தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10298 topics in this forum
-
சூட்கேஸ் பெட்டி ஸ்கூட்டர் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்துள்ளார். பயணிகளின் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாசடைதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை இது குறைக்கும் என்றும் ஹேர்ல் யாங் சாய் என்னும் அந்த விவசாயி கூறியுள்ளார். தனது சூட்கேஸை அமெரிக்க விமானம் ஒன்றில் தொலைத்த பின்னர் 10 வருடங்கள் முயற்சி செய்து இவர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதற்கு ''சிட்டி கப்'' என்று அவர் பெயரும் வைத்துள்ளார். விமான நிலையத்தில் பார்க்கிங் பிரச்சினை, தள்ளுவண்டி பிரச்சின எதுவும் கூட இதலால் இல்லாது போய்விடுகிறது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது பயணிக்கும். பட்டரியில் இயங்கும் இதில் வழிகாட்டும் கருவியான ஜிபிஎஸ் நவிகேசன் கூட இருக்கி…
-
- 1 reply
- 558 views
-
-
ஜெயலலிதா மரணம்: இப்போதும் சூழ்ந்திருக்கும் ஆறு சர்ச்சை கேள்விகள் 27 ஆகஸ்ட் 2022, 03:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் அவர் கொல்லப்பட்டார் என்றும் அப்போது ஆளும் அதிமுகவில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது இறுதி அறிக்கையை தமிழ்நாடு ம…
-
- 1 reply
- 345 views
- 1 follower
-
-
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு. தமிழகத்தின் 13 வாக்குசாவடிகளில் வரும் 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 திருவள்ளூர், கடலூர், ஈரோடு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் மே 19ஆம் தேதி, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த 13 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று சத்யபிரதா சாஹு இன…
-
- 1 reply
- 716 views
-
-
'இது நடக்கும்'- அ.தி.மு.க.வினரை அலர்ட் செய்யும் விஜயசாந்தி "கட்சியைப் பிரிக்க சில சதிகள் நடக்கும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை விஜயசாந்தி இவ்வாறு கூறினார். கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியும், மொட்டை அடித்தும் வருகின்றனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி…
-
- 1 reply
- 625 views
-
-
மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் : தமிழகம் முழுவதும் குவியுது புகார் தமிழகம் முழுவதும், 'அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை' என, போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. வீரமணி எங்கே? வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கே.கே.மணி, தன் ஆதரவாளர்களுடன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதில், '6ம் தேதி முதல், எங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான வீரமணியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தர …
-
- 1 reply
- 427 views
-
-
கொழும்பு: இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்…
-
- 1 reply
- 353 views
-
-
''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட…
-
- 1 reply
- 399 views
-
-
சசி காலில் விழுந்த மந்திரிகள் படம் தினகரன் அணி திடீர் வெளியீடு சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படத் துவங்கி உள்ளதால், ஆத்திரமடைந்துள்ள தினகரன் ஆதரவாளர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர் கள், சசிகலா காலில் விழும் படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மோதல் தினகரன் ஆதரவாளர்கள், கடந்த மாதம் வரை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஅணியில் உள்ளவர்களை, கடுமையாக தாக்கி, சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை புகழ்ந்தனர்.அவர்களின் அறிவிப்பு களை, உடனுக்குடன் சமூக வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரஜினிகாந்துக்கு அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு Getty Images இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி - ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை அபராதம் நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005 வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03ஆம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04ஆம் நிதியாண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05ஆம் நிதியாண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் (3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.66 லட்சத்து 22 ஆயிரத்து 436) நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் – ரஜினிகாந்த் மதுபான கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், மேலும் கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் மே 7 ஆம் திகதி திறக்கப்பட்டது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் மதுபானக் திறக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான விற்பனையின்போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சம…
-
- 1 reply
- 730 views
-
-
திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பதிவு: ஜூன் 26, 2020 15:50 PM திருச்சி, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இன்று பேசும்பொழுது, திருச்சி மாவட்டத்தில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. திருச்சியில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜூன்12ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் அ.தி.…
-
- 1 reply
- 493 views
-
-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை வைகோ அமைத்துள்ளார். கூட்டம் பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவு எடுக்க ம.தி.மு.க. ஆட்சி மன்ற குழு மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கணேசமூர்த்தி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தென் மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய வைகோ, மத்தியில் காங்கிரஸ் வரக்கூடாது என்பது தான் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதை ஏற்கனவே நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். எனவே அதனை …
-
- 1 reply
- 478 views
-
-
-
