Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கழகங்கள் இல்லா தமிழகம்... சீமானையும் வளைக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகள்- சிக்குவாரா? சென்னை: தமிழர் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள மீட்டெடுப்பு முழக்கங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை 'இந்துத்துவாவாதி' என முத்திரை குத்தி தங்கள் பக்கம் இழுக்கத் துடிக்கிறது இந்துத்துவா சக்திகள். தந்தை பெரியாரின் பேரன்... பிரபாகரனின் தம்பி... மார்க்ஸின் மாணவன்... இதுதான் தொடக்க கால அரசியல் மேடைகளில் சீமான் தம்மைப் பற்றி பிரகடனம் செய்து கொண்டது. திராவிடர் இயக்க மேடைகளில் தொடக்க காலங்களில் பகுத்தறிவு பிரசாரம் செய்தார் சீமான். தலைகீழாக முயற்சி திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழர் வாழ்வுரிமையை பேசும் அரசியலை முன்வைத்து வருகிறார் சீமான். தமிழகத்…

  2. 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும்! 2ஜி வழக்கு தொடர்பாக தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்து இருந்தார். அதன்படி 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று அறிவிக்க உள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது. …

  3. இளம் நடிகர்களின் கள நிவாரணப் பணிகளும் கமல்ஹாசனின் ஜன்னலோர வேடிக்கையும்! சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, கமல்ஹாசன் | கோப்புப் படம் சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் திரையுலக பிரபலங்கள் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி இரவு, பகல் பார்க்காமல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கமல் ஒரு பேட்டியில் ''ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார். நடிகர்களின் களப் பணி …

  4. கோயில் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சூப்பர் தீர்ப்பு.. பெருமகிழ்ச்சியில் சீமான்! Velmurugan PPublished:December 4 2020, 20:35 [IST] இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் ஆநிலையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி தொடுத்த வழக்கில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி கண்டிப்பாகத் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்டு மதுரை உயர் நீதிமன்றக்கிளை தீர்ப்பு வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அபராதம் அன்று தமிழன்னைக்குச் சாற்றிய மணிமகுடத்தில் மேலும் வைரக்கற்கள் பதித்தது போல, கரூர் ஆநிலையப்பர் கோயிலில் நடைப்பெற்ற குடமுழு…

  5. `ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு' - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? கு. ராமகிருஷ்ணன் விவசாயம் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் இதன் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்…

    • 1 reply
    • 437 views
  6. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு - கூவத்தூரில் தங்கும் சசிகலா! சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருப்பதால், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று தங்குகிறார். சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து நான்கு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாட…

  7. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அக்கட்சி, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2-இல் வெற்றி பெற்றது. ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். அதன் பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி, கடந்த ஜூனில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அக…

  8. வெற்றி பெறுமா ரஜினியின் அரசியல் கணக்கு? பகிர்க சினிமா வியாபாரத்தில் 1980 முதல் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் நேரடி போடியாளர்களாக திகழ்ந்தார்கள். இவர்களின் போட்டி பல தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபகரமாக அமைந்தது. சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும், சினிமாவை தாண்டிய வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாகவே இருவரும் பழகி வருகின்றனர். பெரிய போட்டியாளர்கள், நல்ல நண்பர்கள் என வலம் வந்த ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் இன்று அரசியல்வாதிகளாக உருவெடுத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிவிட்டர் மூலமாக அரசியல் பதிவுகளை வெளியிட்டுவந்த கமல்ஹாசன், மதுரையி…

  9. பட மூலாதாரம்,PONMUDI 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம். ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்…

  10. தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி... தலைவர் ரேஸில் முந்தும் ஹெச். ராஜா..? தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஹெச். ராஜாக்கு அந்த வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா செயல்பட்டுவருகிறார். செயல் தலைவராக ஜே.பி.நட்டாவும் இருந்துவருகிறார். இந்நிலையில் அகில இந்திய பாஜக உட்கட்சித் தேர்தல் செப்டம்பர் 11 முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக மாவட்ட, மாநில வாரியாகத் தலைவர்கள் தேர்வு முடிந்த பிறகு தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டு, பிறகு பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் தேர்தல் அதிகாரி ராதாமோகன் சிங் அறிவித்துள்ளார். மேல…

  11. சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு... பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார். மகளைப் பார்ப்பதற்காக வந்த அந்தத் தொழிலாளி, ராஜ்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர், மருத்துவமனையில் சென்று பார்த்தபோது சிறுமி சுயநினைவில்லாமல் இரு…

  12. ஜல்லிக்கட்டு : மெரினாவில் நிகழ்த்தப்பட்ட காட்சிகளும், அதன் பின்கதையும்! காட்சி - 1 சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நடுவே திடீரென ‘நான் விலகிக்குறேங்க’ என ஒரு வீடியோ வருகிறது. அதுநாள் வரை ஒன்றாக இருந்த கூட்டம்... சட்டென இருதரப்பாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறது, ‘நாங்க அப்பவே சொன்னோம்ல போதும்ன்னு’ என ஒரு தரப்பு; ‘இன்னும் நிரந்தரத் தீர்வு கிடைக்கலையே’ என ஒரு தரப்பு. விக்ரமன் படம்போல இருந்த சோஷியல் மீடியாக்கள், ‘பேரரசு’ படம்போல எக்கச்சக்க களேபரங்களுக்கு உள்ளாகின்றன. காட்சி - 2 ‘நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும்’ என அறிவிப்பு வெளியாகிறது. ‘அவ்ளோதான் திரும்பி வாங்க’ என சில நிர்வாகங்கள் தங்கள் மாணவர்க…

