Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘மறுக்கப்பட்ட’ பதவி... ‘கைப்பற்றிய’ தளபதி! ப.திருமாவேலன் ‘ஒட்டுமொத்தமான உங்களுடைய கரவொலி, கலைஞர் வீற்றிருக்கும் அவருடைய இல்லம் வரை கேட்கும் என நான் தெரிவித்து, ஸ்டாலின் அவர்களை செயல் தலைவராக இங்கே உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இருந்து பேராசிரியர் அன்பழகன் சொன்னார். தன் மகன் வயதுள்ள ஸ்டாலினை வரவேற்று அன்பழகன் பேசினார். அவர், கருணாநிதியைவிட ஒரு வயது மூத்தவர். திருவாரூரில் சாதாரணத் தொண்டராகக் கட்சிப் பணி ஆற்றிவந்த கருணாநிதி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த அன்பழகனை அழைத்துவந்து தனது ஊரில் கூட்டம் பேசவைத்தார். அதே அன்பழகன், இன்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினை, கட்சியின் செயல் தலைவராக 70 ஆண்டுகள் கழித்…

  2. மிஸ்டர் கழுகு: தளபதி Vs தளபதி - கோபபுரம் ஆன கோபாலபுரம்! ‘‘இப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா?’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்?’’ என்றோம். ‘‘கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு, ‘மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த விவகாரம் பூம…

  3. ராஜ்யசபா சீட் யாருக்கு...? மகனுக்கா..? மருமகனுக்கா? மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி..! மக்களைவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டது. திமுகவில் கனிமொழியின் இடத்துக்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியா..? மருமகன் சபரீசனா.? என்ற போட்டா போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; திமுகவில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 6 பேரின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது…

    • 1 reply
    • 1.1k views
  4. விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அதிமுகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இருவர் பலி ( ஆவணப் படம்) கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அதிமுகவின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜ…

  5. மிஸ்டர் கழுகு: உளவுத்துறைக்கு வரத் தயங்கும் உயர் அதிகாரிகள்! கழுகார் காட்சியளித்ததும், ‘‘உள்ளாட்சித் தேர்தல் வருமா?’’ என்று கேள்வியை வீசினோம். ‘‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலா இப்போது முக்கியம்?’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டவர், ‘‘நீர் நல்லாத்தான் தலைப்பு போட்டீர். ‘121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ’ என்று! அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது’’ என்ற பீடிகையுடன் தொடங்கினார் கழுகார். ‘‘அப்படியா?’’ ‘‘ஆட்சிக் கவிழ்ப்பு பூச்சாண்டியை சில அமைச்சர்களே இப்போது காட்டிவருகிறார்கள். இதனால், எடப்பாடி பழனிசாமி தன் முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். வரிசையாக சில விஷயங்களைச்…

  6. 'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்…

  7. மாணவ சக்தியின் முதல் பணி பரந்துபட்ட மக்களை ஒரு சக்தியாய் உருத்திரட்டுவதே தத்தர் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் நம்மனைவருக்கும் ஒரு ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது. மக்களின் மனங்களில் மாணவர்கள் அன்புக்கும், மதிப்புக்கும், எதிர்பார்க்கைக்கும் உரியவர்கள். மாணவர்கள் கையசைத்தால் பெற்றோரும், மற்றோரும் அவர்களுக்கு தலைசாய்ப்பது இயல்பு. மாணவர்கள் எப்போதும் மக்களின் மனங்களில் களங்கம் கற்பிக்க முடியாதவர்கள். அவர்களின் குரல்கள் மக்களின் செவிகளை துளைக்கும் என்று சொல்வதை விடவும், அவர்களின் இதயங்களுக்குள் நுழையும் என்…

  8. மதுரை வரும் மோடிக்குக் கருப்புக் கொடி! முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 160க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை நடத்தியிருந்தனர். இந்தக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தில் இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 விழுக்காடு …

  9. 'தீர்ப்பு வேறு.. தீர்வு வேறு' - ட்விட்டரில் கமல் கருத்து பரபரப்பு நிறைந்த சமீபத்திய தமிழக அரசியல் சூழலைப் பற்றி தனது கருத்துகளை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இன்றைய அவரது ட்விட்டர் பதிவில், 'நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்' என தெரிவித்துள்ளார். நாளை சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/tamilnadu/80688-kamal-tweets-about-sasikalas-verdict-tomorrow.html

