Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. அமெரிக்க ஜனாதிபதிகள்... ஆப்ரகாம் லிங்கன், ஜான் கென்னடி வாழ்வில், நிகழ்ந்த ஒற்றுமை. 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது. 4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள். 5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் …

  2. *பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்* 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (ம…

    • 0 replies
    • 883 views
  3. 👉 https://www.facebook.com/100010573066932/videos/1196491184046639 👈 நடிகர் ராதாரவியின் பார்வையில், இலங்கைத் தமிழர்கள். 🙂

  4. 2021ஆம் ஆண்டு மன்னார் காட்டுக்குள்ள பாலைப்பழம் தேடி போன கதையின பாப்பம் வாங்க. இது 2 தரம் நான் போன அனுபவங்களை சேர்த்த ஒரு காணொளியா இருக்கும் நீங்களும் பாருங்க பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.

    • 0 replies
    • 1.1k views
  5. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து பாழடையும் நிலையில்! சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் கடந்த 2012ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சில மாத காலம் மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. பின்னர் நீச்சல் தடாகம் பராமரிப்புக்கள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. ஆடைகள் மாற்றும் அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம்.com

  6. வீடுகளில்... எரிபொருளை, சேமித்து வைப்பவர்கள் கவனத்திற்கு! பொதுவாக பெற்றோலிய எரிபொருட்கள் ஆவிப் பறப்புடையன. விசேடமாக... பெற்றோல் சாதாரண அறை வெப்பநிலையில், (25-27°C) ஆவியாகும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது வீதி வெப்பநிலை (Road Temperature) 42°C ஆகக் காணப்படும் வரட்சியான காலமாகும். இந்தக் காலத்தில் பிளாஸ்ரிக் பொருட்களில்... பெற்றோலை சேமிக்கும் போது பெற்றோல் ஆவியாகும் தன்மை அதிகமாக காணப்படும். மேலும் பிளாஸ்ரிக் பொருட்களும் பெற்றோலிய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் போத்தலினூடாக கசிந்து ஆவியாகலாம். இதற்காகவே மேலை நாடுகளில் பெற்றோலை சேமிக்க என விசேடமாக கொள்கலன்கள் சந்தையில் உள்ளன. அதற்காகவே அவற்றிற்கு விசேட சிவப்பு நிறப் …

  7. உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯 இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து…

  8. மீனுக்கு மேலும் சிக்கல், கீழும் சிக்கல். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். Between the devil and the deep blue sea. அதாவது, தமிழில், ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்று ஒரு பாடல் சொல்லும் கருத்தே அந்த ஆங்கில பழமொழியின் அர்த்தம். இது ஒரு பறக்கும் மீன். அதன் மூலம், பெரிய மீன்கள் பிடித்து தின்ன வரும் போது பறந்து, தப்பி விடும். ஆனால் அதுவே வேறு பிரச்சனையை கொடுக்கிறது.... அவ்வாறு பறக்கும் போது, மேலே பறக்கும் பறவைகளிடம் சிக்கி இரையாகும் நிலை உண்டாகிறது. ஆகவே, மேலும் சிக்கல், கீழும் சிக்கல்.

  9. டக்லஸ் தேவானந்தா அவர்கள் செய்ய வேண்டியது யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் சம்பாதித்த நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திடம் மீள செலுத்த வேண்டும். பசில் ராஜபக்சே அவர்களின் முதலீட்டுடன் யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் நடத்தபட்ட சொகுசு பஸ் வண்டி சேவையில் உழைத்த கோடிக்கணக்கான பணத்தை திறைசேரியிடம் வழங்க வேண்டும். யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான முழு மின்சார நிலுவை கட்டணமான 97 லட்சத்து 16 ஆயிரத்து 120 ரூபா 40 சதம் பணத்தை உடனடியாக மீள செலுத்த வேண்டும். …

    • 2 replies
    • 1.2k views
  10. யார்... எழுத்தாளர்? எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். இன்று மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936). இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர். அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் …

  11. பக்கத்து இலைக்கு பாயாசம்…. காலமை கோப்பி குடுத்த வெள்ளிப்பேணிகளை கிணத்தடீல வைச்சு கழுவத் தொடங்க அங்கால யூஸ் கரைக்கத் தொடங்கிச்சினம் . விசேசங்களுக்கு முதல் நாளே எசன்ஸ் வாங்கி சீனி பாணியும் சிற்றிரிக் அமிலமும் போட்டு காச்சி் வைக்கிறது . பெரிய பிளாஸ்டிக் வாளீல காச்சின எசன்ஸை ஊத்தி தண்ணி விட்டு , சாக்கில உமியைப் போட்டுக் சுத்திக் கொண்டு வந்த ஜஸ் கட்டியை வடிவா கழுவீட்டு உலக்கையால நாலு போடு போட உடைஞ்சு வாற துண்டுகளை அள்ளிப்போட்டு சீனி அளவும் பாத்து யூசைக் கரைச்சு வைச்சம். பத்தரைக்கு வெக்கையா இருக்கும் அப்ப யூஸைக் குடுங்கோ எண்டு ஓடர் வந்திச்சுது. பதினைஞ்சு பேணி அடுக்கின tray ஐ தூக்கிக்கொண்டு நடுங்காம, ஊத்தாம ஆக்களுக்கால நெளிஞ்சு சுளிஞ்சு போய் எல்லாருக்கும் குடுக்க தம்பி சரிய…

