நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம். ஒரு யுத்த பூமியில் இவையெல்லாம் சர்வ சாதாரணம். உலகமெங்குமான பொது வழமை. கம்போடியா மட்டும் விலகியோட முடியுமா. அங்கும் அதுதான் நடந்தது. இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கம்போடிய நாணத்தின் பெறுமதி அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. வாழ்க்கைத் தர படு மோசமாகி விட்டது. கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக மக்கள் வாழ்வினை இழந்திருக்கிறார்கள். போரின் வடுக்கள் இன்னமும் முற்றாக அழிந்து விடவில்லை. பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட…
-
- 15 replies
- 3.7k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், செவிக்கினிய பல பாடல்களை எழுதியும், இறுவட்டாக வெளியிட்டும், மற்றும் பல்வேறு கலை முயற்சிகளில் ஈடுபட்டும், புலம்பெயர் கலைஞர்களுக்கு ஓர் முன்னோடியாக திகழக்கூடிய, எங்கள் மனங்களை தனது வசீகரமான வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் குளிரவைக்கின்ற நோர்வே வசீகரன் (யாழ் தமிழ்வாணம்) அவர்களின் கவிதைத்தொகுப்பை அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக பெற்று இருந்தேன். எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழமுதம் சோழியான் அவர்கள் கவிதைகளை படித்துவிட்டு நூல்பற்றிய ஓர் விமர்சனம் எழுதி தருமாறு கேட்டு இருந்தார். கவிதைத் தொகுப்பை மேசையில் கிடத்தி, 360பாகையில் வெவ்வேறுவிதமாக தடவிப்பார்த்து, நுணுக்குக்காட்டி மூலம் ஆராய்ச்சி செய்து விமர்சனம் செய்வதற்கு…
-
- 7 replies
- 2.5k views
-
-
வடலி வெளியீடுகளான கருணாகரனின் பலிஆடு கவிதை நூல் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய இரு நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வு வரும் வெள்ளி 28 ஓகஸ்ட் மாலை 6 மணிக்கு கனடாவில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்கள் கீழே..
-
- 19 replies
- 2.7k views
-
-
யாழ் கள உறவு இளங்கவியின் கவிதை நூலான என் கல்லறைச் சிநேகிதி நூல் வெளிவந்து விட்டது. 0 0 0 என் கல்லறைச் சிநேகிதியே கவிதைத் தொகுப்பு இளங்கவி கருக்கு வெளியீடு 2009 ஆகஸ்ட் இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்துக்கவிஞர் இளங்கவியின் ஐம்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இளங்கவி தனது கவிதைகளில் சமகால நிகழ்வுகளாகட்டும் பழைய கனவுகளாகட்டும் பட்டவர்த்தனமாக பூடகமேதுமின்றி வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார். இவரது இக்கவிதைகள் தனித்த ஒரு குறும்பார்வையின்றி அவரைப்பாதித்த ஈழத்துயரம் தமிழ்வீரம் அன்பு காதல் என பலதடங்களில் பயணிக்கின்றமையே இக்கவிதைகளுக்கான சிறப்பாகவும் உள்ளது. 0 0 0 உடனடியாக இணையத்தில் பெற http://vadaly.com/shop/?page_id=231&ca...p;prod…
-
- 43 replies
- 4.9k views
-
-
வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல. இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள…
-
- 1 reply
- 1.5k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு ..... ..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக , தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் . இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம் .எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன். அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன். விரைவில் எதிர் பாருங்கள் ............
-
- 25 replies
- 5.2k views
- 1 follower
-
-
நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம் அல்லது எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்.. எனக்கெதுவும் புரியவில்லை. பகலையும் இரவையும் கண்டு அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்..? 000 ஆசிரியர், வெளிச்சம் சஞ்சிகை, கலை பண்பாட்டுக் கழகம், கோப்பாயோ கொக்குவிலோ என முகவரியிட்டு பதின்ம வயதுகளில் நான் எழுதிய எந்த ஆக்கமும் வெளிச்சம் இதழில் வந்ததில்லை. பதினைந்துகளில் நின்றிருந்த வயதது. அதற்குரிய சந்தேகங்களோடு உவங்கள் தெரிஞ்சாட்கள் எழுதினாத்தான் போடுவாங்கள் போல என நம்பினேன். வெளிச்சம் ஆசிரியரைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அதில் மெனக்கெட முடியாதளவிற்கு இடப்பெயர்வுகளும் ஓட்டங்களும் அடுத்த ஆண்டுகளில் நிற…
-
- 0 replies
- 1.7k views
-
-
முகமற்ற புத்தனின் உடல் எங்கும் நிறைந்திருக்கிற சூழலில்.. தவிர்க்கமுடியாத ஆயுதங்களுடன் புத்தனின் முகம்.. அது தமிழ் இனத்தின் முகம்..அதுவே தமிழ்ச்செல்வனின் முகம்.. - டிராட்ஸ்கி மருதுவின் கோடுகளும் வார்த்தைளும் நூலில்.. கோடுகளும் வார்த்தைகளும் நூலினை தற்போது இணையத்தில் பெற முடியம் http://vadaly.com/shop/?page_id=3&cate...p;product_id=14
-
- 1 reply
- 1.5k views
-
-
http://tamilsforum.com/unspeakabletruth.html http://www.pagegangster.com/p/2Lweq/ இதுக்கு முதல் யாரும் இந்த நூலைப் பற்றி இங்க இணைச்சிட்டினையோ தெரியாது. இருந்தாலும் ஒருக்கா பாருங்கோ....
