கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக https://youtu.be/MsPzmh_uYog
-
- 11 replies
- 5.8k views
-
-
"கவிதை' என்றால் என்ன ? பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை ஓரமாய் நீக்கி வை "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்,அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் புது வழி ஒன்று பிறந்திருக்கும் "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்! விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே விரித்…
-
- 4 replies
- 1.1k views
-
-
”நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே இந்த நட்பும் வாழ்வும்.” * . இல்லறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஆற்றங்கரையில் இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன். . இன்று தெளிந்து போய் புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டு தொட்டுச் செல்கிறது அது நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல. . எனது கன்றுகள் முளைத்தெழுகிற நாள்வரையேனும் கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன் அது நானல்ல என்பது போல. . நேற்றைய துன்பமும் உண்மை. நாளைய பயமோ அதனினும் உண்மை எனினும் இன்றில் மொட்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார். இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ? "மழலையின் மொழி கேட்டு" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் குழவியை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "கு…
-
-
- 2 replies
- 450 views
-
-
மரம்- பிறக்கும் போது தொட்டிலானது வாழும் போது கட்டிலானது இறக்கும் போது பெட்டியானது எரிக்கும் போது நெருப்புமானது மரம் என்று தான் இருந்தேன் மனிதன் பேசாத அன்பும் அறமும் மரங்கள் பேசியது மடியில் ஏந்தி நிழலும் தந்தது மரம் இல்லையேல் மனிதன் இல்லை. பா.உதயன்✍️
-
- 2 replies
- 483 views
-
-
"கண்ணீரில் நனையும் பூக்கள்" "கண்ணீரில் நனையும் பூக்கள் இவளோ ஊண் உறக்கம் மறந்த மங்கைதானோ அண்டத்தில் அழகாய் பிறந்த விதியோ கண்ட ஆண்களையும் நம்பிய கதியோ கொண்ட கோலம் உண்மையை மறைத்ததோ?" "உள்ளங்கள் இரண்டும் உண்மையில் இணைந்தால் உயிர்கள் கலந்து காதல் மலர்ந்தால் உலகம் என்றும் இன்பச் சோலையே! உணர்ச்சியை மட்டும் கொண்ட நட்பு உனக்கு ஈவது விழிநீர் மட்டுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 346 views
-
-
ஆண் பெண்ணுக்கிடையில்ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. . சதுரங்கம்- வ.ஐ.ச.ஜெயபாலன்..சிருஸ்ட்டி வேட்கையில்ஆனைமலைக் காடுகள் பாடுகிறஅந்தி மாலை.அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்உன்னையே சுற்றுதடி மனசு..இது தீராத காதலடிநீதான் கண்டு கொள்ளவில்லை.அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்யானைபோலஉண்மையில் என் காதலும் பெரியதடி.,காமத்தில் சூரியன்பொன்சிந்த இறங்கி வர.நாணிப் புவிமகள்முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்றஉனது நாடகம் அல்லவா இது.,ஆண் பெண்ணுக்கிடையிலஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகைஎப்போதும் விரிகிறது. .என்னோடு இன்னும் சிலரைபந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்வித்தைக்காரிய…
-
- 2 replies
- 800 views
-
-
மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக ................... அழிவை ஏற்படுத்தாமல் அன்பை பெருக்கிடவருக வருக..! ஆக்ரோயத்தை காட்டாமல் ஆனந்தத்தை ஏற்படுத்த வருக வருக ....! இழப்புகளை ஏற்படுத்தாமல் இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் ஈகையை வளர்த்திட வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்உள்ளம் மகிழ்ந்திட வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் ஊர் செழிக்க வருக வருக ..!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ஏற்றங்களை தந்திட வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ஐக்கியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ஒற்றுமையை ஏற்பட…
