Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-

    • 1 reply
    • 1.3k views
  2. என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…

    • 5 replies
    • 809 views
  3. வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…! ******************** 2019..! ஆண்டொன்றை முடித்து அனைவருக்கும் அகவையெனும். விருதை வழங்கி வெளிக்கிடும் ஆண்டே வேதனையும் சோதனையும் வெற்றிகளும் தந்தவனே உன் வாழ்வில் போன உயிர் உன் மடியில் பிறந்த உயிர் என்றும் மறவோம் நாம்-எனி எமையாள யார் வருவார். 2020..! உன்னுக்குள் எமை வைத்து ஓராண்டு உன்வாழ்வின் எண்ணற்ற நிமிடமெல்லாம் எமைக்காக்க வருவாயே! புதிய உன் வரவால் பூமித்தாய் மலரட்டும் புதுமைகள் பிறக்கட்டும் இயற்கை செழிக்கட்டும் இன்னல்கள் அழியட்டும் பொய்,களவு பொறாமை போலியான வாழ்க்கை போதைக்கு அடிமை சாதி,மத சண்டை சரும நிற வெறித்தனம் அரசியல் சாக்கடை ஆதிக்…

  4. எத்தனையோ துன்பத்திலே உலகம் கிடக்குது எத்தனையோ துன்பத்திலே உலகம் கிடக்குது இரவு பகலாய் கொரோனா பிடிக்க மனிதன் அலைகிறான் ஆனா இம்பட்டுத்தான் வாழ்கை என்று ஒருத்தன் சொல்கிறான் இனி கடவுள் இருக்கா என்று வந்து குதர்க்கம் பேசுறான் முதலாளித்தும் முடியுது என்று சோசலிசம் சொல்லுது அந்த வல்லரசு நாட்டுக்கெல்லாம் வந்த வினை என்கிறான் கர்மம் வந்து தொலைக்குது என்று அந்த சாமி சொல்லுது அட அடுத்த நாள் உணவுக்காகா மனிதன் அழுகிறான் அவனுக்கு கடவுள் உண்டு இல்லை என்ற விவாதம் தேவையா இல்லை கர்மம் வந்து தொலைக்குது என்று சொல்லத் தேவையா இத்தனைக்கு நடுவினிலே மனிதம் துடிக்குது இனி என்ன செய்வேன் வாழ்வுக்கு என்று ஏங்கி துட…

    • 2 replies
    • 1.1k views
  5. எப்போது போலவே நான் இருந்த ஊர் இது இப்போ இல்லை நான் நடந்து திரிந்த பாதை இல்லை இது இப்போ இப்போ மனிதரையும் காணவில்லை சாலையில் இருந்த போதும் நகர்கிறது நம்பிக்கை மட்டும் நதி ஒன்று ஊர்ந்தது போல் இன்னும் ஓர் இயற்கையின் சங்கீத மொழிக்காய் காத்திருக்கிறது மனிதம் உயிர்த்து எழும் காலம் ஒன்றிற்காய் உன் மொழியோடு பேச நினைக்கிறது என் ஆன்மா.

    • 3 replies
    • 755 views
  6. கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …

  7. தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…

    • 0 replies
    • 861 views
  8. Started by karu,

    கொரணா விளைவு மரணாவஸ்தையில் தவிக்கும் உலக மனித குலத்தை மீட்டிடக் கொடிய கொரணா வைரஸை இல்லாதொழித்துக் கொண்டாடும் நாள் எந்த நாளோ. சுற்றம் கூடி அன்போடிருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் பயமே இல்லாதிருந்து சந்தோஷிக்கும் நாள் எந்நாளோ செல்லும் விருந்தை வாழ்த்தியனுப்பி சேரும் விருந்தை அன்போடழைத்து பொல்லாக் கொரணா இல்லா மகிழ்வில் பொழுதைக் கழிக்கும் நாள் எந்நாளோ? அந்த நாளிவ் அவனிக்(கு) உதிக்குமா? அனைவருமொன்றாய்ச் சேர்ந்திட வருமா? சிந்தையிலெந்தச் சந்தேகங்களும் சேராதுறவுகள் சிரித்திட முடியுமா? உற்றவர் கூடி உகுத்துக் கண்ணீர் ஊரின் புறத்தே தூக்கிச்செ…

    • 4 replies
    • 1.2k views
  9. Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத சுமைகளை சுமந்தபடியே பெரியவர் குழந்தைகள் என தாண்ட முடியாத ஒரு தூரத்தை தாண்ட முயற்சிக்கின்றனர் நிலவின் துணையோடு நீண்டதூரம் போகிறார்கள் அன்று ஒரு நாள் போர் தின்று முடித்த பூமியில் இருந்து போனவர் போலவே ஏதோ விதி என்றும் சிலர் தமக்குள் பேசிக்க…