-
- 3 replies
- 2.3k views
-
-
நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான். 'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey) ஆல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1989ல் வெளியானதிலிருந்து இற்றை வரை 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (துரதிஷ்டவசமாக, தமிழில் இன்…
-
- 12 replies
- 14.5k views
-
-
சிங்களவர்களின் ராஜதந்திரம்! எழுதியவர்: பன்னீர் செல்வன் ஒரு பத்திரிகையாளன் சிறப்பாகச் செயல்படச் சில யுக்திகள் உண்டு. இந்த யுக்திகளை வாசகர்களும் அறிந்துகொள்வது நலம். களத்திலிருந்து வரும் செய்திகளுக்கு வலுசேர்க்க, பத்திரிகையாளன் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலிருந்து பல சான்றுகளையும் புரிதல்களையும் மேற்கோள்களாகக் காட்டி, நிழ்வுகளின் அரசியல், சமுதாய மற்றும் பொருளாதாரப் பின்னணியை வாசகனுக்குத் தர முயலுகிறான். கடந்த இரண்டு வாரங்களாக நான் பாகிஸ்தானில் பயணம் செய்ய வேண்டிய அலுவல். முதன்முறையாக உள்ளம் ஓர் இடத்திலும், உடல் வேறு ஓர் இடத்திலும் இருக்க, இரவுநேரப் படிப்பில் பாகிஸ்தான் பற்றி ஏதும் படிக்காமல், ஈழத்தமிழர்களின் படைப்புகளை மட்டுமே படித்தேன். தமிழகத்தில் எற்…
-
- 21 replies
- 7k views
-
-
இளங்கோ: வலைப்பதிவூடாக "டிசே தமிழனாக" அறியப்பட்டவர். கனடாவில் வசித்து வருகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஓரு அகதி இளைஞன். யாழ் இணையக் கருத்துக்களம் ஊடாகவும் அவரது கவிதைகளை பலரும் வாசித்திருப்பர். அண்மையில் "நாடற்றவனின்் குறிப்புகள்" என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுப்புக்குத்தான் தமிழகத்தில் ஏலாதி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. விருதுகளையும் பட்டங்களையும் விலைகொடுத்து வாங்கி தங்கள் பெயருக்குப் பின்னால் போலியாகக் காவித் திரிகிற இன்றைய கேடுகெட்ட தமிழ்ச் சமூகச் சூழலில், தன்னுடைய படைப்பினூடாக, தன்னுடைய கவிதைகளினூடாக ஒரு இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விடயமாகும். சக ஈழத்து இளைஞனாக, புல…
-
- 37 replies
- 6.5k views
-
-
`20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியைப் புகட்டி நிற்கும் மகத்தான தொகுப்பு' [17 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்} தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகத்தை உடையதென்ற புகழை முன்னர் யாழ்ப்பாணமே தன் வசம் வைத்திருந்தது. இத்தகைய நிலைமை யாழ்ப்பாணம் பெறுவதற்கு அதற்கான தகுதியைக் கொடுத்தவை யாழ்ப்பாண மக்களின் கல்வியும் அவர்களது தீவிர வாசிப்புப் பண்பாடுமாகும். யாழ்ப்பாண மக்களின் வாசிப்பிற்குப் பசளையிட்டவை; அக்காலத்தில் அங்கு இயங்கிக் கொண்டிருந்த புத்தக சாலைகளெனில் அதற்கு மறுப்பிருக்காது. இத்தகைய புத்தகசாலைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலையுமொன்றாகும். இப்புத்தக நிலையங்கள் தரமான நூல்களையும் சஞ்சிகைகளையும் இறக்குமதி செய்தும் கொள்வனவு…
-
- 8 replies
- 13.2k views
-
-
நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவுடன் விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலாவின் தொகுப்பான ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கயிலாசபிள்ளை தலைமை தாங்கினார். மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர் க. ஸ்ரீபவன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார். அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், இம்மாமன்றத்தின் பிரதித் தலைவர் மு. கதிர்காமநாதன் மற்றும் அங்கத்தவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்காக சக…
-
- 2 replies
- 2.3k views
-
-
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம். ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாசுதேவனின் தொலைவில் கவிதை நூலுக்கு விருது கருத்துக்களக் கவிஞரும் பிரான்சில் வசித்து வருபவருமான வாசுதேவன் அண்ணாவின் "தொலைவில்" என்ற கவிதை நூலுக்கு விருது கிடைத்துள்ளது. யாழ் இணையம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறோம்.
