வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை... தாங்களே மக்களின் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற கூட்டம் விஜய நம்பியாரை சந்திச்சதாம்....பேப்பர் போடுறவர், பேப்பர் அடிக்கறவர், புத்தகம் அடிக்கிறவர் எல்லாம் பிரதிநிதி எண்டா இது எங்க போகுது?? இதுகளையும் ஒரு செய்தி எண்டு இணையத்தளங்கள் போடுது..... அவர் வெள்ளை எம்.பி , அண்டைக்கு டவுன் டவுனில ரோட்டை மரிச்சதுக்கு தன்னட்டை போன் அடிச்சு ஆக்கள் கவலை படுகினம் எண்டு புலுடா விடுகிறார்... எப்பத்தான் நம்ம ஆக்கள் திருந்த போறாங்கள்?? படங்கள் : தமில்வின்
-
- 21 replies
- 5.2k views
-
-
பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா?
-
- 23 replies
- 5.2k views
-
-
சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யுங்கள். வாக்களிக்கும் நேரம் இன்னும் சில மணித்தியாலங்கள் மட்டுமே இருக்கிறது. கீழே இணைப்பில் உள்ள படத்தினை வெற்றி பெறச் செய்யுங்கள். வெற்றி பெற்றால் , தமிழர் அல்லாத வெளினாட்டவர்களுக்கு பல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்று தான் வாக்களிப்பதற்கு கடைசி நாள். http://www1.canon.com.au/creativeforacause...4EA8D7F0A21E2C8 புகைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால் இப்போட்டிக்கு புகைப்படத்தை அனுப்பியவரின் பெயரான இளங்கோ நாதனை இவ்விணையத்தில் தேடுவதன் மூலம் காணலாம்.
-
- 1 reply
- 5.2k views
-
-
கடவுள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவு வாதம் என்ற முனைகளே யாழ் களத்தின் மிகப்பிரபலமான விவாதத் தலைப்புக்கள் என்றால், அனேகமாக எவரும் சண்டைக்கு வரமாட்டார்கள். அத்தனை தலைப்புக்கள் இம்முனைகளில் பதிவாகி உள்ளன. இன்னமும் பதிவாகும். இதில் தவறேதும் இருப்பதாய்ச் சொல்ல விழைவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, இவ்விவாதங்களின் அடிப்படைப் பொருள் தொடர்பில் இவ்விவாதங்கள் தவற விடுகின்ற ஒரு அவதானிப்பினைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம். இத்தலைப்பில் நான் சொல்ல விழைகின்ற கருத்தினைப் பதிவதற்கு முன்னால், இதுவரை யாழ் களத்தில் பகுத்தறிவு வாதிகளிற்கும் கடவுள் நம்பிக்கை உடையவர்களிற்கும் இடையே நடந்தேறிய வாதப் பிரதி வாதங்களின் சாராம்சத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன். …
-
- 30 replies
- 5.1k views
-
-
தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் Date: 2011-12-17 at 6:00 pm Address: Canada Kanthaswamy Temple Hall, 733 Birchmount Road, Scarborough, ON Canada Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் Date: 2011-12-18 at 6:00 pm தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் Address: Ever Green Party Hall, 5011 Buchan, Montreal, QC Canada Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மொன்றியல் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் Phone: 438 937 0481
-
- 9 replies
- 5.1k views
-
-
புலம் பெயர்ந்த சாதியம் March 28, 2021 — அ. தேவதாசன் — 1983 தைமாதம் ஒன்பதாம் திகதி பாரிசில் வந்து இறங்குகிறேன். ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறேன். உள் நுழைவு என்பது லேசுப்பட்ட காரியமில்லை- உயிரை பணயம் வைத்தல் – அது ஒரு தனிக்கதை. திகில்க்கதை… நான் சவூதி போன்ற நாடுகளுக்கு போவதைப் போலவே பிரான்சுக்கும் வந்தேன். நான்கு ஆண்டுகள் வேலை செய்து உழைக்கும் பணத்தில் இரண்டு தங்கைகளை கரைசேர்ப்பது. மீண்டும் ஊரில் பணிபுரிந்த தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு சங்கத்தில் வேலையை தொடர்வது. இதுவே எனது திட்டம். நான் வரும்போது அரசியல் அகதியாக வரவில்லை. பொருளாதார அகதியாகவே வந்தேன். பிரான்சில் தங்கி வாழ்வதற்கும…
