நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
2019சென்னை புத்தகக் கண்காட்சியில் விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று பாரிசில் இடம்பெற்றது.நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முகுந்தன்,அரசியல் விமர்சகரும் பொதுவுடைமை செயற்பாட்டாளருமாகிய ரயாகரன்,நூலாசிரியரின் மகனும் அரசியல் தத்துவத்துறையை சோர்ந்தவருமான வசந்த ரூபன்,எழுத்தாளரும் இடதுசாரி செயற்பாட்டாளருமாகிய வி.ரி. இளங்கோவன் ஆகியோர் இந்த நூல் சார்ந்தும் ,இந்த நூலில் குறிப்பிடப்படும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தமது மதிப்புரைகளைத் தெரித்தனர். வரலாற்றுப் பதிவுகளை நேர்மையுடனும் துணிச்சலுடனும் பதிவு செய்துள்ள இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்று பாராட்டிய முகுந்தன் இந்த நூலின் 5 ம் அத்தியாயத்தில் க…
-
- 27 replies
- 4.9k views
- 1 follower
-
-
ஒரு போர்க்கால சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகத்தின் “வாழத்துடிக்கும் வன்னி” ஒரு பார்வை 36 Views ‘வாழத்துடிக்கும் வன்னி’ என்ற சமூகவியல் கட்டுரைகள் “எமது சமுதாயத்திற்கும் அரசிற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் வன்னி மக்களின் அவலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்ற வீரகேசரி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகரன் அவர்களின் அணிந்துரையுடன் இந்நூல்வெளிவந்திருக்கிறது. இங்கு எமது சமுதாயத்திற்கும் எமது அரசியல் தலைமைகளுக்கும் உண்மையில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை இக்கட்டுரைகளை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. வன்னி மக்கள் போரினால் அனுபவித்த துன்பங்களையும் அதிலிருந்…
-
- 0 replies
- 383 views
-
-
ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்' இளங்கோ-டிசே கடந்த நான்கு நாட்களாக ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தை' வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்வாசிப்பிற்கிடையில் வேறு ஒரு படைப்பை வாசித்து தலையில் முட்டி, எதையாவது அதுகுறித்து எழுதித்தொலைத்துவிடுவேனோ என்ற பதற்றத்தை விலத்தி, தன் தடத்தில் சுவாரசியமாகத் தொடர்ந்து கொண்டு சென்றதற்கு ராஜசுந்தரராஜனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.நமது முன்னோடிகளிடம், ஒரு நல்ல படைப்பை எப்படி எழுதுவது என்பது கற்றுக்கொள்வதற்கு மட்டுமின்றி, ஒரு மோசமான படைப்பை எவ்வாறு எழுதாமல் தவிர்ப்பது என்பதற்கும் அவர்களிடமே செல்லவேண்டியிருக்கின்றது. அவ்வாறு சமகாலத்தில் எழுதுபவர்களுக்கு பரவலாக வாசிக்கும் ஒரு அரியபழக்கம் இருக்குமாயின்,, எத்தனையோ ஆக்கங்களை வாசித்து நாமும் …
-
- 0 replies
- 576 views
-
-
புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம் நூல்: துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரம் வெளியீடு. விலை ரூ. 20.00 நூலிலிருந்து: “மே, 2009 இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகளின் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப்போராட்டத்தை பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் …
-
- 2 replies
- 1.9k views
-
-
தீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு இன்று சென்னையில் அறிமுகக்கூட்டம்.! ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று (5/12)மாலையில் சென்னையில் இடம்பெறுகின்றது. கவிஞர் வெயில் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், ஊடகவியலாளர் செந்தில் கரிகாலன், கவிஞர்பச்சோந்தி, சந்துரு மாயவன், கவிஞர் மனுஷி ஆயோர் கவிதை நூல் குறித்து உரையாற்றுகின்றனர். சென்னை வேளச்சேரியில் அமைந்திருக்கும் யாவரும் பதிப்பகத்தின் பி பார் புக்ஸ் புத்தகக் கடையில் நடைபெறும் இந்த கவிதை நூல் அறிமுகக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/literature/2020/12/93314/