  10. சென்னை: பணத்திற்காக கட்சியை கார்த்திக் விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ள அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியினர், கார்த்திக்கைவிட கருணாஸ் சிறந்த சமுதாய தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளனர். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ''நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இருந்து நாங்கள் பணியாற்றியது சமுதாய மக்களை திறம்பட வழி நடத்துவதற்காதான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினோம். அதில், எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கொடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை முன்வந்தது. ஆனால், நிற…

  11. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை..? இதோ ஷாக் ரிப்போர்ட் ..! சென்னை: என்னப்பா.. விலைவாசி எல்லாம் ஏறி போச்சு..! இப்ப வந்து இந்த விசுகோத்து காசை கொடுக்கிறீங்களே.. ! என்ற அங்கலாய்ப்புகள் தமிழகத்தின் பல தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாயில் இருந்து எதிரொலித்துக் கொண்டுள்ளன.காரணம்.. இந்த லோக்சபா தேர்தலில், ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் அளவு 300 என்ற அளவில் குறைந்து போனதுதானாம். பெரம்பலூர், மதுரை, அரக்கோணம், தூத்துக்குடி தொகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாய் என்று ரேட் ஃபிக்ஸ் செய்துள்ளதாம் அந்த "மூன்றெழுத்து" முக்கிய கட்சி. பணம் குறைவு நான்கு எழுத்து கட்சி, தேனி மாதிரி தொகுதிகளில் ஓட்டுக்கு, ஆயிரம் ரூபாய் அள்ளி வீசி உள்ளது.. …

  12. தனி ஈழம் கோரிக்கையை முன் வைத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில், ‘‘1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம்…

    • 0 replies
    • 1.1k views
  13. மிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்! கழுகார் நம் முன் ஆஜரானபோது, கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்த கழுகார், ‘‘கருணாநிதி லேசாக பேச ஆரம்பித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். விரைவில், ‘அன்பார்ந்த உடன்பிறப்புகளே...’ என அவர் பேசுவதையும் வீடியோவில் எடுத்து அனுப்புவார்கள்” என்றார். அவரிடம், ‘‘கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளாரே?” என்றோம். “2006-2011 ஆட்சிக்காலத்தில், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது, அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக டி.எஸ்.பி பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். அவரைப் போல கணேசனும், விநோதனும் அந்தப் ப…

  14. புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே காரசார விவாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழிதவறி சென்றதால்தான் அவர் மீதான அ.தி.மு.க.வின் அனுதாபம் குறைந்ததாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது என்றும் ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது எனவும் விமர்ச…

    • 5 replies
    • 1.1k views
  15. காவிரி என்பது வெறும் நீரல்ல! காவிரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாக வைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள். வயிற்றுக்கு மட்டுமே சோறிட்…

  16. இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சொல்லித் தந்த விஜயலட்சுமி ஹேமா ராகேஷ் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் "பெண் என்றாலே மென்மையாளவள், பூப்போன்றவள் என்பதைதான் இந்த சமூகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் அது அப்படி கிடையாது. உங்கள் அனுமதி இல்லாமல் ஒருவர் தொட்டால் அதற்கு நீங்கள் வலிமையுடன் எதிர்வினையாற்ற வேண்டும். துணிச்சல் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குள் இருக்கும் திறன். தற்காப்பு படி தொடறவனை அடி, இது தான் என் தாரக மந்திரம் " என உறுதியாக சொல்கிறார் விஜயலட்…

  17. ' வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ். சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஐ.பி.எஸ். தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை …

  18. தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமுலாக்கத்துறை முடக்கியது. இந்த சொத்து முடக்கம் குறித்து அமுலாக்கத்துறை இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பணமோசடி தடுப்பு சட்டம், 2002இன் கீழ் ஒலிம்பஸ் கிரனைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள்…

  19. `சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது! சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும் கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் அவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார். …

  20. மிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்!” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர் #WeWantCMB#GoHomeEPSnOPS ‘‘தமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்?’’ என்றோம். ‘‘காவிரிப் பிரச்னைக்கான ஆலோசனைக்கூட்டம்தான் அது. தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்தாசன் பேசியபோது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தி.மு.…

  21. ரஜினி, அரசியலுக்கு வந்தால் மோதி பார்க்க தயார்: சீமான் பரபரப்பு பேச்சு பிரதி சென்னை, நவ. 27– திருவொற்றியூர் கங்கா காவிரி திருமண அரங்கில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு‘ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கர வாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை …

  22. சந்தன கடத்தல்' வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2021 தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்? 2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.