    • 0 replies
    • 893 views
  10. நான் மட்டும் தனித்திருக்கிறேன் கொடுமையான நீ தோற்றுவிட்டாய். உன்னாலும் முடியவில்லை. எவராலும் முடியாது என்பது தெளிவாகவே எனக்கு தெரிகிறது. உலகையே ஆட்டிப் படைக்கும் உன்னாலும் முடியாது. கொரோனாவே முடியாது. உன்னாலும் முடியாது. உனது பார்வையிலிருந்து தப்ப எல்லோரும் வீட்டில் இருந்தே ஆகவேண்டும் என்ற போது பயத்திலும் ஓர் மகிழ்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது. வீட்டில் எல்லோரும் ஒன்றாக, ஆனாலும் இடைவெளி விட்டிருந்து மனம்விட்டு பேசலாம் என மனதுக்குள் நினைப்பு எழுந்தது. ஆனால் எல்லாமே பொய்த்துப்போனது. தொடர்ந்தும் தனித் தீவுகளாகவே வாழ்க்கை நகருகின்றது. கணவன் தன் காதலியுடன் பொழுதைப் போக்க, மகன் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்து வ…

    • 0 replies
    • 889 views
  11. BEYOND THE CORONA VIRUS கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன் * மலர்கிறது முல்லை கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே என் மாடித்தோட்டம். கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின் மரண அமைதி அதிர கருவண்டுகள் இசைக்கிறது ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல். * அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா . அடாது கொட்டும் வெண்பனியையும் வீழாவாய் கொண்டாடும் ஒஸ்லோ நகரும் முடங்கியதே. கூதிரில் தனித்த என் மனைவிக்கு பூக்களும் இல்லை. எனினும் எனினும் இடுக்கண் வருங்கால் நகைக்கும் புதல்வர்களை விட்டு வந்தேனே.…

    • 4 replies
    • 874 views
  12. கொரோனா என்ற ஓர் கொலைக்காரி-பா.உதயன் கொரோனா என்ற ஓர் கொலைக்காரி எம்மை கொடுமை செய்யப் பிறந்தாளா அடி தடியோடு திரிகின்றாள் அனைவரும் வீட்டுக்குள் பதுங்கின்றார் மேட் இன் சீனா என்கின்றாள் கடை தெரு எல்லாம் கிடக்கின்றாள் காணும் இடம் எல்லாம் விற்கின்றாள் காசு இல்லாமலும் தருகின்றாள் குழந்தை குஞ்சு என்று தெரியாமல் கட்டை கிழடு என்று காணாமல் காலனைப் போலே தினம் வந்து கயிறு வீசித் திரிகின்றாள் கொரோனா என்று ஒரு கொலைக்காறி எம்மை கொல்லத் தான் பிறந்தாளோ யாருக்கும் அடங்கா சண்டியரும் அவளுக்கு பயந்து பதுங்கின்றனர் அடுத்த வீட்டு அமீர் அண்ணை குடும்பம் ஆறு புள்ளை பிஞ்சோட பள்ளிக்கூடம் இல்லாம படுத்தும் தொல்லை தாங்காதாம் கொரோனா …

    • 2 replies
    • 924 views
  13. கொரன.. கொரன.. கொரனா கொரன..கொரன..கொரனா நீயும் ஒரு காதல் வைரஸ் தானா நீ ஒட்டிக்கொள்ளும் காதலன் நானா.. நுண் உலகின் ரதி நீ தானா.. உன்னை அணைத்துக் கொள்ளும் மன்மதனும் நானா கொரன கொரன கொரனா தும்மல் வந்ததும் வருது உன் காதல் தானா காய்ச்சல் வருவதும் சிக்னல் தானா கூட இருமித் தள்ளுவதும் கீதம் தானா.. கொரன.. கொரன.. கொரனா சுவாசப்பையெனும் பூங்காவில் ஊர்கோலம் தானா வில்லங்கமான உடல்கள் என்றால் ஊடல் தானா மரண ஓலம் பரிசும் தானா உடல் வில்லன்கள் வந்தால் காதல் முறிவு தானா உன் காதலின் சாவில் என் வாழ்வும் தானா. கொரன கொரன கொரனா உன் காதலின் தூது கழுவாத க…