-
- 0 replies
- 672 views
-
-
நூல் வெளியீடு அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு, இளைஞனின் அன்பான அழைப்பு இது. வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது. "உராய்வு" கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்ப…
-
- 318 replies
- 42.9k views
-
-
வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் ச…
-
-
- 5 replies
- 1.3k views
-
-
உடலில் விழும் அடியைவிட மனதில் விழும் அடி வலி மிகுந்தது. அதுவும் சின்னஞ்சிறு வயதில் யாராவது மிக மோசமாக திட்டிவிட்டால், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். எத்தனை வயதானாலும் அந்த வலி மறப்பதே இல்லை. அப்படிதான் மேரி மெக்லியோட் பெத்யூனுக்கும் நடந்தது. அமெரிக்காவில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்கு உரிமை, சொத்து உரிமை, கல்வி உரிமை எதுவும் கிடையாது. திருமணம் செய்துகொள்வது கூட எஜமானர் அனு மதித்தால் மட்டுமே நடக்கும். குடும்பமே பண்ணை முதலாளிக்கு அடிமைப் பணி செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்த்துப் பேசினால் பட்டினி போட்டு அடித்து வதைப்பார்கள். தப்பி ஓடினால் பிடித்து வந்து சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவார்கள். அதன் பிறகு வாழ்நாள் …
-
- 0 replies
- 870 views
-
-
வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
காலம் : 19/11/2023 ஞாயிறு பிற்பகல் 3 மணி இடம் : கலாச்சார மண்டபம், சங்கானை
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:43 PM செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதைகுழி குறித்த முதற்கட்ட விசாரணைகள்இஇலங்கையில் காணாமல்போதல்இசெம்மணி படுகொலையின் தற்போதைய கதைகோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஆகிய விடயங்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வியாழக்கிழமை செம்மணி என்ற நூல் வெளியிடப்படும்யாழ்;ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டபிறகு இந்த நூல் வெளியாகின்றது.கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைஇசெம்மணி மனித புதை…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....? 1 ஏங்க எங்க போறீங்க?2 யார்கூடப் போறீங்க? 3 ஏன் போறீங்க? 4 எப்படி போறீங்க? 5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க? 6 ஏன் நீங்கமட்டும் போறீங்க? 7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது? 8 நானும் உங்ககூட வரட்டுமா? 9 எப்ப திரும்ப வருவீங்க? 10 எங்க சாப்பிடுவீஙக? 11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க? 12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க? 13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு? 14 பதில் சொல்லுங்க ஏன்? 15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா? 16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா? 17 நான் அனி திரும்ப வரமாட.டேன் 18 ஏன் பேசாம இருக்கீங்க ? 19 என்ன தடுத்த நிறுத்தம…
-
- 16 replies
- 2.3k views
-
-
திரை ஊடகத்தில் மண் சார்ந்த கலைஞராகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திவருபவர் தங்கர் பச்சான். அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முந்திரிக் காட்டு மனிதர்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் முன்னால் வைக்கும் இக்கதைகளில், அவர்களுடன் பின்னிப்பிணைந்த கால்நடைகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளும் மனிதர்களைப் போலவே விளிம்புநிலை கதாபாத்திரங்களாக நம்முடன் பேசுகின்றன. முந்திரிக் காடுகளும் பலா மரங்களும் நிறைந்த செம்மண் காணிகளின் நடுவே, ஈரம் காயாமல் இருந்த விவசாய வாழ்வு எவ்வித ஒளிவுமறைவும் இன்றிக் கதைகளில் விரிகிறது. கொஞ்சமாக நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயக் குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், விவசாயக் கூலிகள், கரும்புத் தோட்ட…
