Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்சம் அளவுக்கு அபராதம் வியாழக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைதாகி, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வலம்வந்த 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.2 கோடியே 68 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை ரூ.1 கோடியே 46 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் அளவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்க…

    • 0 replies
    • 799 views
  2. சென்னையில் 27 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இந்தியாவின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் 95 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொலைக்காட்சியில் தற்போது தற்காலிமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தி…

  3. கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதி – விஜயகாந்த் அறிவிப்பு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், மருத்துவத்துறையை தேர்வு செய்து மக்கள் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்…

  4. தமிழகத்தில் மீண்டும் சடுதியான அதிகரிப்பு: மேலும் 105 பேருக்கு கொரோனா! தமிழ்நாட்டில் மேலும் 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், விழுப்புரத்தில் 7 பேரும் கடலூரில் 6 பேரும் தென்காசியில் 4 பேருக்கும் இன்று வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இதனைவிட திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் தலா 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்…

  5. இந்நேரத்தில் சமூக அக்கறை இல்லை என்றால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை!- களப்பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை பேட்டி திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் தற்காலிகக் காய்கறிச் சந்தையில் தன்னார்வலராய்ப் பணியில் இருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை புஷ்பலதா. முகக்கவசம் இல்லாமல் வருகிறவர்களிடம் பேசுகிறார்; அவர்களுக்கு முகக்கவசம் அளிக்கிறார். சந்தைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால் அதை ஒழுங்குபடுத்துகிறார். எடமலைப்பட்டிப் புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் புஷ்பலதா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 70 சிப்பம் அரிசியைக் கொடையாளர்களிடமிருந்து பெற்று ஏழை மக்களுக்குப் பகிர்ந்தள…

  6. தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள். புதுச்சேரி ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும். அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கட…

  7. முதலமைச்சருக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு என்பது பாலபாடம்! எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒரு முதலமைச்சர் பேசுவது ஜனநாயகப் பண்பல்ல! முதலமைச்சர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயகப் பண்பல்ல - அதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: உலக நாடுகளையே வதைத்துக் கொண் டும், வரலாறு காணாத உயிர்ப் பலிகளை ‘காவு'…

  8. தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 1372 ஆக உயர்வு! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த முதலாம் திகதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 …

  9. கொரோனா வைரஸை முற்றாக அழிக்கும் கிருமிநாசினி ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறனர். சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்பொழுது உலகில் இரண்டு மில்லியனுக்கு மேல் மக்களை பாதித்து, ஒரு இலட்சத்துக்கும் மேலானவர்களை உயிர் பலி வாங்கி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை எப்படி ஒழிப்பது என தெரியாமல் உலகநாடுகள் தவித்து வருகின்றன. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவுகிறது. இதை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கிருமி நாசினியை பயன்படுத்தினால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். ஆனால் வைரஸை அழிக்க முடியாது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை…

  10. யூன் 24 வரை ஊரடங்கு.? கிடைத்தது ஆதாரம்..! பேரதிர்ச்சியில் மக்கள் ..! கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் தற்போது வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது . இதற்கு முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிய இருந்த நிலையில்,கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து,மே 3 வரையில் மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சியில் மக்கள் தேவையில்லாமல் வ…

  11. அடக்கம் செய்யப்பட்ட முதியவருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிப்பு; சிந்தாதிரிபேட்டையில் ஒரு தெரு முழுதும் சீல்: சுகாதாரத்துறையினரின் அலட்சியம்? கரோனா சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளையும் தமிழக அரசும், பொது சுகாதாரத்துறையும் மிக கவனமாகவும், பொறுப்புடனும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஆங்காங்கே காணப்படும் அலட்சியத்தால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு நிலை சென்னையில் நடந்துள்ளது. சென்னை தமிழகத்தில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாவட்டம். ஹாட்ஸ்பாட்டில் உள்ள மாவட்டம் ஆகும். சென்னையில் 228 பேருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. சென்னையில் 3 மண்டலங்களில் அதிக தொற்று உள்ளது. இதில் 5 வது மண்டலமான ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவி…

  12. வாட்ஸப் பார்த்து ஏழ்மைக் குடும்பத்துக்கு நிவாரண உதவி: வேதாரண்யம் டிஎஸ்பிக்குக் குவியும் பாராட்டு வாட்ஸ்அப் மற்றும் முகநூல் வழியாக தெரிய வந்த தகவலை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக விரைந்து சென்று வறுமை மற்றும் நோயால் வாடிய குடும்பத்துக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்திருக்கிறார் வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சபிபுல்லா. வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கின்றனர். அவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் வருமானம் கிடைக்காமல் உணவுக்கும் வழியில்லாமல் வாடினார்கள். போலியாவால் பாத…

