக்கு உகந்த இடம் எனத் தீர்மானித்து அங்கேயே தனது ஆச்சிரமத்தை அமைத்துக் கொண்டு ‘பக்தி மார்க்கம்’ என்ற பெயரில் தனது சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார். போதைப் பொருள் பாவனை, பாலியல் தொல்லைகள், சுவிஸ் நாட்டு…
-
- 1 reply
- 613 views
-
-
இறினா பிலோற்சேர்கோவெற்ஸ் (Iryna Bilotserkovets) உக்ரைனில் பெரிதும் அறியப்பட்டவள். சத்திரச்சிகிச்சை நிபுணர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், மொடல் அழகி எனப் பல பின்ணணிகள் உள்ள மூன்று பிள்ளைகளின் தாய். ரஸியா, உக்ரைன் போர் தொடங்கி மூன்றாவது நாள் தனது மூன்று பிள்ளைகளுடன் Kiew வீதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்தாள். அதிர்ஷ்டவசமாக அவளது பிள்ளைகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துக் கொண்டார்கள். தாக்குதலில் இறினா தனது ஒரு கண்ணை இழந்திருந்தாள். அவளுக்கு நாலு தடவைகள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவள் இனி உயிர்வாழ்வது கேள்விக்குறிதான் என வைத்தியர்கள் சொன்ன போதும், வாழவேண்டும் என்று அவள் உறுதியாக இருந்தாள். யேர்மனிக்கு அழைத…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
முகநூலில் வந்த ஒளிப்படம் என்னுள் கடத்திய காட்சி. ஒரு வருடத்திற்கு முன்னர் பதிந்தது. முகநூலார் கேட்டதிற்கிணங்க மீள்பதிவு செய்தது. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vqjpNu6Twx1sk4HFN7nh4fZfGcffZYYDVSsTZrEby8XLFA9nqm9Na537V2BNjQHTl&id=100083780391980&mibextid=Nif5oz
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குள் இருந்தவள், முற்றிலுமாக மாறி வெற்றிகரமான ஒரு பெண்ணாக இப்பொழுது இருக்கிறாள். காரணம் அவளுடய மகன். சொனி டெய்லர்(39) அவுஸ்திரேலியா சிட்னியைச் சேர்ந்தவள் . ஒரு ஒன்லைன் நிறுவனத்தின் சொந்தக்காரி. மில்லியன் கணக்கில் இன்று சம்பாதிக்கும் அவளது இளமைக் காலம் நன்றாக இருக்கவில்லை. நியூ சவுத் வேல்ஸ்தான் அவளது இருப்பிடம். பெற்றோருடன் அங்கிருந்துதான் அவள் வளர்ந்தாள், படித்தாள். அவளிடம் எப்போதும் ஒரு பயம் கூடவே இருந்தது. அந்தப் பயம் வெளியிடங்களில் மட்டுமல்ல அவளது வீட்டுக்குள்ளேயும் அவளுடன் இணைந்திருந்தது. இந்த உலகம் தனக்குப் பாதுகாப்பானதுதானா? என்ற ஒரு அச்சத்துடன்தான் அவளது பள்ளிப் பருவம் போய்க் கொண்டிருந்தது. பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்த…
-
- 2 replies
- 705 views
- 1 follower
-
-
காய்ச்சல் உடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது , lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸுக்கு வந்தா உடம்பு சுடுற மாதிரி இருந்திச்சுது. காயுதா காயேல்லையா எண்டு தொட்டுப் பாக்க வடிவாத் தெரியேல்லை. ஓடிப்போய் முந்தி ஒரு டொக்டரிட்டை காட்டி தந்த prescription ஐக் காட்டி pharmacy யில மருந்தை எடுத்துப் போட்டு வீட்டை வந்தன். வீட்டை வந்து சாப்பாடுக்கு எந்தக் கடை menu விலயாவது முருங்கைக்காய் கறி , மீன் தீயல் , துவரம்பருப்பு ரசம் இருக்கா எண்டு தேடீக் களைச்சுப் போய் , Uber- eats இல soup ஐ ஓடர் பண்ணீட்டு இப்போதைக்கு பிளேன்ரீயும் பிஸ்கட்டாலேம் வயித்தை நிரப்பீட்டு இருந்தன். வாங்கின Antibiotics , vitamin எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு இருக்க நித்திரை தூக்கி அடிக்க போத்த…
-
- 3 replies
- 808 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 4 ஆகஸ்ட் 2023 மனிதர்களால் நீண்ட காலமாக பருகப்பட்டு வரும் மதுபான வகைகளில் பீருக்கு முக்கிய இடம் உண்டு. பிற மது வகைகளால் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், வோட்கா, வைன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பீரில் குறைந்த சதவீதமே ஆல்கஹால் உள்ளதால் அதனால் உடலுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என்று பலரும் நம்புகின்றனர். சர்வதேச பீர் தினமான இன்று (04/07) பீர் குறித்த மக்களிடம் நிலவும் இதுபோன்ற பொதுவான புரிதல்களையும் அவற்றின் உண்மை நிலையையும் பார்க்கலாம். பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியா? வெயில் க…
-
- 0 replies
- 678 views
- 1 follower
-
-