-
- 1 reply
- 571 views
-
-
இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து சுந்தரேசன் தற்போது Seattle, அமெரிக்காவில் வசிக்கிறார். Twentieth Wife, The Feast of Roses மற்றும் Shadow Princess என முகலாய சாம்ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட 3 நாவலகளின் தொகுப்பில், அவரது தாயார் மதுரம் சுந்தரேசனால் தமிழில் “ இருபதாவது இல்லத்தரசி” மற்றும் “ இதய ரோஜா” என்ற தலைப்புகளில் இரு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். எப்பொழுதும் சரித்திர நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் உள்ளதால், புதிய நாவலாசிரியரின் இந்த இரு நாவல்களையும் சமீபத்தில் வாசித்தேன். ஆங்கிலத்தில் இருந்து நேரடி தமிழாக்கம் செய்யப்பட்டது போன்று வசனங்கள் தோன்றினாலும் பொழுது போக்கிற்காகவும், சரித்தி…
-
- 0 replies
- 547 views
-
-
ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய தமிழினி குறித்து நிறையவே தெரியும் என்றும் அவர் சாதாரண போராளியாக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தான் நெருங்கிப் பழகி…
-
- 2 replies
- 539 views
-
-
நல்ல பல தகவல்கள் உள்ளது. என்ர தலைமுறை கண்டிபபாக இதை கேட்டறிய வேண்டும். இதன் படி நாம் விழிப்பாக கவனமாக இருத்தல் வேண்டும். கன நாட்களாக இந்த 'நந்திக்கடல் கோட்பாடு' என்ற சொல்லையே கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் அதை முற்றாக அறிந்தேன். இதில் சொல்லப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் விழிப்பாக செயல்பட்டு எம்மீதான சித்தாந்த உளவியல் போரை நாம் முறியடிக்க வேண்டும்.
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். *”கண்டிவீரன்” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “புனைவுப் பரிசு”ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது. *தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் “குறுக்குவெட்டுக்கள்” என்னும் கட்டுரை தொகுப்பிற்கு, 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “அபுனைவுப் பரிசு” அளிக்கப்படுகிறது. *”மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” என்…
-
- 0 replies
- 427 views
-
-
சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம் August 28, 2020 சு.கஜமுகன் லண்டன்காரர் என்னும் குறுநாவலிற்கு பிறகு சேனன் எழுதி இருக்கும் இரண்டாவது நாவலே சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் ஆகும். இதுவும் ஒரு வகையான யுத்த நாவல்தான் என்றபோதும் யுத்தத்தையும் அதன் துயரத்தையும் மட்டும் பேசாமல் அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியை நிகழ்கால சம்பவங்களுடன் சேர்த்துப் பேசுகின்றது. இக்கதையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வீரதீர செயல்களோ அல்லது தனிநபர் சாகாசங்களோ பேசப்படவில்லை மாறாக யுத்தம் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வு, யுத்தத்தில் எதிரொலித்த அவர்களின் அவலக்குரல் மற்றும் யுத்தத்தின் பின்னர் நிர்கதியாக்கப்பட்ட அவர்களின் …
-
- 0 replies
- 567 views
-
-
திருகோணமலையில் சோழர் - டாக்டர் ஜீவராஜின் புதிய நூல் இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சி பற்றிய சில கட்டுரைகளை கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இது.. https://vanakkamlondon.com/l…
