Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் முடக்குவதில் அதிக இரத்தப் போக்கும் பங்கு வகிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு இரத்தப் போக்கு மற்றும் அது அதிக நாட்கள் நீடித்தால் அதை மெனோராஜியா என்று குறிப்பிடுகிறார்கள். மெட்ரோராஜியா என்றால் இரு மாதவிடாய்களுக்கு இடையிலும் ரத்தப் போக்கு ஏற்படுதலைக் குறிக்கிறது. அதிக அளவு இரத்த இழப்பால் இரத்த சோகையும் ஏற்படுகிறது. மாத விலக்கின் போது அதிக இரத்தப் போக்கினால் அடிக்கடி நாப்கின்களை மாற்ற வேண்டிவரும். இதனால் தொடைகளில் உராய்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும். எங்கே சென்றாலும் இரண்டுமணி நேரத்திற்கு ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்று பேடை மாற்றவேண்டி வருவதால் வெளியே செல்வதே சிரமம் கொடுப்பதாய் இருக்கும்.…

  2. டெங்கு காய்ச்சலானது கொசுக்கள் மூலமாக மட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டாலும் பரவும் என்பது ஸ்பெயினில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரசானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகின்றது. ஏடிஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த காய்ச்சல் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். இந்நிலையில் டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்துக்கொள்வதாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்…

    • 0 replies
    • 796 views
  3. ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் பயனற்றுப் போகும் நிலையை சமாளிக்க பெரும்பாலான நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது மலேரியா, காச நோய் போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று அந்த நிறுவனம் வர்ணித்திருக்கிறது. இது குறித்து 133 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 34 நாடுகள் மட்டுமே இந்த மருந்துகள் சக்தியிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியை செய்யும் நிலையில் உள்ளன என்று காட்டுவதாக தெரியவந்திருக்கிறது. ஆண்டிபயாடிக் மருந்துகளால் நோய்களை குணப்படுத்த முடியாமல் போகும் நிலையை எதிர்த்து நடவடிக்கைகள் எடுக்க உலகளாவிய வகையில் எடுக்கப்படவுள்ள ஒரு திட்டம் அடுத்த மாதம் ஜெனிவாவில் உலக சுகாதார நிறு…

  4. உணவும் உடல்நலமும்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? - 3 முக்கிய டிப்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,அனாலியா லோரென்டே பதவி,பிபிசி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது உடலுக்குத் தேவையான முக்கியமான ஆற்றல் மூலமாக குளுக்கோஸ் இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் சக்தியே நாம் இயங்குவதற்கும் சிந்திப்பதற்கும் நம் இதயம் துடிப்பதற்கும் துணைபுரிகிறது. உடலின் முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கு குளுக்கோஸ் அத்தியாவசியம். ஆனால், ரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) தேவையான அளவு இல்லையென்றால், பல்வேறு தீவிர உடல்நல…

  5. முதுமையில் நொய்ம்மை (பலவீனம் இயலாமை) 29/09/2018 ‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’ என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட போது அவரது பேரன் உதவ முன் வந்தார். அப்போதுதான் அவர் அவ்வாறு சொன்னார். அவரது வயது 85 தான். இந்த வயதிலும் அவரால் மற்றவர் உதவியின்றி கதிரையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் முடிகிறது. மாறாக அதே நாளிலில் என்னிடம் வந்திருந்த மற்றொரு பெண்மணியை அவளது மகன் கைபிடித்து அணைத்து நடத்திக் கொண்டு வந்திருந்தார். உட்காருவதற்கும் எழுந்திருப்பதற்கும் அவளால் முடியவில்லை. முழுக்க முழுக்க மகனிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இத்தனைக்கும் அவளது வயது 62 மட்டுமே.…