ஈரோடு: எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை என்று வைகோ கூறியுள்ளார். மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் என்ற தலைப்பில் ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் கூறியதாவது. என்னை அழைத்தபோது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். இளையன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர்களாம் இணையதள நண்பர்கள் …
-
- 1 reply
- 677 views
-
-
மதுரை அருகே உள்ள நாகமலை, புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கிராமங்கள் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கைச் சின்னம் என்ற சிறந்த லட்சியத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிறந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். அனைவருக்கும் உணவு, கட்டாயக் கல்வி, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். தமிழகத்தைப் பொறுத்த வரை வெற்றிக் கூட்டணி அமையும்…
-
- 1 reply
- 369 views
-
-
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டனியே இல்லை என்று அறிவித்தது பா.ம.க. அத்துடன் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருந்தது பா.ம.க. பின்னர் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை பாமக மேற்கொண்டது. இதில் பெரும் இழுபறியே நீடித்து வந்தது. பாமக அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்ட…
-
- 1 reply
- 677 views
-
-
ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மா…
-
- 1 reply
- 262 views
-
-
மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களை துரத்தி வந்து இலங்கை கடற்படை கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கியது. மீனவர்கள் 53 பேரை சிறை பிடித்துச் சென்றதோடு 9 படகுகளையும் பிடித்துச் சென்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்தபோது, நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகள் மற்றும் 19 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர். இவர்கள் தலைமன்னார் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீன் பிடித்து முடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவை தாண்டி கரையை நோக்கி வந்து கொண்டிருந…
-
- 1 reply
- 793 views
-
-
சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள். அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி. நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் க…
-
- 1 reply
- 921 views
-
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தலைமையில் தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) ஆலோசனை நடத்தினர். தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடமும் அரசியல் கட்சிகளிடமும் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை க…
-
- 1 reply
- 436 views
-
-
சென்னை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு தமிழக காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை மோடி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல திருச்சியில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்தையும், மோடி நாளை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் சற்று கூடுதலாகவே காணப்படுகிறது. கடந்த மாதம் 26ம் தேதி திருச்சியில் நடந்த இளம்தாமரைக் கூட்டத்தில் மோடி பேசினார். பெரும் பிரமாண்டமாகக் கூடியது. இந்த நிலையில் நாளை அவர் சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து சென்னை வரும் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் பிரமாரண்ட வரவேற்பு கொடுக்கவுள்ளனர். விமான நிலையத்திற்குப் பெரும் திரளா…
-
- 1 reply
- 421 views
-
-
பேரறிவாளன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி: தனிமைச் சிறைவாசம் எப்படி இருந்தது? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்த காலத்தில் தான் நடத்திய சட்டப்போராட்டம், சிறையின் சூழல், தனக்காக தன் தாயார் நடத்திய போராட்டம், செங்கொடியின் மரணம் ஏற்படுத்திய தாக்கம், தன் வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை குறித்தெல்லாம் பிபிசியிடம் விரிவாகப் பேசினார் பேரறிவாளன் பேட்டியிலிருந்து: 31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை என்ற அறிவ…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
புரட்சிகரப் பாடகர் கோவன் திருச்சியில் வீட்டு பூட்டு உடைத்து கைது புரட்சிகரப் பாடகர் கோவன் திருச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை, பாடல் வடிவில் வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடி வருபவர். இவர் பிரதமர், மற்றும் முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி பொலிசார் கோவனை கைது செய்துள்ளனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், சமூகச் செயற்பாட்டாளர் என பன்முக செயற்காட்டாளரான கோவன். நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அரசின் அடக்குமுறைகளை கண்டித்து, பாடல் வடிவில் மக்களிடையு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கோவன், மக்கள் க…
-
- 1 reply
- 615 views
-
-
'ஒரே நாடு, ஒரே உறுப்பு தான பதிவேடு' - இந்திய அரசின் முயற்சியால் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேட்டைக் கொண்டு வரும் வகையில் "ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு" திட்டத்தை இந்திய சுகாதாரத் துறை வகுத்து வருகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் …
-
- 1 reply
- 658 views
- 1 follower
-
-
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை - ’’கண்ணீராலும் செங்குருதியாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாற்றில், 60 ஆண்டுக்காலம் சிங்கள இனவாத அரசுகள், ஈழத்தமிழ் இனத்தையே அழிக்கப் பல்வேறு கொடுமைகளைச் செய்தது. தங்கள் இனத்தைக் காத்து, தாயகத்தை விடுவிக்க, ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையிலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்தனர். சமர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள முடியாத சிங்கள அரசுக்கு, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முப்படைத் தளவாடங்களையும் கொடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தானே இயக்கியது. உலகம் தடை செய்த குண்டுகளை ச…
-
- 1 reply
- 324 views
-