  12. திரைப்பட ஆக்கம் பற்றிய தீராத வெறிகொண்ட ஒருவர் : மற்றயவர் இசைமீது தீராத வெறிகொண்டவர் : இதனால்தான் இருவரும் ஒருபோதும் மோதிக்கொள்ளவில்லை ! இளையராஜா பாலுமகேந்திராவால் - அறிமுகப்படுத்தப்பட இருந்தவர் - சலீல் சௌத்திரியின் நட்பு தடுத்துவிட்டது : இசையருவி ராஜாவை தனது படத்தில் எந்த பின்னணி இசையுமற்று மூடுபனி - மூன்றாம் பிறை படங்களில் சில இடங்களில் காட்சிகள் நகரும் : அங்குதான் இயக்குனரும் - இசையமைப்பாளரும் கவனிக்கப்படுகிறார்கள் : பார்வை வடிவம்தான் (Visual art) திரைப்படம் - அலங்காரமற்ற அழகே அது - பாலுமகேந்தி…

    • 0 replies
    • 487 views
  13. காதல் பொன் மானே - காசு வேணுமடி என்னன்பே - மோசடி உலகம் சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் ஆரியா, ஜேர்மன் வாழ் தமிழ் பெண் ஒருவரை சமூக ஊடகம் ஊடாக அடிக்கடி பேசி திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து, பணம் வாங்கி ஏமாத்தியதாக செய்தி வந்தது. சென்னை போலீசார் இதுகுறித்து சிலரை கைது செய்தனர். ஆர்யாவுக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை என்றும் அறிவித்தனர். இங்கே பலர் கூட, போலீசார் காசு வாங்கிக் கொண்டு ஆர்யாவை தப்ப வைத்து இருப்பார்கள் என்று எழுதினார்கள். இலங்கையில் கூட, முகப்புத்தக மோசடி ஒன்றில், கண்டியில் ஒரு விதவை ஆசிரியையிடம் 25 லட்ச்சம் மோசடி குறித்து போலீசார் அறிவித்து இருந்தனர். இன்று செவ்வாய் காலை, பிபிசி யில் ஒளிபரப்பிய நிகழ்வு ஒன்றில் இந்த வகை மோசடியில், மேற்கு ஆப…

    • 14 replies
    • 1.6k views
  14. பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர் – 150 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பயனர்களின் தரவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பயனர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை விற்க உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு அபராதமாக ட்விட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும். ட்விட்டர் நிறுவனம் அதைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்புகளோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஃபெடரல் டிரேட் கமிஷன் மற்றும் நீதித்துறை கூறியுள்ளது என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. விளம்பரதாரர்களுக்கு பயனர…

  15. சட்டம் பயிலும் மாணவர்களுக்கும், சட்டவியலில் ( பிராக்டிஸ் ) பயிற்சி எடுப்பவர்களுக்கும், அமெரிக்க நீதிமன்றங்கள் வரப்பிரசாதம். வழக்குகளை நேரலை செய்வது பிரிட்டிஸ் நீதிமன்ற வழமை இல்லை, ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இது வழமை. இந்த வகையில், அமெரிக்க நீதிமன்றில் நடைபெறும், பைரேட் ஒவ் த கரிபியன் பட நடிகர் ஜோனி டெப்பிக்கும், அவரது முன்னாள் மனைவி, அம்பர் க்கேட்டுக்கும் நடக்கும் வழக்கின் தொகுப்புரை நேற்றிரவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அழகின் பின்னால் இருக்கும் நச்சாபத்தை, புட்டுப்புட்டு வைத்தார், டெப்பின் வக்கில். கொடுரமான வீட்டு வன்முறை பாதிப்பாளர் (Victim of Domestic Violence) என்று அம்மணி டெப்ப்க்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். போலீஸில்…

  16. ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன? அனபெல் லியாங் வணிக செய்தியாளர் 27 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை ஈலோன் மஸ்க் பலவழிகளில் …

  17. மனச் சாட்சிகளை, கேட்டுக் கொள்ளுங்கள்! முப்பது நாள் அமைதி வழிப் போராட்டத்தை, அதிகாரம்.. அரைமணி நேரம் அடித்ததற்கே... அரசியல் தலைவர்களை, அடித்து கொன்று முப்பது வீடுகளை கொளுத்திவிடும் கோபம் நியாயமானது என்றால்... முப்பது வருடமாக, அடிப்படை உரிமைகளுக்கு போராடிய சமூகத்தை... பேரினவாதத்தின் பெயரால்... தினம் தினம் அடித்து சித்திரவதை செய்து... குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை அநியாயமாக அசிங்கப்படுத்தி கொன்றதற்கு... வேடிக்கை பார்த்த அந்த நாட்டையே கொழுத்தி விடும் கோபம் நியாயமானதா என்பதை உங்கள் மனசாட்சிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள்! இரண்டு மாதம் எரிபொருள் இல்லாம…

  18. தாம் செய்த திருட்டு வேலையால்... நாடே, இன்று நாசமாகி விட்டது ௭ன்று தெரிந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள்... பொது மக்கள் தாக்குவாா்கள் என்ற பயத்தில் 😂 வெளியே போக பயந்து பாராளுமன்றத்திலே தூங்கிய காட்சிகள்.

