கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார். கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ? இல்லை, அறனும் கொலையானானோ ? பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று பால்குடி மழலை எல்லாம் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன். அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார் அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே அநீதிக்கு ஆட்சியும் நீதிக்குப் பாடையும் ஆண்டவா நீதி எங்கே உந்தன் அருள் ஆட்சி செத்ததிங்கே …
-
- 2 replies
- 1.1k views
-
-
நிகழ்வுகளானது சுழலும் போது நினைவுகளானது நீளும் காட்சிகளானது அலை மோதும் அவை உளமதில் ஆட்சி புரியும்! உணர்ந்ததும் உணராததுமாய் உள்ளங்கள் நடிப்பதும் உரைத்திட மறுப்பதும் உண்மைக்குப் புறம்பாகும்! தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன் ஆவான் தன்னைத் தானே வெல்லாதவன் தனக்குத் தானே பகைவன் ஆவான்! அறிந்தும் புரிந்தே அநீதிகள் புரிபவரும் துரோகங்கள் புரிபவரும் பாரிற்கு பாரமானவரே! இறந்தவர் பிறப்பதும் பிறந்தவர் இறப்பதும் வாழ்வியலின் நியதியும் உண்மையியலின் நியதியும் ஆகுமே! காலமதின் குரலாய் வையமதில் கேட்டிடும் துன்பமதன் ஓலங்கள் வாழ்வியலின் துயரங்கள்! வஞ்சமதை புதைத்து விட்டு விரோதமதை விரட்டி விட்டு மனிதமதை வளர்த்து விட்டால் மானிடமது செ…
-
- 8 replies
- 1.2k views
-
-
BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 . 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உய…
-
- 1 reply
- 1.1k views
-
-
"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 817 views
-
-
2004 ம் ஆண்டின் இயற்கையின் கோரத்தாண்டவம் சுணாமியாக அடித்து எம் உறவுகளை பறிகொடுத்த 16 ஆண்டுகளின் நினவாக..அன்று எனது மனத்துயரத்தை கவிதையாய் எழுதிப் படித்திருந்தேன் அன்றைய ஆறாக் கவலையை இன்றும் உங்களுடன் ..பசுவூர்க்கோபி https://www.youtube.com/user/PasuvoorkGobi
-
- 0 replies
- 821 views
-
-
எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை மங்குதிங்கே மதியற்றோர் கொண்ட மடத்தாலே! நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும் நாடிங்கு எழுவதெந்நாள் நாணுதிங்கே நாணமற்றோர் கொண்ட நடப்பாலே! நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே நாடிய மக்கள் நலமெங்கே நாம் நாடுகின்ற நாடொன்று நாளாகத் தேய்வதிங்கே நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே! தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே தடையை உடைத்தாலே மனித்த பிறவி பயனறிந்த மனிதநேய தமிழரங்கே மடையை உடைத்தாலே தனித்த நாடொன்று தனியாயங்கே அமைந்திடுமே தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே! நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே சீரான உணர்வுகளை சீர்மிகுந்த நற்…
-
- 2 replies
- 519 views
-
-
வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 1.1k views
-
-
'மாற்றம் மாறாதது' "காதல் தந்த பார்வையும் மங்கும் காமம் தந்த உடலும் கூனும் காடுகள் அழிந்து நகரங்கள் தோன்றும் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "காலியான குளமும் நிரம்பி வடியும் காசுகள் தொலைந்து வறுமை வாட்டும் காவலர்கள் கூட கொள்ளை அடிப்பர் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "உற்சாகம் தரும் வெற்றியும் தோல்வியாகும் அற்புதமான உடலும் கருகிப் போகும் முற்றத்து துளசியும் வெறிச் சோடும் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது" "ஏற்றமும் இறக்கமும் மனதை மாற்றும் ஒற்றுமை குலைத்து பகையைக் கூட்டும் குற்றம் இழைத்தவனும் அரசன் ஆவான் மாற்றம்…
-
- 0 replies
- 328 views
-
-
https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் …
-
-
- 2 replies
- 704 views
-
-
-
- 3 replies
- 979 views
-
-
என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம், தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?
-
- 12 replies
- 4.1k views
-
-
ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் மே 18 ம் நாள் காலை பொழுது ஒன்றில் கையில் இரத்தங்களுடன் கடந்து போகின்றன பேரிரைச்சலோடு இராணுவ வண்டிகள் சாம்பல் மேடுகளை தாண்டியபடி அந்த ஊழியின் கடைசி தினம் அன்று பாதி பாண் துண்டை என் தம்பியின் கையில் கொடுத்து விட்டு நானும் தம்பியுமாக அம்மாவை பார்த்தபடி அந்த பதுங்கு குழியில் என்று தொடங்கும் அவளது டயரி குறிப்பு அன்று ஒரு நாள் அந்த நாசி படைகளுக்கு அஞ்சியபடி அந்த அவுஸ்வைஸ் சிறையில் இருந்து எழுதிய சிறுமி அன்னா பிராங்கின் யுத்த கால டயரி குறிப்புகள் போலவே இருந்தன .
