தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10297 topics in this forum
-
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – கொளத்தூர் மணி – பகுதி – 1 72 Views கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள். பிறந்தநாள் நினைவாக எமது மின்னிதழில் வெளியாகிய கட்டுரையின் முதல் பகுதி புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து – வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்ற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களைய…
-
- 1 reply
- 546 views
-
-
தமிழினப் படுகொலை புரிந்தும், மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாகியும், சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக குற்றக் கூண்டில் நிற்கும் இலங்கை அரசு கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதே கேலிக்கும், கண்டனத்திற்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத் தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே கச்சத் தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும…
-
- 1 reply
- 367 views
-
-
டோன்ட் வொர்ரி...: அடுத்த பரபரப்பை கிளப்பும் அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர். சென்னை: மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பே கலைக்கப்பட்ட நிலையிலும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் அசராமல் திமுக தலைமையுடன் அடுத்த போஸ்டர் யுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் பிறந்த நாள் ஜனவரி 30-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அழகிரி ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர். இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மன்னிப்பு கேட்க வே…
-
- 1 reply
- 768 views
-
-
லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, அ.தி.மு.க., அணியின் கதவுகள் மூடப்பட்டு உள்ளதால், அனைவரின் பார்வையும், தி.மு.க., அணியின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தினமலருக்கு' , நேற்று அளித்த, சிறப்பு பேட்டியில், பா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, தன்னுடைய நண்பர் என, கூறி, கூட்டணியின் போக்கு தொடர்பாக, புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார். முழு பேட்டி வருமாறு: * கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவிக்க, தேர்தல் கமிஷன் தடை போட்டிருக்கிறதே... அது பற்றி, தங்கள் கருத்து என்ன?இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும்போது, அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், தெளிவுபடுத்த வேண்டுமென்று, தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கி…
-
- 1 reply
- 763 views
-
-
இவர்தான் 10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி! #RealMersalDoctor ``சாதாரண அழுக்கு உடையுடனும், உழைத்துக் களைத்த முகத்துடனும் கையில் இருபது ரூபாயுடன், `இவ்ளோதான் சார் இருக்கு. இதுக்குள்ள வைத்தியம் பார்த்துடுங்க'னு வந்து நிப்பாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த இருபது ரூபாயை வாங்கிட்டு ஊசி போட்டு மாத்திரையையும் கொடுத்தனுப்பிருவேன். `எதுக்கு இருபது ரூபா வாங்குறீங்க... சும்மாவே ட்ரீட்மென்ட் கொடுக்கல?’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது... அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்காவது பணம் வேணுமில்லையா? அதனாலதான் அவங்களால முடிஞ்ச காசை வாங்கிக்கிறேன்...’’ மிக இயல்பாகப் பேசுகிறார் டாக்டர் ராமசாம…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரத்தை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தலைவர் பதவியை பிடிப்பதற்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திரு நாவுக்கரசர் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: தலைவர் பதவிக்காக பலபேர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம், வாசன், சுதர்சன நாச்சி யப்பன் இந்த மூவருக்கும் இடையில் தான் கடும்போட்டி நிலவுக…
-
- 1 reply
- 464 views
-
-
திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். அதனையடுத்து அவர் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார். திமுக பொதுக்குழு கூடி ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்துக் கேட்டபோது, ''1,500 பேர் மட்டுமே கட்சியை உருவாக்கிவிட முடியாது. உண்ம…
-
- 1 reply
- 605 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது. அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர். 'இறையில்ல இல்ல திறப்பு விழா' என பெயர் சூட்டிய கிராம மக்கள் கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்…
-
- 1 reply
- 560 views
- 1 follower
-
-
மூக்கில் ரியூப்... வீல்சேர்... வாக்குச்சாவடியில் கருணாநிதியை நினைவுபடுத்திய க.அன்பழகனுக்கு என்னவாயிற்று..? 96 வயதில் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்து கருணாநிதியை நினைவு படுத்தி சென்றிருக்கிறார் அவரது நண்பரான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். ’என் 18 வயதில் துணைக்கு வந்த நண்பன்’ என்று கருணாநிதியால் சிலாகிக்கப்பட்டவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே சோர்வடைந்து விட்ட அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அடிக்கடி காய்ச்சல், சளித்தொல்லைகள் ஏற்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 28-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்…
-
- 1 reply
- 714 views
-
-
பட மூலாதாரம்,TWITTER @VERTIGOWARRIOR படக்குறிப்பு, ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார் கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தஃபா பதவி, பத்திரிக்கையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 22 செப்டெம்பர் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் க…
-
- 1 reply
- 749 views
- 1 follower
-
-
`வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்களால், பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குளிக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டும், தனியே வருமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொந்தரவு செய்த நிலையில் சனிக்கிழமை இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக காவல் துறை கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், "எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வ…
