Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா? மின்னம்பலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி, பிரமுகர்கள் ஆகியோர் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவி பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள…

  2. தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 5 தாதியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழகத்தில்-கணிசமான-மருத/

  3. சென்னை முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 8 வெளிநாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதியில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருக்களான ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் தங்கியிருந்துள்ளனர். சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் விதிகளை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. இது குறித்துத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆணையர் கோடிலிங்கம் தலைமையில் சிறப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.polimernews.com/dne…

    • 1 reply
    • 701 views
  4. தமிழகத்தில் கொரோனா: 8 மருத்துவர்கள் உட்பட 1075 பேருக்கு பாதிப்பு FAcebook தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் என்றார். புதிதாக கொரோனா தாகத்திற்கு ஆளானவர்கள் என இன்று (ஏப்ரல் 12)அடையாளம் காணப்பட்ட 106 நபர்களில், 16 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றவர்கள் என்றும் மீதமுள்ள 90 நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார். Getty Images தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு ம…

  5. 'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?' ARUN SANKAR / Getty கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார். தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். #whoareyouedappadi என்ற ஹேஷ்டேகும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே …

  6. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றானது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் 10 ஆகக் காணப்பட்ட உயிரிழப்பு, தற்போது 11ஆக உயர்வடைந்துள்ளது. சென்னை, புளியந்தூரைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் ஓமந்தூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளமையினைத் தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையில், …

  7. முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்! மின்னம்பலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற வதந்தி சில ஊடகங்களாலும், சமூக தளங்களில் கணிசமானோராலும் முன்னெடுக்கப்பட்டதால், சமுதாயத்தின் கீழ் நிலையில் இருக்கும் முஸ்லிம் வியாபாரிகளின் நிலை சொல்லொணா துயரத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா தொற்றுக்கும் தப்லீக் மாநாட்டுக்கும் தொடர்புபடுத்தி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒட்டுமொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 33% மட்டுமே பேர் தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளார் லவ் அகர்வால் குறிப்பிட்ட பிறகும்.. ஒட்டுமொத்த கொரோனா தொற்றும் முஸ்லிம்களால் ஏற்பட்டத…

    • 7 replies
    • 1.2k views
  8. 2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மருத்துவர்கள் பரிந்துரை! மின்னம்பலம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர்கள் குழு முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இ…

  9. தி.மலை: வந்தவாசி அருகே மழையில் நனைந்து 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. ஆயல்வாடி, மலையூர் கிராமங்களில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. 144 தடையால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளன. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577955

  10. கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றை…

  11. தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு தமிழகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முந்தினம் 621 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண…

    • 1 reply
    • 742 views
  12. கொரோனா: தமிழகத்தில் 690 பேர் பாதிப்பு: 7 பேர் பலி! மின்னம்பலம் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைய தினம் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66,431. அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253. 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 27,416. புதிதாக 2 பரிசோதனை ஆய்வகங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 5305 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 690 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

  13. சென்னையில் பாரிய தீ விபத்து – போராடி அணைத்த வீரர்கள்! சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு அருகில் அரசாங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பேரில் நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும், சிலர் செல்போன்களில் டோர்ச் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சில இடங்களில் பட்டாசுகளையும் வெடித்தனர். இந்நிலையில், சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புக்கு அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான…

  14. திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் ப…

  15. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மர…

  16. 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் 2020-04-06@ 10:05:50 சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே நாளில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றி தான் வருகின்றனர். அந்…

  17. குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பைத் தொடர்ந்த…

  18. தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச்…

  19. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும். பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79…

  20. மூன்றாவது கட்டத்துக்கு செல்கிறோமா?- பீலா ராஜேஷ் பேட்டி . தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் 86 பேர் கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. 86 பேரில் 85 பேர் டெல்லிச் சென்று திரும்பியவர்கள். ஒருவர் துபாயிலிருந்து வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்று 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 690 என்கிற எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: “வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 90824 பேர், 10818 பேர் 28 நாள் தனிமைப்…

  21. தமிழகத்தில் சிக்கிய மலேசியர்களை அங்கு அனுப்பும் முயற்சியில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பயணிகளுடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பி மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 மலேசியர்கள் சிக்கினர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் உள்நாடு மற்றும் சா்வதேச விமானசேவைகள் வரும் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கிக்கொண்டனா்.குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவிக்கின்றனா். மலேசியா அரசு இந்திய அரசுடன் பேசி தங்கள் நாட்டவரை தனி சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி கேட்டது.இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்தது. அதன்பேரில் கடந்த வெள்ளிக்…

    • 1 reply
    • 591 views
  22. சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர் சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்ச…

    • 2 replies
    • 493 views
  23. ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு …

  24. ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர் பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லப் போராடும் தொழிலாளர்கள் நடந்தும், காய்கறி லாரிகளில் லிப்ட் கேட்டும் 275 கி.மீ கடந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி அதிகாலை தொடங்கி இதுவரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு திரும்ப வாகன வசதியின்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து வருகின்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் டீக்கடை, ஹோட் டல்களில்…

  25. ஓட்டப்பிடாரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள், மலர் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்லை, கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி பூ மார்க்கெட்டுகளுக்கு தென்காசி, மானூர், சங்கரன்கோவில், கங்கைகொண்டான், நாலாட்டின்புத்தூர், காமநாயக்கன்பட்டி, தெய்வசெயல்புரம், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், கொம்பாடி, கீழமுடிமண், ஆரைக்குளம், கப்பிகுளம், கீழமங்கலம், குப்பனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, செவ்வந்தி, சாமந்தி போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.