-
- 0 replies
- 1.1k views
-
-
எங்கும் நிலையானது எதிலும் நினைவேயது உயிரின் தவமேயது உயிர் வடிவின் படைப்பேயது வழிக்குத் துணையாவது உலகில் எதுவோவது! மதியாலது உருவாகுவது விதியாலது உருவாவ(ன)து மதியால் அது மாற்ற இயலாதது புரிந்தும் புரியாததால் அது மாறா விதியானது சில மரமண்டைகள் புரியாததால் புதிரானது! உறவாலது உருவாவது பிரிவாலும் மறையாதது உடலைத் தான் என்பதால் விளைந்த கதிதானது இங்கு நானாவது அங்கு நீயாவது உயிரே உயிரானது! வெறும் பெயரென்பது தானே வேறென்பது எல்லாம் ஒன்றானது பிரித்தால் பலவாகுது இரு மெய்யாலது உருவாகு(வ)து பல பொய்யாலது பிரித்தாலும் பிரியாதது! ஞானம் அடைந்தோரது கூற்றை உணர்ந்தோரது வாழ்வில் நிறைவானது என்று உளதோவது கொடுத்தாலது குறையாதது கொடுக்க நிறைவாவது உலகில் ஒன்றேயது செலுத்தும் அன்பேயது …
-
- 2 replies
- 1.7k views
-
-
நவீன கவிதை / "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந…
-
-
- 2 replies
- 1.4k views
-
-
தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…
-
- 4 replies
- 885 views
-
-
துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் போர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும் போதும் என்கிறதுமனம் உணர்வெல்லாம் விற்று வெறுமை வாங்கி சாம்பல் வெளியொன்றில்-அது புரண்டிடத் துடிக்கிறது விழி திறந்த வேளைகளில் வெறுமைகள் தேடி பிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது சலித்துக் கொள்கிறது போதும்...போதும் என்று ஆர்ப்பரித்து புழுதி புரண்டழுகிறது வர்ணமெல்லாம் சேறுபூசி தூரவெறிந்த தூரிகைகளை தேடியெடுத்து கோபத்தோடு எரிக்கிறது குருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி நகையாடி கெக்காளமிட்டுதச் சிரிக்கிறது இந்…
-
- 12 replies
- 3.6k views
-
-
"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!" "சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !" "ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் தர்மமும் தானமும் செய் என்றான் ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன் தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !" "தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் தர்ம சாலை கட்டித் திறந்தேன் ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" "மார் தட்டி சத்தம் போட்டேன் கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் மோர் ஊற்றி விழா நடத்தினேன் சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" "கார் காலம் கோடை ஆக தேர்தல் ஒன்று நாட்டை சூழ சேர்த்த …
-
- 0 replies
- 381 views
-
-
'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தி…
-
-
- 4 replies
- 482 views
- 2 followers
-
-
நீண்ட கவிதை கொஞ்சம் பொறுமையாய் படியுங்கள் இன்றைய உலகின் யதார்த்தம் இது தான். அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை-பா.உதயன் —————————————————————————————- அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு இறக்குகிறது இறுதி மூச்சோடு ஏதோ புசுதாய் இன்னுமொரு ரிசேவ் படையுடன் முயூடேசன் என்ற பெயரோடு அப்பன் போலவே தப்பாமல் ஒரு பிள்ளை பிறந்திருக்கான் அவனைப் போலவே ஆட்டத்தை தொடங்கப் போறானோ ஆருக்குத் தெரியும் மூன்று தளங்களை முழுமையாய் வீழ்த்தி முதல் அடி இருட்டு அடி போல் இங்கிலாந்தை விழுத்திப் போட்டுது இன்று தொடக்கம் இன்னும் ஒருக்கா இழுத்து மூ…
-
- 4 replies
- 980 views
-
-
வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...
-
- 0 replies
- 732 views
-
-
தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெய்ப் பொருள…
-
- 6 replies
- 1.1k views
-
-
தேவைகளுக்கு என்றும் இல்லை முற்றுப்புள்ளி தேடல்கள் அதிகமாகும் போது தேவைகள் அதிகமாகுகின்றன தேவைக்கதிகமாக தேடியதெல்லாம் தேவையில்லையெனத் தூக்கி எறியப்பட்ட பின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேவைகள்...! நேற்று பணத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று பிணமாகக் கிடக்கின்றான் நேற்று சுகத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று சுமையாகக் கிடக்கின்றான் நிம்மதிக்கான தேவையே இங்கு தேவைப்படுகின்றது ஆனால் நிம்மதி மட்டும் நிற்காமல் செல்கின்றது...! எதற்காக இந்தத் தேவை...? எவருக்காக இந்தத் தேவை...? புரியாத இந்தத் தேவை முடியாதோ இந்தத் தேவை...? முடிந்து விடும் ஒரு நாளில்... மனிதனைத் தேடும் அந்த மண்ணறையின் தேவை ஒரு நாள் தீர்ந்து விடும…
-
- 8 replies
- 1.1k views
-
-
சன்னல்: -இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. நண்பர் பேராசிரியர் ஒய்விண்ட் புக்ளரூட் சன்னல் கவிதையை நோர்வீஜிய மொழியாக்கம் செய்தார். சன்னலின் நோர்வீஜிய மொழியாக்கம் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் ’நோராட்’ இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆர்வமுள்ள பெண்மணி செல்வி. நினி ரொப் எனது விசா அலுவலராக அமைந்தது அதிஸ்ட்டம் என்றே சொல்ல வேண்டும். சன்னல்கவிதை அவரைக் கவர்ந்ததது. அதனால் அவர் இக்கவிதையை குடிவரவு திணைக்கள் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு நீதி அமைச்சு அதிகார்களுக்கு பிரதி அனுப்பினார். இதனால் என் செல்வாக்கு உயர்ந்ததது. மட்டக்களப்பு அபிவிருத்தி தொடர்பான என்கட்டுரையின் பங்களிப்பின் அடிப்படையில் நோராட் என்னை தென்னாசிய நிபுணர் என கடிதம் தந்தது, அதன் அடிப்படையில் எனது கலைஞர்கள…
-
- 0 replies
- 1.3k views
-