    • 1 reply
    • 794 views
  6. உணவு உட்கொண்ட உடன் புகைப்பிடிக்கும், தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்குத்தான். உண்ட உணவு ஜீரணமாகும் முன்பே சிகரெட் பற்றவைத்தால் அது குடல் கேன்சர் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள். உணவு உண்டபின் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மிகப்பெரிய பட்டியலே கொடுத்துள்ளனர் அவர்கள். இன்றைக்கு பலபேர் உணவு உண்டவுடன் அவசரமாக சிகரெட் பற்ற வைத்து உள்ளே இழுப்பார்கள். இது உடல் நலத்திற்கு தீங்கானது. சாப்பிட்டவுடன் பிடிக்கப்படும் ஒரு சிகரெட், பத்து எமனுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டாம். எனவே, சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க. …

  7. ரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்து வந்தனர். இருதய சத்திரசிகிச்சைகள் மார்புக்கூட்டைத் திறந்து செய்யப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இந்த அறுவைச்சிகிச்சைகள் ரோபோ கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டன. உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ்…

  8. "அற்புத மனம்" ஆன்மாவே மனதின் ஆதாரம் மனமே வாழ்க்கையின் ஆதாரம் மனமே 'விதை', வாழ்க்கையே 'மரம்'. வாழ்க்கை என்ற மரம் தழைத்து வருவது 'மனம்' என்ற விதையிலிருந்தே. நாம் தான் நம் மனதின் 'சிற்பிகள்'. நாம் தான் நம் மனதின் வளர்ச்சிக்கு 'ஆதரவாளர்'. அதேபோல் நம்மால் எந்த ஒரு நொடிப் பொழுதிலும், (அப்போது) மனதில் பதிவானவற்றை நீக்கிவிட்டு புதிய எண்ணங்களை உருவாக்க முடியும். மனித மனதின் வகைகள் – Types of Mind 1) விபரீத மனம் – Disastrous Mind 2) எதிர்மறை மனம் – Negative Mind 3) நேர்மறை மனம் – Positive Mind 4) அற்புதமான மனம் – Miraculous Mind விபரீத மனம் உதாரணமாக ஒருவர் முதன்முறையாக நகரின் நெரிசலில் வாகனம் ஓட்டி செல்கிறார் என்று வைத்துக் கொள்…

  9. [size=4]டைப் - 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.[/size] [size=4]ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.[/size] [size=4]நீரிழிவு நோயினால் மனிதர்களின் நினைவுத் திறனில் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இந்த ஆய்வு பற்றி கருத்து கூறியுள்ள கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின், "சாதாரணமாக ரத்தத்தில் இருக்கு…

  10. "டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க" என்று வேண்டுகோள்களும், "டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு. அதனால ஒரு பாட்டில் ரத்தம் ஏத்திக்கிட்டேன். இப்ப நீர் பிரியல ஆனா மூச்சுவாங்குது" என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நோயாளிகளை நிறைய சந்திக்க முடிகின்றது. இது எதனால்? சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அறியாததன் விளைவுகள்தான் மேலே சொன்ன உரையாடல்கள்! மருத்துவம் செய்து கொள்வது எவ்வளவு தேவையானதோ அதைப் போலவே அதைப்பற்றி அறிந்துக் கொள்வதும் அவசியமானது. அந்த வகையில் நாம் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்திய மருத்துவத் தந்தை சுஸ்ருதா, சோகையினை அது ஒருவகையான பண்டுரோகம் அல்லது மஞ…

    • 1 reply
    • 790 views
  11. ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் ஆசைகளும், பாலுறவு கொள்வதற்கான திறனும் குறைகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இது உண்மையா? அப்படியெனில் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் இன்பத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பாலியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் பதிலளிக்கிறார். பிபிசி தமிழுக்காக ஹேமா ராக்கேஷிடம் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் உரை வடிவம் இது. கேள்வி: தம்பதிகளுக்கு 40 வயது ஆகும்போது குழந்தைகள் பெரியவர்களாகி விடுகின்றனர். இனி எதிற்கு காதல் உணர்வு, பாலுறவு என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து விடுகிறது. இது இயல்புதானா? …