-
- 36 replies
- 5.1k views
- 2 followers
-
-
2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவ…
-
- 66 replies
- 5.1k views
- 2 followers
-
-
கனடா தமிழர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, February 21, 2013 கனடாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பணியாற்றிய ஜி.யு போப்பின் ஊடாகவே கனடாவுக்கும் தமிழுக்கும் முதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 1980-களின் பின் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களின் வருகையோடு தான் கனடா தமிழர்களின் முழுமையான வரலாறு தொடங்கியது. உலகம் முழுவதும் தமிழர்கள் விரவி வாழ்கின்ற போதும் மேற்கு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்வது கனடாவில் தான். அதுவும் டொராண்டோ பெரும்பாகப் பகுதிகளில் தான் மிக அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கனடா தமிழர்களைப் பொறுத்தவரை 85 % அதிகமானோர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட…
-
- 3 replies
- 5.1k views
-
-
மெல்பேனில் 2 பேர் கைது. இந்த செய்தி உண்மையா?? news.com.au இல் போட்டு இருந்தார்கள்
-
- 29 replies
- 5.1k views
-
-
பாரீசில் உள்ள லா சப்பலில் வீதிமறிப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது முக்கிய சந்தியாக இருந்தபோதிலும் அனைவரும் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர் பொலிசார் செய்வதறியாது திகைத்து அவர்ளைச்சுற்றி நிற்பதாகவும் ஊடகவியலாளர்களை அழைத்துவர இணங்கியிருப்பதாகவும் ஆனால் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடப்பதாகவும் அறிகிறேன் நான் வேலையில் நிற்பதால் போகமுடியவில்லை மனைவி பிள்ளைகளை அனுப்பியுள்ளேன் 5000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பதாக அறிய முடிகிறது
-
- 48 replies
- 5.1k views
-
-
கடந்த வெள்ளி கிழமை கோயிலுக்கு போன போது இரண்டு பக்த கோடிகள் கதைத்து கொண்டு இருந்தது அடியேனுக்கு விழுந்தது.இளைய பக்தர் முதியோர் பக்தர் கதைத்து கொண்ட விடயம் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் கதைத்தது எங்களுடைய நாட்டு நடப்பை பற்றி என்று ஆனால் அப்படி இல்லை கதைத்ததோ நம்மன்ட கோயில் குருக்களை சிட்னியில் நிரந்தரமகா தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று. அதாவது கோயிலுக்கு பூசை செய்ய 3 வருட ஒப்பந்தம் ஈழத்தில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து குருக்களை வரவழைப்பது வழக்கம்.அப்படி வந்தவர்கள் 3 வருடம் முடிய புதுசா புதிபித்து சிட்னியில் தங்குவார்கள்..அல்லது ஒரு மாதிரி கையை,காலை பிடித்து பிரஜாஉரிமைக்கு விண…
-
- 35 replies
- 5.1k views
-
-
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்தபோது நிறையச் சேலைகளை வாங்கி வந்தேன். ஏற்கனவே நிறையச் சேலைகள் இருந்தாலும் பெண்களின் சேலை ஆசை நீங்கள் எல்லாம் அறிந்தது தானே. முதல் நாள் ஒரு இருபதினாயிரம் ரூபாய்களுக்கு சாதாரண சேலைகளும் பிள்ளைகளுக்கான ஆடைகளும் வாங்கியதில் கடையில் வேலைசெய்வோர் சகஜமாகக் கதைத்துச் சிரித்து எனக்கு ஐந்து வீதக் கழிவும் தந்தார்கள். அடுத்தநாளும் பட்டுச் சேலைகள் வாங்கவேண்டி இருந்ததில் நானும் மாமியும் போத்தீசுக்குச் சென்றோம். மாமி என்றால் என்னிலும் ஐந்து வயது பெரியவர் தான். இந்தியாவில் இருபது ஆண்டுகள் இருக்கிறார். ஆனால் அவர் பெரிதாக சேலைகள் வாங்குவதோ உடுத்துவதோ கூடக் கிடையாது. அதனால் அவருக்குச் சேலைகள் பற்றியோ வேறு கடைகள் பற்றியோ எதுவும் த…
-
- 53 replies
- 5.1k views
- 1 follower
-
-