  13. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY/MANJUNATH KIRAN காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர…

  14. இனப்படுகொலையை நடாத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் லைக்கா மொபைல் நிறுவனத்தை தமிழகத்தில் ஒருபோதும் கால்பதிக்க அனுமதிக்க மாட்டோம். கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட மாணவர்களாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்திரைப்படத்தையொட்டிப் பல போராட்டங்களை நடாத்த தமிழ்நாட்டில் திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (10-08-2014) விஜய் வீட்டை முற்றுகையிட மாணவர்கள் ஆகிய நாம் தீர்மானித்திருக்கிறோம். http://www.pathivu.com/news/32977/57//d,article_full.aspx

  15. கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியு…

  16. போட்டியிலிருந்து விலகல்: வைகோ மனமாற்றத்தின் பின்னணி என்ன? - விடிய விடிய விவாதித்த பின் எடுத்த முடிவு வைகோ| கோப்புப் படம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வைகோவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள் நலக்கூட்டணியின் தொண்டர் ஒருவர் செருப்பை வீசுகிறார். படங்கள்: என்.ராஜேஷ். கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த சம் பவமே வைகோவின் தேர்தல் போட்டியிடும் முடிவை மாற்றி யுள்ளது. கோவில்பட…

  17. திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திடீரென்று அறிவித்துள்ளார். மரக்காணம் கலவரத்தை அடுத்து திருமாவளவன் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகி அதிமுகவோடு கூட்டணி அமைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இக்கலவரத்தில் பாமகவுடன் திமுக சற்று நெருங்கிய தொடர்பினை மேற்கொண்டு வந்தது. மருத்துவமனையில் ராமதாசை நேரில் சென்று பார்த்து தங்களது தொடர்பினை திமுகவின் தீவிரமாக்கிக் கொண்டிருந்தனர். இதுபோன்ற சூழலில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அன்புமணி ராமதாஸ் மிகத் தெளிவ…

  18. ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா வீடியோ! #VikatanExclusive இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் களம் காணும் இத்தொகுதியில் வேட்பாளர்கள் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக (அம்மா ) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் அணி நேற்றுமுதல் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யத்துவங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த பகுதிகளைப்பொறுத்து வாக்காளர்களுக்கு தலா 2000 முதல் 4000 வரை பணம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாலையில் வீடுவிட…

  19. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 09:46 AM எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை (24) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இராமநாதபுரம்…

  20. மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின். மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இ ன்று (15) விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனை வெளியிட்டு அவர் கூறியதாவது: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இ றுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீ…

  21. "சசிகலா முதல்வர் பதவி ஏற்கவிருக்கிறாரா?’’ பொன்னையன் பதில்! அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்குமாறு வலியுறுத்தி, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சசிகலாவிடம் நேரில் வழங்கப்பட்டது. பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வெளிமாவ…

  22. தமிழ்நாடு விவசாயம்: அதிக வருவாய் தரும் விதைப்பண்ணை அமைப்பது எப்படி? ஏ.எம்.சுதாகர் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் விதைப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் மேம்பட்ட வருவாய் ஈட்ட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம் உருவாகியிருக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாமல், பருவநிலையும் அவர்கள் விதைப் பண்ணைகளை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. நெல், நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, ஆமணக்கு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளையும் உற்பத்தி செய்து, ஆண்டு மு…

  23. திருச்சியில் வைகாசி 24, 2015 அன்று இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சியால நடத்தப்பட இருக்கிறது.. யாழ்களத்தைப் பார்வையிடும் தமிழகத்தோழர்கள் கண்டிப்பாக சென்று வரவேண்டும் என உங்கள் உறவாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்..! செ. இராசன் (காஞ்சி மண்டலச் செயலாளர்) அழைப்பு: அன்பு தென்னரசன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அழைப்பு: கு. செந்தில் (திருவள்ளூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்) அழைப்பு:

  24. 'மறுபிறவி எடுத்துள்ளேன்' - முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் மேலும், 'அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனது உடல்நலம் குறித்து அவர்,'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை' என்றுள்ளார். …

  25. தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனம் பற்றிய பன்வாரிலால் புரோஹித்தின் சர்ச்சை பேச்சு - பின்னணி என்ன? 22 அக்டோபர் 2022, 10:03 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றியது மிக மோசமான அனுபவமாக இருந்தது என்றும், துணைவேந்தர் பதவிகள் ரூ.40 முதல் ரூ.50கோடிகள் வரை விற்கப்படும் சூழல் இருந்தது என்றும், தன்னுடைய பதவிக் காலத்தில் தான் நியாயமாக 27 பதவிகளுக்கு நியமனம் செய்ததாகவும் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக இருக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.