-
- 2 replies
- 1.8k views
-
-
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் தமிழாக்கம்: திரு ஏ. ஜே. கனகரட்னா மறுமலர்ச்சிக் கழகம் 1981 ------------------------------------------------------------------------------------ எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் A translation of James T. Rutnams The Tomb of Elara at Anuradhapura (Jaffna-1981) யாழ்ப்பாண தொல்பொருளியல் கழகம் ஈவ்லின் இரத்தினம் நிறுவனக் கட்டிடம் பல்கலைக் கழக ஒழுங்கை திருநெல்வேலி யாழ்ப்பாணம் தமிழாக்கம்: திரு ஏ. ஜே. கனகரட்னா வெளியீடு: 1981 ஆண்டு ஆகஸ்ட் மறுமலர்ச்சிக் கழகம் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் அச்சிட்டது நொதேர்ண்…
-
- 0 replies
- 2.2k views
-
-
பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது: 1. பூர்வகாலம் - குமரி நாடும் ஈழமும் 2. ஈழமும் வரலாறும். ஐ) இலங்கை ஐஐ) ஈழமும் விசயனும் ஐஐஐ) ஈழமும் சிங்களமும் ஐஏ) ஈழமும் பழைய நூல்களும் ஏ) தமிழரும் திராவிடரும் ஏஐ) சூரன், சிங்கன், தாரகன் 3. விசயன் வருகை ஐ) விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும் ஐஐ) படை எழுச்சிகளும் விளைவும் ஐஐஐ) கலிங்கமாகன் படை எழுச்சி ஐஏ) ஈழமும் தமிழர் ஆதிக்கமும். மேலும் இந்நூல் பற்றிய தகவலுக்கு http://www.unarvukal.com/forum/lofiversion....php?t3534.html
-
- 0 replies
- 1.9k views
-
-
புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! தமிழில் எத்தனையோ புத்தகங்கள் தற்போது மறுபதிப்பு இல்லாமல் நின்று விட்டது. ஆங்கிலத்தில் கிடைக்காத புத்தகங்களையும் வாங்குவதற்கு வசதி உள்ளது. தமிழிலும் இது போன்ற வசதியை ஏற்படுத்த http://tamilbookmarket.com/ என்ற வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. புதிய புத்தகங்கள், அரிதான புத்தகங்கள், அதிகளவில் பிரபலம் இல்லாத புத்தகங்கள், பரவலாக அறியப்படாத எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் என அனைத்துப் புத்தகங்களையும் இந்த "தமிழ் புத்தகச் சந்தை' வெப்சைட்டில் வாங்க முடியும்.
-
- 3 replies
- 5.1k views
-
-
தமிழ் நூல்களின் பட்டியல் http://www.viruba.com/ptotalbooks.aspx?id=28
-
- 3 replies
- 3.2k views
-
-
யேர்மனியில் தமிழ் நு}லகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்நூலகத்திற்கு நூல்கள் கோரப்படுகிறது. நீங்கள் எழுதிய அல்லது உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் எழுதிய நூல்களையும் நூலகத்திற்கு தந்துதவலாம். அல்லது உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இருப்பின் தந்துதவவும். தமிழ் உட்பட யேர்மன் ஆங்கில நூல்களும் வரவேற்கப்படுகின்றது. நன்றி.
-
- 5 replies
- 3k views
-
-
ஈழத்து நூல்களின் பட்டியல் http://www.noolaham.net/library/books.htm
-
- 1 reply
- 2k views
-
-
இந்நூல் நாளை ஒஸ்லோ மாவீரர்நாள் மண்டபத்தில் வெளியிடப்படும்.
-
- 1 reply
- 2.1k views
-
-
'மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை' நூல் அறிமுகம் ரவி (21.10.06 அன்று பேர்ண் (சுவிஸ்) இல் நடந்த “திரைப்பட இலக்கிய விழா” நிகழ்ச்சியில் இந் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்டது இது.) “கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன். இந்த எதிர்கொள்ளல் சரியானதா?. வெள்ளைமயப்படுத்தப்பட்ட சிந்தனையே இந்தப் பதிலில் ஊறியிருக்கிறது. அதாவது ஆணிய சிந்தனை பெண்ணிடம் ஊறியிரு…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியம் மகா சமுத்திரம் போன்று காட்சியளிப்பதைக் காணலாம். அதன் தொன்மையில், அதன் வண்மையில் அதன் அகலத்தில் அன்றும், இன்றும், என்றும் முதலிடம் வகிப்பது தமிழ் இலக்கியமே என்பதை யாரும் மறுக்க முடியாது. சங்ககால இலக்கியங்கள், சங்கமருவியகால இலக்கியங்கள், பல்வர் கால, சோழர்கால இலக்கியங்கள், பிற்காலச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் என்ன இந்த ஆழ்ந்தகன்ற சமுத்திரத்தில் ஒரு துளியாவது நம்மவர்கள் அறிவார்களா? பழங்காலத் தமிழ் அறிஞர்களைப் போல இக்காலப் பல்கலைக்கழகப் படைப்பாளிகள் நமது தமிழ் இலக்கியம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது நிதர்சன உண்மை. பழந்தமிழ் இலக்கியம் பற்றிப் பேசு…
-
- 1 reply
- 5.4k views
-