    • 1 reply
    • 1.6k views
  14. இந்திய குடிஉரிமைச்சட்டம் Indian Citizenship (Amendment) Act இத்தால் அறியத்தருவது என்னவெனில் இந்துத்துவா மண்ணை விட்டு வந்தேறியள் குடியேறிகள் அகதிகள் அனாதைகள் இந்துக்கள் இல்லாதவர்கள் இலங்கைத்தமிழர்கள் வேண்டப்படாதவர் வெளியேறுங்கள் பயமாக இருக்கிறது எம்மை தேடி அவர்கள் வந்தால் எங்கே ஒளிப்பதென்று தெரியவில்லை காந்தியும் இல்லை ஜின்னாவும் இல்லை காப்பாற்ற யாரும் இல்லை. B.Uthayan l believe l have a truth you believe you have a truth I will respect you truth please respect my truth Swami Vivekananda

    • 0 replies
    • 486 views
  15. Sri Lanka has withdrawn from a UN resolution that would allow war crimes allegedly committed during the country's civil war to be investigated. கண்ணை மூடி பால் குடித்த பூனை அத்தனை பொய்களையும் ஐ நா மனித உரிமை மன்றில் பேசிய அமைச்சரின் உரை பூனை கண்ணை மூடியபடி பால் குடிப்பது போல் இருந்தது அழகான ராஜதந்திர வார்த்தைகளும் அபிவிருத்தி என்றும் அரசியல் சாணக்கியத்தில் ஒளித்து இருந்தபடி இனவாதி பேராசிரியர் பீரிஸ் எழுதிக் கொடுத்ததை பெருமையாக வந்து வாசித்துப்போனார் அமைச்சர் அறம் அன்பு அடுத்தவர் துன்பம் எதையுமே அறியாதவர் இறுதியில் அந்த புத்தனின் தத்துவத்தை சாட்சிக்கு அழைத்து அந்த புத்தரையும் ஐ நா சபையையும் அவமதித்தது போல்…

  16. புலனங்களில் கடலை போடும் உரையாடல் படிப்புக்கான தகவல் தேட மறந்திடல் பிறர் நசை நிலையை தகுதி பக்கத்தில் 30 நிமிடம் குறும்படமாக காணாமல் தவிர்த்தால் சிலர் உறவுகள் முறிந்திடல் விடலை பருவத்தில் விளையும் உணர்வுகள் வன்மமும் திகைக்கும் மோதல்கள் காமமும் பகைக்கும் பலருடன் பாலியல் உறவுகள் கிளை இல்லாத மரங்களா வலைதளத்தில் வரதா தகத விளம்பரங்களா நற்பண்புகள் வளர்வது நாம் கொண்ட எண்ணங்களாளா தீமைகள் விளைவது உள்ளுணர்வை கட்டமைக்காததளா பாலையின் கானலில் நீரில்லை பாலும் கல்லும் ஒன்றில்லை இலையின் நிறம் பச்சை என்றுமே நீரின் மீது அதற்கில்லை இச்சை அதே போல் என் மனசாட்சியை மதிப்பிடல் செய்திடுங்கள் பரிச்சயம் இல்லாமல் பா…

  17. ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...

  18. பகலவன் பார்வையிலே பதுங்கி நிற்கும் நிழலே சிறு தட்பம் தந்தாய் பாதத்திலே அந்த நிமிடம் இளைப்பாறிய தேகத்திலே புத்துணர்வு தந்தாய் புன்னகை வெட்கத்திலே இந்த இரவு நேரத்திலே இதயத்தின் ஓரத்திலே உன் மீது தோன்றிய மோகத்தினாலே உன்னை எண்ணி வர்ணித்தேன் சில வரிகளாளே........

  19. வைகறை நேரத்தில் கரை தாண்டி கடல் தீண்டி கட்டுமரம் சென்றதே அந்தி மாலை ஆனதே அந்த ஆதவனும் அரைபாதியாக மேற்கு எல்லையில் நின்றதே கரை திரும்புமா கட்டுமரம் அதில் எனை மணம்முடித்த மணவாளனும் பாதுகாப்பாக திரும்பி வந்திடுவானா என காத்திருக்கும் மனைவியின் கன்னத்தில் கண்ணீர் துளிகளும் தாமத்தின் பதற்றத்தில் மங்கை அவள் மனதில் நடுகடலில் ஆழிசுழல் வந்து களத்தினை பாதித்ததோ அண்டை நாட்டு கள்வர்களால் பாவம் நிகழ்ந்திருக்குமோ என எல்லைக்கடந்ததே எண்ணங்கள் என்னவளின் மனதில் என கூறிடும் அலையின் சலனங்கள் அதை என்றும் கைது செய்திட ஆளில்லை என்னவளின் அச்சத்தினால் அதை நிறைவு செய்திட இயலவில்லை கண்ணெதிர கணவனை காணும் வரை....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.