சிறிலங்கா பொருட்களை தடை செய்யுங்கோ என்ற தலைப்பை யாழ் களத்தில் பார்த்தவுடன் புத்தனுக்கு சிட்னி டமிழ்ஸ் எவ்வளவு தூரம் அதை கடை பிடிக்கிறோம் என்பதை பார்க்க ஆசையா இருந்தது,முதல் என்ட வீட்ட சுற்றி பார்த்தன்,முக்கால்வாசி பொருட்கள் அங்கிருந்து இற்க்குமதி செய்யபட்ட பொருட்கள் உதாரணமாக பெரிய குத்து விளக்கு மற்றும் அலங்கார பொருட்கள்,மனசுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் இது இரண்டு வருடத்திற்கு முன்னம் கொண்டு வந்த பொருட்கள் என மனதை திருப்தி படுத்தி கொண்டு,அரசியல் வேறு அலங்கார பொருட்கள் வேறு என்ற பாணியில் மேலும் மனதிற்கு வலு சேர்த்து கொண்டேன். நண்பனின் வீட்டுக்கு சென்று பார்ப்போம் என்று வெளிகிட்டோம் அங்கும் அதே கோலம் தான் நண்பனின் தகப்பன் என்னை வரவேற்றார…
-
- 25 replies
- 5.1k views
-
-
மன்னிக்கவும் என்னால் புது டோப்பிக் திறக்க முடியாததால் இங்கே இதை பகிர்கிறேன் may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்.. நான் யாருக்கும் சார்வு இல்லை ஆனால் நேற்று BTF ஆல் ஏற்பாடு செய்யப்படா முள்ளிவாய்க்கால் தினத்தன்று சிலர் தேசிய கோடியை ஏற்றிய பின்புதான் மற்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று BTF உடன் பிரச்சனையில் ஈடுபட்டனர் அவர்கள் சொன்னது நல்ல விடயம் தான் ஆனால் அதன் பின்னணியை இப்போது கூறுகிறேன் ஒன்று இதற்கு பின்னணியில் அதிர்வு கண்ணனுக்கும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது ( அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்க்காக காவல்காரரிடம் அதிர்வு கண்ணன் பேசுவதை நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரமும் உண்டு,அதோடு அவர் அங…
-
- 56 replies
- 5.1k views
-
-
வியாபார நுணுக்கங்கள் சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது. வரவேற்பு ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத…
-
- 0 replies
- 5k views
-
-
புலம் பெயர் நாடுகளில் பலவகையான லொத்தர் முறைகள் நடைமுறையில் உள்ளன 6/49,லொட்டோ மக்ஸ், ஸ்போட்ஸ் பூல்,அதைவிட பல ஸ்கிறச் டிக்கெட்டுகள்,கசினோ போன்றவை.எனது நண்பர்கள் பலர் வாராவாரம் குறிப்பிட்டதொகையை அதற்காக செலவழிக்கின்றார்கள்.சிலர் இவை எல்லாம் ஒருவகை மோசடி என்று விளையாடுவதே இல்லை. கனடாவில் லக்கிராஜா என்பவர் 12 மில்லியன் வென்றார்.எனக்கு தெரிந்த ஒரு வயோதிபர் ஸ்கிறச்சில் 1 மில்லியன் வென்றார். நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்டதொகை வென்றேன்.நீங்கள் யாராவது ஏதாவது லொத்தர் விளையாடுபவர்களா? யாராவது ஏதும் பரிசு வென்றீர்களா?
-
- 29 replies
- 5k views
- 1 follower
-
-
மீண்டும் மற்றொமொரு தேடல் மூலம் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி,இன்று தேடலாக நான் எடுத்து கொண்ட விடயம் சுண்டல் அண்ணா ஒரு விவாத தலைப்பை முன் வைத்திருந்தார் யாழில் அதாவது புலத்தில் உள்ள எம்மவர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு பிள்ளை பேற்றின் போது பெற்றோர்களை பராமாரிக்க இவர்களை அழைத்துவிட்டு பின் பிள்ளைகளை ஒரளவிற்கு வளர்ந்த பின் இவர்களை உதானிசபடுத்தல் மற்றும் முதியோர் இல்லங்களிற்கு அனுப்பிவிடல்....போன்ற செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் ஓட்டுமொத்தமாக நான் எல்லாரையும் குறை கூறவில்லை அதிகமானோர் அவ்வாறுதான் புலத்தில் செய்கிறார்கல் என்பது யாவரும் அறிந்தது........... இது நம் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை விளைவிக்க கூடும்...........வந்த பெற்றோர்களின் மனநிலை என்ன.....…
-
- 39 replies
- 5k views
-
-
புகைப்படம் எடுக்கும் போது பாலியல் தொந்தரவு – கனடிய தமிழர் கைது. Peter December 02, 2015 Canada பதின்ம வயது இளம் பெண்களை அவர்களது நிகழ்வுகளிற்கான போட்டோ சூட் புகைப்படம் எடுக்கும் போது அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகைப்பட நிறுவன உரிமையாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டாப்பட்டுள்ளது. 56 வயதுடைய மேற்படி நபர் புகைப்பட நிபுனர் என்ற தனது தொழிலுரிமத்தைப் பாவித்து இளம் பெண்களை புகைப்படங்கள் எடுக்கும் பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளன. இந்தக் கைது குறித்து தனது முகநூலில் செய்தி பிரசுரித்துள்ள ஒரு பெண்பிள்ளை தனது சாமத்திய வீடு நடந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இரண்டு வாரங்களிற்கு முன்னர் தானே பொலிசில் முறைப்பாடு செய்த…