சமீப காலமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து பலர் புது வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. பலமில்லாத அரசுகள், பண வீக்கத்தின் உயரங்கள், வரண்டு போன நிலங்கள், வாழ்வில்லாத அவலங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என அவர்கள் நிலமை மிகவும் மோசமானது. பல அபாயகரமான கடல் பயணங்கள் மூலம்தான் அவர்களது ஐரோப்பிய வருகை இப்பொழுது தொடர்கிறது. நைஜீரியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு பயணிக்க விரும்பிய நால்வரைப் பற்றிய கதைதான் இது. நைஜீரியா நாட்டுத் துறைமுகத்தில் இருந்து யூன் 27 இல் புறப்பட இருந்த ஒரு சரக்குக் கப்பலின் சுங்கான்( rudder ) இல் நான்கு இளைஞர்கள் களவாக ஏறி அமர்ந்து கொண்டார்கள். அவர்களிடம் கடவுச் சீட்டு இல்லை. பணம் இல்லை. பத்து நாட்களுக்குப் போதுமான உணவும், ஐ…
-
- 2 replies
- 695 views
-
-
பழங்கள்,சூரியகாந்தி விதைகளின் முளைகள், பழக்களிகள்,பழச்சாறுகள் போன்றவைதான் அவளது உணவாக இருந்தது. சைவ உணவு (vegan) உண்பவர் என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் அறியப்பட்ட, ரஸ்யாவைச் சேர்ந்த Zhanna Samsonova இப்பொழுது உயிருடன் இல்லை. இறக்கும் போது அவளது வயது 39 மட்டுமே. ஐந்து வருடங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த Zhanna Samsonova, அதை வலைத்தளங்களில் Zhanna D’Art என்ற பெயரில் பதிந்து வந்திருக்கிறார். அவர் எதனால் மரணமடைந்தார் என்பது அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவில் இருந்து வெளிவரும் Vechernyaya Kazan பத்திரிகைக்கு அவரது தாயார், கொலோரா போன்ற ஒரு நோயால் Zhanna இறந்திருக்கிறாள் எனக் கூறியிருக்கிறார். அவள் சோர்வாக இருந்தாள். அவளது எடை ச…
-
- 1 reply
- 497 views
-
-
ஆசிய நாட்டுக் குளவி(hornets) இனக் கூட்டம் யேர்மனிக்குப் படை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்பொழுது யேர்மனியில் Nordrhein-Westfalen, Saarland, Rheinland-Pfalz ஆகிய மாகாணங்களில் அவை பரவலாகக் காணப்படுகின்றன. எழுபதுகளின் பிற்பகுதியில்தான் நாங்கள் புலம் பெயர ஆரம்பித்தோம். அதிலும் 1983க்குப் பின்னர்தான் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக வந்தேறினோம். யேர்மனியில் அப்பொழுதே “புலம் பெயர்ந்து வருபவர்கள் தனியாக வந்து அரசியல் தஞ்சம் கேட்கவில்லை. தலைகளில் பேன் பண்ணைகளையும் கொண்டு வருகிறார்கள்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பாலர்வகுப்பு முதல் கல்லூரிவரை அன்று ‘பேன்’ பிரச்சினை ஒரு புதுப் பாடமாக இருந்தது. ஆசியக் கடைகள் யேர்மனியில் மலர்ந்து கொண்டிருந்த போது கரப்பான் பூச்…
-
- 1 reply
- 694 views
-
-
“பள்ளிச் சிநேகிதம் எல்லாம் படலைவரைதான்” என்று ஊரில் அப்போது சொல்வார்கள். அதையும் தாண்டி இது புதுமையானது. இந்தக் காதல் கதை இதுவரை அறியாததொன்று. தோமாஸ் மக்மெக்கினும்(78) நன்ஸி ஹாம்பெல்லும் (78) அமெரிக்கக் கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலம் முடிந்த பின்னர் இருவரும் அவரவர் பார்வையில் இருந்து காணாமல் போய் தங்கள் தங்களுக்கான குடும்பங்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு பாதையில் போய் விட்டார்கள். என்னதான் இருவரும் விலகி வெகு தூரம் பயணித்தாலும், காலங்கள் நீண்டுதான் போனாலும் கல்லூரி நினைவுகள் மட்டும் அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன. “அவள் ஒரு உற்சாகமான பெண். நிறைந்த அழகி. அவளைக் காணும் போதெல்லாம் நான் நொறுங்கிப் போவேன். அவளுடன் இருப்பதற்கு எப்போதாவ…
-
- 1 reply
- 921 views
-
-
http://www.vaarakesari.lk/article/10039 குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதன் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே? இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன். அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்…
-
- 0 replies
- 880 views
- 1 follower
-
-
தொழில்ரீதியாக உங்கள் உடற் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anaboleஐ பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர். Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும் சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள். உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல. உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க…
-
- 3 replies
- 843 views
- 1 follower
-
-
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் காண வாரீர் வாரீர் பேழையில் வந்த தாய்த்தெய்வமே .. எங்கள் கண்ணகித்தாயவளே.. 25.06.2023 …. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PRyaECs4iv4XPf3hWsCRUswU9FwBv9RQ56YobxSfevRQDq1NXYbaW3ouEoXQBbcCl&id=100063741202580
-
- 34 replies
- 2.1k views
-