-
- 0 replies
- 835 views
-
-
காவிரியின் பாதையில், மலைசார்ந்த பசிய கிராமம். வயல்கள், கோப்பி, காடு, மூங்கில் என பசுமையின் அனைத்து வகையறாக்களாலும் நிறைந்த கூர்க் என்ற பெயருடைய, மைசூரை அண்மித்த தென்னிந்தியக் கிராமம். 19ம் நூற்றாண்டின் இறுதி, ஆங்கில காலனித்துவ காலம். உள்ளுர் வெளியூர் என வந்த பல படையெடுப்புக்களை வென்று கூர்க் கிராமம் இன்னமும் சுதந்திரமாய் இருந்த காலம். ஏழு மாதக் கர்ப்பிணித் தாயொருத்தி வயலில் நிற்கிறாள். நூற்றுக்கணக்கான வெள்ளைக் கொக்குகள் படையணியென எங்கிருந்தோ வியூகமமைத்து வந்து, அக்கர்ப்பிணியைச் சுற்றி வட்டமடித்துத் திடீரெனக் குத்தியெழும்புகின்றன. அவற்றின் செட்டைகளில் ஒட்டிச்சென்று விழுந்த வயல்நீர் திடீர் மழையாகிய அதே கணத்தில், அந்தத் தாய் தனது கால்களினிடையே வெப்பமான நீரினை உணர்கிறாள். கொக…
-
- 7 replies
- 1k views
-
-
ஒரு புத்தகத்தை வாங்கத் தூண்டுவது எது? புத்தகங்களின் தலைப்புகள், எழுத்தாளரின் பெயர் இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம். ரசனையான படங்களுடன் வித்தியாசமான அட்டை வடிவமைப்பு இருந்தால், மேற்சொன்ன காரணிகளின் அவசியம் இல்லாமலேயே புத்தகத்தை எடுக்கக் கை நீளும். அப்படியான அட்டைப் படங்களை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுள் ஒருவர்தான் விஜயன். இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக எதிர் வெளியீடு, கருப்புப் பிரதிகள் போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விஜயனின் கணினிவண்ணத்தில் மிளிர்கின்றன. நதிநீரில் விழும் கட்டிடங்களின் பிம்பங்கள், தலைகீழாகத் தொங்கும் நகரம் போன்ற தோற்றப் பிழையைக் கொடுக்கின்றன. நதியின் மறுகரைக்கு நடுவே பாய்கிறது ஒரு அம்பு. இப்படி ஒரு அட்டைப் படம். புத்தர் …
-
- 0 replies
- 714 views
-
-
யாரும் இதை வாசித்தீர்களா ? நால்லதொரு வரலாற்று பதிவு என கேள்விப்பட்டேன். வாசித்துவிட்டு எனது கருத்தை எழுதுகின்றேன். The Prabhakaran Saga: The Rise and Fall of an Eelam Warrior.
-
- 12 replies
- 1.6k views
-
-
துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள் தீட்டும் கோட்டுச் சித்திரம் – கார்த்திக் பாலசுப்ரமணியன் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் படைப்புகளுக்கு நிகராக தமிழகத்துக்கு வெளியேயிருந்தும் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அப்படைப்புகளின் மீது வாசக கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இதற்கு அச்சு நூல்களின் நவீனமயமாக்கம், இணையப் பரவலாக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அமேசான் கிண்டில் வழி மின்நூல்களின் வருகை எனப் பல்வேறு காரணங்களைக் கூறவியலும். இவ்வாறு தமிழகத்துக்கு வெளியேயிருந்து வரும் படைப்புகளில் மற்ற நாடுகளிலிருந்து வெளிவரும் படைப்புகளை ஒப்ப…
-
- 0 replies
- 607 views
-
-
"கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது. அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல. இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி 47 Views கவிஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும் சிந்தனையை மேம்படுத்தும் சக்தி மிக்கவையாகவே நான் பார்க்கிறேன். தற்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளம் கவிதைகள் படைக்கப்படுகின்றன. மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் சிலவேளை மரபை விலக்கிவிட இயலாதவையாகவும் கவிதைகளை நாம் காணலாம். தொடர் வாசிப்பில்லாதோர் கவிதைகளை கண்டு கொள்வதில்லை என்பது போல் கவிதைகளைப் படைப்போரும் சிந்தனையைத…
-
- 0 replies
- 1.2k views
-