  13. அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து பரீட்சைகளும் இரத்து! அண்ணா பல்கலைக்கழகத்தின் தவணைப் பரீட்சைகள் உட்பட அனைத்து பரீட்சைகளும் தேர்வுகளும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பதாகவும், பரீட்சை குறித்த அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அண்மையில் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த வகுப்புகள், தவணைப் பரீட்சைகள், திட்ட மதிப்புகள் மற்றும் அனைத்து வகுப்புப் பரீட்சைகளும் இரத…

  14. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மத குருமார்கள், தொற்று நோயைப் பரப்பியதாக தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இதுவரை 129 பேர் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருக்கிறது. வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசின் கண்காணிப்பில் 213 பேரும் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும், இதுவரை 7,267 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அனுப்பப்பட்டதில் 485 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டி இருப்பத…

  15. தமிழ் நாட்டின் தென்காசி அருகில் உள்ள அய்யாபுரம் கிராமத்தின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொரோனா விலிருந்து தமது ஊரை பாதுகாகக்க பல கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இளைஞர்கள் ஒன்று இணைந்து ஊரின் முகப்பின் சுவரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். டிரம்களில் தண்ணீர் மற்றும் சவற்காரம் வைக்கப்பட்டு ஊருக்குள் செல்பவர்கள் தங்கள் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின் முகக்கவசம் அணிந்த பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதே வேளை இவ் கிராமத்தின் குழந்தைகள் ஒன்றிணைந்து தனது பெற்றோர்கள் உதவியுடன் கொரோனாவுக்கான விழிப்புணர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். …

    • 0 replies
    • 366 views
  16. தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு பிளாஸ்மா சிகிக்சை! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிக்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் அனுமதி கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா என்பது இரத்தத்தில் உள்ள திரவ மூலக்கூறு ஆகும். இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த எதிர்ப்பு அணுக்களுடனான பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தும்போது அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அனுமதி கிடைத்த பின்னர் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை…

  17. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை தண்ணீரில் கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர். நீரில் கலந்து மெத்தனாலை அருந்திய சந்திரகாசம் (55) என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி ஜி…

    • 1 reply
    • 566 views
  18. சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் by : Benitlas சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு பொலிஸார் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றறனர். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்து கொள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். சென்னையிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டா…

    • 2 replies
    • 865 views
  19. கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா? மின்னம்பலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி, பிரமுகர்கள் ஆகியோர் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவி பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள…

  20. தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 5 தாதியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழகத்தில்-கணிசமான-மருத/

  21. சென்னை முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 8 வெளிநாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதியில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருக்களான ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் தங்கியிருந்துள்ளனர். சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் விதிகளை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது. இது குறித்துத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆணையர் கோடிலிங்கம் தலைமையில் சிறப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.polimernews.com/dne…

    • 1 reply
    • 708 views
  22. தமிழகத்தில் கொரோனா: 8 மருத்துவர்கள் உட்பட 1075 பேருக்கு பாதிப்பு FAcebook தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் என்றார். புதிதாக கொரோனா தாகத்திற்கு ஆளானவர்கள் என இன்று (ஏப்ரல் 12)அடையாளம் காணப்பட்ட 106 நபர்களில், 16 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றவர்கள் என்றும் மீதமுள்ள 90 நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார். Getty Images தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு ம…

  23. 'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?' ARUN SANKAR / Getty கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார். தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். #whoareyouedappadi என்ற ஹேஷ்டேகும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே …

  24. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றானது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் 10 ஆகக் காணப்பட்ட உயிரிழப்பு, தற்போது 11ஆக உயர்வடைந்துள்ளது. சென்னை, புளியந்தூரைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் ஓமந்தூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளமையினைத் தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையில், …

  25. முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்! மின்னம்பலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற வதந்தி சில ஊடகங்களாலும், சமூக தளங்களில் கணிசமானோராலும் முன்னெடுக்கப்பட்டதால், சமுதாயத்தின் கீழ் நிலையில் இருக்கும் முஸ்லிம் வியாபாரிகளின் நிலை சொல்லொணா துயரத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா தொற்றுக்கும் தப்லீக் மாநாட்டுக்கும் தொடர்புபடுத்தி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒட்டுமொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 33% மட்டுமே பேர் தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளார் லவ் அகர்வால் குறிப்பிட்ட பிறகும்.. ஒட்டுமொத்த கொரோனா தொற்றும் முஸ்லிம்களால் ஏற்பட்டத…

    • 7 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.