தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
சென்னையில் கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழப்பு சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணித்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் நேற்று மட்டும் அங்கு 316 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 56 வயது முதியவர், 80 வயது மூதாட்டி ஆகியோர் இன்று உயிரிழந்தனர். இதேபோல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாம்பரத்தைச் சேர்ந்த 76 வயது முதியவரும் இன்று உயிரிழந்த நிலையில் சென்னையில் இன்று தற்போதுவ…
-
- 0 replies
- 487 views
-
-
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி! by : Benitlas அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது. கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வர்த்தகக் கடன் இலங்கையில் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உயர்தர மருத்துவப் பொருட்களின் கொள்…
-
- 0 replies
- 438 views
-
-
கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலையின்மை: இந்தியாவிலேயே புதுவை, தமிழகம் முதலிடம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் Getty Images வடமாநிலத் தொழிலார்கள் அதிக அளவில் வெளியேறியுள்ளதால் தொழில்கள் முடங்கியுள்ளது தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்க காரணமாகியுள்ளது. (கோப்புப்படம்) கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது. சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி (சி.எம்.ஐ.இ) என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில்…
-
- 0 replies
- 703 views
-
-
தணிகாசலம் கைது - கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தவரை கைது செய்தது போலீஸ் கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார். இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 2 replies
- 715 views
-
-
ரஜினியின் உதவி: தயாரிப்பாளர்கள் மத்தியில் மோதல்! மின்னம்பலம் ரஜினி எங்கு வந்தாலும், பேசினாலும் அது விவாதப் பொருளாக மாறி முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அது போன்று தான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் வழங்கப்படுவதாக இருந்த அரிசி - மளிகை சாமான்கள் விவகாரமாகி வீதிக்கு வந்துவிட்டது. இதனைத் தொலைக்காட்சிகள் தங்கள் செய்தி பசிக்கு இரையாக்கி ஒரே நேரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் குடும்ப தேவைக்கு அரிசி பருப்பு கூட வாங்க முடியாத வறுமையில் இருப்பதான தோற்றத்தை உலகம் முழுமையும் கொண்டு சேர்த்துள்ளது. கொரோனா காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கிவிட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வசதி படைத்த திரைத் துறையினரிடம் உதவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வரியை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் மதுபான விலை உயர்கிறது! இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானத்தின் விலை உயர்கிறது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சாதாரண வகை 180மிலி மதுபான போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை 180மிலி போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/வரிய…
-
- 0 replies
- 408 views
-
-
மே 17 வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு…! சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே தமிழத்தில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ம…
-
- 0 replies
- 897 views
-
-
கால்நடைகளுக்குத் தக்காளி: கடும் விலை சரிவால் பயிரிட்ட தொகை கூடக் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள் ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்தி அதிகரித்த நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவற்றை விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதால் மொத்த விலையில் ரூ.1க்கும் சில்லறை விலையில் ரூ.5க்கும் தக்காளி விலை சரிவடைந்துள்ளது. இதனால் பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளுக்குத் தக்காளியை உணவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தக்காளி, பீன்…
-
- 0 replies
- 491 views
-
-
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை! மின்னம்பலம் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குடை பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடந்தது.…
-
- 7 replies
- 1.2k views
-
-
`பிள்ளை மாதிரி வளர்த்த வாழையை வெட்டி அழிச்சிட்டீங்களே'- வனத்துறை செயலால் கதறும் பழங்குடிகள் ஆர்.குமரேசன் வெட்டிய வாழை காப்புக் காடுகளில் விவசாயம் செய்வதாகச் சொல்லி, வாழை விவசாயத்தை, வளர்த்தவர்களையே வெட்டச் சொல்லி அழித்திருக்கிறது வனத்துறை. ``அத்துவான காட்டுல வாழுற எங்களை இப்படி வதைக்கிறீங்களே... பிள்ளைக மாதிரி வளத்த வாழையை வெட்டுறீங்களே... எங்க வீட்டுல இன்னிக்கு அரைக்காபடி அரிசி இல்லை. கூலிக்கும் போகமுடியல. வாழையை வெட்டி எங்க குடும்பத்தையே அழிக்குற மாதிரி அழிச்சீட்டீங்களே... அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம்வரைக்கும் இங்கதானே வாழுறோம். இந்தப் பாரஸ்டுல தத்தெடுக்குறோம்... தத்தெடுக்குறோம்னு சொல்றீங்க. இதுதான் நீங்கத் தத்தெடுக…
-
- 15 replies
- 1.6k views
-
-
கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவவில்லை- மதுரை பல்கலைக்கழகம் அறிவிப்பு கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விஞ்ஞானி மாரிமுத்து தெரிவித்துள்ளார். மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையினர் வௌவால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 35 மாணவர்கள் வௌவாலின் குண நலன்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆய்வு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், தேசிய விஞ்ஞான கழகத்தின் கௌரவ விஞ்ஞானியுமான மாரிமுத்து தெரிவிக்கையில், “உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளத…
-
- 0 replies
- 430 views
-
-
தமிழகத்தின் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள்! மின்னம்பலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் தீவிர கொரோனா பாதிப்பு கொண்ட சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 133 மாவட்டங்கள் சிவப்பு மண்டத்தில் இடம்பிடித்துள்ளன. உத்தர பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் 12 மாவட்டங்களுடன் தமிழகம் உள்ளது. பெருநகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதர…
-
- 0 replies
- 631 views
-
-