-
- 25 replies
- 5k views
-
-
பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது June 27, 2023 சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம். இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின்…
-
- 25 replies
- 5k views
-
-
இனிய வணக்கங்கள், இப்ப கொஞ்ச நாளா கனடாவில தமிழ்ச்சனம் எல்லாம் அம்மாபகவானாம் எண்டு யாரையோ சொல்லி அதுக்கு பின்னால ஓடித்திறியுதுகள். இவ்ளோ காலமும் சாய்பாபா எண்டு சொல்லித் திரிஞ்சுதுகள். இப்ப எல்லாரும் அம்மாபகவானிண்ட விசுவாசிகளா மாறீட்டீனம் போல இருக்கிது. இண்டைக்கு வீட்டில அம்மா எனக்கு சொன்னா.. இஞ்ச மார்க்கம் எண்டு இருக்கிற ஒரு இடத்தில பெரிய காணி வாங்கி ஆச்சிரமம் கோயில் எல்லாம் கட்டி பஜனை எல்லாம் நடக்க்கிதாம் இந்த அம்மாபகவான் எண்டு சொல்லப்படுற சாமிக்கு.. அப்ப இவ்வளவு காலமும் கும்பிட்ட சாய்பாபாவிண்ட எதிர்காலம் என்ன? இல்லாட்டிக்கு சாய்பாபாதான் அம்மாபகவானா மாறீட்டாரோ? மற்றது... இப்பிடியே நிலமை போனால் எங்கட பிள்ளையார், முருகன், சிவபெருமான் எல்லாம் என்ன செய்யுற…
-
- 20 replies
- 5k views
-
-
ACT NOW!Pearl Action http://pearlaction.org/ This is an American based lobby group. However, this letter campaignis part of an international campaign, in which Australia canparticipate as well, for the European Union to deny Sri Lanka GSP+trade status. Sending the letter is very simple - just click on the link for"Non-U.S. Activists" and it will take you to the correct web page: (http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=26) Then you fill in your address and click "Send E-mail" and yourpersonalised letter will be sent to the EU Trade Commisioner! We're trying to get up to 1000 letters sent, and normally we get about300 from America. W…
-
- 27 replies
- 5k views
-
-
-
ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது உடனே பொலிஸகாரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் காயப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ஏன் அந்த சம்பவம் நடந்தது?
-
- 18 replies
- 5k views
-
-
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம் Ca.Thamil Cathamil September 15, 2014 Canada கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்…
-
- 47 replies
- 4.9k views
-
-
84 மே வடபழனி முதல் சந்திப்பு. வானொலியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தவர் கலோ சொன்னதுடன் டெல்கியில் சில வேலைகள் இருக்கு போக முடியுமோ என கேட்டார்.இனி எதுவாயினும் உங்கள் விருப்பம் என் பதில்.ஒரு இரண்டு கிழமை இங்கு நின்று முகாம்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்றார். இரண்டாம் சந்திப்பு ஒரு 3 மாதங்கள் கடந்து- நானும்,உமாவும்,வெற்றியும் என்பதால் நெருங்கி பழக முடிந்தது.என்னை ஒரு சிறுவனைபோலே கருதித்தான் பழகினார்.எனது பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை பொன்னம்பலம்,சுப்பிரமணியம் இப்படி வாய்க்கு வந்த பெயரில் கூப்பிடுவார்.சில இடங்கள் தனிய ஆட்டோவில் செல்ல நேரிட்டதால் இடைவெளி நல்லாக குறைந்துவிட்டது.ஜேர்மனில் இருந்து பரமாவும் வந்திருந்ததால் இரவு 2,3 மணிக்கு தான் நித்திரைக்கு செல்வோம…
-
- 70 replies
- 4.9k views
-