  12. புதிய முறையின் மூலம் லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியுமென சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக லுகேமியா நோயினால் அவதியுறும் சிறுவர் சிறுமியருக்கு சிகிச்சை அளிக்கும் நவீன முறையொன்றை சுவிஸ் விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். வழமையான சிகிச்சை முறைமையின் மூலம் நன்மை அடையாத சிறுவர், சிறுமியர் இந்த நவீன முறையின் மூலம் நன்மை அடையக் கூடிய அதிக சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. லுகேமியா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சிகிச்சை முறைமை குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். …

  13. பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்டது பேரிச்சம்பழம். சிறந்த சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அதிகமாக விளைகிறது. இந்த பேரிச்சம்பழம் மனிதனின் பல்வேறு உடல் சுகவீனங்களை சரி செய்கின்றன.தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். மூட்டு வலி, கர்ப்ப கால பிரச்சனை, குடல் பிரச்சனை, பார்வை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இது வரப்பிரசாதமே.மூட்டு வலி30 வயது தாண்டிவிட்டாலே இன்றைய காலத்தில் பலருக்கும் மூட்டு வலி தொடர்பான பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள கால்சியம் குறைபாடே. இதை சரி செய்ய தினமும் கொ…

  14. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் இறந்த ஒரு பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு ஒரு பெண்ணுக்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பையில் கருத்தரித்த குழந்தை நலத்துடன் பிறந்துள்ளது. பிரேசிலில் உள்ள சாவ்ம் பாவ்லோ நகரில் 2016ஆம் ஆண்டு, சுமார் 10 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை மூலம் இந்த கர்ப்பப்பை 32 வயதாகும் ஒரு பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டது. அவருக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லை. இதுவரை 39 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் மூலம் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. …

  15. தயிர் தரும் பலன்கள் தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரதம் பாலில் உள்ள புரதத்தை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பக்டீரியாவை உருவாக்குகிறது.தயிரில் இருக்கும் புரதம் இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி …

  16. மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று. . மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி…

  17. மக்களின் உடலை சந்தைக்கு விற்றுப் பிழைக்கும் அரசுகள் - அன்றும் இன்றும் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி இது பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் நமது உடலை இன்சுலினை சரிவர பயன்படுத்த இயலாததாக மாற்றிவிட்டது என எப்பிஜெனடிக்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியர்களை விட தெற்காசியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் ஆகிறார்கள். 100 வயது வாழ வேண்டியவர்கள் இன்று 60-70 வயதிற்குள் மிக மோசமான வியாதிகள் வந்து துன்புற்று சாகிறார்கள். 20 வயது குழந்தைகள் 40 வயதினரைப் போல இருக்கிறார்கள். இதைச் சொன்னால் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் வந்து 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயுளை விட இன்று அதிகரித்திருக்க…

  18. நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..! கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான். * இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாட…

  19. நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் கூட, செக்ஸ் இன்பத்தி்ற்கு தேவையான சக்தி உள்ளது என்பதை பலரும் அறியாத தகவல். அதை அறிந்து நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செக்ஸ் கலையில் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றினால் தான், செக்ஸ்-ல் நாம் வெற்றி பெற்றதாதக அர்த்தம். கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு உள்ளது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும் கூட காரணமாக இருக்கலாம். திருமணமான அனைவரும் மனநிறைவுடன் உள்ளார்களா என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான செக்ஸ் ம…

  20. நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார். திவ்யா சத்யராஜ் சென்னை: “கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம், வழக்கத்தை விட மிக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய நடுத்தர வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும். உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து …

  21. கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்த…

  22. [size=4]பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.[/size] [size=4]மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும்…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 10 மார்ச் 2024, 11:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நபர் தன் தொண்டைக்குள் லாவகமாகச் செலுத்திகொண்ட கத்தி சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தது. டாக்டர் அடோல்ஃப் குஸ்மால் ஒரு மாலை வேளையில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டார். ஒரு நபர் கத்தியை விழுங்குவதைக் கண்டு டாக்டர் குஸ்மால் அதிர்ச்சியடைந்தார். "இந்த அணுகுமுறையை மனித உடலுக்குள் செய்யப்படும் …

  24. கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans) அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது. எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது. ‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.’ என்றாள். அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.