-
- 1 reply
- 584 views
-
-
'இந்த 16 எம்.எல்.ஏக்களும் என் கட்டுப்பாட்டில்!' -கார்டனை கதிகலங்க வைத்த விஜயபாஸ்கர் 'தமிழக அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகின்றனர் மூத்த அமைச்சர்கள். ' டெல்லியின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் ஒரே வழி என தினகரனிடம் எடுத்துக் கூறியும், விஜயபாஸ்கரைக் காப்பாற்றும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது கார்டன்' என்கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையமாக வைத்து, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இந…
-
- 1 reply
- 1.1k views
-
-
முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! கலகலக்கும் தலைமைச்செயலகம் முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது. அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.…
-
- 1 reply
- 337 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடுமையான குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது சென்னை நகரம். சுமார் 85 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்திற்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது? நெருக்கமான நகரம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தலைமைச் செயலகத்தில் ரெய்டு... அப்போது ஜெயா பிளஸ்ஸில் நடந்தது என்ன? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறையின் சோதனை நடக்கிறது. அனேகமாய் இப்படி நடப்பது முதல் தடவையாய் இருக்கும் என்கிற அளவிற்கு நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கின்றன. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரப் பூர்வ நியூஸ் சேனலான ஜெயா பிளஸ் மட்டும் செவ்வாய் கிரகத்திலிருந்து இயங்கும் போல. 'மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண, எங்க எது நடந்தா எனக்கென்ன' ரேஞ்சுக்கு செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு சில: * அமராவதி அணைப்பகுதியில் 8 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. (ஆஹான்!) * மாண்புமிகு…
-
- 1 reply
- 814 views
-
-
சென்னை: காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார…
-
- 1 reply
- 592 views
-
-
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு' ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தமிழ் திரையுலக அமைப்புகளின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிராஜா பேசியது: தமிழ்ச் சமூகத்துக்கு மானபங்கம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடு…
-
- 1 reply
- 661 views
-
-
இலங்கைக்கு... சீன கப்பல் : பாதுகாப்பை தீவிரப்படுத்தியது தமிழகம். சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதன்படி பல பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு முக்கிய நிறுவனங்களிலும் போதுமான ஆட்களை அனுப்பவும், கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்தக் கப்பல் கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொர…
-
- 1 reply
- 308 views
-
-
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று மாலை 4.45 மணிக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அளித்துள்ள தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை உலக அளவில் உயர்த்தி இருக்கின்றது. சாதாரண மனிதனும் அதிகார லகான்களைக் கையில் ஏந்த முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது. உங்கள் கட்சியின் சின்னமான துடைப்பம் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத் தாழ்வாரத்தில் நடமாட விடாமல் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உயர்த்துகின்ற விதத்தில், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியை வரவேற்று ந…
-
- 1 reply
- 498 views
-
-
இதுக்கு ஒரு என்ட்கார்டே இல்லையா.. விஜயலட்சுமி விவகாரத்தில் நாளை சீமான் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்? Mathivanan MaranPublished: Sunday, September 17, 2023, 12:27 [IST] சீமானுடன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2008-ம் ஆண்டு சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்; பின்னர் ஏமாற்றிவிட்டார் என 2011-ல் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் திடீரென விஜயலட்சுமி தமது புகாரை திரும்பப் பெற்றதால் ஓய்ந்தது. 12 ஆண்டுக்கு பின் புகார்: ஆனால் சீமான் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து வீடியோ பதிவுகளில் முன்வைத்து வந்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆண்டுகளுக்கு முன் சொன்ன …
-
- 1 reply
- 681 views
-
-
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் நேற்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குறித்த மீனவர…
-
- 1 reply
- 515 views
-
-
தனித்தமிழீழ வாக்கெடுப்பு நடத்தகோரியும்,சிறீலங்கா அரசினை கண்டித்தும் கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி 40 மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் ஜான்பீட்டர் இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். கண் பார்வையற்ற நிலையிலும் தமது இன உணர்வு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/27965/64/40/d,fullart.aspx
-
- 1 reply
- 567 views
-
-
நாங்கள் சீர்திருத்தவாதிகள் அல்ல, புரட்சியவாதிகள்: சீமான் மின்னம்பலம்2022-02-17 நாங்கள் சீர்திருத்தவாதிகள் இல்லை; புரட்சியவாதிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று(பிப்ரவரி 17) செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. நேர்மையான, ஊழலற்ற, தூய்மையான ஆட்சி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் என்றைக்கு ஒழிந்துபோகும் என்று தெரியவில்லை. கோயில் கருவறையில் இருந்து …
-
- 1 reply
- 386 views
-
-
சென்னை: கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும் படி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர…
-
- 1 reply
- 579 views
-