  19. 👉 https://www.facebook.com/watch?v=1355781698240847 👈 பாராளுமன்றில், கண்ணீர் விட்டு அழுத... ஹாபீஸ் நஸீர் அஹமட்.

    • 2 replies
    • 607 views
  20. சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தொடர்பில் பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மாணவனான கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் .திருக்குமரன் சர்வதேச போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகையில், “இந்த மாணவன் சர்வதேச போட்டிக்காக செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ள தமிழ் மாணவன் என்பதில் பாடசாலை சமூகம் மகிழ்வடைகிறது. 2 தடவ…

  21. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து... பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நபரை தெரியுமா ? இன்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால் வர்த்தக வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நளின் பெர்னாண்டோ என அழைக்கப்படும் இவர்.2014 ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் Carrom மற்றும் Checker-boards வாங்குவதற்காக 39 மில்லியன் அரச பணத்தை மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தார் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு டிரான் அல்லஸ் அவர்கள் Reconstruction and Development Agency (RA…

  22. உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்…. “அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு கேட்டார் தம்பிஅண்ணை. தம்பிப்பிள்ளை தம்பியாகி வயது முதிர்ச்சிக்கு அண்ணன் சேர வந்த பேர் தம்பியண்ணை. கடைசீல கணக்கில கழிக்கலாம் எண்டு காசைக் கேக்காம வேலை முடிஞ்சாச் சரி எண்டு ஓடிப்போய் கேட்டதுகளை வாங்கிக்கொண்டு வந்தன். பிளேன்டீயை குடுச்சிக்கொண்டு வாயும் மோட்டச்சைக்கிளும் போட்டி போட்டுக்கொண்டு புகை கக்க நட்டுக்களை திருப்பி tune பண்ணீட்டு , “இப்ப ஓடும் , பிறகு ஒருக்கா ஆனந்தன்டைக் கொண்டு போய் carburetor ஐ செய்வம் “ எண்டு சொல்லி மோட்டச்சைக்கிளைத் தந்தார். மூண்டு நாளா அலைஞ்சதுக்கு ஒரு மாதிரி முக்கித்தக்கி ஓடிற நில…

  23. குவேனி சாபம் பற்றிய மரபுவழிக்கதையை இங்கு பார்ப்போம், தமிழ் பெண் குவேனி இட்ட சாபத்தினால் சிங்களவர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. விஜயன் யார்? வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர். …

  24. பணத்துக்கு ஆசைப்பட்டு எதை பதுக்கி வைப்பதன்று தெரியாமல் சீமெந்தை பதுக்கிவைத்து, இரண்டு மாதங்களுக்கு பின்னர் போய் பார்த்தால் கல்லாகி விட்டது. ஒண்டுமே செய்ய இயலாது தூக்கி எறிஞ்சாச்சு, சீமெந்துக்களை பதுக்கியவர்களின் பரிதாப நிலை இதுவே, இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் சில காலம் தவிர்த்தால் விலை தானாக குறையும். Shalini Charles

  25. பொறுப்பு துறப்பு …. எங்களுக்கு காலமை எழும்பிறதுக்கு alarm தேவையில்லை, நாலரைக்கு நல்லூர் மணி அடிக்க நித்திரை கலைஞ்சா, ஐஞ்சு மணிக்கு அம்மன் கோயில் மணி் எழுப்பி விட்டிடும். பாண்காரன்டை சத்தம் கேட்டா அதுக்குப் பிறகு படுத்தாலும் நித்திரை வராது. வீட்டு gateஇல கொழுவின பையில இருந்த பால்ப் போத்திலை எடுத்துக் கொண்டு வந்து மனிசீட்டைக் குடுக்க ,பிள்ளைகளை எழுப்பிக்கொண்டிருக்கிற மனிசி பேசிற பேச்சில பாதி எனக்கு மாதிரித் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரிப் பவ்வியமா இருந்தால் தான் இருக்கிற இடத்துக்குக் கோப்பி வரும். வேலைக்குப் போக முதல் மனிசி தந்த கோப்பியோட பேப்பரை விரிக்க , வழமைபோல முன்பக்கத்தில ஓரு ஓரத்தில மோட்டார் சைக்கிள் விபத்து, அந்த இடத்திலேயே ஒருவர் பலி மற்றும் இருவர் படுகாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.