-
- 1 reply
- 838 views
-
-
“கடிதங்களின்” கவலை..! எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை தொழில் நுட்பமென்னும் தூரதேசம் பேச, எழுத.. பல நுட்பம் வந்ததனால் எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை. அந்தக்காலத்தின்-நாம் அன்பின் பாலங்கள்.. பிரிந்து வாழ்ந்தாலும் பிரியமுடன் வாழ்ந்தாலும் எங்களைத்தான் எதிர் பார்த்தே ஏக்கமுடன் இருப்பார்கள். ஊர் விட்டுத் தள்ளிப்போன உறவுகளின் உணர்வுகளை வேர் இருக்குமிடம்பார்த்து விருப்போடு நாம் வருவோம். அந்தகிராமத்தின் அதிகாரிகளை தெரியாது ஆனால்.. குஞ்சு குருமான்கள்,இளம் குடலை, பெரியோர்கள் எல்லோர்க்கும் தெரிந்த முகம் எமை காவும் தபால் காரர் …
-
- 7 replies
- 1.7k views
-
-
"குழலூதும் இவனை பார்த்து" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் இவனை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "குழவி தளர்நடை கண்டு குதூகலித்து நான் மகிழ்ந்தேன் குழவியின் கொஞ்சிக் குலாவுதலில் குரத்தி வள்ளியை மறந்தேன்!" "தரணியில் ஓர்நிலவு கண்டேன் மழலையில் பலநிலவு கண்டேன் தரணியில…
-
- 0 replies
- 346 views
-
-
உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்த…
-
- 13 replies
- 976 views
-
-
உயிரோடு கரைதின்ற கடல்..! ************************************* கண் இமைக்குள் உனை வைத்தே! காலம் எல்லாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் தாயென்றே- உன்கால் ஓரம் கிடந்தோம். அலை கரத்தால் எம் உடலை அன்போடு தொடுவாய்…. அதை எடுத்து எம் நெஞ்சின் ஆழத்தில் புதைப்போம். உனை விட்டு ஒரு நாளும் ஊர் தள்ளி போகோம். உன் வாழ்வில் எம் வாழ்வை ஒன்றாகக் கலந்தோம். ஓர் இரவில் உன் உயரம் ஓங்கியது ஏனோ? உயிர் குடிக்க உந்தனுக்கு தூண்டியது யாரோ? தாயே தன் பிள்ளைகளின் தலை கொய்யலாமோ? தடை உடைத்து மதம் பிடித்து- எம்தடம் அழிக்கலாமோ? உன் மீது நாம் கொண்ட உயிர் பாசம் எங்கே? …
-
- 0 replies
- 305 views
-
-
மிரட்டுகின்ற மிடியனைத்தும் மிரண்டு ஓட மிடிமையிலும் மிடுக்குடனே ஒற்றுமையைப் பேண வேண்டும் அறத்தின் நெறி காக்கின்ற செயலைச் செய்து மனிதர் நாம் மனிதத்துடன் வாழ வேண்டும்! அருமை பெருமையுடன் தாய்மொழியைப் பேண வேண்டும் அரும் பெரும் புகழை எமதாக்கிக் கொள்ள வேண்டும் இருள் சூழ்ந்த நிலை போக்கி என்றும் வாழ்வில் இழப்பின்றி எம்மவர்கள் எழுச்சியுடன் ஆள வேண்டும்! கருமமே கண்ணாகக் கொள்ள வேண்டும் களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் இளகாதோர் மனமிளகச் செய்ய வேண்டும் இளமையிலே உரிமை தனை வெல்ல வேண்டும்! அரும்பாடு பட்டேனும் அறவோர் நாளும் அறிவுக்கண் திறக்க வழி செய்ய வேண்டும் அறமில்லாச் செயலுக்கு முற்றுப் புள்ளி அறிவு கொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும்! ந…
-
- 2 replies
- 674 views
-
-
"மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையா…
-
- 0 replies
- 1.2k views
-
-
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா" "ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து ஒய்யாரி கேட்குது நீ யார் ?" "துள்ளி பாயும் காட்டு மான் துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து துரத்தி வந்த புலியைப் பார்த்து துணிந்து கேட்குது நீ யார் ?" "வாமச் சொரூப கோழிக் குஞ்சு வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து வாக்குவாதம் செய்யுது நீ யார் ?" "மாணவி ஒருவள் கண்ணீர் வடிய மாதா வாக்கிய குருவை நொந்து மாழை மடபெண் வெட்கத்தை விட்டு மாசுபடுத்தியவனைக் கேட்குது ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
"காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" "புரிந்துணர்வில் புதிய பரிமாணம் கண்டு புத்தம்புது வாழ்வைக் கூடி அமைத்து புதுமை படைக்கும் எண்ணம் கொண்ட புதுமணத் தம்பதிகள் இல்லம் சொர்க்கமே!" "காரணம் தெரிந்து சொற்களை அளந்து காலம் அறிந்து மனம் ஒன்றி காமம் கலந்த பாசம் தரும் காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 576 views
-
-
அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம். ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம். உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள் உயர வைத்தாள். இருள் வந்து சூழும் போது நிலவாய் நின்றாள் எமை வளர்த்து மரமாக்க வேராய்ச் சென்றாள் உறக்கமின்றி எம்மவர்க்கு உயர்வைத் தந்தாள் உழைத்துழைத்து- உலகத்தில் ஓடாய்த் தேய்ந்தாள் தனைமறந்து எமக்காக வாழ்ந்த தாயை-அவள் தந்த உயிர் பிரியுமட்டும் நிறுத்தி வாழ்வோம். அம்மாதான் நேரில் கண்ட அன்புத்தெய்வம் அதைவிடவும் ஆலயங்கள் தேவையுண்டோ..? -பசுவூர்க்கோபி-
-
- 10 replies
- 1.4k views
-
-
பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா
-
- 2 replies
- 813 views
-
-
செக்கச் சிவந்த முகம் எப்பவுமே சிரித்த முகம் எங்க ஊரு சொந்தக்காறி தங்கமான உதட்டுக்காறி இவளை விட அழகுராணி எவள் இருப்பாள் அந்த அழகு ரோசா தோத்துப்போகும் இவள் ஆடிப்பாடி சிரிக்கும் போது .
-
- 0 replies
- 904 views
-
-
"மூன்று கவிதைகள் / 07" 'வண்டியில மாமன் பொண்ணு' வண்டியில மாமன் பொண்ணு வாரார் கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று? பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது பருவ எழில் உடலை வாட்டுது பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ? கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ? கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா? காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ? காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................. 'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்' விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும் களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும் இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும் வளர்பிறையாக…
-
- 1 reply
- 234 views
-
-
என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…
-
- 5 replies
- 803 views
-
-
புயல்களும், உழவனும்..! ****************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்னி வாழ்ந்தான். அடை மழை கட்டி வானம்-புரவி அடித்தது புயலாய் நாட்டில் பெர…
-
- 9 replies
- 1.1k views
-
-
மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை) ************************* பகுதி-1 முதலில் தக தகவென்ற மேனியை பார்த்ததும் தக்காழியை வாங்கி வைத்தேன். முந்தானையை பார்த்து முனகினேன் முருங்கக்காய் வரத்து குறைவென்றாள். கையை வைதேன் சும்மா சுறண்டாதீர்கள் மென்மையான தோல் உதிரம் வருமென்றாள் எடுத்து பார்த்தேன் பீற்றூட் கிழங்கு. அவளின் விரலை பிடிப்பதுபோல் எண்ணினேன் முளிந்து பார்த்தாள் எனது கையில் இருந்தது வெண்டிக்காய் உடைக் வேண்டாமென உறுமி விட்டு சிரித்தாள். அவளி…
-
- 11 replies
- 1.1k views
-
-
இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த நடுநிசியில் ஒலமிடும் ஆந்தைகளின் சாபங்கள் செவி மடுத்தேன். உங்கள் கவியையுமா கோத்தா சிறையெடுத்தான்? நானும் சபிக்கின்றேன் எங்கள் கவியை சிறையிட்ட பாதகன்மேல் இடியாய் நரகம் இறங்க அறம்பாடுகிறேன். ஆசை மச்சான் புதுவை, . ”விமர்சிக்கிறாய் சகிக்கிறோம் எனெனில் நீ தேசபக்தன்” என்ற உன் தோழமையை எண்ணிக் கரைகின்றேன் தோழமையே உனது மொழி தோழமையே உனது வழி தோழமையே உன் கவிதை தோழமையே தத்துவமாய் எனக்கு தோழ்கொடுத்த பெருவாழ்வே வேடமில்ல நட்ப்பின் வேந்தனே ஊதுகிறேன் சங்கு உனைத் தின்ற கோழைக்கு.
-
- 3 replies
- 1.5k views
-