Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து சமூக ஊடகப் பிரபலம் பத்ம பிரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோர் விலகியுள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் எனது பதவியிலிருந்தும் விலகுவதாக கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமலும் அவருடைய அணியினரும் என் மீது காட்டிய அன்புக்கும் நட்புக்கும் நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார். …

  2. தமிழக சபாநாயகராக... அப்பாவு, இன்று பதவியேற்கிறார்! தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவுவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கவுள்ளனர். குறித்த இருவரும் போட்டியின்று ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில், இதன்போது சபாநாயகராக அப்பாவு தெரிவு செய்யப்பட்டுள்ளதை தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி அறிவிப்பார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமரவைப்பர். அதன் பின்னர் அவருக்கான வாழ்த்துரைகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவார். பின்னர் துணை சபாநாயகராக பிச்சாண்டி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயக…

  3. எல்லா அதிகாரிகளுமே யோக்கியமானவர்களா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! -சாவித்திரி கண்ணன் உண்மையிலே ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிகிறது. அவருடைய நோக்கத்திற்கு உகந்ததாக அதிகாரிகள் நியமனங்கள் இருக்கின்றனவா..? திமுக ஆட்சியின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான பாராட்டுகள் ஊடகங்களில் குவிகின்றன. அமைச்சர்கள் நியமனங்கள், அதிகாரிகள் நியமனங்கள் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன. புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர்களின் நோக்கங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன…! உண்மை தான்! மாற்ற…

    • 0 replies
    • 750 views
  4. சுடலை, சுடலை என்றார்கள்: சுட்டேவிட்டார் ஸ்டாலின்

  5. `என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம்! ’ - தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ரா. அரவிந்த்ராஜ் வெ.இறையன்பு ``இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது” தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் இறையன்பு ஐஏஎஸ், பொது வெளியில் அதிக கவனம் ஈர்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. நிர்வாக செயல்பாடுகள் மட்டுமல்லாது, பொதுத்தளத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுகிறார். குறிப்பாக, உள்ளொளிப் …

  6. அமைச்சர்கள்... தவறு செய்தால், பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்…

  7. தமிழகத்தின்... எதிர்கட்சி தலைவராக, தெரிவு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு 65 தொகுதிகளில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவியது. இதற்கிடையில் புதிய சட்டமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெ…

  8. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். காலை 10 மணி அளிவில் சட்டசபை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அகர வரிசைப்படி பதவிபிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர்கள் நாளைய தினம் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1214954

  9. ஏழு தமிழர்களை விடுதலை செய்க! முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் 46 Views சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் ம.திமுக. தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. …

  10. வைகோ... ராசி இல்லாதவர், என்ற பேச்சுக்கு முடிவு! இனி வரும் தேர்தல்களில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் 28 ஆம் ஆண்டு நிறைவையிட்டு முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி நகரில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் துரை வைகோ கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சூழ்ந்திருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது. உதித்தது உதய சூரியன். 10 ஆண்டுகால அ.தி.மு.க.…

  11. நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! இந்தியாவில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் கொரோனா பேரிடரின் பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது. நாளொன்றுக்கு எத்தனை மனிதரென்று சரியான எண்ணிக்கை இறுதிவரை வராமலே போகலாம். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற மனிதாபிமான நாடுகள் தாராளமாக இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஆனால் இந்த உதவிகள் அந்நாடு சந்திக்கும் சவாலுக்கு அவல் பொரி போன்றது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தால் அதற்கு அயலிலுள்ள குட்டித்தீவான இலங்கை எதிர்பார்க்கப்பட்ட சோதனை வலயமாகியுள்ளது. அரசியல், சாதி, மத, இன பேதமின்றி இந்நோய் இங்குள்ளவர்களை ஒட்டுமொத்தமாக தாக…

    • 0 replies
    • 510 views
  12. தமிழக முதலமைச்சராக... பதவி ஏற்றார், மு.க.ஸ்டாலின்! தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இன்று காலை 9 மணி முதல் ஆளுநர் மாளிகையின் திறந்த புல்வெளியில் குறைந்த விருந்தினர்களுடன் எளிமையான முறையில…