மதுரை மாநகரில் மக்களை துரத்தும் கரோனா தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வந்தோருக்கும், டெல்லி நிகழ்வுக்குச் சென்று வந்தோருக்கும் மட்டுமே பரிசோதனை மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டது. முதல் முறையாக தமிழகத்தில் உள் ளூரைச் சேர்ந்த ஒரு நபராக மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உட்பட மதுரையில் அடுத்தடுத்து பலருக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த சில வாரங் களாக மதுரையில் கரோனா கட் டுக்குள் இருந்தது. சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி என …
-
- 0 replies
- 863 views
-
-
கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் ! இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது. கொரோனா தொற்றை காரணம் காட்டி, அரசு எந்தவித முன்தயாரிப்பும் செய்துகொள்ளாமல் ஊரடங்கை அறிவிப்பு செய்துவிட்டது. பெரும்பான்மை மக்களுக்கு முன்தயாரிப்பு செய்துகொள்ள போதிய நேரம் தரவில்லை. விளைவு பெரும்பான்மை மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி, வறுமையிலும் பசியிலும் தள்ளியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பது நமது கடமை என்ற அடிப்படையில், சட்ட மாணவர்களும், இளம் வழக்கறிஞர்களும், கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்…
-
- 0 replies
- 442 views
-
-
கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 12 வயதுக்கு உட்பட்ட 110 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் கோவையில் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தையும் காணப்படுகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 110 குழந்தைகளில் 59 ஆண் குழந்தையும், 51 பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 448 views
-
-
உடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை! தமிழ் நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு 6 மாதம் வரை வட்டித் தள்ளுபடி வழங்கவேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பேசாத முதலமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பேசினார்கள். இந்நிலையில் நேரமின்மை காரணமாக, பிற மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பிரதமருக்கு ஃபக்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். அந்தவகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன…
-
- 3 replies
- 584 views
-
-
24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன – அமைச்சர் விஜயபாஸ்கர் ஐ.சி.எம்.ஆரின் ஆணைப்படி 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுவதால், அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேபிட் பரிசோதனை கருவிகளை வாங்கியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உலகமே போட்டி போட்டு ரேபிட் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வாங்க முயற்சித்த நேரத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்) ரேபிட் பரிசோதனைக்கு அனுமதியளித்தது. அந்த கருவிகளை எங்கு, யாரிடம் வாங்கலாம் என்பதை ஐ.ச…
-
- 4 replies
- 642 views
-
-
யாழில் உயிரிழந்த தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க அனுமதி வேண்டும் – முருகன் அரசுக்கு வேண்டுகோள் தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க அனுமதி வழங்க வேண்டுமென்று சிறையில் உள்ள முருகன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகனின் தந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார். இந்நிலையில் கடைசியாகத் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும…
-
- 0 replies
- 614 views
-
-
தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் by : Benitlas கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா கோரியது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்க…
-
- 8 replies
- 865 views
-
-
கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை.. மாதந்தோறும் ரூ. 45,000 சொந்தப் பணத்தில்.. அசத்தல் இளைஞர்! புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும், கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரின் அயராத பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனிலும் கலாமின் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வலம் வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் புதுச்சேரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம். கடந்த 4 ஆண்டுகளாக கலாம் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இதில் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர் தனது சொந்த செலவில் …
-
- 1 reply
- 631 views
-
-
ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தெரிவிப்பு! கொரோனா நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்ட ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்தை தொடங்கினார். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட…
-
- 0 replies
- 755 views
-
-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''எங்கள் பர்ஸ் காலி'' வேதனையில் மக்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Getty Images தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. சென்னை நகரத்தில் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்துள்ளதால், இன்று (ஏப்ரல்…
-
- 3 replies
- 658 views
-
-
அதிரடியாக மூடப்பட்டது சென்னை அண்ணாசாலை! கொரோனா ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், சென்னை அண்ணாசாலையை மூடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை மையப் புள்ளியாக உள்ளது. இங்கு மட்டும் 400 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சென்னை அண்ணாசாலையில் அண்ணா மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வரை வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. விதிகளை மீறி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்…
-
- 0 replies
- 563 views
-
-
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழப்பவருக்கு 50 இலட்சம் இழப்பீடு- முதல்வர் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியின்போது வைத்தியத் துறையினர் தொற்று ஏற்பட்டு துரதிஷ்டவசமாக இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவத் துறை மட்டுமின்றி பொலிஸ் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்கள…
-
- 1 reply
- 382 views
-
-
தமிழகத்தை தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாக அறிவித்தது மாநில அரசு! by : Litharsan தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939இன் 62ஆவது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76இன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், மதம் சார்ந்த இடங்கள் என அனைத்திலும் சவர்க்காரம், தண்ணீர் வசதியுடன் கூடிய கைகழுவும் இடம் அமைக்கவும் அங்கு வந்து செல்வோர் கை கழுவுவதை உறுதி செய்…
-
- 0 replies
- 475 views
-