  13. மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா? அழகுசுப்பையா ச கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கமலின் சர்வாதிகாரப் போக்குத்தான் காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்கின்றனர். உண்மையான காரணம் என்ன என விசாரித்தோம்... தமிழக சட்டப்பேரவை முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எதிர்பாராத வகையில் பல்வேறு காட்சிகள் அரங்கேறிவருகின்றன. அவற்றில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்து எட்டுப் பேர் வெளியேறியிருப்பது மிக முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு சர…

  14. ராஜினாமா பண்ணு இல்லனா.. கமல் சொன்ன அந்த வார்த்தை மௌனம் கலைத்த மகேந்திரன்

    • 0 replies
    • 993 views
  15. தமிழகத்தில் முழு ஊரடங்கு: எது எதற்கு அனுமதி? மின்னம்பலம் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அது போன்று, வரும் மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தவிர்க்க முடியாத காரணங்களினால் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் மே 24ஆம் தேத…

  16. தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது. தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொ…

    • 5 replies
    • 870 views
  17. எதிர்கட்சி தலைவர் பதவி - ஜெ.நினைவிடம் வரை நீண்ட அதிமுக மோதல்.! சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கான எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பாக நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தனியாக 66 இடங்களில் வென்றது. இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது. 63 அதிமுக எ…

    • 2 replies
    • 930 views
  18. எது 3ஆவது பெரியக் கட்சி?: கே.எஸ்.அழகிரி மின்னம்பலம் காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரியக் கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 29 லட்சத்து 67ஆயிரத்து 853 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், யார் மூன்றாவது பெரிய கட்சி என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

    • 7 replies
    • 1.1k views
  19. மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் பதவி விலகினார் https://fb.watch/5jKqBcZlzX/ மக்கள் நீதி மையத்தின் மேல் மட்ட நிர்வாகிகள் அனைவரும் பதவி விலகினர் https://fb.watch/5jKHt2BF0S/

  20. கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்! கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் …

  21. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 13 நோயாளிகள் இறந்ததாக வெளியான தகவல்கள், தமிழக மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் ஆக்சிஜன் பற்றாற்குறை இல்லை என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், தமிழகத்தின் நிலை என்ன என்பதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆக்சிஜன் தேவையை தமிழகம் சரியாக கையாளுகிறதா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த வாரம் வரை,இந்திய தலைநகர் டெல்லியில் குவியல் குவியலாக இறந்த கொரோனா நோயாளிகளின் சிதைக்கு தீமூட்டும் காட்சிகள் எங்கோ நடந்தவை போல தோன்றின. ஆனால் தற்போது,…

    • 1 reply
    • 675 views
  22. நாட்டில் வலிமையான சுற்றுச்சூழல் சட்டங்களைக் கொண்டுவந்து வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரத்தில், EIA மற்றும் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை போன்ற சட்டங்கள் அளிக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் மேலும் குறைப்பதில் மத்திய அரசு பரபரப்பாகச் செயல்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி, பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட 67 நபர்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி, சூழலியல் நீதிக்கான 14 கோரிக்கைகளை அவரின் அவசர கவனத்துக்குக் கொண்டு வரக் கடிதம் எழுதியுள்ளனர். சென்னை …

  23. செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி.! சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு தீவிரம் அடைபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் இறந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணத்தில் அடக்கம். …

  24. ஆட்சி அமைக்க உரிமை: ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் மின்னம்பலம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைக் கடந்து திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக மட்டும் 125 இடங்களில் ஜெயித்துள்ளது. நேற்று (மே 2) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இன்று (மே 5) காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். …

  25. கொரோனா பெருந்தொற்று, கடன் சுமை: ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தீவிரமாகியிருக்கும் நெருக்கடியான சூழலில் புதிய ஆட்சி அமையபோகிறது. மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன? எதிர்நிற்கும் சவால்கள் எந்தவொரு புதிய அரசும், ஆட்சி அதிகாரத்தில் காலூன்றி சுதாரிக்க ஆறு மாத கால அவகாசம் தேவை. ஆனால் அமையப்போகும் திமுக ஆட்சிக்கு எதிர்வரும் ஆறு மாதங்களும் அதீத நெருக்கடியான காலம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.